Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்க்கையின் வெறுமை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கையின் வெறுமை

என் இளமைப்புத்தகத்தின்

இரவுப்பக்கங்கள்

வெறுமையாய் கிடக்கின்றன

இன்னும் எழுதப்படாத

ஓர் கவிதையை எண்ணி....

எனது வானம்...

இருள் மூடிக்கிடக்கிறது

இதுவரை காணாத

அந்தப் பௌர்ணமிக்காக...

மெல்ல மெல்ல

காலத்திருடனிடம்

களவு போகின்றன-என்

நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான்

சேர்த்துவைத்த கனவுகளின்

ஒளிநிறமும்....

நிசப்தம் விழுங்கிய

நீண்ட இரவொன்றில்...

நிமிர்ந்து பார்க்கிறேன்

மழை இருள்மூடிய

காரிருள் வானில்

பளிச்செனத் தெரிந்தது

தனிமை மூடிய-எனது

வாழ்க்கையின் வெறுமை.

-ஈழநேசன்-

கள உறவான ஈழநேசனின் கவிதையை

களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே

களமேற்றியிருக்கிறேன்.

ஈழநேசன், உங்க கவிதை என்ன இப்படி வெறுமை பேசுது. வெறுமை என்பது எல்லாருக்கும் சில நேரங்களில் தோன்றலாம்/ இருக்கலாம். எப்போதும் இருக்காதல்லவா?

தொடர்ந்து பல கவிதைகளை தாருங்கள்.

ஈழநேசனின் வாழ்க்கையின் வெறுமை பேசும் கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் செல்வமுத்து. வாழ்க்கையில் வெறுமை இருப்பதும் இல்லாமல் விடுவதும் அவரவர் கைகளில்த்தான் இருக்கிறது. வாழ்க்கையை வெறுமையாக நகர்த்தாமல் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எனது வாழ்த்துக்கள்.

எனது ஆக்கத்தை அழகாகத்தந்த செல்வமுத்து ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி குளக்கட்டான் அவர்களே.., மனதைப்பாதித்த விடயங்கள்தானே ஆக்கங்களில் வெளிப்படும். அதற்காக என் கவிதை பேசுவதுதான் எனது வாழ்க்கை. என எடுத்துக்கொள்ளவேண்டாம்.

மிக்க நண்றி ரசிகை. உங்களின் வாழ்த்துக்களிற்கு. அது சரி ..,என் கவிதை எப்படி என்று ஒன்றுமே சொல்லவிலையே....? :cry: :cry: :cry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் இளமைப் புத்தகத்தின் இரவுப் பக்கங்களில் கவிதை எழுத

அந்தப் பௌர்ணமிப்பெண் வரவேண்டும்.

நந்தவனப்புூக்களின் நறுமணமும், கனவுகளின் ஒளிநிறமும் களவுபோகாது

காரிருள் வானம் ஒளிபெற அந்த நிலவுமகள் வரவேண்டும்.

அப்படித்தானே?

வாழ்க்கையின் வெறுமையை நீக்கிட நிச்சயம் வரவேண்டும். அந்த நிலவுலகு மகள் நிச்சயம் வருவார். வரவேண்டும்!

நல்லதொரு கவிதையைத் தந்த ஈழநேசனுக்கு எனது

பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழநேசன் கவி நன்றாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் இளமைப் புத்தகத்தின் இரவுப் பக்கங்களில் கவிதை எழுத

அந்தப் பௌர்ணமிப்பெண் வரவேண்டும்.

நந்தவனப்புூக்களின் நறுமணமும், கனவுகளின் ஒளிநிறமும் களவுபோகாது

காரிருள் வானம் ஒளிபெற அந்த நிலவுமகள் வரவேண்டும்.

அப்படித்தானே?

வாழ்க்கையின் வெறுமையை நீக்கிட நிச்சயம் வரவேண்டும். அந்த நிலவுலகு மகள் நிச்சயம் வருவார். வரவேண்டும்!

நல்லதொரு கவிதையைத் தந்த ஈழநேசனுக்கு எனது

பாராட்டுக்கள்!

அப்படித்தான்.

quote="iniyaval"]ஈழநேசன் கவி நன்றாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.[/quote

மிக்கநன்றி இனியவள் தொடர்ந்து எழுத் முயற்சிக்கிறேன்

மெல்ல மெல்ல

காலத்திருடனிடம்

களவு போகின்றன-என்

நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான்

சேர்த்துவைத்த கனவுகளின்

ஒளிநிறமும்....

அழகான வரிகள் ஈழநேசன்..

அழகான கவி கூட..உங்கள் வாழ்க்கையின் வெற்றிடம் சீக்கிரமாய் நிரம்பிட..என்னோட வாழ்த்துக்கள்..

நிரம்பினதும் கவி எழுதாமல் விட்டுடாதைங்கோ.. தொடர்ந்தும் எழுதுங்கோ..

அழகான வரிகள் ஈழநேசன்..

அழகான கவி கூட..உங்கள் வாழ்க்கையின் வெற்றிடம் சீக்கிரமாய் நிரம்பிட..என்னோட வாழ்த்துக்கள்..

நிரம்பினதும் கவி எழுதாமல் விட்டுடாதைங்கோ.. தொடர்ந்தும் எழுதுங்கோ..

மிக்கநன்றி ப்ரியசகி..... இதுபோன்ற உற்சாகமான பாராட்டுக்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து எழுதுவேன்.

மிக்க நண்றி ரசிகை. உங்களின் வாழ்த்துக்களிற்கு. அது சரி ..,என் கவிதை எப்படி என்று ஒன்றுமே சொல்லவிலையே....? :cry: :cry: :cry:

ஓ கவிதை சூப்பர்.மன்னிக்கவும் அன்று சொல்லாததுக்கு :oops:

இளமைப்பருவத்தின் வெறுமை எழுதப்படாத கவிதையாக வடித்தது அருமை.

வாழ்க்கையின் ஏக்கங்கள் பௌர்ணமி நிலவில்... பட்டு மழை இருள் மூடிய காரிருள் வானில் வாழ்க்கையின் வெறுமையை ஒப்பிட்டு வடித்தமை அற்புதம்.

வாழ்த்துக்கள்...

மேலும் தொடருங்கள்...

ஈழநேசனின் வாழ்க்கையின் வெறுமை கவிதை நல்லாயிருக்கு. இது உங்கள் வெறுமை மட்டும் இல்லை நம்முடையதும் தான்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து தாருங்கள்.

ஆகா வாழ்க்கையில் வெறுமையா :) கரு வெறுமை பேசினாலும் கவிதை நிறைவா இருக்கு. ஒளி நிறம் என்றால் என்ன?

நன்றி....நன்றி...நன்றி...,ரசிகை, ஷன்முகி, ரமா. உங்களுடைய பராட்டுக்கள், என்னை இன்னும் இன்னும் எழுதத்தூண்டுகின்றன,

ஆகா வாழ்க்கையில் வெறுமையா :lol: கரு வெறுமை பேசினாலும் கவிதை நிறைவா இருக்கு. ஒளி நிறம் என்றால் என்ன?

நன்றி ஸ்னேகிதி..., ஒளி- வெளிச்சம், நிறம்-வர்ணம். இங்கே நான் 'ஒளிநிறம்' என்ற சொல்லை, ஒளிபொருந்திய வர்ணங்கள் அல்லது பிரகாசமான வர்ணங்கள். என்னும் அர்த்தத்தில் பயன் படுத்தி இருக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.