Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மு.காவையும் முஸ்லிம்களையும் ஊறுகாயைப் போன்று த.தே.கூ. பயன்படுத்தக்கூடாது

Featured Replies

மு.காவையும் முஸ்லிம்களையும் ஊறுகாயைப் போன்று த.தே.கூ. பயன்படுத்தக்கூடாது: அமைச்சர் ஹக்கீம்

இனப் பிரச்சினைத் தீர்வில் மு.காவையும், முஸ்லிம்களையும் தமது தேவைக்கேற்றால் போல் ஊறு காயைப் போன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் பாவிக்கக் கூடாது. அவ்வாறாதொரு செயற்பாட்டை மு.கா ஒரு போதும் அனுமதிக்கமாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். அரசாங்கத்துடன் த.தே.கூ அமைப்பினர் மேற்கொள்ளும் பேச்சுக்களில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாக பேசுதல் வேண்டும். எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்துடன் இடம் பெறும் பேச்சுக்களுக்கு முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும் என த.தே.கூவின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்த கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்து தெரிவித்ததாவது:

த.தே.கூ அமைப்பினர் அரசாங்கத்துடன் இடம் பெறும் பேச்சுக்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவை வெறுமனே கோருவது அர்த்தமற்றது. இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் த.தே.கூ அமைப்பினர் முஸ்லிம்களுடன் குறிப்பாக மு.காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களில் உத்தியோக பூர்வமாக ஈடுபட வேண்டும். அதில் இரு தரப்பினரும் உடன்பாடு காண வேண்டும்.

அது மட்டுமல்லாது அரசாங்கத்துடன் த.தே.கூ அமைப்பினர் மேற்கொள்ளும் பேச்சுக்களில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாக பேசுதல் வேண்டும்.

இவை இல்லாமல் அரசாங்கத்துடன் இடம் பெறும் பேச்சுக்களுக்கு முஸ்லிமகளின் ஆதரவை வேண்டுவது முஸ்லிம்களையும் மு.காவையும் தமது தேவைக்கேற்ப ஊறுகாயை தொட்டுக் கொள்வது போன்றதாகும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வினை பலமாக்குவதற்கு முஸ்லிம்களும் ஒரு தரப்பாக பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். முஸ்லிம்களை பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு தீர்வினை பலமுள்ளதாக்க முடியாது.

சர்வதேச சமூகத்தின் ஆதரவு தமக்கு இருக்கின்றதென்ற எண்ணத்தில் முஸ்லிம்களை புறக்கணிக்க முடியாது. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்று மு.கா எல்லா மட்டங்களிலும் எடுத்துக் கூறியுள்ளது. இவற்றை எல்லாம் மறந்தவர்களாக த.தே.கூ அமைப்பினர் இருக்க முடியாது.

முஸ்லிம்களின் விருப்பத்தோடுதான் இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் கொண்டு வரமுடியும். முஸ்லிமகளை புறக்கணித்த நிலையில் எந்தத் தீர்வினையும் அடைந்து விட முடியாது.

த.தே.கூ அமைப்பு அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுக்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலமாக முஸ்லிம்களுக்கு ஆட்சியுரிமை, அரசியல் உரிமைகள் கிடைத்துவிடும் என்று கூற முடியாது. பேச்சுக்களில் முஸ்லிம்களும் உத்தியோக பூர்வமாக ஒரு தரப்பாக பங்கு பற்றுதல் வேண்டும்.

மு.கா நேர்மையாகச் சிந்திக்கின்றது. முஸ்லிம்களுக்கு ஆட்சி உரிமை என்போர், முஸ்லிம்களை ஒரு தரப்பாக பேச்சுக்களில் இடம் பெறுவதற்கு தயக்கம் காட்டுவதேன்? த.தே.கூ அமைப்பினர் தங்களின் நேர்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பேச்சுக்களில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாக பங்கு பற்றுதல் வேண்டும்.

http://tamilmirror.l...0-20-05-29.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஊறுகாய் இல்லாவிட்டாலும் சோறு சாப்பிடலாம்!

ஆனால், சோறு இல்லாவிட்டால் ஊறுகாய்க்கு மதிப்பில்லை! அது தேவையும் இல்லை!

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் யாரோ ஒரு அப்பாவி ஆண்டி. பொல்லாத நாராயணன் தன் வழியே தெருவில் போக இருப்பு கிடக்காத சவித்திரி வலிய கூப்பிட்டு வம்பை விலைக்கு வாங்குகிறா.

அட போனால் போகட்டும் போடா. இந்த பேச்சு வார்த்தையை உண்மையில் நம்பினவன் யாரடா. போனால் போகட்டும் போடா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஹக்கிம் தானே.... சனல் 4 ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும், ஜெயலலிதாவை கண்டித்தும் அறிக்கை விட்டவர். தமிழனுக்கு ஆதரவாக உலகில் எங்கு குரல் எழுந்தாலும்... சிங்களவனை முந்திக் கொண்டு கண்டனம் தெரிவிப்பதில் இவர் முன்னணியில் நிற்பார்.

இந்த ஹக்கிம் தானே.... சனல் 4 ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும், ஜெயலலிதாவை கண்டித்தும் அறிக்கை விட்டவர். தமிழனுக்கு ஆதரவாக உலகில் எங்கு குரல் எழுந்தாலும்... சிங்களவனை முந்திக் கொண்டு கண்டனம் தெரிவிப்பதில் இவர் முன்னணியில் நிற்பார்.

தொப்பியை அடிக்கடி பிரட்டி போடட்டி அல்ல கருணை காட்ட மாட்டார் இவர்களுக்கு.

Edited by கிளியவன்

  • தொடங்கியவர்

முஸ்லிம்களின் விருப்பத்தோடுதான் இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் கொண்டு வரமுடியும். முஸ்லிமகளை புறக்கணித்த நிலையில் எந்தத் தீர்வினையும் அடைந்து விட முடியாது

இந்தக்கூற்றுக்கு தமிழர் தரப்பிடம் என்ன அணுகுமுறை உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கூற்றுக்கு தமிழர் தரப்பிடம் என்ன அணுகுமுறை உள்ளது?

தமிழ் மொழி போசும் மக்கள் என்ற ரீதியில் தலைவரும் அவர்களையும் கூப்பிட்டு போச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்,

இந்தக்கூற்றுக்கு தமிழர் தரப்பிடம் என்ன அணுகுமுறை உள்ளது?

1.மு.கா முஸ்லீம் மக்களின் அபிலாசைகளை முன்வைத்து பேச, கக்கீம் அவர்களிடம் ஆணையை பெற்றிருக்க வேண்டும்.

2. மு.கா. முஸ்லீம் மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும் வெளிப்படையாக பேச வேண்டும். சிங்களவர்களால் இரண்டாம் தர இனமாக்கப்பட்டுவிட்டால் அதை அவர்கள் தங்களின் தேர்தல்களில் ஒரு விடயமாக தேர்தல் விஞ்ஞாபனங்களில் சுட்டி காட்ட வேண்டும்.

3.தங்களுக்கு விருப்பமான தீர்வை வெளியே கூறி அதை தரும்படி வலியுறுத்த வேண்டும்.

4. இந்த கட்டத்திற்கு பிறகு த.தே.கூ வும் மு.கா வும் தாங்கள் சேர்ந்தா அல்லது தனிய தனியவா உரிமைப்போராடங்களையும் பேச்சு வார்த்தைகளையும் முன்னெடுக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும்.

இப்போது மாவை முஸ்லீம் மக்களின் ஆதரவை தமிழ் மக்களின் பேச்சு வார்த்தைகளுக்கு கேட்டார். சந்தர்பத்தை பயன்படுத்தி கக்கீம் தன்னை உள்நுளைக்க பார்க்கிறார்.

எப்படி வசதி? ஒட்டகத்திற்கு கூட்டாரத்திற்குள் இடமிருக்கா?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

அரசின் ஊறுகாயாக ஹக்கீம் இருந்துகொண்டு த.தே.கூட்டமைப்பை விமர்சிக்கக் கூடாது

முஸ்லிம் காங்கிரஸை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊறுகாய் போன்று பாவிக்கக்கூடாது என்ற தொனியில் அமைச்சர் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருக்கிறார். பேச்சுக்கள் முக்கிய கட்டத்தை அடைந்து வருகின்ற தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை வழமை.

ஆனாலும் அரசாங்கத்தின் ஊறுகாய்போன்று தான் இருந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைச்சர் ஹக்கீம் விமர்சித்திருப்பது அழகல்ல என்று - அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/ஏனையவை/videos--audios/2010-11-25-07-01-52/28309-2011-09-22-17-16-24.html

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவான முஸ்லீம்களை விட எதிரான (எதிராக வாக்களித்தவர்கள் அதிகம் என்பதால்) அவர் முஸ்லிம்களின் தலைவராகி விடமாட்டார்.முஸ்லிம்களின் முற்போக்கான தலைவரை இனம் கண்டு அவருடன் தமிழர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்.

அத்தோடு இனவாத மகிந்தவின் அரசின் நீதி அமைச்சராக இருந்து மகிந்தவின் ஊதுகுழலாக இருப்பவரை எப்படி தமிழர் கட்சிகள் நம்பி பேச்சுவார்த்தை நடாத்துவது?

ஹக்கீம் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை ,மகிந்தவின் அரசில் அமைச்சர்,ஒஸ்லோவில் தனக்கும் பேச்சுவார்த்தையில் ஓரிடம் என அங்கலாய்ப்பவரை ஒரு சுயநலவாதியாகவே தமிழ் மக்களால் பார்க்க வேண்டியுள்ளது.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.