Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9581_S_jayalalitha-.jpg

தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்.

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.

முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்

முதல்வர் ஜெயலலித்தாவின் சட்டசபை தீர்மானத்தையிட்டு உலகத் தமிழர்களின் பாராட்டுக்கள்.

மூவர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்று தமிழக பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை அண்மையில் ஜனாதிபதி நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து, அம்மூவருக்கும் செப்டம்பர் 9-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என வேலூர் மத்திய சிறை தேதி குறித்தது.

இதன் தொடர்ச்சியா, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

மூவரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு அரசியல் தலைவர்களும் மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தன.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அழுத்தம் அதிகரித்தது. இதையடுத்து. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதல்வர் என்ற முறையில் தனக்கு இல்லை என்று ஜெயலலிதா திங்கட்கிழமை பேரவையில் விளக்கம் அளித்தார்.

முதல்வர் ஜெயலலிதா கைவிட்டுவிட்டதாக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

இந்த நிலையில், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்று தமிழக பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

http://www.vikatan.com/news.php?nid=3515

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட சபைக்கு காங்கிரஸ் உறுப்பினர்களை தமிழக மக்கள் கடந்த தேர்தலில் புறக்கணித்தமை நல்லதாக போய்விட்டது ...

ந்ல்லவேளை கருணாநிதி , எருமைமாடு ஆட்சில இருக்கல்!

இருந்திருந்தா.........மூணுபேரும் தூக்கில தொங்கினதுக்கு அப்புறம்.

கவிதை பாடி ஏமாத்தி இருப்பான்!

இடைக்கால தடை உத்தரவும், தமிழக பேரவை தீர்மானமும் .....

இனிமே நீண்ட ஆயுளை அவங்களுக்கு கொடுக்க.....

மாற்றுவழிதேட ..கால அவகாசம் கொடுக்கும்!

கடவுளுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

வீணா இணைப்பிற்கு நன்றி, மத்தியில் ஆட்சி மாறினால் இவர்களுக்கு நல்லதொரு விடிவு காலம் வரும்

ஜெயலாலிதா தற்ப்போது தெளிவான பாதையில் போகிறார். அவரசப்பாடாது இவர் நேர்மையான எதிரியாக இருப்பார் ஆனால் கருணாநிதி சுயலவாதி........

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துக் கட்சியினரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. கட்சி பேதங்களை மறந்து அவர்கள் ஒருமித்த குரலில் மத்திய அரசிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்கள். தங்கபாலு போன்ற காங்கிரஸ் தலைவர்களும் இதற்கு உடந்தையாக இருந்தது, கடைசி நேரத்தில் அவர்கள் மனிதாபிமான ரீதியில் சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. ஈழத் தமிழர்களாகிய நாம் தமிழகத் தலைவர்களது அனுதாபத்தை மதித்து இனிமேல் கட்சிசாராது நடுநிலையாக நின்று அவர்களது ஆதரவைப் பெறப் பாடுபடவேண்டும். துணிவோடு இந்தத் தீர்மானத்தையெடுத்து ஏகமனதாக அதனை நிறைவேற்றுவதில் வெற்றிகண்ட அன்னை ஜெயலலிதாவின் அன்பு நெஞ்சத்திற்கு ஈழத்தமிழர் என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

அன்னாய் உனது அன்புக்கு எம் நன்றி

வேதனையில் மூழ்கி விழுந்து கிடந்தவரை

ஆதரித்துத் தூக்கி அணைத்தவளே நீ வாழ்க

காலம் முழுதும் கடுஞ்சிறையில் வாட்டியபின்

காலனுக்கு இரையாக்கும் கயமைத் தனந்தன்னை

நெஞ்சாலுணர்ந்து நிறுத்தினாய். நீதியின் முன்

அஞ்சாதுசெய்த அரிய செயல் தன்னை

நாங்கள் மறவோம். நமது குலம் தழைக்க

தோன்றியவுன் நாமம் சுடர்விடும் என்றென்றும்.

போற்றி ஜெயலலிதாவென்னும் திருநாமம்

போற்றி நின்பாதமலர் போற்றி நின் பேரன்பு

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான்னா சும்மா இல்லடா.. :rolleyes:

தமிழக உறவுகளுக்கும், அவர்தம் தலைவர்களுக்கும் நன்றிகள்..!

நல்ல செய்தி

அதேவேளை இந்த படுகொலை காங்கிரஸ் இன்னொமொரு நயவஞ்சக திட்டத்தை அவிழ்த்து விடலாம். ஆனால் நாம் ஒற்றுமையாக இருப்பின் இந்த சூழ்ச்சிகளை முறியடிக்கலாம் என்பது நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

jaya%20interview.jpg

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து ஆற்றிய உரை :

’’இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.

அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.

மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.

எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

தீர்மானம்

"தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."

முடிவுரை:

தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன். ’’

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60478

காங்கிரஸ், தமிழ்நாட்டு சட்டசபையின் மீது ஒருகண் வைத்து புதிய கவுனரை நியமித்துள்ளது. ஆகவேதான் நான் அம்மையாரின் நேற்றய அறிக்கைக்கு கருத்து எழுதாமலிருந்தேன். இன்றைக்கு முன்னோட்டமாக நேற்றைய நடப்புகள் அமைந்திருந்தன. அவ இன்றைய தீர்மானத்தை கவுனருக்கு அனுப்பாமல் ஜநாதிபதிக்கு அனுப்பியிருக்கிறார். ஒவ்வோரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார்கள். திறமையான சட்ட வல்லுனர்களின் பின்பலம் இருக்கிறது என்பது தெளிவு.

வெற்றி! வெற்றி!!

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 05:53 GMT ] [ அ.எழிலரசன் ]

J.Jeyalalitha.jpg

முருகன்,சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டசபையில் சற்றுமுன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

http://www.puthinapp...?20110830104576

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.