செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
விமானப் பயணத்தின் நடுவே விமானத்துக்குள் 'பிகினி 'உடை அணிந்த பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்திய வியட்நாம் நாட்டு விமான சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'வியட் ஜெட் எயார்' என்ற விமான சேவை மீதே 1000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமான சேவையானது வியட்நாமின் ஹோ சீ மின் மற்றும் நா டிராங் ஆகிய நகரங்களுக்கிடையிலான தனது முதல் விமானப் பயணத்தினைக் கடந்த சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அதன் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் முகமாகவே நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனை தமது கெமராக்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் மூலம் படமெடுத…
-
- 8 replies
- 1.1k views
-
-
குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது. ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர். குழந்தையின் தாயும் – தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின்…
-
- 4 replies
- 409 views
-
-
படகுமூலம் அவுஸ்ரேலியாவிற்கு செல்வதற்காக தமிழகம் தூத்துக்குடி பகுதியில் தங்கி இருந்த ஈழத்தமிழ் அகதிகள் 60பேர் கைது! திருச்சி ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாமில் வசித்து வந்த 25 அகதி குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை கோவில் தொடர்ந்து இரு தினங்களாக தங்கியிருப்பதாக தமிழக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் எட்டையபுரம் தாசில்தார் அம்புரோஸ் மேரி ஈழத்தமிழ் அகதிகளிடம் விசாரணை நடத்தினார். தப்பி செல்ல முயன்றவர்களில் ஆண்கள் 21 பேர் பெண்கள் 19 சிறுவர்கள் 7 சிறுமியர்கள் 8 பேர் அடங்குவர். இதில் அகதிகள் குழுவை சேர்ந்த ஐந்து பேர் காவல்துறை விசாரணையில் தப்ப…
-
- 0 replies
- 427 views
-
-
160 கி.மீ. தூரம் காரை செலுத்திச் சென்ற 12 வயது சிறுவன் 2016-09-15 12:21:55 12 வயதான சிறுவன் ஒருவன் சுமார் 160 கிலோமீற்றர் தூரம் காரை செலுத்திச் சென்ற சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் லிம்பபாச் ஃப்ரோஹ்னோ ( Limbach-Frohnau ) நகரில் வசிக்கும் இச் சிறுவனையும் 13 வயதான அவனின் நண்பனையும் காணவில்லை என பொலிஸாரிடம் இச் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். அதன்பின் மேற்கொண்ட விசாரணையின்போது, தனது தாத்தா, பாட்டியின் வீட்டை அச் சிறுவனும் அவனின் நண்பனும் சென்றடைந்தமை தெரியவந்தது. 12 வயதான இச் சிறுவன் ஒருவரிடமும் கூறாமல் தன…
-
- 0 replies
- 366 views
-
-
ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா பட மூலாதாரம், TWITTER அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்துவிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பைடனுக்கும் டிரம்புக்கும் கடுமையான போட்டி நிலவும், ஆனால் இறுதியில் டிரம்பே வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். http…
-
- 30 replies
- 3.4k views
-
-
யாழ்.மணியந்தோட்டம் இளைஞனின் வங்கி கணக்கிற்கு கனடாவிருந்து வைப்பிலிடப்பட்ட நூறு கோடி ரூபாய் பணம்..! அதிர்ச்சியில் மத்தியவங்கி.! யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் இணைய வங்கி ஊடாக சுருட்டிய பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. சுமார் 490 கோடி கனேடியன் டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த பணம் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடையும் என கூறப்படுகிறது. மே…
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது! யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடி வருகின்றனர். கடந்த 2ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் நுழைந்த வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில்…
-
- 0 replies
- 457 views
-
-
'தண்ணீருக்காக தன்னந்தனியாக வெட்டிய சுரங்கம்' - பத்மஸ்ரீ விருது பெறும் கர்நாடக விவசாயியின் உத்வேகக் கதை தண்ணீருக்காக தன்னந்தனியாக சுரங்கம் வெட்டி, தரிசு நிலத்தை மரப் பண்ணையாக மாற்றிய கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி அமை மகாலிங்க நாயக் பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளார். உத்வேகமூட்டும் இவரது வாழ்க்கைக் கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம். கடந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் கோவையைச் சேர்ந்த 106 வயதான மூதாட்டி பாப்பம்மாள். தள்ளாத வயதிலும் விவசாயம் செய்து இயற்கையான உணவு என ஆரோக்கியமான முறையில் வாழ்ந்து வருகிறார் பாப்பம்மாள். விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட மூதாட்டி பாப்பம்மாளை கௌரவிக்கும் விதமாக பத்ம விருது வழங்கப்பட்டது. மூதாட்டி பாப்பம்மா…
-
- 5 replies
- 749 views
-
-
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் என வர்ணிக்கப்படும் மெக்ஸிகோவைச் சேர்ந்த ஜோகின் எல் சபோ கூஸ்மன் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வதான ஜோகின் கூஸ்மன் கடந்த 13 வருடங்களாக கைது செய்யப்படுவதிலிருந்து தப்பி வந்தவர். இதனால் ஏறுத்தாழ ஒரு மர்ம நபராக அவர் கருதப்பட்டார். அமெரிக்க கண்டத்தின் பல நாடுகளில் ஹெரோயின், கனபீஸ், கொக்கேய்ன் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஜோகின் கஸ்மன், பலநூறு கோடி டொலர்களை சம்பாதித்தவர். கூஸ்மன் தலைமையிலான போதைப்பொருள் கடத்தல் குழுவுக்குக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையிலான மோதல்களால் மெக்ஸிகோ வீதிகளில் தலையற்ற மனித சடலங்கள் காணப்படுவது வழக…
-
- 0 replies
- 808 views
-
-
வெளிநாட்டிலுள்ள தனது மனைவிக்கு அனுப்பவென முருங்கக்காய் பறிக்கச் சென்ற கணவரொருவர் முருங்கை மரக்கிளையுடன் அருகிலுள்ள கிணறொன்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இப்பாகடுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பாகடுவ இப்பயவ பிரதேசத்தைச் சேர்ந்த சரத்காமிணி ராஜபக்ஷ என்ற 57 வயதான மூன்று பி்ள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். மரண விசாரணையில் சாட்சியமளித்த காலஞ்சென்றவரின் மைத்துனர் கூறியதாவது, 'காலஞ்சென்றவரின் மனைவி எனது சகோதரியாவார். நாங்கள் இருவரும் குவைத் நாட்டில் பணி புரிகின்றோம். நான் விடுமுறைக்கு இலங்கை வந்தேன். எனது சகோதரி இலங்கை காய்கரி சாப்பிட விரும்புகிறார் என கூறியபோது எனது மைத்துனர் பலா ஈரப்பலா போன்றவற்றை சேகரித்ததுடன் பின் வீட்டில் முருங்கைக்காய் …
-
- 7 replies
- 925 views
-
-
சொர்க்கத்தை நோக்கிய பாதையில் திருமணம் செய்தால் என்ன என்ற யோசனை தமிழ்நாட்டில் ஒரு ஜோடிக்கு வர, தங்கள் திருமணத்தின் ஒரு பகுதி சடங்கை அவர்கள் ஹாட் ஏர் பலூன் என்ற உஷ்ணக் காற்று அடைக்கப்பட்ட பலூனில் பறந்து செய்திருக்கிறார்கள். விநோத முறைகளில் திருமண வைபவத்தை நடத்தி அதனை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனவா? இது போன்ற திருமணம் மற்றும் பிற சமூக வைபவங்களை நடத்த ஏற்பாடு செய்யும் ஐஸ் இவெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மேலாளர் அருண் செல்வராஜன் தமிழோசைக்கு அளித்த பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/india/2014/04/140428_baloonwedding.shtml
-
- 0 replies
- 865 views
-
-
அரேபியாவில் மாடு, கழுதை என்று திட்டிய கணவன் மீது வழக்கு! [Tuesday, 2014-05-06 22:46:59] சவுதி அரேபியாவில் மாடு, கழுதை என்று பொது இடத்தில் திட்டிய கணவனை கோர்ட்டுக்கு இழுத்துள்ளார் மனைவி.இதுகுறித்து சவுதி கெசட்டில் கூறியிருப்பதாவது: சவுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை), கிரிமினல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது கணவர் அடிக்கடி தன்னை மாடு, கழுதை என்று திட்டி அவமானப்படுத்துகிறார். அத்துடன் தகாத வார்த்தைகளில் அசிங்கமாக பேசுகிறார். பொது இடங்கள் என்று கூட பார்க்காமல், மாடு, கழுதை என்று திட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்� என்று புகார் கூறியுள்ளார். இதையடுத்து பெண்ணின் கணவரை ஆஜர்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு கோர…
-
- 2 replies
- 548 views
-
-
முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா? உலகின் மிக நீண்ட முத்தப் போட்டி கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்தைச் சேர்ந்த ஏக்கச்சாய் லக்ஷனா திரானரத் தம்பதியினர் சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனை படைத்திருந்தனர். இதுவே உலகின் மிக நீண்ட முத்தமென கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது என கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இப்போட்டிகள், போட்டியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இப் போட்டியின் விதிமுறைகள் மிகக் கடுமையாக இருப்பதால் போட்டியாளர்க…
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
நடையாக நடக்க வேண்டியிருக்கிறது என எப்போதாவது நொந்துகொள்ள நேர்ந்தால் அமெரிக்க தொழிலாளி ஜேம்ஸ் ராபர்ட்சனை நினைத்துக்கொள்ளுங்கள். தினமும் நடையாக நடக்க வேண்டும் என்றாலும் அவரை நினைத்துக்கொள்ளுங்கள், தானாக ஊக்கம் பிறக்கும். ஏனெனில் அவர் தினமும் 33 கிமீ நடந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக, தனது பணியிடத்திற்கு இப்படி 33 கி.மீ தொலைவு நடந்து வந்து கொண்டிருக்கும் இந்த கடமை வீரரின் மன உறுதியையும், ஈடுபாட்டையும் பார்த்து நெகிழ்ந்து போனவர்கள், இணையம் மூலம் கைகொடுத்து அவருக்கு கார் வாங்கி கொடுக்க நிதியை அள்ளிக்கொடுத்துள்ளனர். அவருக்கு கார் வாங்குவதற்காக 25,000 நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தற்கு மாறாக ஒரே நாளில் ஒரு லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக அள்ளிக்கொடுத்த…
-
- 2 replies
- 618 views
-
-
பதின்மூன்று கோடி இருபத்திரண்டு லட்ச ரூபா பெறுமதியான ஒன் மில்லியன் டாலர் நோட்டு அறுபது லட்ச ரூபாவுக்கு கொழும்பிலும். காத்தான்குடியிலும். கொழும்பில் பெட்டா. கதிரேசன் வீதி, செட்டியார் தெரு, தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு முன் கோள் பேஸ் திடல், மெரைன் ரைவ். பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக் சிட்டி என கிட்டத்தட்ட ஒரு 500 பேர். ஒவ்வொருவருடனும் ஒரு மூன்று நான்கு பேர் அனைவரும் காத்தான் குடி. திருகோணமலை. வவுனியா. கண்டி. அக்குறணை. காலி என படித்தவர்கள். ரொம்பவும் படித்தவர்கள். வியாபாரம் செய்து உடனடியாக பணம் உழைக்க வேண்டும் என்ற அவாவில் துடிக்கும் துடிப்பான இளைஞர்கள். மற்றும் பாமரர்கள் என ஒரு பட்டாளம். யார் இவர்கள் ??? இவர்கள் ஒரு மில்லியன் டொலரை வைத்துக்கொண்டு விற்பதற்காக கொழும்பு வந்தவர்கள். இ…
-
- 0 replies
- 603 views
-
-
அமெரிக்காவில், தினமும், இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் போலீசாரால் கொல்லப்படுவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்ட விவரம்: இந்தாண்டு, அமெரிக்க போலீசாரால், 385 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு, இரண்டுக்கு மேற்பட்டோர், போலீசாரால் உயிரிழக்கின்றனர். இது, கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க அரசு வெளியிட்ட இறப்பு விகிதத்தை விட, பல மடங்கு அதிகம். அமெரிக்காவில், மாகாண அரசுகள், போலீசாரால் உயிரிழப்போர் குறித்த புள்ளி விவரங்களை, தேசிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. விருப்பத்தின் பேரில் தரலாம் என்பதால், தேசிய அரசிடம், மாகாண அளவில் போலீசாரால் கொல்லப்பட்டோர் குறித்த விவரங் கள் சரிவர இல்லை. அமெரிக்க போலீசா…
-
- 0 replies
- 253 views
-
-
சிவ மேனகை பெற்றோலியத்தை சீராக பெறுவதற்கு இந்து சமுத்திரத்தை கடைய போகும் சீனாவும் அமெரிக்காவும் ,,,,,,,,,,,,,,,,, அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள் . ,வலிதாங்க முடியாமல் பாம்பு விசத்தை கக்கியது ,அமிர்தத்துக்கு பதிலாக வந்த விசத்தை சிவபெருமான் உட்கொண்டு உலக மக்களை காப்பாற்றினார் ,,இது புராணம் கூறும் வரலாறு இன்றைய புது யுகம் எமக்கு சொல்லபோவது என்னவென்றால் இலங்கையை மத்தாகவும் இந்தியாவை கயிறாகவும் கொண்டு சீனாவும் அமெரிக்காவும் இந்து சமுத்திரத்தை குண்டுகளால் குடைய போகின்றார்கள் பொற்றோல் வருகின்றதா எரியும் நச்சு வாயு வருகின்றதா என்பதை பொற…
-
- 2 replies
- 960 views
-
-
தமிழ்த் தேசிய தளத்தின் கள நிலமை, அமைவிட பிராந்திய நிலமை, நாடுகளது நலன்சார் நிலமை குறித்த புரிந்துணர்வுக் குறைபாட்டுடனேயே பலர் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசி வருகின்றார்கள். எழுதியும் வருகின்றார்கள். விடுதலைப் புலிகளது போர்க் களம் மௌனிக்க வைக்கப்பட்டதன் பின்னர், விடுதலைப் புலிகளது வெற்றிக்குப் பின்னே அணி வகுத்த பலரும், இப்போது சர்வதேச அரசியல் குறித்து சோதிடம் சொல்லும் ஆசான்களாக மாற்றமெடுத்து வருகின்றனர். தமக்குத் தெரிந்த ஒற்றைப் பாதையிலேயே தமிழீழத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளர்கள். சிங்கள தேசத்தை அனுசரித்துப் போவதன் மூலம் ஈழத் தமிழர் நலனைப் பேணுவது என்று ஒரு சாராரும், இந்தியாவைத் தழுவுவதன் மூலம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கலாம் என்று ஒரு ச…
-
- 0 replies
- 446 views
-
-
பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் கார் விபத்தில் பலியான தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அதே போஸ்களில் மகளுடன் புகைப்படம் எடுத்து அனைவரின் மனதையும் தொட்டுவிட்டார். பிரேசிலைச் சேர்ந்தவர் ரபேல் டெல் கோல். பிளாக்கரான(blogger) அவரின் மனைவி கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார். அவர்களுக்கு ரைசின்ஹா(4) என்ற மகள் உள்ளார். 27 வயதில் பலியான தனது மனைவியை பிரிந்த ரபேல் தனது வாழ்வில் அனைத்தும் இருந்தும் இல்லாதது போன்று உணர்ந்தார்.அவருக்கு தனது மகளை பார்க்கையில் மனைவியின் ஞாபகம் வந்தது. திடீர் என்று ஒரு நாள் மகளை பார்த்தபோது தனது மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அந்த தருணத்தை மீண்டும் வரவழைக்க விரும்பினார். இதையடுத்து அவர் புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து …
-
- 0 replies
- 292 views
-
-
திருமணத்தை நடத்துவதற்கான தளமாக மாற்றப்பட்டுள்ள பிரித்தானிய சிறைக்கூடம் (படங்கள்) பிரித்தானிய சொமர்ஸெட்டில் 18 ஆம் நூற்றாண்டு காலத்தில் குற்றவாளிகளை சிறை வைக்கப் பயன்படுத்தப்பட்ட சிறைக்கூடமொன்று உத்தியோகபூர்வமாக திருமணங்களை நடத்து வதற்கான தளமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி 7 அடி அகலத்தை மட்டுமே கொண்ட சிறைக்கூடத்தில் திருமண ஜோடியும் திருமணப் பதிவாளருமே ஒரு சமயத்தில் அமர்ந்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/3328
-
- 7 replies
- 532 views
- 1 follower
-
-
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் நிர்வாணப் படங்களை சில பத்திரிக்கைகள் லேசு பாசாக போட்ட நிலையில் தற்போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கை, மிடில்டனின் 50 நிர்வாணப் படங்களுடன் கூடிய சிறப்புப் பதிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த பத்திரிக்கைகள் மிடில்டனின் நிர்வாண படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் இத்தாலியின் சி என்ற இதழ், மிடில்டனின் 50 நிர்வாணப் படங்களை தனியாக ஒரு பதிப்பாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. மொத்தம் 26 பக்கங்களைக் கொண்டதாக இந்த சிறப்புப் பதிப்பு இருக்குமாம். இதற்கு முன்னோட்டமாக தனது லேட்டஸ்ட் இதழின் அட்டையில் மிடில்டனி…
-
- 12 replies
- 2.2k views
-
-
எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி 20 September 2025 மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும். அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த ந…
-
- 0 replies
- 188 views
-
-
62 வருடங்களாக இணைந்து வாழ்ந்த தம்பதியினர் 20 நிமிட இடைவெளியில் இறந்தனர் 2016-08-11 11:31:27 62 வருடங்களாக தம்பதியினராக வாழ்ந்த வயோதிபர்கள் இருவர், 20 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 87 வயதான ஜெனட் டி லாஞ் எனும் பெண் நீண்டகாலமாக அல்ஸீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மிசோரி மாநிலத்தின் டகோட்டா நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஞாயிறன்று 31 ஆம் திகதி மாலை 5.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். ஜெனட்டின் கணவரான ஹென்றி (85 வயது) அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உயிரிழந்தார். …
-
- 3 replies
- 281 views
-
-
-
- 0 replies
- 472 views
-
-
திருமணத்திற்கு பிறகு கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு! [Saturday 2016-11-19 15:00] சர்வதேச அளவில் திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவிக்கு தெரியாமல் மற்றவர்களுடன் கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.பிரித்தானிய நாட்டை சேர்ந்த Durex ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ‘உலகளவில் தன்னுடைய துணைக்கு தெரியாமல் அல்லது துணைக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவரிடம் கள்ள தொடர்பு வைத்துக்கொள்வதில் எந்த நாடு முன்னணியில் உள்ளது’ என ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் 51 சதவிகித தம்பதிகள் திருமணத…
-
- 5 replies
- 1.6k views
-