Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி

Featured Replies

செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.

தேவையான பொருட்கள்

  • அரிசி – 1 /2 கிலோ
  • சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ
  • கொத்தமல்லி – 1 /2 கட்டு
  • புதினா – 1 கட்டு
  • பச்சை மிளகாய் – 4
  • வெங்காயம் – 250 கிராம்
  • தக்காளி – 250 கிராம்
  • இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம்
  • தயிர் – 1 /2 ஆழாக்கு
  • எண்ணெய் – 1 குழிக்கரண்டி
  • ஏலக்காய் – 2
  • கடற்பாசி – 1 /2 தேக்கரண்டி
  • பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 4 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள கரம் மசாலா பொருட்களை(பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ,ஏலக்காய்,கடற்பாசி) சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வேண்டுமெனில் இந்த மசாலாப் பொருட்களை பொடி செய்தும் உபயோகிக்கலாம்.
  • பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, பச்சை வாசனை போகுமளவு நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  • பிறகு நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக அதன் நிறம் மாறும் வரை கிளறவும். இதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
  • சிக்கன் பாதியளவு வெந்த பிறகு, பச்சைமிளகாயைச் சேர்க்கவும். திக்கான மசாலா கலவையுடன் சிக்கன் இருக்கும் போது, கழுவி வைத்துள்ள அரசியைச் சேர்த்து கலக்கவும்.
  • ஒரு கப் அரிசிக்கு 1 1 /2 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும்.முக்கால் பதம் வெந்த நிலையில், மூடியத் திறந்து தயிரைச் சேர்த்து கிளறவும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு முக்கால் பதம் வெந்த நிலையில் உள்ள பிரியாணியை பாத்திரத்துடன் அதன் மீது வைத்து நன்கு மூடி விடவும். அந்த மூடியின் மேல் தண்ணீருடன் உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
  • பத்து நிமிடம் கழித்து மூடியத் திறந்து புதினா, கொத்தமல்லித்தழைகளை அதன் மேல் தூவி பரிமாறவும்.
  • பரிமாறும் போது பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி பரிமாறவும்.

குறிப்பு

  • சிக்கனைச் சிறிது சிறிதாக கோடு போட்டோ, அல்லது கீறியோ விட்டு செய்தால் மசாலா நன்கு உட்புறம் சார்ந்து சுவையாக இருக்கும்.
  • தம்மில் போடும்போது தோசைக்கல்லில் தண்ணீர் ஆவியாகிவிட்டால் தண்ணீர் சேர்க்கவும், இல்லையென்றால் பாத்திரம் அடிப்பிடித்து விடும்

  • கருத்துக்கள உறவுகள்

  • கொத்தமல்லி - Coriander
  • புதினா -Mint
  • பூண்டு - உள்ளிபூடு
  • கடற்பாசி – ?? இது சீனக் கடையில் கிடைப்பதா?
  • பட்டை - கறுவா Cinnamon
  • லவங்கம் - கராம்பு Cloves
  • மராட்டி மொக்கு - ??
  • அன்னாசிப்பூ – ??
  • தனியாத்தூள் –மல்லித் தூள்

தம்மில் போடும்போது தோசைக்கல்லில் தண்ணீர் ஆவியாகிவிட்டால் தண்ணீர் சேர்க்கவும், இல்லையென்றால் பாத்திரம் அடிப்பிடித்து விடும்

தம்மில் போடுவது என்றால் என்னவென்று யாரும் விளக்கமுடியுமா?

</p>

  • தொடங்கியவர்

தம்மில் போடுவது என்றால் என்னவென்று யாரும் விளக்கமுடியுமா?

தம்மில் போடுவது என்பது புழுங்க வைப்பது. அதாவது நேரடியாக நெருப்பில் சூடாக்காமல், வெப்பத்தில் வைத்திருப்பது.உங்களிடம் OVEN இருக்குமானால் 150 பாகை சூட்டில் வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்மில் போடுவது என்பது புழுங்க வைப்பது. அதாவது நேரடியாக நெருப்பில் சூடாக்காமல், வெப்பத்தில் வைத்திருப்பது.உங்களிடம் OVEN இருக்குமானால் 150 பாகை சூட்டில் வைக்கலாம்.

தகவலுக்கு நன்றி. பிரியாணி செய்து பார்த்தால் போயிற்று.

சி.கு. ஒரு குஜராத்தி இஸ்லாமியர் உணவில் ஏலாக்காய், கராம்பு, கறுவாப்பட்டை மூன்றையும் ஒன்றாகப் பாவிக்கக்கூடாது என்று சொன்னார். இவற்றில் ஏதாவது இரண்டைக் கலந்து பாவிக்கலாமாம். அத்துடன் பிரியாணியில் கராம்பைத் தவிர்க்கவேண்டும், ஆட்டிறைச்சிக் கறியில் மிளகுதூளைத் தவிர்க்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று, வெள்ளிக்கிழமை சிக்கன் பிரியாமணி செய்யலாமா?

Edited by தமிழ் சிறி

சி.கு. ஒரு குஜராத்தி இஸ்லாமியர் உணவில் ஏலாக்காய், கராம்பு, கறுவாப்பட்டை மூன்றையும் ஒன்றாகப் பாவிக்கக்கூடாது என்று சொன்னார். இவற்றில் ஏதாவது இரண்டைக் கலந்து பாவிக்கலாமாம். அத்துடன் பிரியாணியில் கராம்பைத் தவிர்க்கவேண்டும், ஆட்டிறைச்சிக் கறியில் மிளகுதூளைத் தவிர்க்கவேண்டும்!

ஆட்டிறைச்சிக் கறிக்கு மிளகு சேர்க்கக் கூடாது என்பதற்கு ஏதும் மருத்துவ காரணங்கள் உண்டா?

இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. சில உணவுப் பொருட்கள்களுக்கு ஒன்றுக்கொன்று ஒவ்வாமை இருக்கலாம். நான் இறைச்சி கறி இறக்கியவுடன் போடுவதற்கு ஏலாக்காய், கராம்பு, கறுவாப்பட்டை எல்லாம் சேர்த்தரைத்த இறைச்சி தூள் போடுவதுண்டு. சிலவேளை மிளகு தூளும் கொஞ்சம் பாவிப்பேன். பொதுவாகவே கராம்பு அதிகம் உண்பது நல்லதில்லை என நினைக்கிறேன்.

அடுப்பில் தம்மில் போடுவதென்றால் , புரியாணி பாத்திரத்தை மெல்லிய சூட்டில் வைத்து ஆவி அதிகம் வெளியேறாமல் இருக்க பாத்திரத்தின் மூடி மேல் பாரமான ஒரு பொருளை வைக்க வேண்டும்

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆர் அம்பது

பொன்னி

கே.பிடி

பாசுமதி அரிசி ரொம்ப காஸ்ட்லி என நினைப்பவர்கள் அல்லது கிடைக்காதவர்கள் மேற்கூறிய வகைகளை பயன்படுத்தலாம்

  • தொடங்கியவர்

ஐ ஆர் அம்பது

பொன்னி

கே.பிடி

பாசுமதி அரிசி ரொம்ப காஸ்ட்லி என நினைப்பவர்கள் அல்லது கிடைக்காதவர்கள் மேற்கூறிய வகைகளை பயன்படுத்தலாம்

சம்பா அரிசி தான் பிரியானிக்கு சூப்பர்.

...

  • மராட்டி மொக்கு - ??

...

யாரையோ பேசுறது மாதிரி தெரியுது... ^_^

கடற்பாசி- 1) sushi செய்வதற்குப் பயன் படுத்துவார்கள்

2) இலைக் கோவாவை மிகச் சிறிதாக அரிந்தது போல் இருக்கும்.

பொதுவாக பெரிய டெஸ்கோ, சென்ஸ்பரி, மொறிசன் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கலாம். http://www.mysuperma...ts=634064477427

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி செய்முறைக்கு நன்றி...என்ட கேள் பிரண்ட் வந்தால் சமைத்துக் கொடுத்து விட்டு அவ சுவைத்து விட்டு என்ன சொல்கிறார் என பார்த்த பின் யாழில் வந்து எழுதுகிறேன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறைச்சிக் கறிக்கு மிளகு சேர்க்கக் கூடாது என்பதற்கு ஏதும் மருத்துவ காரணங்கள் உண்டா?

இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. சில உணவுப் பொருட்கள்களுக்கு ஒன்றுக்கொன்று ஒவ்வாமை இருக்கலாம். நான் இறைச்சி கறி இறக்கியவுடன் போடுவதற்கு ஏலாக்காய், கராம்பு, கறுவாப்பட்டை எல்லாம் சேர்த்தரைத்த இறைச்சி தூள் போடுவதுண்டு. சிலவேளை மிளகு தூளும் கொஞ்சம் பாவிப்பேன். பொதுவாகவே கராம்பு அதிகம் உண்பது நல்லதில்லை என நினைக்கிறேன்.

மருத்துவ காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சுவையான உணவுக்கு சில இடங்களில் வித்தியாசமான சமையல் பக்குவங்கள் பயன்பாட்டில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Thanga நன்றி பதிவிற்கு, என்ர ஆத்துக்காரி சுத்த சைவம், எல்லா அசைவங்களையும் நான்தான் சமைக்கனும், இது எனக்கு நல்லா உதவும், சமைச்சு பார்க்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.