Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காத்தான்குடியில் இளைஞர் ஒருவர் ஒரு மணித்தியாலயத்தில் ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரமொன்றை கண்டு பிடித்து தயாரித்துள்ளார். காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா வீதியைச் சேர்ந்த நுஹ்மான் முகம்மது சிறாஜ் (வயது 25) எனும் இளைஞனே இவ்வாறு குறித்த இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார். மின்சாரத்தில் இயங்கும் வகையில் கண்டுபிடித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணித்தியாலயத்திற்கு 1200 தொடக்கம் 1500 வரையிலான இடியப்பங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க முடியும். இந்த இயந்திரத்தை தயாரிப்பதற்கு ஆறு மாத காலம் பிடித்துள்ளதுடன் 4 இலட்சம் ரூபா செலவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ஒரே நேரத்தில் அதிகளவான இடியப்பங்…

  2. நீங்கள் சாப்பிடுவது சீனாவில் இருந்து வரும் பிளாஸ்டிக் அரிசியா? - செக் செய்வது எப்படி? மேகியை விடுங்க பாஸ். நாம் 3 வேளையும் உட்கொள்கிற உணவான அரிசியிலும் கைவைத்துவிட்டார்கள். அதுவும் எப்படி...? சீனாவில் ‘பிளாஸ்டிக் அரிசி’ கலப்படம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சிய வழக்கறிஞர் சுக்ரிவா துபே டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகள், வர்த்தகர் தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரிசியை விற்பனை செய்கிறார்களா என்று ரெய்டு நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.…

  3. [size=4]இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவுக்கு போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்று தந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். இவர் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஆகவும் பதவி வகித்தார்.[/size] [size=4]இவர் கடந்த 223 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன்னைப் பற்றிய குறிப்புகளையும், அதனுடன் அமெரிக்க அரசியலமைப்பு சட்டங்கள், மனித உரிமைகள் சட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இது அமெரிக்க வரலாற்று பெட்டகம் என வர்ணிக்கப்படுகிறது.[/size] [size=4]வரலாற்று சிறப்புமிக்க இந்த புத்தகம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. அதை 2 நிறுவனங்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் மவுண்ட் வெர்னோள் லேடிஸ் அசோசியேசன் என்ற நிறுவனம் வது 98 லட்சத்து …

  4. அரிவாள் என்றாலே தமிழ் சினிமாவின் உபயத்தால் நமக்கு நினைவிற்கு வருவது மதுரைதான். இப்பொழுது அதே மதுரைக்கார்ரகள், அரிவாளை வைத்து ஒரு சாதனை படைத்துள்ளனர். ஆம்... 33 அடி நீளமும், 6 அடி அகலம் கொண்ட, 7 அடி நீளமுள்ள கைப்பிடியுடன் 800 கிலோ எடை கொண்ட பிரமாண்ட அரிவாளை தயாரித்துள்ளனர். மதுரை சுற்றுவட்டாரத்தில், கோயிலுக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, மதுரையில் இருந்து சதுரகிரி செல்லும் வழியில் டி.கல்லுபட்டியில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலுக்கு காணிக்கையாக வழங்க இந்த அரிவாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த கோயிலை உருவாக்கி, நிர்வகித்து வரும் கணேசமூர்த்தி மௌன அடிகளார் இது குறித்து கூறும்போது, ''இந்த கோயிலை நான் உருவாக்கி 19 ஆண்டுகள் ஆகின்றது. இந்த 19 ஆ…

  5. ஆண் குழந்தைக்கு தாயானார் ஹிருணிக்கா பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இதனை அவரது கணவர் ஹிரன் யற்றோவிற்ற தனது முகப்புத்தகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் " நேற்றைய தினத்திலிருந்து நாமிருவரும் அழகிய ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளோம். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தற்போது வாழ்க்கை மிகவும் இனிமையாகவுள்ளது" என தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/22752 இந்த செய்தியை மருந்தங்கேணி பார்த்து ஏதும் நடந்தால் நான் பொறுப்பு அல்ல

  6. இப்படியும் காரை park பண்ணலாம் https://www.facebook.com/video/video.php?v=546564542143824

  7. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீடுகளுக்குள் திரண்டு நிற்கும் மேகங்களின் கண்காட்சி, பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. உயரமான மலைப் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குள்ளேயே மேகங்கள் திரண்டு நிற்கும்போது எடுக்கப்பட்ட அரியப் புகைப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காண்பதற்கரிய அந்த காட்சிகளை பதிவு செய்து எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படங்கள் கண்காட்சி வருபவர்களை வியக்க வைக்கிறது. http://www.puthiyaulakam.com/2013/01/clouds-in-the-houses-of-the-exhibition-in-london.html

  8. மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழப்பு! மினுவாங்கொடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தந்தை மற்றும் இரண்டு மகன்களே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை வைத்தியசா…

  9. இணையத்தளத்தில் SEX என்ற வார்த்தையை அதிகமாக தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது. இதன்படி 2011, 2012, 2013, மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கூகுல் இணையத்தளத்தில் SEX சொல்லை அதிகமான தேடிய நாடு இலங்கையாகும். இலங்கையின் மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இந்த SEX என்ற சொல் கூகுலில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. இதேவேளை இந்த பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136092--sex-.html

  10. ********** மோசடி பல வழி. மக்களே அவதானமாக இருங்கள். எனக்கு அண்மையில் ஒரு பெண் அமேசான் prime இல் இருந்து கால் பண்ணுவதாகவும் யாரோ ஐபோன் என் அக்கௌன்ட் இருந்து ஆர்டர் பண்ணி இருப்பதாகவும் உறுதி படுத்த கால் பண்ணுவதாக சொன்னார். நான் ஆர்டர் பண்ணவில்லை என்றதும் யாரோ என் கம்ப்யூட்டரை ஹக் பண்ணி விட்டார்கள் தான் ரிமோட் connect பண்ணி security setting செக் பண்ணவேண்டும் என்று என்றாள். மோசடி என்று தெரிந்து துண்டித்து பண்ணிவிட்டன்.இவர்களிடம் பொதுவாக வயோதிபர்கள்தான் பலியாகிறார்கள். கீழே இருக்கும் வெப்சைட் scammers பற்றிய விபரங்களை பார்க்கலாம். https://scammer.info/c/scams/5 பல youtubers இவர்களின் மோசடிகளை புட்டு புட்டு வைக்கிறார்கள். இவர்களும் திருந்றது மாதிரி இல்லை. …

  11. நித்யானந்தாவை விருந்துக்கு அழைத்த பிரித்தானிய எம்.பி.க்கள் : ஊடக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:11 AM பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை பிரித்தானியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு - மைசூர் வீதியில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில் நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா தியான பீடம் என்றபெயரில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இவர் மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பின், பாலியல் வழக்கில் சி…

  12. மனிதனின் உடலுக்குள் இருந்து 100 ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவிலுள்ள 46 வயதையுடைய Liu Lijian என்பவரினுடைய உடற்பாகங்களில 100க்கும் அதிகமான ஊசிகள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் தனக்கு எப்போதும் தாங்க முடியாத வலி உடற்பாகங்களில் ஏற்படுவதாக கூறியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின் அவரது தலையைத் தவிர்த்து ஏனைய பாகங்களில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சிறுவயதில் ஊசிகளை வைத்து விளையாடும் பழக்கமுள்ளவர் எனவும் சில வேளைகளில் விளையாட்டு விளையாட்டாக அவற்றை விழுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகின்றது. ஆனாலும் குறிப்பிட்ட ந…

  13. டெல்லி: அமெரிக்கா அதிபர் ஒபாமாவை வரவேற்க காவி துண்டுடன் போன பிரதமர் மோடி மாலையிலும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையைவிட கடந்த 2 நாட்களாக பிரதமர் மோடி அணிந்து வரும் உடைகள் பற்றிதான் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. ஒபாமாவை வரவேற்க விமான நிலையத்துக்கு போன பிரதமர் மோடி காவி சால்வை அணிந்து அசத்தினார். பின்னர் மாலையில் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்து வர்த்தக அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை பற்றி பேசினார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி மெல்லிய கோடு போல தோற்றமளிக்கும் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இப்போது இணைய குசும்பர்கள் இந்த படத்தை பெரிதாக்கிப் பார்த்து 'பெரிய' விஷயமாக்கிவிட்டனர். ஆமாம் மோடியின் சட்டையில் ப…

  14. ஆல்கஹாலில் ஒன்றான வோட்கா குடிப்பதற்கு மட்டும் தான் என்று நினைத்தால், அதை இப்போது மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆல்கஹால் குடிப்பதற்கு மட்டுமின்றி, மற்ற பல நன்மைகளையும் தருகிறது. அத்தகைய நன்மைகளைப் பற்றி தெரிந்தால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில் வோட்காடிவ வைத்து நிறைய பொருட்களை சுத்தப்படுத்தலாம். அதிலும் வோட்கா சுத்தப்படுத்த மட்டுமின்றி, டாக்சிக் கிளீனராகவும் பயன்படுகிறது. சரி, இப்போது அந்த வோட்காவை வைத்து எந்த பொருட்களை எல்லாம் சுத்தப்படுத்தலாம், வேறு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போமா!!! * துணிகளில் உள்ள கடினமான கறைகளைப் போக்கி, துணிகளை பொலிவோடு வைப்பதற்கு வோட்கா பயன்படுகிறது. குறிப்பாக சேறு, உணவு மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு பெரிதும் உதவிய…

  15. பிரான்ஸின் கிராமப் பகுதியொன்றில் சாத்தானுக்கான மதச் சடங்கொன்றில் அநேக செம்மறி ஆடுகளும் குதிரையொன்றும் பாலியல் துஷ்பிரயோகத்து­க்குட்ப­டுத்தப்பட்டு பலி கொடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து­வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் தென்மேற்கேயுள்ள பெர்டிக்னன் நகருக்கு அண்மையில் கொடூரமான முறையில் இறந்துகிடந்த செம்மறி ஆடுகளை அவ்வழியாக சென்ற பாதசாரிகள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அவற்றை பரிசோதனைக்குட்படுத்திய போது, அவை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்ப­டுத்தப்ப­ட்ட பின்னர் கத்தியால் குத்தப்பட்டும், எரிக்கப்பட்டும் கழுத்து நெரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அத்துடன் அவற்றின் ரோமங்கள் வெட்டப்பட்டு, அவயவங்கள் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் மீது கல்…

  16. [size=1] [size=4]உலகின் அதி உயரமான நாய் - 7 அடி 4 அங்குலங்கள் [/size][/size] [size=1] [/size] [size=4] [size=5]The 3-year-old measures 44 inches from foot to shoulder.[/size][/size][size=4] [size=5]Standing on his hind legs, Zeus stretches to 7-foot-4 and towers over his owner, Denise Doorlag. Zeus is just an inch taller than the previous record-holder, Giant George.[/size][/size][size=4] [size=5]Zeus weighs 155 pounds and eats around 12 cups of food a day. That’s equivalent to one 30-pound bag of food.[/size][/size] http://www.thestar.com/news/world/article/1256136--world-s-tallest-dog-stands-7-foot-4

    • 3 replies
    • 1.2k views
  17. வெட்டிய தலைமுடியுடன் பொலிஸ் நிலையம் சென்ற பெண் : யாழில் பரபரப்பு! குடும்பத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது தலைமுடியினைக் கத்தரித்த சகோதரிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தனது தங்கச் சங்கிலியை ஏமாற்றிக் களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார். இதனையடுத்தே தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவர், தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையி…

  18. கான்பெர்ரா: ஆஸ்திரேலிய நாட்டின், புதிய தென் வேல்ஸ் பகுதியில் டாப் லோடர் இருக்கும் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்டு மூன்று மணி நேரம் தத்தளித்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றியுள்ளனர். இதனை தீயணைப்புத் துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இதுவரை தீயணைப்புத் துறை செய்திராத வகையில், முதல்முறையாக வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட வாலிபரை காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஷிங் மெஷினின் வெளிப்பகுதியை முற்றிலுமாக நீக்கிவிட்டு, பின்னர் அதன் டிரம்மை உடைத்தெடுத்து, அந்த வாலிபரைக் காப்பாற்றியுள்ளனர். வாஷிங் மெஷின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அந்த வாலிபர் காப்பாற்றப்பட்டார். வாஷிங் மெஷினை விட்டு வெளியே வந்ததும்…

  19. 60 நாய்களை பலாத்காரம் செய்தவருக்கு 249 ஆண்டுகள் சிறை. நாய்களை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு 249 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீரியல் கொலை சம்பவத்தை விடவும் நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட ஆடம் பிரிட்டன் என்பவர் ஆஸ்திரேலியாவில் விலங்கியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். 52 வயதாகும் இவரது வீடு டார்வின் பகுதியில் அமைந்துள்ளது. விலங்கியல் நிபுணர் என்பதால் நாய்களிடம் நெருங்கி பழகிய அவர், சில நாய்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்து அவற்றிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நாய்களை பலாத்காரம் செய்த அவர், பின்னர் அவற…

  20. பானைக்குள் தலையைவிட்டு மாட்டிக்கொண்ட சிறுத்தை AP பீதியடைந்து ஊருக்குள்ளேயே சுற்றியலைந்த அந்த மிருகத்தை உள்ளூர்வாசிகள் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர். PTI சிறுத்தை 5 மணி நேரத்திற்குப் பிறகு வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பானைக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட ஆண் சிறுத்தை ஒன்று ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பானைக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட ஆண் சிறுத்தை ஒன்று ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. தண்ணீரைத் தேடி அலைந்தபோது, தவறுதலாக அந்தப் பானைக்குள் தலையை விட்டு சிறுத்தை மாட்டிக்கொண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். பிறகு வனத்துறையினர் அந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு, ப…

  21. கைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்தியானந்தா! Published: திங்கள்கிழமை, அக்டோபர் 22, 2012, 9:09 [iST] Posted by: Sudha திருவண்ணாமலை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய் விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட நித்தியானந்தா, அதே அருணகிரிநாதரால் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், மதுரை ஆதீனம் சார்பில் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட…

  22. நீச்சலுடைகளுடன் வருபவர்களுக்கு இலவசமாக எரிபொருள் யுக்ரைனிலுள்ள எரிபொருள் நிலையமொன்றுக்கு நீச்சலுடைகளுடன் வருபவர்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்படும் என எரிபொருள் நிலைய நிர்வாகம் அண்மையில் அறிவித்திருந்தது. அதையடுத்து பெரும் எண்ணிக்கையானோர் மேற்படி நீச்சலுடைகளுடன் எரிபொருள் நிலையத்துக்குச் சென்றனர். யுக்ரைனின் தலைநகர் கீவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமே கோடைக்கால வேடிக்கையாக இந்த அறிவிப்பை விடுத்திருந்தது. ஆனால், பெரும்பாலானோர் வேடிக்கையைவிட, பணத்தை சேமிப்பதற்காகவே இதில் பங்குபற்றினர் என தாம் கருதுவதாக வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=12833#sthash.ZhkUq4RQ.dpuf

  23. 23 Sep, 2025 | 03:26 PM ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டில்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, குறித்த சிறுவன் அதே விமானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். காபூலிலிருந்து புறப்பட்ட கேஏஎம் (KAM) விமானம், இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, விமானத்தின் சக்கரப் பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாகத் திரிந்த ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கண்டனர். அவனை விசாரித்தபோது, தான் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து வந்ததாகத் தெரிவித்தான். சிறுவன் ஒளிந்தி…

  24. யாழ்ப்பாணம், தென்மராட்சி நுணாவில் A - 9 வீதியில் கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் டயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காரில் பயணித்துள்ளனர். அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய பெண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் மூவரும் படு…

  25. இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் உயிர்கள் அழிந்துவிடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கணினி தரவுகளின் அடிப்படையில் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, அந்த நேரத்தில் அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு பாரிய அழிவை பூமி எதிர்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது. தொடர்புடைய காலகட்டத்தில், பூமியில் உள்ள எந்த உயிரினமும் 40 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள வேண்டும். பூமியின் அனைத்துக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து வெப்பமான, வறண்ட மற்றும் பெரும்பாலும் வாழத் தகுதியற்ற “பாங்கேயா அல்டிமா” என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டத்தை உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிமிடத்தில் இருந்து படிம எரிபொருட்களை எரிப்பதை ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.