Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ஹிந்து‘ ,‘ஹெட்லைன்ஸ் ருடே‘ மீது கோத்தாபய சீற்றம் – தனது பெயரைக் கெடுத்து விட்டனவாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 04:42 GMT ] [ கார்வண்ணன் ]

Gota%20report%20release.jpgஇந்திய ஊடகங்களான ‘ஹிந்து‘ மற்றும் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ ஆகியவற்றை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையான சாடியுள்ளார்.

‘கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சகோதரர்‘ என்ற தலைப்பில் கடந்த 16ம் நாள் கோத்தாபய ராஜபக்ச தொடர்பாக ‘ஹிந்து‘ நாளேடு ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது.

இதுகுறித்து நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய கோத்தாபய ராஜபக்ச கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது செவ்வி ஒன்றை பெறுவதற்கு இந்திய ஊடகவியலாளர் அழுத்தங்களை கொடுத்ததாவும் தான் மறுத்து விட்டதால், அந்த ஆத்திரத்திலேயே தன்னைப் பற்றி அவதூறான ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட ரீதியாக இந்து ஆசிரியர் என்.ராமுக்குத் தெரிந்திருந்த போதிலும், தன்னை இவ்வாறு விமர்சித்துள்ளது ஆச்சரியம் அளிப்பதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

‘ஹெட்லைன்ஸ் ருடே‘ செய்தியாளருக்கு செவ்வியளிக்க தயக்கத்துடனேயே ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், தன்னிடம் இருந்து தனது சகோதரரை விலகுமாறு ‘ஹிந்து‘ கூறுவதாகவும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகவியலாளர் தான் ஒரு நல்ல தொகுப்பை செய்து, தனக்கு நற்பெயரைத் தேடித் தருவதாக உறுதிமொழி கொடுத்ததாகவும், ஆனால் கடைசியில் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தனது பெயரைக் கெடுத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய ஊடகங்கள் அதிகாரப்பகிர்வு, வடக்கு கிழக்கு விவகாரம் தொடர்பான தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு, தமிழ் பேசும் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்டுத்தப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே, இந்திய ஊடகம் தன்னிடம் கேள்வி எழுப்ப விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பாக தான் பதிலளிக்க விரும்பாத போதிலும், தான் கூறிய தனிப்பட்ட கருத்தை அந்த ஊடகவியலாளர் வெளியிட்டு திருப்திப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சனல்-4 ஆவணப்படத்தில் தோன்றிய பிரித்தானியக் குடியுரிமை பெற்ற தமிழ்ப்பெண் குறித்த கருத்தையும் இந்திய ஊடகவிலாளர் தவறாக திரிபடுத்தி விட்டதாகவும் அதை வைத்துக் கொண்டு ‘ஹிந்து‘ நாளேடு தன்னை வெளியேற்றமாறு சிறிலங்கா அதிபருக்கு ஆலோசனை கூறியுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச விசனம் வெளியிட்டுள்ளார்.

அனைத்துலக சமூகத்தின் ஒருபகுதி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய பதில்களைக் கூறிய போதும் அவர்கள் திருப்தியடையவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110819104501

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரின் பெயருக்கு என்ன விலை ........? சில வேளை இவர் நஷ்டஈடு கேட்க்க போகுராரோ ............?

ஹெட்லைன்ஸ் ருடே ஒன்றும் திரிபு படுத்தி கூறவில்லை, கோத்தா ஒரு மனம் திறந்து கதைக்கும் சண்டியன், போர்குற்றவாளி. தான் நினைப்பதை கூறியுள்ளான்.

கிந்துவின் இராமுக்கும் கொத்தாவுக்கும் இடையில் கீறல் வந்துள்ளது நன்மையே. இந்த கீறல் வெடிப்பாக மாறவேண்டும். இந்தியாவை சிங்களம் பகிரங்கமாக வெறுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹெட்லைன்ஸ் ருடே ஒன்றும் திரிபு படுத்தி கூறவில்லை, கோத்தா ஒரு மனம் திறந்து கதைக்கும் சண்டியன், போர்குற்றவாளி. தான் நினைப்பதை கூறியுள்ளான்.

கிந்துவின் இராமுக்கும் கொத்தாவுக்கும் இடையில் கீறல் வந்துள்ளது நன்மையே. இந்த கீறல் வெடிப்பாக மாறவேண்டும். இந்தியாவை சிங்களம் பகிரங்கமாக வெறுக்கவேண்டும்.

இந்து பத்திரிகைக்குள் ராமின் அதிகாரம் குறைந்து வருகிறது. ராமையும் அவரது குடும்பத்தையும் வெளியேற்ற Board of Directors முயற்சிக்கிறார்கள். பிரச்சனை சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறது. ஆனால் ராம் முற்று முழுதாக வெளியேறவில்லை. ஆனாலும் ஆசிரிய பீடத்திற்குள் ராமின் குடும்பத்தவர் பலர் நீக்கப்பட்டு அவருக்கு சாராதோர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஒன்று வர முடிந்தது. மற்றப்படி ராமா கொக்கா?

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

இந்து பத்திரிகைக்குள் ராமின் அதிகாரம் குறைந்து வருகிறது. ராமையும் அவரது குடும்பத்தையும் வெளியேற்ற Board of Directors முயற்சிக்கிறார்கள். பிரச்சனை சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறது. ஆனால் ராம் முற்று முழுதாக வெளியேறவில்லை. ஆனாலும் ஆசிரிய பீடத்திற்குள் ராமின் குடும்பத்தவர் பலர் நீக்கப்பட்டு அவருக்கு சாராதோர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஒன்று வர முடிந்தது. மற்றப்படி ராமா கொக்கா?

அதானே... எலி ஏன் அம்மணமாய் ஓடுது எண்டு பாத்தன்.

இந்து பத்திரிகைக்குள் ராமின் அதிகாரம் குறைந்து வருகிறது. ராமையும் அவரது குடும்பத்தையும் வெளியேற்ற Board of Directors முயற்சிக்கிறார்கள். பிரச்சனை சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறது. ஆனால் ராம் முற்று முழுதாக வெளியேறவில்லை. ஆனாலும் ஆசிரிய பீடத்திற்குள் ராமின் குடும்பத்தவர் பலர் நீக்கப்பட்டு அவருக்கு சாராதோர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஒன்று வர முடிந்தது.

இந்த பத்திரிக்கை நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாக இல்லாமல் பொது நிறுவனமாக, பங்குகளை கொண்ட நிறுவனமாக இல்லை அப்படி ஒன்றின் கீழ் இயங்குவதாக இருக்கவேண்டும்.

முதலீட்டாளர்கள் தமது இலாபத்திலேயே குறிக்கோளாக இருப்பார்கள். எனவே மக்கள் விரும்புவதை ஆதரிக்காவிட்டால் பங்குகள் சரிந்திருக்கலாம், அதனால் இந்த இராம் கூட்டம் அகற்றப்படலாம்.

உலகத்தமிழர்களும் ஒரு 'உலக தமிழர் பொருளாதார அமைப்பு' ஒன்றை உருவாக்கி இப்படியான பத்திரிகைகளில் பங்காளராக மாறி நிர்வாகத்தில் தலையிடலாம்.

இந்து பத்திரிகைக்குள் ராமின் அதிகாரம் குறைந்து வருகிறது. ராமையும் அவரது குடும்பத்தையும் வெளியேற்ற Board of Directors முயற்சிக்கிறார்கள். பிரச்சனை சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறது. ஆனால் ராம் முற்று முழுதாக வெளியேறவில்லை. ஆனாலும் ஆசிரிய பீடத்திற்குள் ராமின் குடும்பத்தவர் பலர் நீக்கப்பட்டு அவருக்கு சாராதோர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஒன்று வர முடிந்தது. மற்றப்படி ராமா கொக்கா?

... எப்படி என்றாலும் .. யார் குத்தினாலும், எமக்கு அரிசி ஆனால் சரி???? ... எம்மவர்கள் இதனை பயன்படுத்துவார்களா??? ... நா.க.த.அக்களையோ, மற்றவர்களையோ தட்டி எழுப்பி விட்டால் ... இதனையாவது செய்யட்டும்!!!!!!!!!!!!????????

[ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 04:42 GMT ] [ கார்வண்ணன் ]

Gota%20report%20release.jpgஇந்திய ஊடகங்களான ‘ஹிந்து‘ மற்றும் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ ஆகியவற்றை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையான சாடியுள்ளார்.

தனது செவ்வி ஒன்றை பெறுவதற்கு இந்திய ஊடகவியலாளர் அழுத்தங்களை கொடுத்ததாவும் தான் மறுத்து விட்டதால், அந்த ஆத்திரத்திலேயே தன்னைப் பற்றி அவதூறான ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட ரீதியாக இந்து ஆசிரியர் என்.ராமுக்குத் தெரிந்திருந்த போதிலும், தன்னை இவ்வாறு விமர்சித்துள்ளது ஆச்சரியம் அளிப்பதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

‘ஹெட்லைன்ஸ் ருடே‘ செய்தியாளருக்கு செவ்வியளிக்க தயக்கத்துடனேயே ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ஊடகங்கள் அதிகாரப்பகிர்வு, வடக்கு கிழக்கு விவகாரம் தொடர்பான தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு, தமிழ் பேசும் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்டுத்தப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே, இந்திய ஊடகம் தன்னிடம் கேள்வி எழுப்ப விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பாக தான் பதிலளிக்க விரும்பாத போதிலும், தான் கூறிய தனிப்பட்ட கருத்தை அந்த ஊடகவியலாளர் வெளியிட்டு திருப்திப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சனல்-4 ஆவணப்படத்தில் தோன்றிய பிரித்தானியக் குடியுரிமை பெற்ற தமிழ்ப்பெண் குறித்த கருத்தையும் இந்திய ஊடகவிலாளர் தவறாக திரிபடுத்தி விட்டதாகவும் அதை வைத்துக் கொண்டு ‘ஹிந்து‘ நாளேடு தன்னை வெளியேற்றமாறு சிறிலங்கா அதிபருக்கு ஆலோசனை கூறியுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச விசனம் வெளியிட்டுள்ளார்.

அனைத்துலக சமூகத்தின் ஒருபகுதி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர்,

http://www.puthinapp...?20110819104501

கோபத்தபய: தமி்ழ்நாட்டில் கருணாநிதி மாதிரி சில அரசியல் வாதிகள் கோமாளிகளே. ஆனால் தமிழ் மக்கள் அல்ல. அவர்கள் எடுத்த முடிவை சிங்கள மோடையாவான உனக்கு விளங்கி கொள்கிற ஆற்றல்தான் இருக்கவில்லை. நீ அசட்டு தைரியத்துடன் போய் ஜெயலலிதா என்ற மரத்துடன் முட்டி மோதிவிடாய். கிந்து ராம் உன்னை போகசொல்ல முடியாது. உன்னை வேண்டாதவர்கள் உனது சகோதரர்களே. உனக்கு நீ நினைக்குமாப்போல் மானம் என்று ஒன்றிருந்தால் வெளியே போ. ஜெயலலிதாவிடம் மன்னிப்புகேள்

Edited by மல்லையூரான்

தனிப்பட்ட ரீதியாக இந்து ஆசிரியர் என்.ராமுக்குத் தெரிந்திருந்த போதிலும், தன்னை இவ்வாறு விமர்சித்துள்ளது ஆச்சரியம் அளிப்பதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

லங்கா ரத்னா விருதை பொறுக்கி ராம் மறந்தது சிங்களக் காட்டுமிராண்டிப் பயங்கரவாதி கோத்தபாயவுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

கைக்கூலிகளுக்கு அவ்வப்போது ஏதாவது கொடுக்காவிட்டால் இப்படித்தான் உண்மையை இடைக்கிடை உளறிவிடுவார்கள்.

Edited by ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.