Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு!

Featured Replies

பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-20 09:12:33| யாழ்ப்பாணம்]

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அமெரிக்காவால் கொண்டு வரப்படும் இத் தீர்மானம் நிறைவேறக் கூடாது என்பதற்காக இலங்கை அரசு ஆர்ப்பாட்டங்களையும் பேரணி களையும் நடத்தி வருகின்றது. இதற்கு மேலாக, இறைவழிபாடும் நடைபெறுகின்றது. இலங்கை அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் வழிபாடு தொடர்பில் கடவுளர்கள் என்ன முடிபு எடுப்பார்கள். இப்படியயாரு கற்பனை நம் உள்ளத்தில் தோன்றியது.

வன்னிப் போரின்போது யுத்தத்திற்குள் சிக் குப்பட்ட தமிழ் மக்களும் இறைவா...இறைவா... என்று வழிபாடாற்றினர். அதேவேளை முட்கம்பி வேலிக்குள் அடைபட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்கவும், போரில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் தமிழர் பிரதேசங்களில் இறைவழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இப்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசின் ஏற்பாட்டில் பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களில் பூசைகளும் வழி பாடுகளும் பிரார்த்தனைகளும் நடந்தாகின்றன. எதிர்வரும் 23ஆம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடர் முடிபடை வதற்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு முடிந்துவிடும்.

எனவே இலங்கையில், ஆளுந்தரப்பினர் நடத்தும் வழிபாடு தொடர்பில் உடனடியாக முடிபெடுக்க வேண்டிய தேவையிருப்பதால், தேவலோகத்தில் அவசரமாக சர்வமதக் கடவுள்களின் மாநாடு கூடியது. சிவன், விநாயகர், முருகன், சக்தி, புத்தர், யேசு பிரான்... என மதத் தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். ஜெனிவாத் தீர்மானத்திற்கு முன்னதாக தேவலோகத்தில் நடைபெறும் சர்வமத மாநாட்டில் ஒவ்வொரு மதத் தலைவர்களும் நடந்து வந்ததைப் பார்த்தபோது, ஐ.நா. சபைக்கு உலகத் தலைவர்கள் நடந்துவந்தது போல இருந்தது.

முருகப் பெருமான், அத்வானியின் வேகத்தில் நடந்து வந்தார். விநாயகர் வாஜ்பாய் போல நடக்க, சிவன் ஒபாமா போன்று நடந்தார். சக்தியின் வருகை, மிகவும் வேகமாக இருந்தது. ஹிலாரி கிளின்டனின் நடைபோல அது அமைந்திருக்க, யேசு பிரான் மன்னார் மாவட்ட ஆயரின் நடையிலும், கெளதம புத்தபிரான் விக்கிரமபாகு கருணாரட்னவின் விறுவிறுப்பிலும் நடந்து வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். மாநாடு உடனடியாகவே ஆரம்பமானது.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், கிருஸ்ண பரமாத்மா, ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் இம்மாநாடு நடப்பதாக அறிவித்ததோடு, வட பகுதிக்கு விசேட விசாரணை நடத்தச் சென்ற விநாயகர் தனது கருத்துக்களை முன்வைப்பார் என அறிவிக்க, விநாயகர் எழுந்து தனது அறிக்கையை மாநாட்டில் வாசித்தார்.

(நாளை அறிக்கை...)

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27732

  • கருத்துக்கள உறவுகள்

முகமது நபி அவர்கள், அரபு நாடுகளில் இருந்து, களைத்து விழுந்து, ரிச்சர்ட் பதியுதீனின் நடையுடன், மாநாடு மண்டபத்தை நோக்கி ஓடி, வந்து கொண்டிருந்தார்! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கேயும் இங்கேயும் தமிழ் யெகோவா மூப்பர்கள் சூட்கேசுகளுடனும் புத்தகங்களுடனும் அலைச்சல்.......

அங்கேயும் இங்கேயும் தமிழ் யெகோவா மூப்பர்கள் சூட்கேசுகளுடனும் புத்தகங்களுடனும் அலைச்சல்.......

:D

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கேயும் இங்கேயும் தமிழ் யெகோவா மூப்பர்கள் சூட்கேசுகளுடனும் புத்தகங்களுடனும் அலைச்சல்.......

கொஞ்ச நாளாக இவர்களைக்காணவில்லை.

நீங்கள் மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

பிடித்தால் அழுங்குப்பிடிதான்.

மீண்டவர் சிலரே.......... :lol::D :D

  • தொடங்கியவர்

பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-21 09:32:31| யாழ்ப்பாணம்]

வன்னியில் நடந்த போரின்போது, தேவலோகம் அமைதியாக இருந்தமை மிகவும் வேதனைக்குரியது. வன்னிப் போரின்போது பூலோகத்தில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மெளனம் காத்தது போல தேவலோகமும் அமைதி காத்தது. இதனால் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காத்தல் கடவுளாகிய கண்ணபரமாத்மா இது தொடர்பில் அசமந்தமாக இருந்ததற்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஈழத்தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைப்பதாக இருந்தால் அது ஜெனிவாத் தீர்மானத்தின் மூலமாகவே சாத்தியப்படும் என்பதால், அந்தத் தீர்மானம் நிறைவேற உங்கள் அருட்கடாட்சத்தை நீங்கள் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

விநாயகரின் அறிக்கையால் மாநாட்டில் அமைதி. அந்த நிசப்தத்தை கலைக்கும் வகையில் புத்தபிரான் எழுந்தார். இந்த மாநாட்டில் நான் இருப்பதாக நினைத்து நீங்கள் நீதி வழங்க மறுத்துவிடாதீர்கள். நேற்று முன்தினம் கூட, மல்வத்த அஸ்கிரிய பீடங்கள் பிரித் ஓதி தீர்மானத்தை தோற்கடிக்குமாறு என்னை வேண்டிக் கொண்டனர். நான் அதனை முற்றாக நிராகரித்து விட்டேன் என்றார். தொடர்ந்து யேசுபிரான் எழுந்தார். வன்னியில் நடந்த போரில் நாங்கள் பாராமுகமாக இருந்ததாக விநாயகர் கூறியதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் படும் துன்பங்களுக்கு முடிபு கட்டப்பட வேண்டும்.

மக்களின் வாழ்விடங்களில் புத்தர் சிலைகளை நிறுவுகின்றார்கள். இது மதங்களிடையே மோதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றார். இதன்போது எழுந்த கெளதம புத்தபிரான், அரச மரத்தைக் கண்டவுடன் அதில் என்னை இருத்தலாம் என்று இலங்கையின் தென்பகுதி மக்கள் நினைத்து அதனைச் செய்து வருகின்றனர். ஆனால் நான் அதனை ஏற்றுக் கொள்வில்லை என்றார். மாநாட்டிற்கு தலைமை வகித்த சிவன், ஜெனிவாத் தீர்மானம் பற்றி ஆராயலாம் என்று கூற, வேகமாக எழுந்த விநாயகர் முறிகண்டியில் எனக்கு நடந்த அநீதியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். புனித பிரதேசமாக இருந்த முறிகண்டி இன்று வர்த்தக மயமாக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் ஏ-9 பாதையால் பயணிப்பவர்கள் எனது ஆலயத்தில் இறங்கி வழிபாடு செய்துவிட்டுத்தான் செல்வார்கள். ஆனால், இன்று அப்படயல்ல. எல்லாம் தாம் நினைத்த பாட்டில் நடக்கிறது. ஆட்சி- அரசு என்றால் முதலில் அதன் பொருள் தெரியவேண்டும். எனவே ஜெனிவாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என நடத்தப்படுகின்ற பிரார்த்தனையை தேவலோகக் கடவுளர் சபை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றார். விநாயகரின் தீர்மானத்தில் ஏதேனும் திருத்தம் உண்டா என்றார் கண்ணபரமாத்மா. “திருத்தம்” என்பது இந்திய மத்திய அரசுக்குரியது என்று சக்தி கூற மாநாட்டில் சிரிப்பு ஒலி. தமிழ்க் கடவுளர் முருகன் எழுந்தார். விநாயகரின் தீர்மானத்தை பிரேரிப்பதாகக் கூறினார்.

அதனை கெளதம புத்தபிரான் வழிமொழிய தேவலோகத்து மாநாடு நிறைவுற்றது. அனைத்து சமயங்களினதும் முழுமுதற் கடவுளர்கள் எழுந்து நின்று தங்கள் கைகளை உயர்த்தி ஆசீர்வதிக்கின்றனர். அவர்கள் ஆசீர்வதிக்கும் இடம் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத் தொடர்போல் இருக்கிறது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27747

பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு!

வன்னியில் நடந்த போரின்போது, தேவலோகம் அமைதியாக இருந்தமை மிகவும் வேதனைக்குரியது.

இது தவறு. தமிழ் யெகோவா மூப்பர்கள் சூட்கேசுகளுடனும் புத்தகங்களுடனும் அலைவதைக் காணக் கூடியதாக இருந்தது.

நீங்கள் திருவிளையாடல் மற்றும் கந்தன் கருணை படங்களை அதிக தரம் பார்த்திருபிர்கள் போலுள்ளது.

இதில் ஏன் அல்லாவைக் காணவில்லை? கடவுள்களின் ஓர வஞ்சனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.