Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரிசில் தேசிய செயற்பாட்டாளர் மீது வாள்வீச்சு! பின்னணியில் சிங்கள கைக்கூலிகள்?

Featured Replies

பாரிசில் தேசிய செயற்பாட்டாளர் மீது வாள்வீச்சு! பின்னணியில் சிங்கள கைக்கூலிகள்?

அக் 30இ 2011

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுதுஇ வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள்இ வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் மீதான கொலைவெறித் தாக்குதலின் பின்னணியில் சிங்கள அரசின் கைக்கூலிகள் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

26.10.1996ஆம் ஆண்டு இதேபாணியில் பாரிசில் சிங்கள கைக்கூலிகள் நிகழ்த்திய கொலைவெறித் துப்பாக்கிச்சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் கந்தையா நாதன்இ ஈழமுரசு இதழின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

தற்பொழுது இதேபாணியில் பருதி அவர்கள் மீது சிங்கள அரசின் கைக்கூலிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதபாணிகளால் கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழீழ தேசிய கட்டமைப்புக்களை சிதைத்துஇ தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பிஇ மக்களின் எழுச்சியை சிதறடிக்கும் நாசகாரக் குழுவாதப் பிரிவினை நடவடிக்கைகளில் தனது கைக்கூலிகளை சிங்கள அரசு களமிறக்கியுள்ள பின்புலத்திலேயே திரு.பருதி அவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் நிகழ்ந்துள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதற்கல்ல.................................... :( :( :(

இங்குள்ள காவல்துறை தூங்கவுமில்லை

இந்தத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதை கண்டறிய பிரெஞ்சுக்காவல்துறைக்கு தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

இந்தத் தாக்குதலில் பின்னணியில் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் கைகள் இருக்கிறது என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

அனைத்துலகத் தொடர்பகத்துடன் கருத்து முரண்டபாடு கொண்ட செயற்பாட்டாளர்கள் சிலரை பிரெஞ்சு இங்கிலாந்து காவல்துறையினர் தேடுவதாக சிறீலங்கா புலனாய்வு துறையால் வெளியடப்படும் 'இருட்டு' ஒரு பொய்யான தகவலை சில தினங்களுக்கு முன் வெளிட்டிருந்தது. இந்த செய்தியை உண்மையாக்க இந்தத் தாக்குதல் திட்மிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பிரெஞ்சு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவருகிறது.

அடுத்து இத்தத் தாக்குதல் நடந்தவுடன் கஜன் நாதனுடைய கொலையுடன் ஒப்பிட்டு இந்தச் செய்தி எழுதப்பட்டிருக்கிறது.கஜன் நாதனுடைய கொலையின் பின்னணி என்ன என்பது பிரெஞ்சு காவல்துறைக்கும் பிரெஞ்சு அரசாங்கத்துக்கும் தெரியாது என்று இந்தச் செய்தியை எழுதியவர்கள் நினைத்திருந்தால் நிச்சமாக அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் ஆட்களாகவே இருக்க வேண்டும்.விடுதலைப்புலிகள் ஐரோப்பாவில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பிரெஞ்சு குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் இருப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்(பரிதி பிரெஞ்சு குடியரிமை பெற்றவர்) என்பதை உறுதிப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்கான வேலைகள் அண்மைக்காலமாக திட்மிட்டு செய்ப்பட்டு வந்திருக்கின்றன.ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவருடைய தனிப்பட்ட உரையாடலை ஒட்டுக்கேட்பதும் அதை அந்த நபருக்கு அபகீர்த்தி எற்படுத்தும் வித்தில் பயன்படுத்துவதும் கிறிமினல் குற்றம் மட்டுமல்லாமல் அடிப்படை மனித உரிமை மீறல் குற்றமும் கூட. இதை சிறீலங்கா புலனாய்வுத்துறை விடுதலைப்புலிகள் தீவிர ஆதரவு இணையத்தளம் என்ற பெயரில் அண்மைக்காலமாக திட்டமிட்டு செய்துவந்தது.

வுpடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டுள்ள உள் முரண்பாட்டால் இந்தத் தாக்குதல் நடந்தது என்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு.மற்றவர்களுக்கு துரோகி பட்டங்கட்டுவதற்காக பரிதி மீது சேம் சைட் கோல் போடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பிரெஞ்காவல்துறைக்கு எற்படிருப்பதை அறிய முடிந்து.

பாரிஸ் வாழ் உறவுகளே!

இன்று இவருக்கு நாளை உங்களுக்கு ஆகவே இணைந்து செயற்படுங்கள்.புலம் பெயர் நாடுகளில் ஆயுதக்கலாச்சாரம் முற்றாக ஒழிக்கபடவேண்டிதொன்று.ஆகவே அனைவரும் இணைவோம்.குற்றவாளியை காட்டி கொடுப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் இரண்டுபட்டால்கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் இதையுணர்ந்து ஒரு கூரையின் கீழ்வரணும். அதைவிடுத்து இதை யாராவது தமது வெற்றியாகக்கொண்டாடுவார்களாக இருந்தால் இதுவே அவர்களையும் நாளடையில் வந்து சேரும் என்பதனையும் எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.

போட்டுத்த் தாக்கு நீ போட்டுத் தாக்கு..............

இப்படி தான் கஜன் , நாதன் படுகொலையையும் ஓஓஓஓட்டுக் குழு போட்டு தாக்கி விட்டு அப்படியே இருக்கு. இதுவரை யாரையும் பிடித்ததாகவோ சந்தேகித்ததாகவோ அறியவில்லை.

உண்மையில் என்ன நடந்தது என்பது அனைவர்க்கும் தெளிவாக புரியும், புலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழலை பயன்படுத்தி சிங்களவர் தனது கைக்கூலிகளை ஏவி காரியத்தை முடித்துள்ளார்கள் இதற்க்கு பலியாகாது இருப்பதே புலம் பெயர் தமிழரின் கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மில் மாவீரர் நாளை ஒற்றுமையாக கொண்டாட முடியாது இருக்கும் போது....

இப்படியான இடத்தில், மற்றவன் இலகுவாக பூந்து... தனது காரியத்தை நிறைவேற்றுவான்.

இது ஆரம்பம். இதனை முளையிலேயே... கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால்... பெரும் ஆபத்தில் முடியும்.

Edited by தமிழ் சிறி

எம்மில் மாவீரர் நாளை ஒற்றுமையாக கொண்டாட முடியாது இருக்கும் போது....

இப்படியான இடத்தில், மற்றவன் இலகுவாக பூந்து... தனது காரியத்தை நிறைவேற்றுவான்.

இது ஆரம்பம். இதனை முளையிலேயே... கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால்... பெரும் ஆபத்தில் முடியும்.

தாயக மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது இன்னும் மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

கொலையாளியை பொலிசார் இனம் கண்டள்ளனர்.

இன்றைய பேய் நாள் (Halloween) பாவிக்கப்பட்டுள்ளது)

இதற்கு மேல் விசாரணையிலிருப்பதால் ..... வேண்டாம்.

இப்படியக்கொத்த செயல்கள் புலத்தமிழர்களின் ஈழத்துக்கான போராட்டத்துக்கு தடையாக அமைய போகிறது :(

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மீதான கொலைவெறித் தாக்குதலின் பின்னணியில் சிங்கள அரசின் கைக்கூலிகள் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

26.10.1996ஆம் ஆண்டு இதேபாணியில் பாரிசில் சிங்கள கைக்கூலிகள் நிகழ்த்திய கொலைவெறித் துப்பாக்கிச்சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் கந்தையா நாதன்இ ஈழமுரசு இதழின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஒரே நகைச்சுவையாக இருக்கின்றது போங்கள். :lol: :lol: :lol:

.... அடடடடடா .... கருத்தெல்லாம் மாயமாக மறைந்து விட்டது!!! ... இங்கு இணையவன் என்பவர் உலாவினாரா????? :o

.... அடடடடடா .... கருத்தெல்லாம் மாயமாக மறைந்து விட்டது!!! ... இங்கு இணையவன் என்பவர் உலாவினாரா????? :o

இந்தகட்டுரைகள் இங்கே இணைக்க படுவதன் நோக்கம் என்ன நெல்லையான்?. ஏன் இணையவன் முழுத்திரியையும் அகற்றவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.