Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்து கூட்டமைப்பில் மு.கா பங்கு கேட்பது எந்தவகையில் சரியானது – சுரேஷ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suresh_Premachchanrad_MP1-150x150.jpg

ஒருவருக்கு உரிமை தேவை என்றால் போராடப் பழக வேண்டும். அதைவிட்டு அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது. இவ்வாறு யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாண்டிருப்பு பிரதான வீதியில் பிரசாரப் பொதுக் கூட்டம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் முகவருமான டாக்டர் வில்லியம் தோமஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினருமான மாவை சேனாதி ராசா, ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் கூட்டதில்கலந்துகொண் டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான நண்பர் ரவூப் ஹக்கீம் அன்மையில் கல்முனையில் வைத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியிருக்கின்றார்.

அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இடம் பெற்றுவரும் பேச்சில் முஸ்லிம் காங்கிரஸ் பங்குபற்ற வேண்டும் என்றும் ஆனால், சர்வதேச பலமிருக்கும் அகங்காரத்தால் தங்களைக் கூட்டமைப்பு ஏற்க மறுப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.

நண்பர் ஹக்கீம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் புரிந்து கொண்டவர், நாம் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வேலை செய்ய விரும்புவர்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.

ஆனாலும் கூட கல்முனை மாநகரசபைத் தேர்தல் பிரசாரத்தில் அவர் கூட்டமைப்பை குற்றம் சாட்டியுள்ளார். பிரசார யுக்தியாகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ அவர் அப்படி கூறி இருந்தாலும் அது பாரதூரமானது.

எல்லோரும் அமைச்சர்களாக இருந்த போதும் அரசுடன் பேசுவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் கேட்பது என்ன அடிப்படையோ புரியவில்லை.

அவர்கள் தாராளமாக அரசுடன் பேசலாம், ஒவ்வொரு நாளும் ஜனாதிபதியுடன் பேசுகின்றனர், அமைச்ரவைக் கூட்டங்களில் பங்குபற்றுகின்றனர். அதே நேரம் அரசுடன், கூட்டமைப்பு நடத்தும் பேச்சுக்குக் கூப்பிடவில்லை என்கின்றனர் எனப் புரணி பேசுகின்றனர். ஜனாதிபதி கூப்பிட்டால் தாராளமாக நீங்களும் பேசலாம்தானே. நீங்கள் பேசக்கூடாது என்று கூறும் ஜனநாயக விரோத போக்குள்ளவர்கள் அல்லர் நாம்.

டக்ளஸ் தேவானநதாவுடன் கூட அரசு பேசுகின்றது. ஜனாதிபதி வீடு தேடிக்கூட போய்ப் பேசினாராம். அப்படியென்றால் முஸ்லிம் அமைச்சர்களுடன் பேசக்கூடாது என்று சொல்லப்போகிறதா என்ன?. எமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இலங்கை அரசு ஏற்காவிட்டாலும், சர்வதேசம் அதனை ஏற்றுள்ளது. இதனடிப்படையில் தீர்வு கிடைக்கும்.

என்ன பெரும்பான்மைப் பலத்துடன் அரசு இருந்தாலும் எமது பிரச்சனைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிச்சயம் தமிழ்மக்கள் விரும்பும் தீர்வுக்கு அரசு வரமாட்டாது என்றாலும், தீர்வை எட்டுவதற்கான அடுத்த கட்ட நகர்வுக்கு இன்று நடைபெறும் பேச்சு எமக்கு அவசியமானதாகும்.

சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் பிரச்சனையை புரிந்துள்ளதால் நிச்சயம் மாற்றம் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. எனவே அடிக்கடி வரும் தேர்தல்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான தமது ஆதரவைத் தமிழ் மக்கள் தமது ஆதரவை அடிக்கடி காட்டவேண்டியுமுள்ளது.

இந்த வகையில் கல்முனை மாநகர சபைத்தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஒட்டு மொத்த ஆதரவைக் கூட்டமைப்புக்கு வழங்கி மேலும் வலுச்சேர்க்க வேண்டும் என்றார்.

http://www.saritham.com/?p=36741

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தரப்பினரின் பேச்சுவார்த்தைகள் சில படிகளைத் தாண்டியவுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் இணைந்து அதில் பேசும்படி கேட்கும்படி சிங்கள தரப்பால் தூண்டப்பட்டு இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தைகளைக் குழப்பியடிக்கும் திட்டமாக இது போன்ற செயற்பாடுகள் இனிமேல் தீவிரமடையும் என்பது திண்ணம். முஸ்லிம் அணியினர் சிங்கள அரசுடன் தமக்கென ஒரு தனியாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டுமேயன்றி தமிழர் தரப்புடன் இணைந்து பேசுவது என்பது கேலிக்கிடமானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும், இதைத்தான் கடந்தகால அனுபவங்களும் எமக்கு எடுத்துக்கூறுகின்றன. முஸ்லிம்கள் சிங்கள அரசுடன் ஏற்கனவே இணைந்து செயற்படுபவர்கள் அத்தடன் அரசின் சலுகைகளையும் உரிமைகளையும் பெற்று அனுபவிப்பவர்கள் என்ற முறையில் அவர்கள் தமது தேவைகளுக்காக அரசை தனிப்பட்டமுறையில் நாடுவது தான் இப்போதுள்ள நிலையில் சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தரப்பினரின் பேச்சுவார்த்தைகள் சில படிகளைத் தாண்டியவுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் இணைந்து அதில் பேசும்படி கேட்கும்படி சிங்கள தரப்பால் தூண்டப்பட்டு இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தைகளைக் குழப்பியடிக்கும் திட்டமாக இது போன்ற செயற்பாடுகள் இனிமேல் தீவிரமடையும் என்பது திண்ணம். முஸ்லிம் அணியினர் சிங்கள அரசுடன் தமக்கென ஒரு தனியாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டுமேயன்றி தமிழர் தரப்புடன் இணைந்து பேசுவது என்பது கேலிக்கிடமானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும், இதைத்தான் கடந்தகால அனுபவங்களும் எமக்கு எடுத்துக்கூறுகின்றன. முஸ்லிம்கள் சிங்கள அரசுடன் ஏற்கனவே இணைந்து செயற்படுபவர்கள் அத்தடன் அரசின் சலுகைகளையும் உரிமைகளையும் பெற்று அனுபவிப்பவர்கள் என்ற முறையில் அவர்கள் தமது தேவைகளுக்காக அரசை தனிப்பட்டமுறையில் நாடுவது தான் இப்போதுள்ள நிலையில் சரியானது.

இதொன்றும் புதிது கிடைடையாது, எப்போதும் முஸ்லிம்களை வைத்து ஸ்ரீலங்கா அரசு பேச்சுக்களையும் தமிழ் முஸ்லிம் உறவுகளையும் குழப்புவதர்க்கே பாவித்து வருகின்றார்கள் இதற்க்கு முஸ்லிம்களும் இசைந்து போகின்றனர் பேசும் போது எப்போதும் தமக்கு ஒரு தனி அலகு கேட்டு குழப்பிவருகின்றனர்.

இவர்கள் போகிற போக்கில் வடக்கும் கழக்கும் அல்லா தமக்குத்தந்த புனித பூமி என்று கூடச்சொன்னாலும் சொல்வார்கள்.

இவர்கள் போகிற போக்கில் வடக்கும் கழக்கும் அல்லா தமக்குத்தந்த புனித பூமி என்று கூடச்சொன்னாலும் சொல்வார்கள்.

அவர்களின் புனிதபூமி சவூதி அரேபியா,

வாருங்கள் மதத்தை விட்டுவிட்டு தமிழராய் ஒன்றினைவோம்.

எத்தனையோ முஸ்லீம் பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மையாக வாழுகின்றனர்.

அங்கே அவர்கள் எவ்வாறு நடாத்தப்படுகின்றார்கள்? யார் உள்ளார்கள் அவர்களுக்காக குரல் கொடுக்க?

சுரேஷ் பிரேமச்சந்திரன் எதுவும் புதிதாக சுட்டி காட்டவில்லை. கமீத் அமைசரவையில் இருப்பவர். ஜனாதிபதின் உதரவின் பேரில், பேச்சுவார்த்தைகளை தொடரவைக்கும் நாடுகள் மீது சேறு அள்ளி வீசுபவர். முஸ்லீம் மக்களின் எகோபித்த ஆதரவை பேறாதவர். காலத்திற்கு காலம் கூட்டணியை மாற்றுபவர். மேலும் நிறைய கூறலாம். ஆனால் இப்பொழுது அவசரமாக கமீதின் கபட பேச்சுக்களுக்கு மறுத்தான் அடிக்க போய் பேச்சுவார்தைகளை குழப்பிக்கொள்ள முடியாது.

பேச்சுவார்த்தையின் முதல் நோக்கம் பேச்சுவார்த்தைகளால் எதுவும் வராது என்றுகாட்டவே.அப்படி நடக்க முடியாதது நடந்து ஏதாவது வந்துவிட்டால் ரஜாபக்கசா திரும்ப வரமுடியாது அதை அமூல் படுத்த. இதையும்விட பல காரணங்கள் உண்டு ஏன் இந்த பேச்சுவார்தை வெற்றி அளிக்காது என்பதற்கு. சம்பந்தர் பேச்சுவார்த்தை என்று காலத்தை கனியவைக்க, புலம்பெயர் மக்கள் தங்கள் கடமைகளைச்செய்து, ராஜபக்சாவை கூண்டில் நிறுத்த முயலவேண்டும். அதன் பின் வரும் பேச்சுவார்த்தைகளால்த்தான் தமிழருக்கு ஓர் தீர்வு கிடைக்கும்.

கமீது இப்போ அரசை விட்டுவிட்டு கூட்டமைப்புடன் சேர்ந்து முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்கு போர்ராட முயற்சிக்கிறார் என்பதல்ல அவரின் பேச்சுகளின் கருத்து. கமீது வேறை எந்த இலங்கை முஸ்லீம் அமைசருக்கும் வேறுபட்டவர் அல்ல. அவர் இப்பொழுது கூட்டமைப்பை கெடுப்பதற்கு உப்யோகபடுத்த படுகிறார். அவசரப்பட்டு அதற்கு நாம்தான் இடம் கொடுக்க கூடாது

சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னுடைய மனசாட்சியை முதலில் முன் வைத்து பேசினால், என்ன இந்த பேச்சு வார்த்தைகளால் தமிழருக்கு ஒரு தீர்வு எட்ட போகிறது என்றும், அதை கமீது தன் மடைத்தனத்தால் குழப்பிவிடப்போறார் என்றும் உண்மையில் நம்புகிறாரா.

"காணப்படவுள்ள அரசியல் தீர்வானது தமிழ் மக்களால் ஏற்றுகொள்ளக்கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும் ஏற்றுகொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே எமது முயற்சியாக இருக்கும்." இது சம்பந்தரின் அண்மைய கருத்து. இது நியாயமான கருத்து. ஆனால் நடைமுறைச்சாத்தியமில்லாத கருத்து. பேச்சுவார்த்தைகளைத்தொடர என்பதற்க்காக மட்டும் கூறப்பட்ட கருத்து.

அவசரமசரமாக சுரேஷ் பிரேமச்சந்திரன், தான் கமீதுடன் மறுத்தான் அடிப்பதாக நினைத்து எறியும் வசனங்கள் சம்பந்தர் அண்மையில் சொன்ன கருத்துகளுக்கு மறுத்தான் ஆகமாறினால், கூட்டமைப்புக்குள் தான் பிளவு வரும். அது நடக்க வேண்டும் என்று அங்கலாய்த்துதான் கமீது இந்த பேச்சை பேசியவர்.

Edited by மல்லையூரான்

சுரேஷ் தொப்பி பிரட்டாமல் இருந்தால் மகிழலாம்.

சம்பந்தன் ஒருகருத்தையும் சுரேஷ் இன்னொரு கருத்தையும் சொல்வது சந்தர்ப்பவாதிகளை குழப்புவதற்காக மட்டுமே இருக்கவேண்டும். தம்முள் முரண்பட இல்லை. சம்பந்தர் தமிழர் அபிலாசைகளை விட்டுக்கொடுத்தால் என்ன நடக்கும் என அறிந்து வைத்திருப்பார்.

முஸ்லிம் கட்சிகள் சிங்கள அரச பயங்கரவாத அரசை எதிர்த்து சிலகாலம் கடுமையாக போராடிய பின் பேச்சுவார்த்தையில் இடம் கேட்பதே நியாயம்.

ஆளோட கழுத்தை அறுக்கும்போதும் ,, அல்லாவுக்கு நன்றி சொல்லுற இந்த கூட்டத்தை,,

பின்னி பெடலெடுக்க,,, அமெரிக்காவை படைத்த,,,

நான் நம்பாத கடவுளுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

ஆளோட கழுத்தை அறுக்கும்போதும் ,, அல்லாவுக்கு நன்றி சொல்லுற இந்த கூட்டத்தை,,

பின்னி பெடலெடுக்க,,, அமெரிக்காவை படைத்த,,,

நான் நம்பாத கடவுளுக்கு நன்றி

அவன்கள் என்ன செய்தாலும் அல்லாவுக்குதான் நன்றி சொல்லுவான்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.