Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது ஒரு தேசிய அவமானம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10-hunger2-300.jpg

டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில்,

நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 16 கோடி குழந்தைகள் உள்ளனர். நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் எடை குறைவாக உள்ளன.

நமது நாட்டின் எதிர்காலம் இவர்கள் தான். இவர்களது நலனைப் பேணாவிட்டால் நாட்டின் எதிர்கால நலன் நிச்சயம் பாதிக்கப்படும்.

நான் முன்பே கூறியது போல, ஊட்டச் சத்து குறைபாடு என்பது தேசிய அவமானமாகும். இதைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெறவில்லை.

73,000 தாய்மார்களிடம் நேரடியாகப் பேசி 1 லட்சம் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வருத்தத்தையும் தருகிறது, ஒரு நல்ல விஷயத்தையும் சொல்கிறது.

நல்ல விஷயம் என்னவென்றால், இந்த 112 மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரோக்கியமான எடையை எட்டியுள்ளது என்பது தான். இதற்கு இந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் அமலாக்கிய சில நலத்திட்டங்களும் காரணம்.

அதாவது ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்குவதில் நாம் 20 சதவீத வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம், நாட்டின் இன்னும் 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக, ஊட்டச் சத்து பற்றாக்குறையுடன் வாழ்கின்றன என்பது தான்.

தாயின் கல்வி நிலை, குடும்பத்தின் பொருளாதார நிலை, சுகாதாரம், தாய்ப்பால், குடும்பத்தில் பெண் நடத்தப்படும் முறை ஆகியவை, குழந்தைகளின் நலனில் முக்கிய பங்கு வகிப்பதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

1975ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போதும் அமல்படுத்தப்பட்டு வரும் Integrated Child Development Services திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு இந்த ஊட்டச் சத்து குறைபாடு விஷயத்தை தீர்த்துவிட முடியாது. குழந்தைகள் விஷயத்தில் மிக மோசமான நிலையில் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தியாக வேண்டும்.

முதல்கட்டமாக ஊட்டச் சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ள நாட்டின் 200 மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார் பிரதமர்.

http://tamil.oneindi...me-aid0090.html

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு தானாக நீங்கும்.

சிங்கருடைய நடைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடே காரணம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடமிருந்து நாம் எமக்கு முன் உதாரணமாக எதையுமே எடுத்துக்கொள்ள முடியாது

காந்தீகம் என்ற ஒன்றையே போதித்தனர். அதனையும் அவர்கள் மறந்து நாளாச்சு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடமிருந்து நாம் எமக்கு முன் உதாரணமாக எதையுமே எடுத்துக்கொள்ள முடியாது

காந்தீகம் என்ற ஒன்றையே போதித்தனர். அதனையும் அவர்கள் மறந்து நாளாச்சு.

ஒரு விடயத்தை தவிர,

எப்படி ஊழல் எப்படி செய்வதென்பதை அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும்.

அந்த விடயத்தில் அவர்களுக்கு நிகர் அவர்களே ...... :lol: :D :icon_mrgreen:

புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் கூட, குறிப்பாக குளிர்காலத்தில், ஆரோக்கியமான உணவுகளை உண்பது குறைவு, வசதிகளும் இல்லை. எனவே அதை நிவர்த்தி செய்ய முடிந்தளவுக்கு விட்டமின்களையும் வேறு ஆரோக்கியம் தரும் குளுசைகளை (supplement) நாளும் எடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் மொச்சை கொட்டை கொண்டகடலை உருளை கிழங்கு போக சத்துருண்டை எனும் மக்காசோள மாவு உருண்டை மதியம் முட்டை.. அப்புறம் சத்துணவு என்ற பெயரில் தினமும் இந்த காய்கறிகள் தான் சமைக்கணும் என ஒரு லிஸ்டு.. பகுதி வாரியா இவர்களை செக் பண்ண கெல்த் இண்ஸ்பெக்டர்.... இவ்வளவு இருந்தும் சைடில் யாரோ உருவிடறாங்கப்பா.. அதாலதான் இந்த நாடே வேணாம் என வெளிநாட்டுக்கு டிரை பண்ணிட்டு இருக்கேன்... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி, நீங்களுமா?? வேண்டாம், நீங்களாவது உங்கள் நாட்டில் இருங்கள். நாங்கள்தான் நாடோடிகளாக, அநாதைகளாக ஏதிலிகளாக கேற்பாரற்று இந்தப் பிரபஞ்சமெங்கும் நாய்களாக அலைந்து திரிகிறோம். எமக்கென்று இருந்தவை இரண்டு நாடுகள், அவை தமிழகமும் தமிழீழமும். இன்று ஒன்றைக் காவுகொடுத்துவிட்டோம். மீதமிருக்கும் எமது தமிழகமாவது எம்மிடம் மிஞ்சட்டும், அதற்காகவாவது தமிழர் அங்கு இருக்கவேண்டும், ஆகவே நீங்கள் அங்கேயே இருங்கள். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.