Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில் சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் போது அனுப்பப்பட்ட போஸ்ட் கார்ட் தற்போது தான் உரியவரிடம் சென்று சேர்ந்துள்ளது. கடந்த 1943ம் வருடம் ஜூலை 4ம் தேதி இலினாய்சின் ராக்போர்டு பகுதியில் எல்மிரா பகுதியில் உள்ள பாவுலின் மற்றும் தெரசா என்ற சகோதரிகளுக்கு அனுப்பப்பட்டது. இவர்களின் சகோதரன் ஜார்ஜ், இரண்டாம் உலகப்போரின் போது, ராக்போர்டு ராணுவ மருத்துவ முகாமில் பணியாற்றி வந்தார். அப்போது இந்த போஸ்ட் கார்ட் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரம் வந்த இந்த போஸ்ட் கார்டில், குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தற்போது, வேறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். http://www.seithy.co...&language=tamil

  2. கடந்த பல ஆண்டுகளாகவே, ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 0.5 சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு, 10 ஆயிரம் டொலர் வழங்கும் திட்டத்தையும் ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் குழந்தை பிறப்பு விகிதத்தில் போதுமான முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் தற்போது 143 மில்லியனாக இருக்கும் ரஷ்யாவின் மக்கள் தொகை 2050-ம் ஆண்டில் 111 மில்லியனாக குறைந்து விடும் என ரஷ்ய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பணிபுரியும் வயதுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரு…

  3. நியூயார்க் : இரண்டாவது குழந்தை பெறுவதற்காக கணவன் கருத்தரித்துள்ளான். என்னது இது என்று குழம்ப வேண்டாம். அமெரிக்காவில், பெண்ணாய் பிறந்து, ஆணாய் மாறிய இவருக்கு இன்னும் ஏழு மாதத்தில் "குவா... குவா' பிறக்கப்போகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் தாமஸ் பீட்டில்; பிறப்பில் பெண்ணாய் பிறந்தார்; ஆணாய் மாற விரும்பிய இவர் மார்பகத்தை அப்புறப்படுத்தி, முகம், உடல் அமைப்பை ஆணாய் மாற்றிக்கொண்டார். ஆனால், பெண்ணுறுப்பை அப்புறப்படுத்தவில்லை. "எதிர்காலத்தில் குழந்தை பெற வேண்டும் என்று விரும்பினால், அதற்கு தேவைப்படுமே என்று கருப்பையையும், பெண்ணுறுப்பையையும் அப்புறப்படுத்திக்கொள்ளவில்

  4. இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை..! ஒரு வயதுடைய குழந்தை ஒன்று ஜன்னல் வழியாக வெளியேற முயற்சிக்கிறது. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். நடந்தது என்ன? காண்பதற்கு காணொளியை அழுத்துங்கள். குறிப்பு: மன உறுதி குறைந்தவர்கள் தயவு செய்து காணொளியைப் பார்க்க வேண்டாம். Spoiler சுபம்

  5. இரண்டு அடுக்கு கல்லறை . லண்டன், நவ. 16: பிரிட்டனில் இடபற்றாக்குறை யின் பாதிப்பு கடைசி இடத்தையும் விட்டு வைக்காததால் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனராம். . பிரிட்டனின் உள்ள பல நகரங்களில் இடுகாடுகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். அடுத்த 30 ஆண்டுகளில் இது மிகவும் மோசமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். எனவே, எதிர்கால இடபற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பழைய கல்லறைகளை தோண்டி அந்த இடத்தில் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க தீர்மானித்துள்ளனராம். அதாவது பழைய கல்லறை மிச்சங்களின் மீது புதிய கல்லறையை அமைக்க உள்ளனராம். ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கல்லறைகளை மட்டுமே இப்படி மாற்ற உள்ளனராம். malaisudar.com

  6. இரண்டு உக்ரேனிய மாலுமிகள் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த உக்ரேனிய கடற்படையினர் இருவர் இலங்கை கடற்பரப்பில் வைத்து உயிரிழந்ததையடுத்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கப்பல் தற்போது காலி துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தமை தொடர்பான விடயங்கள் காலி நீதவானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலங்களை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 41 மற்றும் 53 வயதுடைய உக்…

  7. இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் பீகாரைச் சேர்ந்த பெண்ணொருவர். 50 மில்லியன் பெண்களில் யாராவது ஒருவருக்கு இரண்டு கருப்பைகள் இருக்கும் என்றும் அப்படியிருக்கும் இரு கருப்பைகளிலும் உருவாகி பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் குறையுடனேயே பிறக்கும் என்றும் குறிப்பிடப்படும் நிலையில் மேற்படி இரு குழந்தைகளும் நலமாக பிறந்ததோடு தாயும் நலமாக உள்ளார் என்பதால் இது மருத்துவ உலகின் பெரும் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில், பாட்னாவின் வட பகுதியிலுள்ள மதுராபூர் சாகியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரிங்கு தேவி (வயது 28) சமீபத்தில் சிசேரியன் முறையில் ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இவருக்கு இயற்கையிலேயே இரு கருப்பை…

  8. நான் வசிக்கும் நாட்டில் இந்த காணொலியை யுடியுப் ழூலம் பார்ப்பதற்கு தடை. ஆகவே காணொலியை பார்க்க தொடுப்பின் மேல் கிளிக் செய்யவும். http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1296045483&archive=&start_from=&ucat=1& நாய்களுக்கு பயிற்சி கொடுக்கின்றமைக்கு பிரத்தியேக வழி முறைகள் பல இருக்கின்றன. ஆனால் மலேசிய இளைஞன் ஒருவர் சின்னஞ் சிறிய நாய்க் குட்டி ஒன்றை பயிற்சி வழங்குதல் என்கிற போர்வையில் மனிதாபிமானம் அற்ற முறையில் கொடுமைப்படுத்தி உள்ளார். நாய்க் குட்டி இரண்டு கால்களில் நிற்க வேண்டும் என்று இவர் பிடிவாதமாக உள்ளார்.ஆனால் நாய்க் குட்டியால் முடியாமல் உள்ளது. நாய்க் குட்டி தவறு இழைக்கும்போது எல்லாம் அதனைத் திட்டுகின்றார். அடிக்கின…

  9. இரண்டு சில்லில் தரையிறங்க முற்பட்ட விமானம் முதல் முயற்சி பயனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சி கடைசி வினாடியில் .... Aircraft's front wheels failed to deploy on 1st attempt http://www.cbc.ca/news/canada/montreal/story/2011/03/29/quebec-jet-landing-youtube.html

    • 0 replies
    • 640 views
  10. களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயது சிறுமியை சுமார் 30 நிமிட பிரயத்தனத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்னர். களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். பாடசாலையின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாகவும், களுத்துறை மாநகர தீயணைப்புத் துறையின் அவசர ஆம்புலன்ஸ் வந்து ஸ்பேடர் என்ற அதிநவீன கருவியின் உதவியுடன் சிறுமியை காப்பாற்றியதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/268308

  11. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்…

  12. 20 SEP, 2024 | 11:48 AM இரண்டு மணிநேரத்திற்கு மேல் 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர். தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் பிரகான் என்ற மாநிலத்தில் தனது வீட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டதாக அரோம் அருண்ரோஜ் என்ற 64 வயது பெண் தெரிவித்துள்ளார். ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்தபோது ஏதோ எனது காலில் தீண்டியது போல உணர்;ந்தேன் திரும்பிப்பார்த்தபோது அது பாம்பு என அவர் தெரிவித்துள்ளார். நான் அதனை எதிர்த்து போரட முயன்றேன்,உதவிக்காக கூக்குரலிட்டேன் ஆனால் எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். …

  13. சால்மியா : ஊனமுற்றவர் போல் நடித்து இரு நாட்களில் இரண்டரை இலட்சம் பிச்சையெடுத்தவர் குவைத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது. எகிப்திலிருந்து பிச்சை எடுப்பதற்காக குவைத்திற்கு விசிட் விசாவில் வருகை தந்தவர் சால்மியாவில் ஒரு வங்கியின் முன் ஊனமுற்றவர் போல் நடித்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவரின் செயல்பாடுகளில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவர் ஏமாற்றுவதை கண்டுபிடித்து கைது செய்தனர். இரண்டு நாட்களில் மாத்திரம் அந்த நபர் ஆயிரத்து முன்னூற்று ஐம்பது குவைத் தீனார்களுக்கு மேல் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை இலட்சம் பணத்தை அவரிடமிருந்து கைப்பற்றிய காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்…

  14. ரஷ்யாவில் உள்ள ஒரு திடீர் காதலர் தன்னுடைய காதலியின் வருகைக்காக ஒரு மாதமாக ஒரே பஸ்நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கின்றார். ரஷ்யாவின் Irkutsk, என்ற நகரத்தை சேர்ந்த Besotted Vitaly என்ற 33 வயது நபர், பஸ்நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு பெண்ணை கண்டார்.இரண்டு நிமிடங்களே பார்த்த Besotted Vitaly, அந்த பெண்ணின் காதல் பார்வையில் வீழ்ந்தார். அந்த நேரம் பார்த்து பேருந்து வந்துவிடவே, அடுத்த நாள் காலை 8 மணிக்கு இதே பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுமாறு அவரிடம் அந்த பெண் கூறிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் மிகவும் பொறுப்பாக காலை 8 மணிக்கு வந்த Besotted Vitaly, தன்னுடைய திடீர்க்காதலியை காணாமல் திடுக்கிட்டார். அதுமுதல் வீட்டுக்கே போகாமல் கடந்த இரண்டு மாதங்களாக அதே பஸ…

    • 2 replies
    • 549 views
  15. 1969இல் நாகேஸ் நடித்த உலகம் இவ்வளவுதான் என்ற திரைப்படம் வெளி வந்திருந்தது. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலில், “ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே நான் இறங்கி நீச்சல் அடிப்பேன் நாடெல்லாம் பெண்ணானால் நடுவிலே நான் இருந்து பார்த்து இரசிப்பேன்” என்ற வரிகள் இருக்கும் இந்த வரிகளை என் நினைவுக்கு கொண்டு வந்தது, போர்த்துக்கலில் நடந்த சம்பவம் ஒன்று. போர்த்துக்கலில் உள்ள ஒரு கிராமம்தான் (São Lourenço) செள லோரென்சோ. ஆங்கிலத்தில் சொல்வதானால் St. Lawrence. கடந்த வார இறுதியில் இந்தக் கிராமத்தில் சிவப்பு வைன் ஆறாக ஓடி இருக்கிறது. அந்தச் சிறிய கிராமத்தின் வீதிகளில் ஆறாக ஓடிய சிவப்பு வைன்களின் அளவு 2.2 மில்லியன் லீற்றர்கள். வைன் தயாரிக்கு…

  16. இரத்ததானம் வழங்கிய யாழ் டோனி ரசிகர் மன்றம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்தநாளான இன்று (07) யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தினர் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியுள்ளனர். அத்துடன் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கி வைத்தனர். https://newuthayan.com/இரத்ததானம்-வழங்கிய-யாழ்/

  17. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J-tYpswVEiA Elakkia Darmaraj இரத்தம் கொதிக்கிறது..., MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்! நம் தலைவர் பிரபாகரனின் தவறான முடிவுகளால் சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்.... கடைசி வரை அமைதிக்காக தவம் கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன் கொன்றார்... படம் முழுக்க தமிழ் இனத் துரோகம்!!! ஆகத்து 23 ஆம் தேதி எங்கெல்லாம் முடியுமோ.. அங்கெல்லாம் படத்தை வெளியிடு! நாங்களும் வெளியிடுறோம், தெருவுக்கு தெரு... மேடை போடுறோம்! ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள .. காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்? சாமியார்கள் யார்?யார்? அதிகாரிகள் யார்?யார்? மாநில ஆளுநர்கள் யார்?யார்? உலக நாடுகள் யார்?யார்? மானமுள்ள மாணவத் தலைமுறை…

  18. உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறுவதாகவும், தன்னை கடித்துக் கொல்ல பல முறை முயற்சித்ததாகவும் முறைப்பாடு அளித்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவரது முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், சமதான் திவாஸ், அதாவது பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, வழக்கமாக மின்சாரம், சாலைகள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீர…

  19. இரவில் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்க சூப்பர் பிளான் போட்ட உ.பி. அரசு ! ஐடியாவை கண்டு அசந்து போன மக்கள் ! பொதுவாக இரவு நேரங்களில், கார், பைக், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவது இல்லை. இரவு நேர பேருந்துகள், மற்றும் சொந்த பயணங்களை மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே பயணம் செய்வார்கள். அதுவும் இரவு நேரங்களில் டிராபிக் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், 100 கிலோ மீட்டருக்கு குறைவாக வாகனங்கள் செல்வதில்லை. இப்படி செல்லும் போது, அடிக்கடி... நாய்கள் மற்றும் மாடுகள் விபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக மாடுகளால் ஏகப்பட்ட விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில், இது போல் நடு ரோடுகளில் அலைந்து கொண்டிருக்கும் மாட…

  20. இரவில் வானில் தோன்றிய மர்ம தீக்கோளம்: பீதியில் உறைந்த பொது மக்கள் [ கேரளாவில் மீண்டும் வானில் தோன்றிய மர்ம தீக்கோளத்தால் பொது மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். கேரளாவில் அடிக்கடி வானில் தீக்கோளங்கள் தோன்றும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற இடங்களில் இதுபோல வானில் தீக்கோளங்கள் தோன்றின. மேலும் சில இடங்களில் இந்த தீக்கோளங்கள் தரையில் விழுந்து சிதறியதாகவும் கூறப்படுகிறது. இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இவை எரிகற்களால் ஏற்பட்ட தீக்கோளம் என்று தெளிவு படுத்தினார்கள். இந்நிலையில் எர்ணாகுளம் அருகே திருப்புனித்துரா என்ற இடத்தில் இரவு 9.30 மணி அளவில் மீண்டும் இதுபோன்ற தீக்கோ…

  21. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஆலன். அவர் மனைவி பியானோ. இவர்கள் இருவரும் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை தாம்பத்திய உறவுகொள்வதற்கு அதிகாரிகள் தடை விதித்து இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி தன் ஆசிரியரிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை அந்த தம்பதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்து உள்ளது. 50 வயதான ஆலன் கூறுகையில், இந்த தடை முட்டாள்தனமாக இருக்கிறது. நானும், என் மனைவியும் நோயாளிகள். நாங்கள் இரவு முழுவதும் தாம்பத்திய உறவு கொள்வது கிடையாது. அதிகபட்சம் 5 நிமிடத்துக்கு மேல் நாங்கள் ஒன்றாக இருப்பது கூட கிடையாது. அந்த நேரத்தில் நாங்கள் இரைந்து சத்தம் போடுவது கிடையாது. அப்படி இருக்கும்போது அந்த சிறுமிக்கு இது எப்படி …

  22. (எஸ்.கே) இரவு நேரத்தில் விகாரையில் தங்கி பகல் நேரத்தில் 15 வயது பாடசாலை மாணவியுடன் காதல் சுகம் அனுபவிப்பதாக கூறப்படும் இளம் பௌத்த பிக்கு ஒருவரை மிரிஹான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பிக்கு நுகேகொட பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ள இப்பிக்கு இரவு நேரத்தில் விகாரையில் தங்கியிருப்பதுடன் பகல் வேளையில் பல்வேறு வகையான உடைகளை அணிந்து மாணவி சந்தித்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 13ஆம் திகதி மாலை இந்த பிக்கு மாணவியை சந்தித்துள்ளதாகவும் பின்னர் அவர…

  23. இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி! வாஷிங்டன்: மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிரு…

  24. இரா.சாணக்கியன், நிதி அமைச்சர்?? – மட்டு நகரில் பதாகை ! கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பதாகை தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275728

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.