Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கபிலனுக்கு எமது வீர வணக்கங்கள்

Featured Replies

ba270105021gt.jpg

படம்: தமிழ்நெற்

அரசியல் போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்

தாகம் ஒன்றே ஈழமென்று

பாசத்தோடு ஈழம் காத்த பைந்தமிழனே!

எம் தேசம் பெற்றெடுத்த கபிலனே!

ஈழமெங்கணும் உந்தனின்

இறுதி ஊர்வலம்.

தமிழன் மனங்களெங்கணும்

உன் பிரிவினால் ரணம்.

நாயின் வாலை நிமித்த முடியுமோ?

சிங்களக் கூலிகளை உலகத்தால் திருத்த முடியுமோ?

பலவேடம் போடுறார் மகிந்த ராசபக்செ.

பாவம் தமிழன் உயிர்தான் பாடையில் போகுதிங்கே.

சமாதானமென்று சொல்லி வாய் மூட முன்னே

சதியாட்டம் தொடர்கிறது மீண்டுமிங்கே.

தேசியத்தலைவரின் கருணையினால்

சிங்களச்சிப்பாய் விடுதல்லை.

காள்புணர்வு கொண்ட சிங்களக்கூலிகளால்

ஈழத்தின் காவலன் கபிலனினுக்கு உயிக்கொலை.

ஊமையாய் இருக்கவோ நாங்கள்?

உண்மையை உலகிற்கு முழங்குவோம் வாருங்கள்.

எங்கள் கபிலனின் இலட்சியங்கள் எய்துமட்டும்

விழித்திரு ஞாலம். விடிந்திட ஈழம்

எனமுழங்குவோம் வாரீர் விடியலை

நோக்கும் வீர மறவர்களே!!

:cry: :cry: வீர வணக்கங்கள். :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்து புலனாய்வுக்காரர்களின் சதி வலையால் வீரச்சாவடைந்த கபிலனுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேஜர் கபிலனின் வித்துடல் தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டது.

மட்டக்களப்பு - பொலன்னறுவ வடமுனை எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி காவல் நிலை மீது நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத் துறையினர் மற்றும் ஒட்டுப்படையினரால் நடத்தப்பட்ட ஊடுருவித் தாக்குதலில் மேஜர் கபிலன் வீரச்சாவடைந்திருந்தார்.

வீரச்சாவடைந்த சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 34 அகவையுடைய மேஜர் கபிலனின் (பொன்னையா வேலுப்பிள்ளை) வித்துடல் பூரண இராணுவ மரியாதையுடன் வெள்ளி நண்பகல் 12.30 மணிளவில் தரவையில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.

திகிலிவெட்ட அ.த.க பாடசாலையில் மக்களின் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்குகிருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு பின்னர் விதைக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத்தளபதி கேணல் பானு மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமோகன் மாவட்ட துணை இராணுவ தளபதி நாகேஸ் மற்றும் பொறுப்பாளர்கள் போராளிகள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினார்க்ள்.

தகவல் மூலம் - பதிவு.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்புடைய புகைப்படங்களுக்கு

http://www.pathivu.com/index.php?subaction...=1&section=home

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

கபிலனுக்கு வீரவணக்கங்கள்.

கபிலனுக்கு எங்கள் வீரவணக்கம். :cry: :cry: :cry:

மேஜர் கபிலனுக்கு எனது வீர வணக்கங்கள்

கபிலனுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கங்கள்......................

போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

மாவீரன் ஆகிய கபிலனுக்கு எனது வணக்கங்கள்...

போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்

_________________

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேஜர் கபிலனின் வித்துடல் தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வடமுனைப் பகுதியில் கடந்த 26ம் திகதி சிறிலங்கா இராணுவமும், ஒட்டுப்படைகளும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த மேஜர் கபிலன் (பொன்னுச்சாமி - வேலுப்பிள்ளை) சந்திவெளி திகிலிவட்டையை சொந்த முகவரி, தற்போதைய முகவரி வடமுனை மட்டக்களப்பு. இம்மாவீரனின் வித்துடல் வெள்ளிக்கிழமை தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டது.

27ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அவரது தற்காலிக இல்லத்திலிருந்து எடுத்துச் சென்று திகிலிவட்டை அ.க.த. பாடசாலையில் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. அங்கு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் செல்வன் மாமா தலைமையில் வீர வணக்கக் கூட்டம் இடம்பெற்றது. முதல் நிகழ்வாக பொதுச் சுடரினை குடும்பி மலைக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் ஒளியன், ஏற்றி வைத்தார். வித்துடலுக்கு ஈகைச்சுடரினை மாவீரனின் மனைவி ஏற்றி வைக்க, நிகழ்வுரையினை ஓய்வு பெற்ற அதிபர் கிருஸ்ணபிள்ளையும், அரசியல் பொறுப்பாளர் ஒளியன் அவர்களும் நிகழ்த்தினர்.

மலர் வணக்கம் முடிவுற்றதும், தரவை மாவீரர் துயிலுமில்லத்திற்கு வித்துடல் எடுத்துச் சென்று அங்கு பூரண இராணுவ மரியாதையுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. இந்நிகழ்வில் போராளிகள், தளபதிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

வீரவணக்கங்கள் மாவீரனுக்கு

எமது தேச விடுதலைக்காக தனனுயிரை தந்த மாவீரன் கபிலன் அண்ணாக்கு வீர வணக்கங்கள்

எமது தேச விடுதலைக்காக தனனுயிரை தந்த மாவீரன் கபிலன் அண்ணாக்கு வீர வணக்கங்கள்

மாவீரருக்கு- அஞ்சலி செலுத்தும்போது- சாதாரண மனித உறவுகள் பாஷையில்-அண்ணா-தம்பி-தங்கை-ஐயா என்ற சொற்கள்- பாவிக்காதீர்கள் - அவர்கள்-கடவுளுக்கு சமம்! 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.