Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பொதுவாக நமது சொந்த ஊரில் நாம் படிக்க நினைக்கும் கல்வியை கற்கும் வாய்ப்பு கிடைக்காமல்போகும் நிலைமையில்தான் நாம் வேறு ஊருக்குபோக நினைப்போம். கல்விக்காக வெளியூர் செல்லும் மாணவர்கள் அவ்வப்போது அங்கேயே தனிவீடு எடுத்து தங்கிவிடுவதுண்டு. சொந்த ஊரைவிட்டு வெளியேறிய பின்னர், புது இடத்தில் நாம் கிட்டதட்ட அடிமையாகிப் போனதாய் உணருவோம். வீட்டு உரிமையாளர்கள் போடும் நிபந்தனைக்கெல்லாம் கட்டுப்படுவோம். ஜெர்மனியில் லியோனி முல்லர்(23) என்பவரின் பாட்டியின் வீடு, அவள் படிக்கும் டுபின்ஜென் நகர பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 530 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதனால், பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடிபுகுந்தார், லியோனி. வீட்டு உரிமையாளருடன் ஆறு மாதங்களுக்கு மு…

    • 0 replies
    • 343 views
  2. இது சாத்தியமா..? முடியுமா..? நடக்குமா..? இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மிகச் சமீபத்தில் ஒரு பெண்ணிற்கு பதினோறு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்துள்ளதாக இணையத்தில் விநோத செய்தி ஒன்று உலவுகிறது.. இது வதந்தி அல்லது பேத்து மாத்து வேலையாகவே இருக்க முடியும்... http://www.nairaland...c-862360.0.html http://www.zurmat.co...ds-all-at-once/ .

  3. வீட்டின் கூரையில் ஏறிய கார் அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஒரு தம்­ப­தி­யினர் தமது வீட்டின் கூரையில் காரொன்று நிற்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் அண்மையில் இடம்­பெற்­றது. தான் தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது கூரையில் சத்­த­மொன்று கேட்­ட­தா­கவும் வெளியே சென்று பார்த்­த­போது வீட்டின் கூரையில் காரொன்று இருப்­பதைக் கண்டு தான் வியப்­புற்­ற­தா­கவும் 83 வய­தான பெண்ணொருவர் தெரி­வித்­துள்ளார். மேற்­படி காரின் சாரதி சுக­வீ­ன­முற்­றதால் கட்­டுப்­பாட்டை இழந்­த­போது அக்கார், வீட்டின் கூரை மீது ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=13020#sthash.PpAGt59Z.dpuf

    • 1 reply
    • 457 views
  4. Started by nunavilan,

    காதல் மீட்டர் சியோல், பிப். 18: தென் கொரியாவில் காதலர்களின் மன உணர்வுகளை கணக்கிட்டு சொல்லும் சாதனத்தை செல்போன் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறதாம். . காதல் மீட்டர் போல செயல்படக் கூடிய இந்த சாதனத்தை பயன் படுத்தும் போது, மறுமுனையில் பேசுபவர்களின் உள்ள உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பது தெரிய வருமாம். பேசி முடித்த பிறகு மதிப்பெண் போடுவது போல, காதல் உணர்வு பற்றிய மதிப்பீடு எஸ்எம்எஸ் மூலம் வந்து சேருமாம். வீடியோ வசதியோடு இந்த காதல் மீட்டரை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளதாம். காதலன் அல்லது காதலி தங்கள் மீது எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள இது உதவுமாம். பேச்சை அலசி ஆராய பயன் படுத்தப்படும…

  5. மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்! மனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும். பெரும்பாலும் அவை சினிமா நடிகர், நடிகையரின் புகைப்படங்களாகவோ, அல்லது விலங்குகள், குழந்தைகள் சேட்டை செய்யும் புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ தான் இருக்கும். ஆனால் தற்போது வைரலாகியுள்ள புகைப்படம், மனிதநேயத்தையும், கணவன் - மனைவி இடையேயான காதலை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் விமானத்தில் நின்றபடி இருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு பெண் இருக்கையில் படுத்து உறங்குகிறார்.இந்த…

  6. காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்த காதலன்! இங்கிலாந்தில் இருக்கும் காதலியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து 12,000 மைல்கள் சைக்கிள் மிதித்து வந்துள்ளார் காதலன். இங்கிலாந்தின் ஹார்விச் பகுதியில் குடியிருக்கும் ஜிம்மி ஹெயில்வுட் என்பவர், ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். இங்கிலாந்தில் இருக்கும் தமது காதலியுடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் பொருட்டும், பண்டிகையை முன்னிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டும் ஹெயில்வுட் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து துவங்கும் இந்த சைக்கிள் பயணத்தின் இடையே, தொண்டு நிறுவனங்களுக்கான நிதியையும் …

  7. யார் இந்த ஹிஸ்புல்லா இவரின் 'கலாநிதி' பட்டம் உண்மைதானா?

    • 0 replies
    • 482 views
  8. மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்! மெக்ஸிகோ நாட்டின் ஓக்சகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும்,முதலையொன்றுக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. இந்த நிகழ்வு, ஓக்சகா மாநிலத்திலுள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரத்தில் நடைபெற்றது. அந்நகரின் மேயராக செயற்பட்டுவரும் டேனியல் குடியெரஸ் பென்யா என்பவரே “பிரின்சஸ் கேர்ல்” என அழைக்கப்படும் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் Chontal மற்றும் Huave எனப்படும் இரண்டு பழங்குடி சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படும் இத்திருமண நிகழ்வானது அப்பகுதி மக்கள் இயற்கை மீது வைத்திருக்கும் நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் விதமாகவும் அ…

  9. தாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் By General 2012-11-28 11:48:32 பெண்கள் அணியும் நவநாகரிக ஆடைகளுக்கான விற்பனையை ஊக்குவிக்க அந்த ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்து 75 வயது தாத்தா ஒருவர் வியப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்சொயு நகரைச் சேர்ந்த மடிககா எனச் செல்லமாக அழைக்கப்படும் லியு கியென்பிங்க் என்ற வயோதிபரே இவ்வாறு பெண்களின் ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்துள்ளார். அவரது பேத்தியான லு ரிங்கும் (24) அவரது நண்பிகளும் இணையத்தளம் மூலமாக தம்மால் நடத்தப்பட்டு வந்த நவநாகரிக ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்க, அவற்றை மொடல் அழகிகளுக்கு அணிவித்துப் புகைப்படம் …

  10. இரண்டு அடுக்கு கல்லறை . லண்டன், நவ. 16: பிரிட்டனில் இடபற்றாக்குறை யின் பாதிப்பு கடைசி இடத்தையும் விட்டு வைக்காததால் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனராம். . பிரிட்டனின் உள்ள பல நகரங்களில் இடுகாடுகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். அடுத்த 30 ஆண்டுகளில் இது மிகவும் மோசமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். எனவே, எதிர்கால இடபற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பழைய கல்லறைகளை தோண்டி அந்த இடத்தில் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க தீர்மானித்துள்ளனராம். அதாவது பழைய கல்லறை மிச்சங்களின் மீது புதிய கல்லறையை அமைக்க உள்ளனராம். ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கல்லறைகளை மட்டுமே இப்படி மாற்ற உள்ளனராம். malaisudar.com

  11. யாழில் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/யாழில்-கத்திக்-குத்தில்/

  12. 3,000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பில் டாஸ்மானியாவின் பேய்கள் மீண்டும் விடப்பட்டுள்ளன. இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்கு பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 26 பாலூட்டிகளை விடுவித்துள்ளனர். டாஸ்மானியாவின் பேய்கள் என்று அழைக்கப்படும் இந்த விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு விலங்கினம். இது எழுப்பும் அதீத ஒலிதான் இந்த விலங்கிற்கு இந்த பெயர் வந்ததற்கான காரணம். மேலும் இந்த விலங்கு, விலங்குகளின் சடலங்களை வெறித்தனமாக தேடிச் சென்று, கடித்து நொறுக்கிவிடும். தனது தாடைகளின் சக்தியை கொண்டு எலும்புகளை தூள்தூளாக நொறுக்கும் வல்லமை கொண்டது. இருப்பினும் இந்த விலங்கு மனிதகுலத்துக்கோ அல்லது விவசாயத்தி…

  13. 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்று குறித்த தாயாரை கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில், அவர் குழந்தையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த பெண்ணின் சகோதரன் குழந்தையை துன…

  14. டொரண்டோவில் உள்ள York Unviersity பகுதியில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு வலைவீச்சு. டொரண்டோவில் உள்ள York University’s Keele கேம்பஸ் பகுதியில் 18 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொரண்டோவில் உள்ள York University’s Keele கேம்பஸ் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒரு 18 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணின் முன்பு பாட்டு பாடி டான்ஸ் ஆடி அவரிடம் அவரை தொட்டு தொட்டு பேசி, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், சத்தம் போட்டு கத்தியதும் ஆட்கள் …

  15. யார்கிட்ட உன் வேலையை காட்டுற!!!

    • 0 replies
    • 292 views
  16. 'சாண் பிசகினால் சட்னி' என் பதே ஒற்றன் வாழ்க்கை. மன்னர் காலத்தில் சாளரம் வழி ஒட்டுக்கேட்ட இவர்கள், ஹைடெக் காலத்தில் டெக் னாலஜியில் பின்னுகிறார்கள். ரிச்சர்ட் சோர்ஜ்: சோவியத் யூனியனின் அல்டிமேட் உளவாளி இவர். இரண்டாம் உலகப் போர் காலத்தின் தலைவன்தான் கிங். இவருடைய சொந்தக்காரர் ஒருவர் கார்ல் மார்க்ஸின் நெருங்கிய நண்பர். அதனால் மார்க்ஸ் பற்றி ஐயாவுக்கு நிறையத் தெரியும். பத்திரிகையாளர் போர்வையில் இவர் நடத்திய தில்லாலங்கடிகள் ரஷ்யாவுக்குப் பக்கபலம். ஜெர்மனியிலும், ஜப்பானிலும் ஒற்றனாகப் பட்டையைக் கிளப்பினார். ஆனால், ஜப்பானுக்கு இவர் மீது சந்தேகம் வந்து பொறிவைத்தது. மர்ம ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணித்து 1941-ல் கைது செய்யப்பட்டார்.ஆனால், அவர்களால் எதையும் நிரூபிக்க முடிய வில்லை. ர…

  17. நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சாமர்த்தியமாக திருடிய நாய் ஒன்று சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியால் கைது செய்யப் பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ளது கிளிண்டன் சூப்பர் மார்க்கெட். சமீபகாலமாக அங்கு சில நாய் உணவுப் பொருட்கள் மாயமாகி வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதித்துப் பார்த்துள்ளனர். கேமராவில் பதிவாகியிருந்தக் காட்சிகளைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சூப்பர் மார்க்கெட்டு வாசலில் நிற்கும் வளர்ப்பு நாய் ஒன்று கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்…

  18. ஒவ்வொரு சிகரெட்டிலும்... அபாய எச்சரிக்கையை அச்சிட, கனேடிய அரசாங்கம் முடிவு! ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைப்பிடிப்பதன் தீங்கு குறித்த அபாய எச்சரிக்கையை அச்சிடுவதைக் கட்டாயமாக்க கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிகரெட் பெட்டிகள் மீது புகைப்பதால் உடல்நிலத்துக்கு ஏற்படும் அபாயம் குறித்த எச்சரிக்கையை அச்சிடுவது 20 ஆண்டுகளுக்கு கனடாவில் கட்டாயமாக்கபட்ட போதும், தற்போது உலகிலேயே முதல்முறையாக இவ்வாறானதொரு நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது. இது குறித்து மனநலத் துறை அமைச்சர் கரோலின் பெனட் கூறுகையில், ‘சிகரெட் பெட்டிகள் மீது அபாய எச்சரிக்கை பொறிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய தாக்கம் இத்தனை ஆண்டுகளில் மறைந்துபோயிருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், ஒவ்வொரு சிகர…

  19. இந்திய வெளிவிவகார அமைச்சு யாருக்கு? சுஷ்மா ஸ்வராஜ் வெளிவிவகார அமைச்சு கேட்பதாக செய்தி உலாவருகிறது. ஆனால் அவருக்கு அத்துறையின் அமைச்சுப் பதவி கொடுக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. News: Moments after BJP's parliamentary meet was concluded, Narendra Modi urged Rajnath Singh to accompany him to Varanasi. The BJP President had other work lined up in the day. Nevertheless, he cancelled all plans and decided to go with Modi. More than a symbolic gesture - that of having his party's president by his side while he performs the widely-watched Ganga aarti - Modi and Rajnath decided to do the Varanasi trip together to discuss the look of the Cabinet, say sources…

  20. அபூர்வ வழக்கு: ரயில்வேயுடன் 20 ரூபாய்க்காக 22 ஆண்டு சட்டப் போராட்டம் நடத்தியவருக்கு கிடைத்தது என்ன தெரியுமா? செரிலன் மொல்லன் பிபிசி நியூஸ், மும்பை 9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சதுர்வேதி, இந்த வழக்கு தொடர்பான 120 நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுத்துள்ளார் ரயில் டிக்கெட்டுக்கு 20 ரூபாய் அதிகமாக வசூலித்ததற்காக 22 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவருக்கு என்ன கிடைத்தது தெரியுமா? 1999ஆம் ஆண்டில், துங்கநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் உள்ள மதுர…

  21. பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கி 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்தவர் மரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெஹ்ரான் கரிமி நாசேரி 51 நிமிடங்களுக்கு முன்னர் 18 ஆண்டுகள் பாரிஸ் விமானநிலையத்தில் வசித்த இரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி மரணமடைந்தார். பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கிய நிலையில், கடந்த 1988ஆம் ஆண்டு ரோஸி சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் ஒரு சிறிய பகுதியை மெஹ்ரான் கரிமி நாசேரி தனது இல்லமாக்கினார். 2004 ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘தி டெர்மினல்’ திரைப்படம் இவருடைய அனுபவத்தை மையமாக வைத்து உருவானது. மெஹ்ரா…

  22. பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்: யார் பொறுப்பு? கேரளாவில் 6 ஆண்டுகளாக விடை தெரியாத மர்மம் பட மூலாதாரம்,KK HARSHINA 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்தது யார் என்ற கேள்வி கடந்த 6 ஆண்டுகளாக விடை தெரியாமல் நீடிக்கிறது. இதற்குக் காரணமான மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பெண் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளார். கே.கே.ஹர்ஷினா என்ற 31 வயதான அந்த பெண், தாங்க முடியாத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஸ்கேன் பரிசோதனை செய்த போதுதான், அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் …

  23. 92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக் Published By: SETHU 21 MAR, 2023 | 11:03 AM பிரபல ஊடகத்துறை அதிபர் ரூபர்ட் முர்டோக் 92 வயதில் 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளார். அவுஸ்திரேலியரான ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமாக பல்வேறு நாடுகளில் பத்திரிகைள், இலத்திரனியல் ஊடகங்கள் உள்ளன. அவரின் செல்வ மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது. தற்போது 92 வயதான அவர், 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது சொந்தப் பத்திரிகைகளில் ஒன்றான நியூ யோர்க் போஸ்ட்டுக்கு நேற்று அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தள்ளார். …

  24. காந்தி பெயரில் அவரது படத்துடன் பீயர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது மெட்ரோபொலிட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.