Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்குக் கயிற்றிலிருந்து பாலனை காமராஜர் காத்தது போல ராஜீவ் கொலையாளிகளை முதல்வர் ஜெயலலிதா காப்பாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[saturday, 2011-08-27 00:09:46]

img1081204071_150.gif

1957ம் ஆண்டு தூக்குக் கயிற்றிலிருந்து பாலன் என்பவரை அப்போதைய முதல்வர் காமராஜர் காப்பாற்றியது போல ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை முதல்வர் ஜெயலலிதா காப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதியாக நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து தங்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என்று கோரி மற்ற மூவரும் குடியரசுத் தலைவருக்கு மனு செய்தனர். இந்த மனுக்களை கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் உள்துறை அமைச்சக பரிந்துரைக்கு அனுப்பினர். அப்போது தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாம் என்று கூறி உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை இரு குடியரசுத் தலைவர்களும் ஏற்கவில்லை. இதனால் மூவரும் தப்பும் வாய்ப்பு பிரகாசமானது.

இந்த நிலையில் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இந்த மூவரின் கருணை மனுவையும் சமீபத்தில் நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில், அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த சிலநாட்களில் இந்த மூவரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.

தற்போது இந்த மூவரையும் காக்க பல்வேறு அறப்போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தயவை தற்போது அனைவரும் நாடி நிற்கின்றனர். ஜெயலலிதா நினைத்தால் மூவரையும் காப்பாற்ற முடியும் என்று அனைவரும் கோரி வருகின்றனர். இதுகுறித்து இதுவரை ஜெயலலிதா தரப்பிலிருந்து எந்த கருத்தும் வெளியிட்பபடவில்லை.

இதற்கு முன்பு 1957ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்தபோது, கொலை வழக்கில் பாலன் என்பவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க விடுத்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் காமராஜர், தலையிட்டு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உதவி பாலன் உயிரைக் காப்பாற்றினார்.

அதேபோல தற்போது ஜெயலலிதாவும் நினைத்தால் இந்த மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றலாம் என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=48949&category=TamilNews

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்றால்... பேயும் இரங்கும் என்பார்கள்.

அது, பொய். பெண் என்றால் பிசாசு என்பதை.. சோனியாவும், இந்திய பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலும் நிரூபிக்கின்றார்கள்.

பெண்களில் கருணையுள்ளம் கொண்டவர்களும் உண்டு கல் நெஞ்சம் கொண்டவர்களும் உண்டு இருப்பினும் ஒரு தாயின் உள்ளக்குமுறலைக்கேட்டாவது இரங்குவார்களா இந்த கல் நெஞ்சக்காரர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களில் கருணையுள்ளம் கொண்டவர்களும் உண்டு கல் நெஞ்சம் கொண்டவர்களும் உண்டு இருப்பினும் ஒரு தாயின் உள்ளக்குமுறலைக்கேட்டாவது இரங்குவார்களா இந்த கல் நெஞ்சக்காரர்கள்

சோனியாவும், பிரதீபா என்னும் இரு பெண்கள் ஆடும், ஆட்டத்தை.....

தமிழக பெண் முதல்வர் ஜெயலலிதா முடிவுக்கு கொண்டு வந்தால்...

அந்தக் கருணையுள்ளம் பெண்களிடம் உள்ளது என்பதை நம்புவேன்.

தமிழ் சிறிக்கு ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

தூக்குக் கயிற்றிலிருந்து பாலனை காமராஜர் காத்தது போல ராஜீவ் கொலையாளிகளை முதல்வர் ஜெயலலிதா காப்பாரா?

மன்னிக்க வேண்டும்.. தலைப்பே மொக்குத்தனமா இருக்கு..! :(

இந்த மூன்றுபேரும் கொலையாளிகளா அல்லது கொலைக்குத் துணைபோனவர்களா? :blink:

இந்திய சட்ட அமைப்பு முழுமையாக தெரியாது. ஆனால் பல தலைவைர்களின் கருத்துப்படி தமிழக முதலமைச்சர் காப்பற்றலாம்.

தமிழகமெங்கும் மக்கள் எழுச்சிகொள்ளவேண்டும், அதன் மூலம் முதலமைச்சர் தனது செயல்பாட்டை இலகுவாக்கலாம்.

உலகத்தமிழர்கள் இந்திய தலைவர்களுக்கு எழுதவேண்டும், உலக மனித உரிமை அமைப்புக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த தூக்கு தண்டனையை நிறுத்தவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூக்குதண்டனையில் இருந்து மூவரையும் காப்பர்றினால் கருணையுள்ளம் கொண்ட முதலமைச்சர் ஜே என்ற பெயர் வரலாற்றில் பதியும்.

நான் நம்புகின்றேன் காப்பாத்துவார் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலன் என்பவர் யார்?...அவர் யாரைக் கொலை செய்தற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது

போலி சாட்சியங்களை சோடித்து ஒரு வழக்கை முடித்துவிடுவதில் கில்லாடிகள் அயலக காவல்துறையினர்.

அந்த வகையிலே இங்கேயும் சில அப்பாவிகளை கொலைசெய்து தமது போலி வல்லமையை நிலை நிறுத்த முயலுகின்றனர் ஒரு கூட்டம். உண்மையான கொலையாளிகளோ இவர்கள் வெளியே வந்தால் பல உண்மைகள் வெளிவந்துவிடும் என்று நடுங்குகின்றனர். இந்தப் பின்னணியில் இந்த அப்பாவிகளை செய்யாத ஒரு குற்றத்துக்காக கொலைசெய்யத் துடிப்பவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் சிதறி அழிந்து போகவேண்டியவர்கள்.

அடுத்த பாகிஸ்தான் / சீனா யுத்தத்தின் போது இவர்கள் அழிய முன்னர் கற்க வேண்டியதைக் கற்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.