Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ளெவுன் பிளஸ் (11+) ....

Featured Replies

மாலை நேரம் . வேலையால் களைத்து விழுந்து வந்த நண்பர் ஓய்வெடுக்க முடியாமல் .. மனைவி, இவர் வேலையால் வந்தவுடன் மகனை கையளித்து விட்டு, தன் வேலைக்கு பாய்ந்துவிட்டார் ... மகனை மேசையில் இருத்தி விட்டு, சற்று ஊர்ச்செய்திகளை பார்க்க கணனி முன் இருந்த நேரம் ... வீட்டு தொலைபேசி அலறியது .. எடுத்தால் ... மறுமுனையில் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரி கனடாவில் இருந்து ...

ஹலோ ..

எப்படி இருக்கிறீர்கள் ..

இருக்கிறோம் அக்கா, அவ வேலைக்கு போய் விட்டா ..

இல்லை இல்லை உங்களுடன் கதைக்கலாம் ..

ஓம் சொல்லுங்கோ ..

அண்ணாவின் அறுபதாவது பிறந்தநாள் வருகிறது அடுத்த ஓரிரு மாதங்களில் வருகிறது, எம் குடும்பம் இப்போ பல நாடுகளில் பிரிந்து வாழ்கிறோம், இது ஒரு நல்ல சந்தர்ப்பம், ஒருதரம் எல்லோரும் சந்திப்போம் என்று பார்க்கிறேன் ..

ஓம் நல்லது அக்கா ...

நான் மற்றவர்களோடும் கதைத்து விட்டு சொல்கிறேன், இது ஒரு நல்ல சந்தர்ப்பம், பல வருடங்களாக பிரிந்த நாம் ஒன்றாக கூட ஒரு சந்தர்ப்பம் ...

ஓம், கட்டாயம் நாம் வருவோம் ...

நல்லது, நான் பின்பு போன் எடுக்கிறேன், என்னை எடுத்ததாக சொல்லுங்கோ, பின்பு நான் எடுத்து கதைக்கிறேன் ...

ஓம் ...

...... மகனை மேசையில் இருத்தி பின் சாப்பாடு கொடுத்து படுக்க வைத்து இறுதியாக நிம்மதியாக நண்பர் இருக்கையில் ... அவரின் மனைவி வேலையால் வருகிறார். மனைவியிடம் ..

அக்கா, கனடாவில் இருந்து போன் எடுத்தவர் ...

ஆ ... என்னவாம் ... நான் நாளை போன் எடுத்து கதைக்கிறேன் ... என்னவாம் ..

அண்ணாவின் அறுபவதாவது பிறந்த நாளாம் ..

ஓ, அண்ணாவின் வருகுது அல்லோ, காட் போட வேண்டும் ..

இல்லை, இம்முறை எல்லோரும் **இல் சந்திக்க ஏற்பாடு செய்கிறாம் ..

ஓ ... சொல்ல வேண்டியதுதானே? ..

என்னத்தை ..

எங்களால் வர முடியாது என்று ..

என்ன சொல்கிறீர்? ..

ஏன் உங்களுக்கு தெரியாதா? நாம் நகர முடியாது என்று!! ..

என்ன சொல்கிறீர்? ..

என்னப்பா, அவனுக்கு 11+ என்று சொல்ல வேண்டியதுதானே!!!!!!!!!!!!!!! ...

....

அதென்ன 11+ (ளெவுன் பிளஸ்) ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: :icon_mrgreen: நெல்லையன் இப்ப யாழ் பக்கம் வருவதைக் குறைத்து 11+ க்கு கோச்சிங் என்று புலநாய் சொல்லுது! :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

11+ பற்றி இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உட்பட்ட தெற்காசியர்கள் மட்டுமே அதிகம் அலட்டிக் கொள்கின்றனர். இங்கிலாந்து கல்வித்திட்டத்திற்கு அமைய 11 வயதைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் முதன்நிலைக் கல்வியை முடித்து இரண்டாம் நிலைக் கல்வியை பெறுவதற்காக பள்ளிகளில் நுழையும் முன்னர் அவர்கள் தேசிய கல்வித் தரத்தில் எங்கு நிற்கிறார்கள்.. அதற்கு ஏற்ப இரண்டாம் நிலைக் கல்வியில் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலை.. வசதிகள் என்ன என்பதற்கான ஒரு பரீட்சையை முக்கிய கட்டாய பாடங்களான மொழி.. கணிதம்.. விஞ்ஞானத்தில் வைக்கிறார்கள்.

இதனை நம்மவர்களில் பலர் சிறீலங்காவில் நிகழ்த்தப்படும்.. ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஒப்ப எண்ணிக் கொண்டு பிள்ளைகளைப் போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள். இதுகுறித்து இங்கிலாந்து கல்வித் துறை சரியாக அறிந்து வைத்திருக்கிறதோ தெரியாது.. ஆனால் நம்மவர்கள் விசேட தனியார் வகுப்புக்கள் உட்பட எல்லாம் உருவாக்கி பிள்ளைகளை அனுப்பி வருவதோடு.. வீட்டிலும் 24/7 மணி நேரம் படி படி என்று வைத்து சித்திரவதை செய்து வருகிறார்கள்

இத்தோடு முதன்மைப் பள்ளிகளில் சேர என்று நடத்தப்படும் கிரமர் ஸ்கூல் பரீட்சைகளுக்கும் தயார் செய்கிறார்கள். அதில் சில தமிழ் ஆசிரியர்மார்.. பேப்பர்களை களவாக பள்ளியில் இருந்து சுட்டு வந்து மாணவர்களுக்கு வினா - விடை கொடுத்து.. தகுதி அற்ற மாணவர்கள் போட்டி மிக்க மாணவ சமூகத்துக்குள் அனுப்பி.. அவர்களின் இரண்டாம் நிலைக் கல்வியை பாழாக்கும் செயலையும் செய்கிறார்கள்.

சிறீலங்காவில் புலமைப் பரிசில் பரீட்சை.. உட்பட்ட அனைத்துப் பரீட்சைகளும் மாணவர்களை தரப்படுத்தும் வகையில் அமைவன. மாணவர்கள் திறமைகளை மதிப்பட அமைவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் இங்கிலாந்துக் கல்வித்திட்டப் பரீட்சைகள்.. மாணவர்களின் நியாயமான திறமைகள் கண்டறியப்பட்டு அவை தேசிய மட்டத்தில் எய்தப்படாது இருக்கும் நிலையில் அம்மாணவர்களுக்கு விசேட கல்விச் சலுகைகளும்.. உதவிகளும் அளிக்கவே இப்பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இவை போட்டுப் பரீட்சைகள் கிடையா.

இந்த அடிப்படையை தமிழ் கூறும் பெற்றோர் பலர் புரிந்து கொள்ளாமல்.. தாங்கள் ஊரில் பாஸ் பண்ணின.. இல்ல பெயில் விட்ட பரீட்சைகளாக இவற்றை எண்ணிக் கொண்டு அவற்றை நோக்கி தங்கள் பிள்ளைகளை தயார்படுத்த கடும்.. அளவுக்கு அதிகமான வேலைப்பழுக்களை திணித்து வருகின்றனர். இது அவசியமற்ற ஒன்று.

உங்கள் பிள்ளை தேசிய தரம் எதிர்பார்க்கும் நிலையில் வேலை செய்கிறதா என்று மட்டும் பார்த்து.. அதனை எட்ட பள்ளியுடன் இணைந்து அவர்களின் கல்வி நிலையை உயர்த்த முனையுங்கள்.

தேசிய மட்டத்தில் 11+ மாணவர்கள் எய்த வேண்டிய உச்ச தரம் வருமாறு..

மொழி: மட்டம் 5

கணிதம்: மட்டம் 5

விஞ்ஞானம்: மட்டம் 5

(எனி வருங்காலங்களில் விஞ்ஞானம் பாடசாலை மட்டத்தில் மட்டும் சோதிக்கப்பட இருப்பதாக அறிய முடிகிறது. பொதுப்பரீட்சை இருக்காது என்று சில பள்ளிகள் கூறி இருக்கின்றன. இதன் சரியான விபரம் தெரியவில்லை.)

தேசிய அளவில் எல்லாத்திலும் மட்டம் 3 அல்லது 4 எய்தப்படுதல் போதுமானதாக கருதப்படுகிறது. மட்டம் 3க்கு கீழான நிலையில் உள்ள மாணவர்களுக்கு இரண்டாம் நிலைக் கல்வியின் போது விசேட கவனம் செலுத்த பாடசாலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பெற்றோரும் அதைப் பள்ளிகளிடம் கோரலாம்.

தமிழர்கள்.. இதனை.. சிறீலங்காவின் போட்டிப் பரீட்சைகளுக்கு இணையாக நினைத்து பிள்ளைகள் மீது வேலைப் பழுக்களை அதிகரிக்கச் செய்வது.. சட்டப்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. வீட்டில் ஒரு பிள்ளைக்கு 2 மணி தொடக்கம் அதிகம் 3 மணி நேரங்களே படிக்க ஒதுக்கலாம். அதற்கு கூட ஒதுக்கி அவர்களை வீட்டில் கட்டாயப்படுத்தி படிப்பிப்பது கண்டனத்துக்குரியது மட்டுமன்றி தண்டனைக்குரியதாகும். இப்படிச் செய்த பெற்றோர் சிலரின் பிள்ளைகள்.. பெற்றோரின் அதிகரித்த எதிர்பார்ப்பு பிள்ளைகளின் அமைதியான வாழ்வைக் கெடுப்பதாக அறியப்பட்டு.. அரசினால் பொறுப்பேற்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதில் நெல்லையர் அல்லது அவர் சம்பந்தப்பட்டவர்கள் அடங்காதிருக்க வேண்டிக் கொள்கின்றேன். <_<:icon_idea:

குறிப்பு: (சிறுவர் கல்வி தொடர்பான பயிற்சித்திட்டத்தின் இணைந்து கொண்டு செயற்பட்ட காலத்தில் பெற்றுக் கொண்ட விபரங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளேன். எனக்கு தெரியாத பிற விடயங்களும் இதில் மேலும் அடங்கக் கூடும்.)

Edited by nedukkalapoovan

பிள்ளை விரும்பினால், அவர்களின் எதிர்காலத்திற்கு நன்மை என்றால் மெனக்கெடுவது நல்லது. அண்ணனின் பிறந்த நாள் அடுத்த வருடமும் வரும். பிள்ளையின் எதிர்காலம் திரும்ப வராது.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் இந்தக் களத்துக்கு நெடுக்கர் வேணும்கிறது..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்குத்தான் இந்தக் களத்துக்கு நெடுக்கர் வேணும்கிறது..! :rolleyes:

அதெண்டால் உண்மைதான். :)

எங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டியது கடினமாக மட்டும் இல்லை, சமார்த்தியமாகவும். அதாவது, you should not be working just hard, but smart.

அதேவேளை நல்ல இடத்தில் வேலைசெய்பவர்கள், மற்றையவர்கள் முடிந்தளவு கைகொடுத்து உதவவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.