Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அவுஸி.. சிட்னியில் மியூசியம்... பூங்கா ஒன்றில் பூமரங்களை வேட்டையாடியதற்காக.. மன்னிக்கனும்.. மேய்ந்ததற்காக ஆடு (ஆட்டின் பெயர் Gary) ஒன்று.. நீதிமன்றம் போய் நீதி கேட்க வேண்டியதாப் போச்சுது. அதன் சொந்தக்காரருக்கு பூங்காவால் விதிக்கப்பட்ட 464 டொலர் தண்டனைப் பணம்.. பற்றி நீதிமன்றில் நியாயம் கேட்க ஆடும் நீதிமன்றம் போனது. நீதிமன்றில் Gary (ஆடு) பூங்காவை அழிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கெட்ட என்னத்தோடும்.. போய் பூக்கன்றுகளை சாப்பிடாத படியால்.. அது குற்றமற்றது என்று சொல்லி விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பாடா.. ஆட்டுக்காவது நீதி கிடைச்சிச்சே. மனிசனை கொத்துக் கொத்தா கொன்று குவிக்கிற சிறீலங்காவை கூப்பிட்டு வைச்சு கிரிக்கெட் விளையாடி மகிழிற... அவுஸி.. ஆட்டுக்கு நீதி வழங்கினது பெரிய …

  2. முடியைத் தொட்டாலே கையோடு வந்து விடுகிறது…மராட்டியத்தில் பரவும் மர்ம நோய் January 9, 2025 12:35 pm மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்திலுள்ள கல்வாட், பாண்ட்கான், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆண், பெண், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த ஒரு வாரத்தில் திடீரென முடி கொத்து கொத்தாக உதிர்ந்து வழுக்கையாகி வருகின்றது. முதலில் உச்சந் தலையில் சிறிது அரிப்பு ஏற்பட்டு சில நாட்களில் ரோமத்தின் தன்மை சொரசொரப்பாக மாறி 72 மணித்தியாலத்துக்குள் முடி தானாக உதிர்ந்து வழுக்கையாகிவிடுவதாக கூறப்படுகிறது. தலைமுடியை மெதுவாக வருடி விட்டால் கூட கையோடு வந்து விடுவதாகவும் இதுவரையில் அந்தக் கிராமத்தில் சுமார் 50 பேர் வரை இந்த மர்ம நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்…

  3. மாயன் காலண்டர் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்ற புரளி ஒருபுறம் பரவியுள்ள நிலையில், மாயான் காலண்டர் முடிந்து புதிய யுகம் பிறப்பதாக மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. மெக்ஸிகோவின் மாயன் இனத்தவரின் தொன்மையான நகரமான சிசென் இட்சாவில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய யுகம் பிறக்கும் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மெக்ஸிகோவில் அரசு அதிகாரப்பூர்வமாக இந்த புதிய யுக கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்றாலும், அங்குள்ள தொன்மை வாய்ந்த பிரமிடு பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி புது யுகத்தை வரவேற்றனர். அவர்களின் கருத்துப்படி மாயன் காலண்டர் மீண்டும் முதலில் இருந்து புதிதாகத் தொடங்குகிறது. அமெரிக்க பழங்குடியின மக்களான ம…

  4. முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா? உலகின் மிக நீண்ட முத்தப் போட்டி கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்தைச் சேர்ந்த ஏக்கச்சாய் லக்‌ஷனா திரானரத் தம்பதியினர் சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனை படைத்திருந்தனர். இதுவே உலகின் மிக நீண்ட முத்தமென கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது என கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இப்போட்டிகள், போட்டியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இப் போட்டியின் விதிமுறைகள் மிகக் கடுமையாக இருப்பதால் போட்டியாளர்க…

  5. முட்­டைக்குக் காவல் போட்டதால் முரண்­பட்ட சபை உறுப்­பி­னர்!! முட்­டைக்குக் காவல் போட்டதால் முரண்­பட்ட சபை உறுப்­பி­னர்!! யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. உறுப்­பி­னர்­க­ளுக்­கான மதிய உணவு வழங்­கும் இடத்­தில் முட்­டைக்­கும், இறைச்­சிக்­கும் மாந­கர சபை உத்­தி­யோ­கத்­தர்­கள் காவ­லி­ருந்­த­னர். அத­னால் சீற்­ற­மை­டைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர் ஒரு­வர் சீறிப் பாய்ந்­தார். அந்த இடம் சிறிது பர­ப­ரப்­பா­னத…

  6. 3/31/2023 முட்டாள்கள் நாள் அள்ளக்கை, முட்டாள் என்பன அறிவுத்திறமும் உழைப்புமற்று சொன்னதைச் செய்யும் நபர்களுக்கான சினையாகு பெயர். தானிய வணிகம் செய்யச் செல்லும் போது, தரத்தைக் கண்டறிவதற்காக, சொன்னதும் கொஞ்சமாக பதக்கூறு(sample) அள்ளி எடுப்பதற்காகக் கூடவே வரும் ஆள் அள்ளக்கை. அது போன்றே இழுத்துவரும் தேரின் சக்கரங்களுக்கு முட்டுப் போடுவதற்காகவே வரும் ஆள் முட்டாள். இதில் முட்டாள் என்பது ஏமாறுபவர்களைக் குறிக்கும் குறிச்சொல்லாகவும் புழங்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் வாக்கில் ஆற்றில் பெருவாரியாக மீன்பிடிப்பது வழக்காறு. பிடிபடும் மீன்கள் ஏமாற்றத்துக்கு ஆளானது என்பதான குறியீடாகப் போனது ஐரோப்பிய நாடுகளில். அதைத்தொட்டு ஏப்ரல் முதல்நாள் மீன்கள் நாளென்றும், ஏமாறுபவ…

  7. இலங்கையின் மலையகப் பகுதி ஒன்றைச் சேர்ந்த ரஞ்சித் ஏக்கநாயக்க என்பவரின் 6 கோழிகளில் ஒன்று முட்டை எதுவும் இடாமல் நேரடியாகவே குஞ்சை ஈன்றது என்று பல ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் செய்திகளைப் பிரசுரித்துள்ளன. அதுவும் இச் செய்திக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிறுவயதில், முட்டையில் இருந்து கோழி வந்ததா இல்லை கோழியில் இருந்து முட்டை வந்ததா என்று பள்ளிக்கூடங்களில் விவாதம் நடுத்துவார்களே ! அதேபோல இதனையும் ஒரு பெரும்பொருட்டாக கருதி பல ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது. முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் ! பாலூட்டிகள், ஊர்வன, பறப்பவை என பலவிடையங்கள் விஞ்ஞானத்தில் உள்ளது. முட்டை இல்லாமல் குஞ்சு வர சாத்தியமே இல்லை என்பதே உண்மையாகும். கடவுளே வந்தாலும் இ…

  8. முட்டைக்குள் மற்றொரு முட்டை பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் முட்­டை­யொன்றை உடைத்­த­போது அம்­முட்­டைக்குள் மற்­றொரு சிறிய முட்­டை­யொன்று இருந்­ததைக் கண்டு வியப்­ப­டைந்­துள்ளார். ஜேன் கீஸ்ட் எனும் இப்பெண் சமை­ய­லுக்­காக முட்­டை­யொன்றை உடைத்து சட்­டியில் ஊற்­றி­ய­போது, மற்­றொரு முட்டை உருண்டு ஓடி­யதாம். இது குறித்து தனது மனைவி ஜேன் தன்­னிடம் கூறி­ய­போது அவர் ஜோக்­காக அப்­படி கூறு­கிறார் என தான் எண்­ணி­ய­தாக கிறிஸ் கீஸ்ட் என்­பவர் தெரி­வித்­துள்ளார். பின்னர் இம்­முட்­டையை பார்த்­த­வுடன் தனது தொலை­பே­சி­யி­லி­ருந்த கெமரா மூலம் அதை தான் படம்­பி­டித்­துக்­கொண்­ட­…

  9. முட்டையிடும் விசித்திர சிறுவன் : குழப்பத்தில் வைத்தியர்கள்!!! கோழி முட்டை இடுவது வழக்கமானது ஆனால் இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் கோவா பகுதியை சேர்ந்த 14 வயதான அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டை இடுவதாக கூறி பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் மனிதனின் உடலில் முட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் என்ன சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து சிறுவனது தந்தை, "அக்மல் 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறா…

  10. ஈரோடு:ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது. தகவலறிந்து, சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், முட்டையிட்ட சேவலையும், முட்டையையும், அதிசயமாக பார்த்து சென்றனர்.ஈரோடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கழக டாக்டர் பாலசுப்பிரம…

  11. [size=4]சீனாவில் இருந்து ஷென்ஷோ-9 என்னும் மனிதர்களை கொண்டு செல்லும் விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த விண்கலம் செலுத்தப்படுகிறது.[/size] [size=4]3 பேரோடு செல்லும் இந்த விண்கலத்தில் முதல்முதலாக ஒரு பெண் செல்கிறார். 33 வயதான லியூ யாங் என்கிற அவர் விமானியாக இருந்துள்ளார். அவரால் இயக்கப்பட்ட விமானத்தில் 18 புறாக்கள் மோதிய போது சாமர்த்தியமாக அதனை தரையிறக்கினார்.[/size] [size=4]இந்த சாமர்த்தியம்தான் அவருக்கு இந்த விண்வெளி வாய்ப்பை அளித்துள்ளது. ரஷியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் பெண் ஒருவரை விண்ணில் செலுத்துகிறது. அவரோடு ஜிங் ஹாய்பெங் மற்றும் லியூ வாங் ஆகியோரும் செல்கின்றனர்.…

    • 4 replies
    • 564 views
  12. முதலமைச்சர் CVயுடன் இணையத் தயார்..! மாவை June 19, 201512:04 pm வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெற்கில் பணம் வாங்கினார்கள் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் மாவை விளக்கம் கேட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (18) பதில் அனுப்பியிருந்தார். இந்த பதில் கடிதம் தொடர்பில் பதில் கூறுவதற்காக மாவை சேனாதி…

  13. முதலமைச்சர் வேட்பாளராக மணிவண்ணன்? By Kalmunai எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர சபையின் தற்போதைய மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன. வடக்கு மாகாணத்தில் மணிவண்ணனுக்கு அதிகரித்துவரும் ஆதரவு அலையின் அடிப்படையில் இந்த முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு பரிந்துரை இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது இது தொடர்பான உள்ளகப் பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்சியின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன எவ்வாறாயினும் கட்சிக்குள் எதிரும்…

  14. பாஸ் மகள் மீது வெறித்தனமான கள்ளக்காதல்: நாடு கடத்தப்படும் இந்திய வம்சாவளி என்ஜினியர். சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனது முதலாளியின் மகளை பின்தொடர்ந்த இந்திய வம்சாவளி என்ஜினியருக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் நாடு கடத்தப்பட உள்ளார். ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங்(33). கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள அவர் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரது மனைவி ஒரு டாக்டர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 14ம் தேத…

  15. முதலாவது உலக பழங்குடி விளையாட்டு விழா பழங்­குடி மக்­க­ளுக்­கான முத­லா­வது உலக பழங்­குடி விளை­யாட்டு விழா பிரே­ஸிலின் பால்மாஸ் நகரில் ஒக்­டோபர் 23 முதல் நவம்பர் முதலாம் திக­தி­வரை நடை­பெற்­றது. பிரே­ஸிலில் கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா நடை­பெ­று­வ­தற்கு சுமார் ஒரு வரு­டத்­துக்கு முன்னர் பழங்­கு­டி­க­ளுக்­கான இவ்­வி­ளை­யாட்டு விழா நடத்­தப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, ஆர்­ஜென்­டீனா, பிரே ஸில், கனடா, சிலி, கொலம்­பியா, கொங்கோ, ஈக்­கு­வடோர், எத்­தி­யோப்­பியா, பிரெஞ்ச் கயானா, மெக்­ஸிகோ, மொங்­கோ­லியா, குவாத்­த­மாலா, நியூ­ஸி­லாந்து, பனாமா, நிக்­க­ர­குவா, பெரு, பரா­குவே, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, உரு­குவே, வெனி­சூலா ஆகிய 23 நாடு­களைச் சேர்ந்த ச…

  16. வடக்கு ஆப்பிரிக்க நாடான பெனின் என்ற நாட்டில் ஒரு இளம்ஜோடி முதலிரவு அன்று ஒரே இரவில் 21 முறை செக்ஸ் உறவு வைத்த காரணத்தால் விவாகரத்து ஆகி பிரியும் நிலையில் உள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான பெனின் என்ற நாட்டில் இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. இங்குள்ள Kendall 16 வயது இளம்பெண்ணுக்கு 17 வயது Stowaway என்ற வாலிபனுடன் திருமணம் நடந்தது. திருமணத்தன்று பல கனவுகளுடன் முதலிரவு அறைக்கு சென்ற மணமகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணமகனுக்கு தீராத செக்ஸ் உணர்வு இருந்துள்ளது. ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, 21 முறை முதலிரவில் மணமகளுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளார். மணமகள் மறுத்த போதிலும் மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்ததால் அதிர்ச்சி…

    • 55 replies
    • 21.9k views
  17. முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார் குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. மேற்படி பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, அந்த குவைத் நபர், சவூதி அரேபிய பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார். முதலிரவின்போது படுக்கையில் என்ன செய்வது என்பது குறித்து தனது கணவருக்கு தெளிவில்லாமல் இருப்பதை அப்பெண் உணர்ந்து கொண்டாராம். அதனால் மனைவியான தன்னுடன் படுக்கையில…

  18. தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர். புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர். உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய…

  19. முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி - ரூ.1.80 லட்சம் சம்பளமாம் செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள பிரிட்டன் ஜோடி, தங்களது முதலிரவை வீடியோ எடுக்க ரூ.1.80 லட்சம் சம்பளம் அளிக்க தயார் என்ற அறிவிப்புடன் ஆள் தேடி வருகின்றது. லண்டன்: திருமணம் முடிந்த முதல் இரவு என்பது திருமண ஜோடியினர் மட்டும் இருக்கக் கூடிய அந்தரங்க நேரம் ஆகும். முதலிரவு மட்டுமல்ல எல்லா இரவுகளுமே தம்பதிக்கு அந்தரங்கமான …

  20. மும்பை: விமான பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் பைலட்டுகள், நடுவானில் வாய்ச்சண்டை போட்ட சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் முதலில் தரையிறங்குவது என்பது தொடர்பாக இந்த மோதல் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சண்டை நடந்துள்ளது. டெல்லியிலிருந்து இந்தூர் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்க மும்பை விமானக்கட்டுப்பாட்டு அறை அனுமதி கொடுத்தது. இந்த நிலையில் அதே நேரத்தில், ஹைதராபாத்-இந்தூர் இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானமும் தரையிறங்க அனுமதி கோரியது. ஆனால் டெல்லி விமானம் இறங்கிய பின்னர் நீங்கள் தரையிறங்குங்கள் என்று ஹைதராபாத் விமானத்திற்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் போனது. ஆனால் அதை ஹைதர…

  21. முதலைக்காக கணவரை விவாகரத்து செய்த ஆஸ்திரேலிய பெண்மணி வியாழக்கிழமை, ஆகஸ்ட் 19, 2010, 14:56[iST] மெல்போர்ன்: 'ஆத்துக்காரர்' சவுண்டாக குறட்டை விட்டாலே டிவோர்ஸ் கேட்பவர்கள் வெள்ளையர்கள். அப்படிப்பட்ட வம்சத்தில் வந்த ஒரு பெண்மணி, தான் ஆசை ஆசையாய் வளர்க்கும் முதலைகளை வெறுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக தனது கணவரையே டிவோர்ஸ் செய்து விட்டார். ஆஸ்திரேலியாவில்தான் இந்த அக்கப்போர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்தவர் விக்கி லோவிங். முதலைப் பிரியை. பிரியை என்று சொல்ல முடியாது, வெறியை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தஅளவுக்கு முதலை என்றால் இவருக்கு உயிர். இவர் வீட்டில் நாய்களை விட முதலைகள்தான் நிறைய. வீடு முழுக்க தொட்டிகளை வைத்து அதில் முதலைகளைப் போட்டு நிரப்பி வைத்துள…

  22. முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு 'கிச்சுகிச்சுமூட்டி' அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது. மீன்பிடிப்பதற்காக சென்ற 65 வயதான மீனவர் ஒருவரே முதலையின் வாயில் சிக்கிக்கொண்டுள்ளார். அவருடைய கால்களை முதலை கௌவிக்கொண்டது. உடனடியாக கைகளை முதலையின் வயிற்றுக்கு கீழே கொண்டுபோன அவர் முதலையின் வயிற்றில் கிச்சுகிச்சுமூட்டியுள்ளார். கூச்சமடைந்த முதலை வாயை திறந்தவுடன் அதன்பிடியிலிருந்து தான் தப்பித்து கொண்டதாகவும் இந்த முறைமை தொடர்பில் தான் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததாகவும் அந்த மீனவர் தெரிவித்துள்ளார். முதலையிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மந்திரம் செய்யப்பட்ட கற்களை அந்த களப்பிற்குள் போட்டுள்ளதாகவும் அந்த கற்கள…

    • 13 replies
    • 1.9k views
  23. தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்தி பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வியப்பூட்டும் ஒரு சோதனையை நேர்முகத்தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள காங்டான் மகாணத்தில் உள்ள காங்கோழு என்ற இடத்தில் சுகாதார பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் முதலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுகாதார பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. தனது நிறுவனத்தில் 9 விற்பனை பிரநிதியை பணியில் அமர்த்த திட்டமிட்ட அந்நிறுவனம், அதற்கான நேர்முகதேர்வு ஒன்றையும் நடத்தியது. இ…

    • 1 reply
    • 231 views
  24. By General 2013-01-22 11:10:50 அவுஸ்திரேலியாவில் முதலைகளுடன் அச்சமின்றிப் பழகும் 3 வயது பாலகன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். சார்ளி பார்க்கர் என்ற இச்சிறுவன் விக்டோரியா மாநிலத்திலுள்ள தனது தந்தை கிரெய்க்கால் நடத்தப்படும் வனவிலங்கு பூங்காவுக்கு விஜயம் செய்தவேளை 2.5 மீற்றர் நீளமான வட ஆபிரிக்க முதலையொன்றுடன் நீந்தி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளான். இச்சிறுவனின் தந்தை மிருகங்களை பராமரிப்பதில் 3 தலைமுறையாக ஈடுபட்டுவரும் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். http://www.virakesari.lk/article/interesting.php?vid=75

  25. புத்தளம், பாவத்தாமடு பகுதியில் சுமார் 10 அடி நீளமான முதலையை கொன்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை கைது செய்துள்ளனர். பாவத்தாமடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் கண்ணிப் பொறி வைத்து முதலையை கொன்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந் நபரை இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட முதலையானது சுமார் 100 கிலோகிராம் நிறைகொண்டது என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.