Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் தீர்மானமும் உளவியல் யுத்தமும் : சபா நாவலன்

Featured Replies

ஜெனீவாவில் தீர்மானமும் உளவியல் யுத்தமும் : சபா நாவலன்

ஐக்கிய நாடுகள் சபையின் “மனித உரிமை” ஆணையகம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள அதன் கூட்ட அமர்வுகளில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என எதிர்வுகூறப்படுகிறது. சில மேற்கு நாட்டு அரசுகளால் இலங்கை அரசிற்கு எதிரான பரிந்துரை முன்மொழியப்படும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. இது வரை எந்த மேற்கு நாடுகளும் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

உலகமக்களை அதிர்ச்சியில் உறையவைத்த, குறுகிய நாட்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை அண்மித்துக்கொண்டிருக்கிறோம். சாரி சாரியாக மக்கள் கொல்லப்பட்ட வேளைகளில் செய்மதிகளில் அவற்றைப் பார்த்துக் கொண்டு வாழாவிருந்த அமரிக்காவையும் யுத்தத்திற்கான அழிவு ஆயுதங்களை வழங்கிய மேற்கு நாடுகளையும் மீண்டும் ஒரு முறை நம்புங்கள் எனக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. மேற்கு நாடுகள் ராஜபக்ச அதிகாரத்திற்குத் தண்டனை வழங்கும் என மக்களின் உணர்வுகளில் அறைந்து சொல்லப்படுகின்றது.

1986 ஆம் ஆண்டு இலங்கை மனித் உரிமைகள் ஆணயகத்தில் அரசிற்கு எதிராக மனித உரிமை மீறல் பரிந்துரைகள் முன்வைக்கப்படன. அதனை முன்வைத்தது இந்தியா. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோ அமரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும். இந்திய அரசு இந்த முன்மொழிவை முன்வைத்த போது அன்று இந்தியாவை நோக்கி அண்ணார்ந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்த அதே மனோநிலை கொண்ட ஒரு கூட்டம் இன்று அமரிக்காவை ஆண்டவனாகப் போற்றுகின்றது.

இந்தியா இந்தத் ஐக்கிய நாடுகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மான நிறைவேற்ற முற்பட்டது தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களின் அடிப்படையில் அல்ல, மாறாக தனது அதிகாரத்தை இலங்கையில் நிறுவிக் கொள்வதற்கான ஆயுதமாகவே அதனைப் பயன்படுத்திக்கொண்டது.

இறுதியில் மக்கள் மத்தியில் போராட்டங்கள் மீதான வெறுப்பை உருவாக்கி, மக்களைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தி, முழுப் போராட்டத்தையும் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளோடு சேர்த்து மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் ராஜபக்ச பாசிசத்தோடு இணைந்து அழித்துப் போட்டது இந்திய அரசே.

இந்தியா எவ்வாறு தனது சொந்த ஆதிக்க நலனுக்காக இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முற்பட்டதோ அதற்குச் சற்றும் குறைவற்ற கொடிய நோக்கத்துடனேயே அமரிக்காவும் அதன் நேச அணிகளும் இன்று செயலாற்றுகின்றன.

இந்திய அரசு மீது நம்பிக்கை கொண்டு அழிந்து போன அதே அரசியல் அதிகார சக்திகள் இன்று அமரிக்க அரசிசை நம்பக் கோருகின்றனர்.

இந்திய அரசு தெற்காசியப் பிராந்தியத்தின் பேட்டை ரவுடி என்றால் அமரிக்கா உலகின் மிகப்பெரும் அரசியல் தாதா. அமரிக்க அரசும் இந்திய அரசும் தமது சொந்த நலனுக்காக நாடுகளைப் பிளைவுபடுத்தி ஆயிரமாயிரமாய் அப்பாவிமக்களை அழித்துப்போட்டிருக்கின்றன. 80 களின் ஆரம்த்தில் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷைப் இந்தியா பிரித்துக்கொடுத்த நிகழ்வை முன்னுதாரணமாகக் காட்டி தமிழீழம் பெற்றுவிடலாம் எனக் கனவுகண்டு அழிந்து போன வரலாற்றை இன்று அமரிக்காவின் காலடியில் மீளமைக்க முற்படுகிறார்கள்.

இந்தியா அன்று பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய அந்த நாட்டில் பட்டினியால் செத்துப்போகும் மக்கள் கூட்டம் ஒன்றை உருவாக்கியது போன்றே இன்று அமரிக்கா இனக்குழுக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தென் சூடானை உருவாக்கியிருக்கிறது. இந்தியா தனது அதிகாரவர்க்கம் சார்ந்த பிராந்திய நலனுக்காக உருவாக்கிக் கொண்ட பங்களாதேஷ் போன்றே தென் சூடானும் அமரிக்க நலனுக்காக உருவக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

இந்த இரண்டு நாடுகளுமே உரிமைக்கான போராட்டங்களையும், தேசிய விடுதலைப் போராட்டங்களையும் அழித்துச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய குருதிக் கறைகளை வரலாறு முழுவதும் கண்டுகொள்ளலாம்.

விடுதலை பெற்றுக்கொள்வதற்காக அதிகார வர்க்கத்தை நம்பக் கோரும் தலமைகளின் வியாபார-வர்க்க நலன்கள் மக்கள் நலன் போலப் பிரச்சாரப்படுத்தப்படுகின்றன.

இவை அனைத்துக்கும் மத்தியில் 1986 ஆம் ஆண்டில் இலங்கை அரசிற்கு எதிராக அமரிக்காவின் அனுசரணையோடு முறியடிக்கப்பட்ட தீர்மானம் இன்று 2012 இல் நிறைவேற்றப்படுமானால் அதனை மக்கள் பற்றுள்ள யாரும் நிராகரிக்க முடியாது.

அதே வேளை இந்தத் தீர்மானத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் தலைமை அற்ற நிலையில் அமரிக்கா இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதையும் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும். இந்தியாவிற்கு எதிராக உருவாக்கத்தவறிய விழிப்புணர்வு அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருவாக்கப்பட வேண்டும். லொபி அரசிய என்ற பெயரோடு அலையும் அரசியல் போலிகளுக்கு எதிரான கருத்தியலும் இதனோடு இணைந்தே உருவாக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் ராஜபக்ச அரசு தண்டிக்கப்படலாம் என்ற தவறான அபிப்பிராயம் குறுக்கு வழி அரசியல் வியாபாரிகளால் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றது. மனித உரிமை ஆணையகத்திற்குத் தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் மட்டுமே உண்டு. இவ்வாறான தவறான நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விதைக்கப்படுகின்றன. இதனூடாக, ஒரு புறத்தில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் இந்த அரசியல் வியாபாரிகள் மறுபுறத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் தடுக்கின்றனர். தமிழ்ப் பேசும் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்தின் திட்டமிட்ட உளவியல் யுத்ததின் ஒரு பகுதியா இதுவென ஐயம் கொள்வதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

அமரிக்காவைப் பொறுத்த வரையில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதை விட அவ்வாறான ஒரு விம்பத்தை உருவாக்குவதே போதுமானது. இதனூடாக இலங்கை அரசை மிரட்டி தனது நலனை உறுதிப்படுத்திக்கொள்ள அமரிக்காவிற்குப் போதிய வலு உண்டு. புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற அரசியல் வியாபாரிகளோ அமரிக்கா முயற்சித்துத் தோற்றுப் போய்விட்டது என தமது கைக்கூலி அரசியலை மீண்டும் ஆரம்பிக்கச் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அமரிக்க அணி புலம் பெயர் தமிழர்களையும் இலங்கை அரசையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த இலகுவான வழிமுறையாவும் இது காணப்படும்.

இலங்கைக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முன்வரும் நிலை காணப்படுவதால் பாதுகாப்புச் சபை வரை இந்தத் தீர்மானம் கொண்டு செல்லப்பட்டு இலனக்கொலையாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதெல்லாம் வெற்றுக் கற்பனைகள்.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆரம்பத்தில் சோசலிச நாடுகளாக வெற்றிபெற்றிருந்தன. சோசலிச நாடுகளில் காணப்பட்ட பரந்த, ஆழமான மக்கள் ஜனநாயகம் மேற்கின் ஆசியுடன் அழிக்கப்பட்டு கட்சிகள் அதிகாரத்தைக் கப்பற்றிக்கொண்டு இப்போது பல தசாப்தங்கள் ஓடி மறைந்துவிட்டன. அங்கெல்லாம் காணப்பட்ட ஆழமான ஜனநாயகம் அழிக்கப்பட்ட பின்னர், முதலாளித்துவ நாடுகளில் காணப்படும் குறைந்தபட்ச ஜனநாயகம் கூட

மீளமைக்கப்படவில்லை. அப்பட்டமான கொடிய சர்வாதிகாரிகளும் மக்கள் விரோதிகளும் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர்.

இவைகள் எல்லாம் இப்போது சோசலிச நாடுகள் இல்லை என்பதை அமரிக்கா போன்ற நாடுகளே ஒத்துக்கொள்ளும் நிலையில், இந்த நாடுகளை முன்வைத்து இடதுசாரிகளின் மீதான தாக்குதல்களையும் மேற்குறித்த தமிழ் அரசியல் வாதிகள் போகிற போக்கில் நிகழ்த்திச் செல்கிறார்கள்.

இந்தியா 80 களில் திட்டமிட்டுப் போராட்ட சக்திகளை அழித்தது போன்று, இன்று புலம்பெயர் அரசியல் வியாபாரிகளைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியங்கள் இனிமேல் உருவாகவல்ல போராட்ட சூழலை அழித்து வருகின்றது.

தமது சொந்த அரசியல் நலன்களுக்காக மொத்த மக்களின் எதிர்காலத்தைமே அழிக்க முனைகின்ற “தேசிய அரசியல் வியாபாரிகள்” அமரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை என்ற போலி நம்பிக்கைகள் ஊடாக நடத்தும் உளவியல் யுத்தம் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

http://inioru.com/?p=26558

அன்று இந்தியா ஆதரித்து, அமெரிக்கா எதிர்த்தது ( சீனாவும் உருசியாவும் எதிர்த்தது ?)

நேற்று அமேரிக்கா ஆதரித்து, இந்தியா எதிர்த்தது ( சீனாவும் உருசியாவும் எதிர்த்தது ?)

நாளை அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரிக்கும் நிலைமையை உருவாக்கவேண்டும். அதன்மூலமே தமிழ் மக்கள் வாழசந்தர்ப்பம் கிடைக்கலாம், இன்று அவர்கள் வாழும் இராணுவ உளவியல் அடக்குமுறை அரசியலை விட்டு வெளியே வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

un-300_3.jpg

ஜெனீவா பிரேரணைக்கு 25 நாடுகள் ஆதரவு?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராகக்கொண்டுவர உள்ளதாக கூறப்படும் தீர்மானத்தை 25 நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனைக் கொண்டு வரும் என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது.

47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன.

ஆபிரிக்க நாடுகள் இரண்டு மற்றும் மெக்ஸிக்கோ உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகள் இரண்டு மற்றும் பெல்ஜியம் ஆகியன ஐந்து நாடுகளில் ஒன்று அல்லது ஐந்தும் கூட்டாகப் பிரேரணையை முன்வைக்கலாம் என்று கூறப்படுகின்றது. மேலும் இப்பிரேரணை அனேகமாக நிறைவேறிவிடும் என்றும் நம்பப்படுகின்றது.

நன்றி வீரகேசரி.

Edited by தமிழ் சிறி

இந்த நாடுகள் எல்லாம், 'தமது சொந்த அரசியல் நலன்களுக்காக மொத்த மக்களின் எதிர்காலத்தைமே அழிக்க முனைகின்ற' நாடுகள் :D

இவை “தேசிய அரசியல் வியாபாரிகள்”. :D

'அமரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை என்ற போலி நம்பிக்கைகள் ஊடாக நடத்தும் உளவியல் யுத்தம்' - நடாத்தும் நாடுகள் :D

un-300_3.jpg

ஜெனீவா பிரேரணைக்கு 25 நாடுகள் ஆதரவு?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராகக்கொண்டுவர உள்ளதாக கூறப்படும் தீர்மானத்தை 25 நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனைக் கொண்டு வரும் என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது.

47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன.

ஆபிரிக்க நாடுகள் இரண்டு மற்றும் மெக்ஸிக்கோ உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகள் இரண்டு மற்றும் பெல்ஜியம் ஆகியன ஐந்து நாடுகளில் ஒன்று அல்லது ஐந்தும் கூட்டாகப் பிரேரணையை முன்வைக்கலாம் என்று கூறப்படுகின்றது. மேலும் இப்பிரேரணை அனேகமாக நிறைவேறிவிடும் என்றும் நம்பப்படுகின்றது.

நன்றி வீரகேசரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிலப்பரப்பும் ஆயுதப் படையும் இருந்த போது "அரசியலை முன்னிறுத்தத் தவறி விட்டோம், அதனால் தோற்றோம்" என்று எழுதிய நாவலன் போன்ற "பழுத்த" உலக அரசியல் அறிஞர்கள் பலம் வாய்ந்த சில நாடுகளின் ஆதரவை எந்தப் பலமும் அற்ற தமிழர்கள் இப்போது எதிர்பார்க்கும் போது அதுவும் "புளிக்கும் பழம்" என்று எழுதுவதை விட என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவதே பொருத்தமானது. நாவலன் யாழ் பார்ப்பாரோ தெரியாது. பார்க்கா விட்டாலும் அவரிடம் இந்தக் கேள்விகளை யாராவது கொண்டு செல்லுங்கள்:

1. உலகில் யாரோடு நாம் சேர்கிறோம் என்பது எப்போதுமே கல்லில் எழுதி வைத்தது போல நிலையானதா? அல்லது எம் நலன் குறித்து அது மாற வேண்டுமா?

2. அமெரிக்கா பல விடயங்களில் தூய்மையானது அல்ல என்பது யாவரும் அறிந்தது. ஆனால் அமெரிக்கா மறைமுகமாக ஆப்பு வைக்கிற மக்கள் கூட்டங்களுக்காக நாங்கள் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள முடியுமா? இது தேவையா? (சிறி லங்கா என்ற சுண்டைக்காய் நாட்டுக்காக அமெரிக்காவின் எதிர் முகாமில் இருக்கும் பலஸ்தீனம் ஈழ மக்களுக்கு எதிராக இருக்கும் போது நாம் அமெரிக்காவை அரசியல் வியாபாரி என்று ஒதுக்கி விட்டு என்ன சாதிக்கப் போகிறோம்?)

3. அமெரிக்கா ஆசியாவில் எதிர் பார்ப்பதை ஒரு எதிர்கால ஈழம் கொடுக்க முடியுமானால் அது இந்தியா போன்ற சிறு பேட்டை ரவுடிகளிடமிருந்து ஈழத்திற்கு நிரந்தர பாதுகாப்பு என்பேன் நான். இது பற்றி நாவலனின் கருத்து என்ன?

4. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் உருவான புதிய நாடுகள், தீர்க்கப் பட்ட பிரச்சினைகளில் ஒரு பலம் வாய்ந்த உலக நாட்டின் பங்களிப்பின்றி ஏதாவது நடந்ததாகக் கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

cartoon_26-02-2012.jpg

  • தொடங்கியவர்

ஜஸ்ரின், அவர் பதிலளிக்க முற்படுவாரோ இல்லையோ...எம் யாழில் உள்ளவர்கள் இதற்கு பதில் அளிக்க முற்பட்டால் இந்தக் கேள்விகளையே விவாதப் பொருளாக மாற்றி மேலும் உரையாடலாம்

என் சில பதில்கள்

ஒரு நிலப்பரப்பும் ஆயுதப் படையும் இருந்த போது "அரசியலை முன்னிறுத்தத் தவறி விட்டோம், அதனால் தோற்றோம்" என்று எழுதிய நாவலன் போன்ற "பழுத்த" உலக அரசியல் அறிஞர்கள் பலம் வாய்ந்த சில நாடுகளின் ஆதரவை எந்தப் பலமும் அற்ற தமிழர்கள் இப்போது எதிர்பார்க்கும் போது அதுவும் "புளிக்கும் பழம்" என்று எழுதுவதை விட என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவதே பொருத்தமானது. நாவலன் யாழ் பார்ப்பாரோ தெரியாது. பார்க்கா விட்டாலும் அவரிடம் இந்தக் கேள்விகளை யாராவது கொண்டு செல்லுங்கள்:

1. உலகில் யாரோடு நாம் சேர்கிறோம் என்பது எப்போதுமே கல்லில் எழுதி வைத்தது போல நிலையானதா? அல்லது எம் நலன் குறித்து அது மாற வேண்டுமா?

கண்டிப்பாக மாற வேண்டும்...எம் நலன்களுக்காக எந்தப் பிசாசுடன் கூட சேரலாம். இதைத் தான் சிங்களம் இவ்வளவு நாளும் செய்து வருகின்றது. அரசியலில் என்றுமே எவருமே தோழர்களாக இருந்ததும் இல்லை எதிரிகளாக இருந்ததும் இல்லை

2. அமெரிக்கா பல விடயங்களில் தூய்மையானது அல்ல என்பது யாவரும் அறிந்தது. ஆனால் அமெரிக்கா மறைமுகமாக ஆப்பு வைக்கிற மக்கள் கூட்டங்களுக்காக நாங்கள் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள முடியுமா? இது தேவையா? (சிறி லங்கா என்ற சுண்டைக்காய் நாட்டுக்காக அமெரிக்காவின் எதிர் முகாமில் இருக்கும் பலஸ்தீனம் ஈழ மக்களுக்கு எதிராக இருக்கும் போது நாம் அமெரிக்காவை அரசியல் வியாபாரி என்று ஒதுக்கி விட்டு என்ன சாதிக்கப் போகிறோம்?)

தூய்மையான நாடு என்று உலகில் எதுவுமில்லை. எங்களின் நோக்கம், இலக்கை எவருடன் கூட்டுச் சேர்ந்து அடைய முடியுமோ அவர்களுடன் கூட்டு சேர்வதே அறிவுபூர்வமான தெரிவு. இன்று அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டால் எம் இலக்கை அடையலாம என்றால் அதில் தவறில்லை. நாளை இதே போக்கில் இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்துதான் காரியம் ஆற்றலாம் என்றால் அதிலும் தவறில்லை.

3. அமெரிக்கா ஆசியாவில் எதிர் பார்ப்பதை ஒரு எதிர்கால ஈழம் கொடுக்க முடியுமானால் அது இந்தியா போன்ற சிறு பேட்டை ரவுடிகளிடமிருந்து ஈழத்திற்கு நிரந்தர பாதுகாப்பு என்பேன் நான். இது பற்றி நாவலனின் கருத்து என்ன?

சபா நாவலனிடம் இருப்பது வெறும் வர்க்கச் சிந்தனை மட்டுமே என்பது என் கணிப்பு... இந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்க முயன்றால் அவர் இதே வர்க்கச் சிந்தனை மூலமே பதில் அளிக்க முயல்வார்

4. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் உருவான புதிய நாடுகள், தீர்க்கப் பட்ட பிரச்சினைகளில் ஒரு பலம் வாய்ந்த உலக நாட்டின் பங்களிப்பின்றி ஏதாவது நடந்ததாகக் கூற முடியுமா?

இல்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.