Jump to content

கவி உதவி வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளுக்கு வணக்கம் :lol:

நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள்

சிரமத்திற்கு மன்னிக்கவும் :lol:

நன்றி

மங்கள விளக்கேற்றல்

கொடியேற்றம்

அக வணக்கம்

தமிழ் தாய் வாழ்த்து & கனடிய தேசிய கீதம்

வரவேற்புரை

அபினய பாடல் (இளம் மழழைகள்)

நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?)

பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)

பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்

எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு)

திருக்குறல்

இசை நாடகம் (கண்ணகி)

தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம் (நாடகம்)

உழவனின் பாட்டு (வில்லுப் பாட்டு)

அபினய நடனம் (மிருகக் காட்சி சாலை)

கின்னர இசை

முதல் வீடு தமிழ் (நாடகம்)

பட்டிமன்றம் (இளம் மழழைகள்)

''

''

''

''

''

''

''

''

நன்றி உரை

சில நிகழ்ச்சிகளிற்கு கவி கன்டுபிடித்ததால் எல்லாவற்றையும் போடவில்லை! :lol:

முக்கியமாக நிகழ்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் சொல்லக்கூடிய கவி எதும் இருந்தால் தந்து உதவுங்கள்

சிரமத்திற்கு மன்னிக்கவும்

நன்றி

தமிழீழ தேவதைகள்

Link to comment
Share on other sites

கள உறவுகளுக்கு வணக்கம் :lol:

நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள்

சிரமத்திற்கு மன்னிக்கவும் :lol:

நன்றி

மங்கள விளக்கேற்றல்

கொடியேற்றம்

அக வணக்கம்

தமிழ் தாய் வாழ்த்து & கனடிய தேசிய கீதம்

வரவேற்புரை

அபினய பாடல் (இளம் மழழைகள்)

நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?)

பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)

பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்

எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு)

திருக்குறல்

இசை நாடகம் (கண்ணகி)

தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம் (நாடகம்)

உழவனின் பாட்டு (வில்லுப் பாட்டு)

அபினய நடனம் (மிருகக் காட்சி சாலை)

கின்னர இசை

முதல் வீடு தமிழ் (நாடகம்)

பட்டிமன்றம் (இளம் மழழைகள்)

''

''

''

''

''

''

''

''

நன்றி உரை

சில நிகழ்ச்சிகளிற்கு கவி கன்டுபிடித்ததால் எல்லாவற்றையும் போடவில்லை! :lol:

முக்கியமாக நிகழ்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் சொல்லக்கூடிய கவி எதும் இருந்தால் தந்து உதவுங்கள்

சிரமத்திற்கு மன்னிக்கவும்

நன்றி

தமிழீழ தேவதைகள்

ஹ்ம்ம் முயற்சிதான் இது- ஆனா முடிவில்ல- ஓ.கே யா?

மங்கள விளக்கேற்றல்- எண்ணையில் - சிசு ஒன்று உயிர் கொள்ளுது-ஒளியென பாரீர் - எங்களின் முகம் அதில் - தெரியுது- காணீர்-!

கொடியேற்றம்(தெளிவில்லை- தேசிய கொடியா? இல்லை உங்க பாடசாலை கொடியா?)

தேசிய கொடிக்கு- இதயத்தின் நிறத்தில் ஒரு கொடி- எங்கள் இருப்புக்கு வாழ்வு தந்த கொடி - சருகாகி போகாமல் - எம் வாழ்வை தங்க தாம்பாளத்தில் தாங்கும் -தாய் மடி -!

பாடசாலை கொடி என்றால்- கற்றோம் பல உன்னால் அம்மா- நாம் கொண்ட இன்னுமொரு கருவறை நீயம்மா-!

நடக்க ஒரு வழி தந்தாய்- உன் தடத்தை - எம் வரமென்று தொடர்ந்தே வாழ்வோம்!

அகவணக்கம் -புயலிலும் - இடியிலும் - தாயக கனவிலும்- எங்கள் தாய் நில மடியிலும் - கண்மூடி போனீர்கள் என்று எவர் சொன்னார்?

எங்கள் கனவை உமதாய் சுமந்தீர் - கண்ணோரம் வழியும் நீரில் - இன்றும்- மீண்டும் உங்கள் ஜீவன் - கருத்தரிக்கிறது !

கனேடிய கீதம் - கட்டிட காட்டிடை இருந்தால் நீயென்ன- எங்களை சாவு காவு கொள்ளவிடாமல் கட்டி அணைத்தவளே- கனேடிய தாயே- கண்ணீர்மல்க - உனை தொழுகிறோம் - வாழிய நீ- வாழியவே!

வரவேற்பு - பனிமுத்தம் கொள்ளும் ஒரு நிலம்- பலருள் நாம் ஒருவராகி- நாமே சிலருக்கு பலராகி -

சாதனைகள் -பல கொண்டதினால் - சாதித்தவர்கள் எல்லாம் சங்கமம் ஆகி இருக்கோம்- சரித்திரம் என்பது எது ? எங்கள் சங்கமம் இங்கென்றாச்சு - அதுதானே- அல்லவோ?

கருத்தை சொல்லுங்கள் - சரியோ நான் எழுதியது பிழையோ தெரியல- பின்பு தொடர்கிறேன் 8)

Link to comment
Share on other sites

வர்ணன் நீங்கள் எழுதிய கவித்துளிகள் அருமையாக இருக்கின்றது. ஈழதேவதைக்கும் பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.

ஈழதேவதை உங்கள் விழா சிறப்புற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வர்ணன் நீங்கள் கவி வடிவில் எழுதியது நன்றாகவுள்ளது. ஈழதேவதை வந்து என்ன சொல்லுறா என்று பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் அண்ணா பிரமாதம் தயவு செய்து தொடருங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றி வர்ணன் அண்ணா கவியை தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகளிற்கு நன்றி ரமா அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா நாளை எமது நிகழ்வு என்பதால் முடியுமனால் தயவு செய்து இன்று இரவிற்குள் மிகுதியை போடுவீர்களா?

சிரமத்திற்கு மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

சகோதரம் மன்னிக்கவும் இப்போதான் வீட்டை வந்து மொத்தமாய் எழுதி முடிச்சிட்டு - போஸ்ட் பண்ண - திரும்ப பாஸ்வேர்ட் - யூஸர் நேம் கேட்டு வந்து எல்லாமே அழிஞ்சு போச்சு - :? ஏன் இப்பிடி ?

இதை போய் யாரிட்ட கேக்கிறது? சரி முடிந்தவரை- திரும்ப எழுதுறன்!

Link to comment
Share on other sites

அபினய பாடல் (இளம் மழழைகள்)

மயில் ஆடி பார்த்ததுண்டு - சிலர் மனங்கள் ஆட்டம் கொண்டும் பார்த்ததுண்டு-

ரோஜா கூட்டமொன்று சிறகுவிரித்து அபிநயம் செய்ய பார்த்ததுண்டா?

அரங்கமதில் அவர் ஆட்சி சபையேறுகிறது-பாரீர்!

நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?)

சிலையை ரசிப்பவர் யாரும் சிற்பியை நினைத்ததுண்டா?

ஆள்பவனிலிருந்து ஆண்டிவரை - எல்லோரிலும் சிறந்தவன் நானே என்று எண்ணிக்கொள்கிறான் - எங்களில் சிறந்தவன் யாரென்று ஆண்டவன் -கணக்கு போடுறான் !

இயல் இசை நாடகம் எங்கள் சொத்து - இமைக்காமல் கண்டு களிப்பீர்- கண்கள் பூத்து!

Link to comment
Share on other sites

பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)

படகோடு சேர்ந்து இருக்கும் வரைதான் துடுப்புக்கு மதிப்பு!

பயணம் வரை கூடவந்தால்தான் செருப்புக்கும் மதிப்பு-!

கொள்ளை அழகு குரல் இருக்கும்வரைதான் - குயிலுக்கும் சிறப்பு-!

வாழ்வு எப்படி அர்த்தம் கொள்ளும்? வானம் கூட எப்படி இருந்தால் எம் வசப்படும்?

மனங்களோடு சேர்ந்து-மனிதன் - வாழ நினைத்தால் மட்டுமோ என்னவோ-?

பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்

இன்று அரும்பிய மொட்டொன்று - இதழ் மெல்லவிரிக்கிறது- என்னதான் சொல்லுமோ-?

நேற்றே பூத்த எங்களுக்கு நிச்சயமாய் ஏதும் செய்தி இருக்குமோ?

என்னதான் பெரிய அருவி என்றானாலும்- சின்ன மழை தூறல் அதை கலங்க வைக்குமே - கேட்போம்!

Link to comment
Share on other sites

எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு)

வயல் அதை தொலைத்த நாற்றுக்கள் - நாலா திசையும் -சிதறியிருந்து வாடினாலும் -

அந்த களத்தில் கேட்ட கானங்கள் - இன்றுவரை எம் மனசில் சுமையாய்-!

தேசம் விடிந்தது என்ற ஒரு செய்தி வரும்வரை - உயிர் ஓடி போகாது-!

எம்மை எரிப்பவர் ஆட்டத்தை கொளுத்தியே தீர கரம் கொடுப்போம்-

இப்போ - அந்த நினைவுகளில் ஒரு எழுச்சி நடனம்!

Link to comment
Share on other sites

திருக்குறல்

இருவரிக்குள் -வாழ்வின் இயங்கியலை -

இப்பிடிதான் என்றும் இருக்கும் என்று -

என்றோ வள்ளுவன் உதிர்த்த -குரல்- இப்பிடியெல்லாம் யாரும் எழுத முடியுமா?

உலக அதிசயமென்று ஏதேதோ சொல்கிறார்-

உண்மையை சொல்லுங்கள் - இதனை விடவா அவையெல்லாம் அதிசயமாம்?

Link to comment
Share on other sites

இசை நாடகம் (கண்ணகி)

மதுரையை எரித்தாள் அவள் என்கிறார்-

எரித்தது - மதுரையையா?

இல்லை மனசை அலையவிடும்-மனிதர் முகங்களையா?

பாண்டியன் என்றாலென்ன?- கோவலன் என்றானாலும்தான் என்ன-?

நீதி தவறினாலும் சரி - நேர்வழி செல்ல மறந்தாலும் சரி -

யாருக்காக அவள் - தீ மூட்டினாலும்-

ஏன் இன்றும் இந்த கண்ணகி கதை வாழ்கிறது?

இன்றும் சொற்ப சிலர் இப்படி வாழ்வதனால்தானோ?

Link to comment
Share on other sites

ஆகா வர்ணன் ஓரே கவி மழை பொழிந்து இருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணனின் வர்ணனையை ஒக்குமோ என்வரிகள்? விடுபட்டிருந்த வரிகளுக்கு கவிபோல் சில வடித்தேன். பிடித்திருந்தால் ஏடுத்துக்கொள்ளுங்கள். நேரமுண்டோ தெரியவில்லை, இல்லையென்றாலும் பரவாயில்லை.

நன்றி.

தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம்: தமிழும் தாயும் ஒன்று. இது தொன்று தொட்டு வரும் ஒரு பண்பு. தாயை மறந்தவர்களை மன்னிக்கமுடியாது. தமிழை வளர்த்தவர்களை வாழ்த்தாமல் இருக்கமுடியாது. அந்தப் பெரியாரை, அவர் வளர்த்த தமிழெடுத்தே வாயார வாழ்த்துவோம் வாருங்கள்.

உழவனின் பாட்டு: ஏர் பிடிக்கும் கைகளைத் தொழுவோம். அன்னமிடும் உள்ளங்களைத் தொழுவோம். பார் முழுதும் பஞ்சமின்றி, பட்டினியின்றி வாழவைக்கும் உழவர்களைத் தொழுவோம். உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் இசையோடு கலந்த ஒண்தமிழ் வரிகளை நாமெல்லாம் ஒன்றாய் கேட்போம்.

முதல் வீடு (தமிழ் நாடகம்): முத்தமிழ்களில் ஒன்று நாடகத்தமிழ். செத்துவிடும் தமிழ் இனி என்பவர்ககெல்லாம் நல்ல செருப்படி கொடுக்கும் இத்தமிழ். பலவழிகள் தமிழ் வளர்க்க இன்று பிறந்துவிட்டாலும், நாடகத்தமிழ் என்றுமே நமக்கெல்லாம் நம்தமிழை நன்றாகவே ஊட்டிவிடும். எத்தனைதான் வாழ்வினில் வந்தாலும் முதலில் வருவதொன்றே தேனாக இனிக்கும். முதல் காதல், முதல் பள்ளி, முதல் பயணம், முதல் வீடு. மேடையில் மலரப்போகும் இந்த "முதல் வீட்டிலே" நாமும் புகுவோம்.

பட்டிமன்றம் (இளம் மழலைகள்): வெட்டிப் பேசுவதற்கு ஓர் களம். வேடிக்கையாப் பேசுவற்கு ஓர் களம். கொடுத்த கருவெடுத்து, அழகு தமிழ் எடுத்து, எதிர் அணியைப்பார்த்து, தொடுத்த கணை பாய்ச்சும் களம். இன்று "இளம் மழலைகள்" தலைப்பு. என்ன கூறப்போகிறார்களோ என்கின்ற தவிப்பு எனக்கு. உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைப்பு. விலகி நின்று விடுவோம் அவர்களுக்கு ஓர் அழைப்பு.

நன்றியுரை: நன்றி! மூன்றெழுத்தில் உருவான ஓர் முத்தான சொல். நல்லதொரு நிகழ்வைத்தர, நாட்கள் பல அலைந்த நெஞ்சங்களை வருடிக்கொடுக்கும் வார்த்தைகள். இதை மறந்தவற்கு உய்வே இல்லை என்கிறார் வள்ளுவர். மறவாது வந்து தன்னுரையை, தவறாமல் வழங்க அழைக்கின்றோம் அன்பரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சகோதரி இரசிகை.

இன்று காலையில்தான் இதனைப் பார்த்தேன். எழுதவேண்டும்போல் இருந்தது. விடுபட்டிருந்தவைக்கு சில வரிகள் எழுதினேன். அவை உரியவர்களுக்குச் சென்று சேர்ந்திருக்குமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

வர்ணனின் வர்ணனையை ஒக்குமோ என்வரிகள்? விடுபட்டிருந்த வரிகளுக்கு கவிபோல் சில வடித்தேன். பிடித்திருந்தால் ஏடுத்துக்கொள்ளுங்கள். நேரமுண்டோ தெரியவில்லை, இல்லையென்றாலும் பரவாயில்லை.

நன்றி.

[

செல்வமுத்து ஆசிரியர் அவர்களே - உங்கள் வரிகளும் ரசனையாக இருக்கு -!

உங்களைப்போலவே -எனக்கும் - கொஞ்சம் -கவலைதான் - உரிய நேரத்தில் - >>>>

ஈழதேவதைக்கு - நாங்கள் எழுதியது - உதவியிருக்குமா என்பதில் - ! :lol: <<<<

இல்லாவிடாலும் - முயற்சி செய்ததில் - கொஞ்சம் சந்தோஷம்தான் -! 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் ஜயாவின் வரலாறு தெரியாமல் இருப்பது தான் காரணம். நாமெல்லாம் வெறும் தூசி அவர் முன்னால்.  நெடுமாறன் ஜயா, வைகோ போன்ற சிலர் வெளியில் தெரியும் ஆனால் முகம் தெரியாத எத்தனையோ திராவிடர் கழக, திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பல லட்சக்கணக்கில்....?
    • முன்பு கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்  மைதானங்களில் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு பின் தொடங்கினால் சனி மற்றும் ஞாயிறு மாலைவரை நடக்கும்......அதுவும் யாழ் இந்து மைதானமென்றால் மூன்று பக்க வீதிகளிலும் சனம் குவிந்து நின்று பார்க்கும்.......ஆனால் இப்பொழுது ஒரு நல்ல வீடியோ கூட ரெண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை......அவ்வளவுக்கு வேலைகளும் ஆட்களும் நேரமின்றி ( பிஸியாகி ) விட்ட  காலத்தில் வாழ்கின்றோம்......இங்குள்ள பிள்ளைகள் கூட கிரிக்கட் பக்கம் தலை வைத்தும் படுக்காதுகள்......அது சம்பந்தமாய் ஒன்றுமே தெரியாது.....(கால்பந்தாட்டம் + றக்பி  நல்லா ரசித்துப் பார்ப்பார்கள்). இந்தக் கதியில் 20 ஓவர் விளையாட்டு ஓரளவு பரவாயில்லை என்ற மாதிரி இருக்குது....... அது கூட 4 மணித்தியாலத்துக்கு மேல் வருகுது......அதனால் இடைக்கிடைதான் வந்து வந்து பார்க்கிறது.........!   😁 மைக்கேல் ஹோல்ட்டிங்கை இப்ப ஒருத்தரும் ஏலத்தில் எடுக்க மாட்டினம் அவர் அந்த கடுப்பில சொல்லுறார்........!  😂
    • இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பல புதிய சாதனை நிகழ்த்தி இருக்கணும் ஒவ்வொரு அணியும்😁..............................................................
    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.