Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலத்து தமிழர்களின் நிதியை பெற மஹிந்தவிற்காக லியாம் பொக்ஸ் + பெல் பொட்டிங்கர் போட்ட திட்டம்

Featured Replies

பிரிட்டனின் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ் சிறிலங்கா விடயம் தொடர்பில் நன்றாக மாட்டிக்கொண்டுள்ளார். மஹிந்த இராஜபக்‌ஷவுடனான கள்ளக்காதல் தொடர்பு இப்போது சூடு பிடித்துள்ளது. ஒரு மாஜி செயலரை வைத்து தனது நரித்திட்டங்களை சிறிலங்காவிற்காக செய்துவந்த பல திட்டங்கள் பிரித்தானியாவில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே பல பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கின்றது..

நேற்றுவரை லியாம் பொக்ஸ் சிறிலங்காவிற்கு ஆயுத கொள்வனவு தொடர்பிலான பேரம், சிறிலங்காவிற்கு நற்பெயரை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றார். ஆனால் இந்த விசாரணைக்குழு நம்பகத்தன்மை பற்றி எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது..

ஆனால் இன்று மேலும் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது சிறிலங்காவை அபிவிருத்தி செய்வதற்காக மஹிந்தவிற்கு நிதிவளங்களப்பெற்றுக்கொடுக்க லியாம் பொக்ஸ் சிறிலங்கா அபிவிருத்தி நிதி என்ற நிதியத்தினையே ஆரம்பித்துள்ளார்..

இந்த நிதியம் பற்றி பிரித்தானிய தமிழர்களுக்கு நன்கு தெரியும் கூடவே பலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். லியாம்பொக்ஸ் இன் அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னரே லியாம் பொக்ஸ் இந்த திட்டத்தினை ஆரம்பித்திருந்தார். இதற்கு புலத்து தமிழர்கள் அனைவரையும் தமது நிதிகளை முதலீடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால் தமிழர்கள் அப்போது ஆட்சியில் இவர் இல்லாததாலும் கூடவே சிங்கள அரசாங்கத்தின் மத்திய வங்கி சம்பந்தப்படுவதாலும் புலம்பெயர் தமிழர்கள் இந்த திட்டத்தினை நிராகரித்துவிட்டனர்..

இதனால் ஆத்திரமடைந்த பொக்ஸ் தமிழ் மக்களை திட்டிய சம்பவமும் உண்டு. ஆனால் இப்போதுதான் தெரிகின்றது இந்த திட்டத்தினை பொக்ஸ் தனது வியாபாரத்திட்டம் போலவே செய்துள்ளார். இதற்கும் பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என பிரித்தானிய அரசு கண்டித்துள்ளது. பொக்ஸ் அவர்கள் பிரித்தானியாவின் வெளியுறவு கொள்கையினை தாந்தோன்றித்தனமாக மீறி செயற்பட்டுள்ளார் என ஆழுங்கட்சிக்குள்ளேயே புடுங்குப்பாடு ஏற்பட்டுள்ளது..

சிறிலங்கா அரசு மீது பிரித்தானிய அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கையினையே வைத்துள்ளது. கூடவே மனித உரிமை தொடர்பில் அழுத்தங்களை மேற்கொண்டுவருகின்றது. இந்த சூழலில் பொக்ஸின் திட்டம் அதனை மீறுபவையாக உள்ளது..

இன்னும் கோபமூட்டக்கூடிய விடயம் என்னவென்றால் பொக்ஸ் ஆரம்பித்த சிறிலங்கா அபிவிருத்தி நிதியத்திற்கு தலைவர் யார் என்று கேட்டால் திரு பெல் எனப்படும் பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் தலைவர் ஆகும். இந்த நிறுவனம்தான் சிறிலங்காவிற்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள போர்க்குற்ற களங்கத்தினை கழுவும் பணியை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனமாகும்..

இதில் இருந்தே தெரியும் பொக்ஸ் மஹிந்தவிற்கு என்ன செய்ய முற்பட்டுள்ளார் என்பது.

ஈழநாதம்

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் ஆத்திரமடைந்த பொக்ஸ் தமிழ் மக்களை திட்டிய சம்பவமும் உண்டு. ஆனால் இப்போதுதான் தெரிகின்றது இந்த திட்டத்தினை பொக்ஸ் தனது வியாபாரத்திட்டம் போலவே செய்துள்ளார். இதற்கும் பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என பிரித்தானிய அரசு கண்டித்துள்ளது. பொக்ஸ் அவர்கள் பிரித்தானியாவின் வெளியுறவு கொள்கையினை தாந்தோன்றித்தனமாக மீறி செயற்பட்டுள்ளார் என ஆழுங்கட்சிக்குள்ளேயே புடுங்குப்பாடு ஏற்பட்டுள்ளது..

இந்த லியாம் பொக்ஸ்க்கு எதிராக இதுவரை லண்டன் வாழ் தமிழர்கள் ஏன் ஒரு போராட்டமும் நத்தவில்லை?

ஐயா என்ன நினைக்கின்றீர்கள் என எனக்கு தெரியும் ஏன் நான் முன்னின்று நடத்தலாம் என எண்ணுகின்றீர்கள் எனக்கு தெரியும் அந்தளவு விவேகம் என்னிடம் இல்லை யாரவது ஏற்பாடு செய்தால் நானும் கலந்து கொள்வேன்.

இவருக்கு எதிராக போராட்டம் என்பதை நாங்கள் பின்புலத்தில் இருந்து செய்வதே மேல்:

- இவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உசுப்பி விடுதல்

- இவரின் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களை எழுப்பி விடுதல்

- ஊடகங்களுக்கு இவர் பற்றி எழுதுதல்

- 'ஓம்பட்ஸ்மன்' என்ற பாராளுமன்ற அமைப்பினருக்கு எழுதுதல்

இவருக்கு எதிராகப் பிரித்தானியத் தமிழர்கள் அவரது தொகுதிக்குச் சென்றே போராடி இருகிறார்கள்.வெறும் பார்வையாளராக இருக்காமால் நீங்கள் இருக்கும் பகுதியில் இருக்கும் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுங்கள்.பல நூறு செயற்பாட்டளர்களின் உழைப்பு இதன் பின்னால் இருக்கிறது.செபோன் அம்மையார் பலமுறை ஃபொக்கிசின் செயற்பாடுகள் பற்றி பாராளுமன்ரதிலையே கேட்டிருகிறார்.இன்று வரும் உண்மைகள் பலரின் பல நாள் உழைப்பின் பயன். பிரித்தானிய அரசின் இவ்வருட காலக் கெடுவின் பின்னர் இன்னும் பல விடயங்கள் நடந்தேறும்.உண்மையே இறுதியில் வெல்லும், நம்பிக்கையுடன் செயற்படுவோம்.

இவரைப் போலவே லிடில் எயிட் என்னும் அமைப்பினூடாக தேசம் நெட்டுன் கொண்ஸ்டையின் என்பவரும் சிறிலங்காவின் அரச முகவராகச் செயற்படுகின்றார்.இதன் பின்னால் இருக்கும் மர்மங்களையும் உண்மை விரும்பும் நல் இதயத்தார் வெளிக் கொண்டு வர வேண்டும். இவர்களின் போலி முகமூடிகள் கிழிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

லியாம் பொக்ஸ் இராஜினாமாச் செய்துவிட்டார். எனினும் பின்பக்கத்தால் தொடர்ந்தும் உழைப்பதற்கு அடிக்கடி சிங்கலங்கா செல்லுவார்..

கிருபன் அதற்குச் சாத்தியம் வெகு குறைவு ஏனெனில் சிறிலஙாவிற்கு இவரின் பயன் பாடு இனி பிரியோசமானதாக இருக்காது.அனேகமாகக் கை கழுவி விடுவார்கள். வேறு யாரவது புதியவரைத் தேடிப் பிடிப்பார்கள்.

கிருபன் அதற்குச் சாத்தியம் வெகு குறைவு ஏனெனில் சிறிலஙாவிற்கு இவரின் பயன் பாடு இனி பிரியோசமானதாக இருக்காது.அனேகமாகக் கை கழுவி விடுவார்கள். வேறு யாரவது புதியவரைத் தேடிப் பிடிப்பார்கள்.

ரிசெர்வடாக பல பேர் இருப்பார்கள். பல நாடுகளிலும் இருப்பார்கள். ஆயிரத்தில் ஒன்று லியம் பொக்ஸ். இதுதான் சிங்கள இராஜ தந்திரம்.

பலவருடங்களுக்கு முன் தீட்சித்தின் மனைவிக்கு வைரமாலை கொடுத்ததைப் பற்றி ஆராய்ந்து எழுதுவது தமிழர்களின் இராஜதந்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.