Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கண்ட தாய்நிலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காய்ந்துபோன கண்ணீர்ச் சுவடுகளோடும்

தேய்ந்து போன செருப்புக்களோடும்

ஊர்ந்து திரிந்தன உயிர்க் கூடுகள்!

அரச மரங்களின் அடிவாரங்களில்

பிரசவ காலத்துப் பெண்களின்

அடி வயிற்றின் வட்டங்களாய்க்

குடி வந்திருந்தன புத்த கோவில்கள்!

புத்த பிரானின் புனிதம் கலையாது

பத்திரமாகப் பாதுகாத்தன,காவலரண்கள்!

புங்கையூரான்

............

வார்த்தைகள் வரவில்லை.

தொண்டைக்குள் ஏதோ சிக்கியதுபோல்

துக்கமே அடர்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் நன்றாக தமிழைத் தெழித்திருக்கிறீர்கள். கவிதையாக . ஏன் அடிக்கடி எழுதுவதில்லை??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்

............

வார்த்தைகள் வரவில்லை.

தொண்டைக்குள் ஏதோ சிக்கியதுபோல்

துக்கமே அடர்கிறது...

உண்மை தான் சகோதரி!

இன்றும் ஒரு அரச மரம் பிரசவ வலியில் துடிக்கின்றது, வல்வையில்!

வீரத் தமிழனின், நவீன கால வரலாறு தோன்றிய மண்ணில்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் நன்றாக தமிழைத் தெழித்திருக்கிறீர்கள். கவிதையாக . ஏன் அடிக்கடி எழுதுவதில்லை??

வயிறு என்று ஒன்று இருக்கின்றதே, சாத்திரியார்!

அதற்காகச் சில வேளைகளில், உணர்வுகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியிருக்கின்றது

நேரம் கிடைக்கும்போது, கட்டாயம் எழுதுவேன்! நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் சகோதரி!

இன்றும் ஒரு அரச மரம் பிரசவ வலியில் துடிக்கின்றது, வல்வையில்!

வீரத் தமிழனின், நவீன கால வரலாறு தோன்றிய மண்ணில்!!!

இது ஆக்கிரமிப்புச்சின்னம் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் அகற்றப்படும்.

நான் புத்தரை வெறுக்கவில்லை ஆனால் ஆக்கிரமிப்புச்சின்னமாக என்வீட்டு முற்றத்தில் எந்தத் தேவதை வந்து குடியிருந்தாலும் வெறுப்பேன்.

jaffna-fort1-495x328.jpg

உடைந்து போன கட்டிடங்களின் சுவர்களில்

வடக்கின் வசந்தம் விளம்பரம் செய்தது!

தாவணிகள் இல்லாத சேலைகளுக்கிடையில்

தர்மத்தின் காவலர்களின் மழித்த தலைகள்!

வடக்கையும், தெற்கையும் இணைக்கும் பாலமாய்

வங்கிகள் தங்களை விளம்பரம் செய்தன!

ஊர் கூடித் தேரோட்டிய கோவில்கள்,

அர்ச்சகரின் வரவுக்காய்க் காவலிருக்கின்றன!

தாவணிகள் இல்லாத சேலைகளுக்கிடையில்

தர்மத்தின் காவலர்களின் மழித்த தலைகள்!

இதெல்லாம் ஒரு கவிதையா?.. ஆறாத தீ காயம்!

ஏறக்குறைய உலைக்களம் வியாசன் எங்கிற பேரில எழுதுற ,

எங்க புதுவை அண்ணாவுக்கு சரிசமமா இருக்கு , உங்க எழுத்துக்கள்..!

இன்னும் அழவைக்க ...

அந்த புதுவை இருக்காரோ இல்லியோ தெரியல,,,

ஆனா புங்கை அண்ணா இருக்கார்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு கவிதையா?.. ஆறாத தீ காயம்!

ஏறக்குறைய உலைக்களம் வியாசன் எங்கிற பேரில எழுதுற ,

எங்க புதுவை அண்ணாவுக்கு சரிசமமா இருக்கு , உங்க எழுத்துக்கள்..!

இன்னும் அழவைக்க ...

அந்த புதுவை இருக்காரோ இல்லியோ தெரியல,,,

ஆனா புங்கை அண்ணா இருக்கார்! :)

கருத்துக்கு நன்றிகள், அறிவிலி!

புதுவை மகாமேரு மலை!

புங்கை மரியானா அகழி!!!

  • 4 weeks later...

புங்கையூரான் கவிதை பார்த்தேன். வீரசிங்கம் கட்டிடத்தைப் பார்த்தவர். பின்னர் புங்கையூரின் நுழைவாயிலைக் காண்கிறார். இடையில் தூங்கிவிட்டாரா? அல்லது கண்ணைக் கட்டிக் கூட்டிச் சென்றார்களா? புரியவில்லை. காலம் கடந்த கேள்வி. என்றாலும் புதியவனானபடியால் இப்போது கேட்கிறேன். இடையில் உள்ள ஊர்களைப் பார்க்காவிட்டாலும் வேலணை வாணர் பாலத்தில் போகும்போது உணர்ந்திருப்பார்.

பாலம் போடமுன் அங்குள்ள நிலமையை வித்துவான் சி.ஆறுமுகம் (நல்லையா)அவர்கள் உள்ளம் பொங்கிப் பாடியுள்ளார். அதனை இங்கு பதிவதில் பெருமிதமடைகிறேன்.

தோணிகளிற் கால்வைத்து ஏறின் கொஞ்சத்

தூரந்தான் மிதக்குமவை! பொறுக்கும் சேற்றில்

ஆணென்ன பெண்ணென்ன! குழந்தையென்ன!

அகலாத நோய்பிடித்த கிழந்தா னென்ன!

நாணின்றி ஆடைகளைத் தூக்கித் தூக்கி

நடுக்கடலிற் புதைசேற்றில் நடந்த காட்சி

தோணுதையா மனப்படத்தில் துயரம் யாவும்

தொலைந்திடுமோ வாணர் வந்து தோன்றாவிட்டால்?

நிறைமாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே

நெடுநேரம் தோணியிலே நின்றுகொண்டு

இறைவாஎம் விதியேதான் இதுவே என்று

ஏங்கிடுவாள்! அழுதிடுவாள்! என்னே வாழ்வு

மறையாதோ இக்கொடுமை என்றென்றெண்ணி

மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக்குள்ளும்

கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்ததம்மா!

கண்ணியஞ்சார் வாணர் வந்து பிறந்த தாலே!

- நன்றி தீவகம். -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் கவிதை பார்த்தேன். வீரசிங்கம் கட்டிடத்தைப் பார்த்தவர். பின்னர் புங்கையூரின் நுழைவாயிலைக் காண்கிறார். இடையில் தூங்கிவிட்டாரா? அல்லது கண்ணைக் கட்டிக் கூட்டிச் சென்றார்களா? புரியவில்லை. காலம் கடந்த கேள்வி. என்றாலும் புதியவனானபடியால் இப்போது கேட்கிறேன். இடையில் உள்ள ஊர்களைப் பார்க்காவிட்டாலும் வேலணை வாணர் பாலத்தில் போகும்போது உணர்ந்திருப்பார்.

பாலம் போடமுன் அங்குள்ள நிலமையை வித்துவான் சி.ஆறுமுகம் (நல்லையா)அவர்கள் உள்ளம் பொங்கிப் பாடியுள்ளார். அதனை இங்கு பதிவதில் பெருமிதமடைகிறேன்.

தோணிகளிற் கால்வைத்து ஏறின் கொஞ்சத்

தூரந்தான் மிதக்குமவை! பொறுக்கும் சேற்றில்

ஆணென்ன பெண்ணென்ன! குழந்தையென்ன!

அகலாத நோய்பிடித்த கிழந்தா னென்ன!

நாணின்றி ஆடைகளைத் தூக்கித் தூக்கி

நடுக்கடலிற் புதைசேற்றில் நடந்த காட்சி

தோணுதையா மனப்படத்தில் துயரம் யாவும்

தொலைந்திடுமோ வாணர் வந்து தோன்றாவிட்டால்?

நிறைமாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே

நெடுநேரம் தோணியிலே நின்றுகொண்டு

இறைவாஎம் விதியேதான் இதுவே என்று

ஏங்கிடுவாள்! அழுதிடுவாள்! என்னே வாழ்வு

மறையாதோ இக்கொடுமை என்றென்றெண்ணி

மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக்குள்ளும்

கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்ததம்மா!

கண்ணியஞ்சார் வாணர் வந்து பிறந்த தாலே!

- நன்றி தீவகம். -

கருத்துக்கு நன்றிகள் செண்பகன்!

தூங்கவில்லை, செண்பகன்! வாணர் பாலத்தை இன்னொரு பதிவில் பதிந்தால் போய் விட்டது!

வித்துவான் ஆறுமுகம் எனது உறவு! அவரது பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவையும் கூட!

வாணர் பாலம் என்ற பெயரே பலருக்குத் தெரியாதே! நீங்கள் மிகவும் நெருங்கி வந்து விட்டீர்கள் போல் ஒரு உணர்ச்சி!

தங்களைக் களத்தில் காண்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!

நான் சிவராமலிங்கம் ஆசிரியரின் ஒரு மாணவன்! அவர் திருமணம் செய்த காலங்களில் வாணர் பாலம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகின்றேன்!

அவர் நீந்திய போது தான், அவரது கால்கள் வழங்க முடியாமல் போனதாக அறிந்தேன்!

வாணர் பாலம் கட்டிய போது, ஒரு இரும்பாலான ஒரு வட்ட அளவு வைத்திருந்தாராம்! அதனிலும் பெரிதான கற்கள் மட்டுமே தெரிவு செய்யப் பட வேண்டும் என்று ஊராருக்குக் கூறியிருந்தாராம்! ஊரெல்லாம் எல்லோரும், அதை விடப் பெரிதான கல்லைத் தேடித் திரிவார்களாம்!

வாணரின் திறமையான அமைப்பால் தான், பராமரிப்பு இழந்த போதும், பாலத்தின் உயிர் இன்னும் துடித்துக்கொண்டிருக்கின்றது, செண்பகன்!

சிவராமலிங்கம் அவர்கள் நல்ல பேச்சாளர். பலமுறை அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். ஈழத்துச் சிவானந்தன்கூட நல்ல பேச்சாளர். கனடாவில் இருப்பதாக அறிந்தேன். எழுதுங்கள். வாணர் பாலம் மட்டுமல்ல… "பண்ணைப்பாலத்தில் இருந்து வாணர் பாலம் வரை" என்று மிகுதியைத் தொடருங்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சிவராமலிங்கம் அவர்கள் நல்ல பேச்சாளர். பலமுறை அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். ஈழத்துச் சிவானந்தன்கூட நல்ல பேச்சாளர். கனடாவில் இருப்பதாக அறிந்தேன். எழுதுங்கள். வாணர் பாலம் மட்டுமல்ல… "பண்ணைப்பாலத்தில் இருந்து வாணர் பாலம் வரை" என்று மிகுதியைத் தொடருங்கள்.

நன்றி

இவ்வளவும் வந்தபின் - ஏன்

இன்னும் தயக்கம்

ஊரைச்சொல்லிவிடும்.

தயங்கும் ஒவ்வொரு வினாடியும்

என் தலை வெடிக்கப்போகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.