Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=4]ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பும் திட்டத்துக்கு விரைவில் அரசு அனுமதி கிடைத்துவிடும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.[/size] [size=3][size=4]இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:[/size][/size] [size=3][size=4]செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பும் திட்டத்துக்கான அனுமதி பெறுவதில் கடைசிக் கட்டத்துக்கு இப்போது வந்துள்ளோம். இத்திட்டத்துக்கு அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.[/size][/size] [size=3][size=4]இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல…

    • 2 replies
    • 860 views
  2. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.v…

  3. சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட `டிராபிக் ஜாம்’ உலக சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. இதைவிட வினோதமாக, நண்டு விளையாட்டால் மாதக் கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது தைவான் நாட்டில். அங்குள்ள கென்டிங் தேசிய பூங்கா அருகே ஒரு கடற்கரை உள்ளது. அதையொட்டி பிரதான கடற்கரை சாலையும் செல்கிறது. தற்போது நண்டுகளின் இனபெருக்க காலமாகும். அதனால் 40 வகையான நண்டு இனங்கள் தங்கள் இனபெருக்க வேலையில் இறங்கி உள்ளன. நண்டுகள் நடுரோட்டில் நின்றுகொண்டு `நண்டூறுது, நரியூறுது’ விளையாட்டில் ஈடுபடுகின்றன. கடற்கரையில் நண்டுகள் விளையாடினால் ரசிக்கும் மனிதர்கள், நடுரோட்டில் நண்டுகளை பார்த்ததும் எரிச்சலாகிவிடுகிறார்கள். ஒன்று, இரண்டல்ல சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான நண்டுகள் லீலை செய்கின்றன. குஞ்சுகளை அழைத்…

    • 2 replies
    • 668 views
  4. பயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம் பிரபல ஆஸ்திரேலிய செய்தித்தாள் நிறுவனம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வாடிக்கையாளர்களிடையே பீதி ஏற்பட்டதால், எங்கே கிடைக்காமல் போய்விடுமா என்ற அச்சத்தில் அனைவரும் கழிப்பறை காகிதத்தை தேடி அலைகிறார்கள். இதற்கு ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் கழிப்பறி காகிதத்தை பயன்படுத்த கூடுதல் பக்கங்களை தனது செய்திதாளில் இரண்டு பக்கங்களை ஒன்றும் இல்லாமல் அச்சிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி விட்டது. சீனாவில் மட்டும் கொரோன வைரஸ் தாக்கி 3200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாட…

    • 2 replies
    • 391 views
  5. Started by Kavi arunasalam,

    “25 யூன் 2021இல் சோமாலியாவைச் சேர்ந்த அப்டிரஹ்மான் (26) யேர்மனியில் வான் என்ற இடத்தில் ஹோங்ஸ் ஆசிய சிற்றுண்டிக்கு அருகே மூன்று பெண்களை கத்தியால் குத்தியதும் பின்னர் பொதுமக்கள் அவனை மடக்கிப் பிடித்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது நடந்தது போல் ஒரு அசம்பாவிதம் இப்பொழுது நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது” இப்படிச் சொல்கிறார் 62 வயது நிரம்பிய வியட்னாம் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட வான் லோங் கொங். 30ந் திகதி யூன், ஒரு சிரிய நாட்டைச் சேர்ந்த இளைஞன் கையில் கத்தியுடன் நகரத்தில் நடமாடியதை அடுத்து பொது மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அந்த இளைஞனை கைது செய்வதற்கும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் பொலிஸார் வந்திருந்தார்கள். மதியம் 1.40க்கு ஆசிய சிற…

  6. JAKARTA, Sept 6 (Reuters) - Seven dogs starved of food and water for two weeks are suspected of eating their Indonesian owner after he returned to his hometown in Manado from a holiday, local media reported on Tuesday. A neighbourhood guard was curious when he saw luggage lined up at the front of Andre Lumboga's house, days after the 50-year old arrived back home. He approached the house, smelled something foul and called the police, according to a report. "His skull was found in the kitchen, and his body was found in the front of his house," Eriyana, a local police chief in Batam, an island off Sumatra, told VIVAnews website. Lumboga arrived home last Wedn…

  7. அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டிகள் அதிகம் இருக்கும் அண்டார்டிகாவில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அண்டார்டிகாவின் பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை ரஷ்ய ...விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் அங்கு உறைந்து கிடக்கும் ஐஸ்கட்டியை டிரில்லிங் இயந்திரம் மூலம் சுமார் 3,768 மீற்றர் ஆழத்துக்கு துளையிட்டனர். அப்போது அதன் அடியில் ஏரி இருப்ப…

    • 2 replies
    • 524 views
  8. நிர்வாண நிலையில் செய்தி வாசிக்க பெண்களுக்கு நேர்காணல் நடாத்தும் "நேக்ட் நியூஸ்" கனடா நிர்வாண செய்தி அலைவரிசையில் செய்தி வாசிக்கும் வேலைக்காக பெண்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. கனடா நாட்டின் டொரான்ட்டோ நகரை தலைமையகமாக கொண்டு "நேக்ட் நியூஸ்" என்னும் செய்தி அலைவரிசை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த அலைவரிசையின் பெயரை மேலோட்டமாக மொழிபெயர்த்தால் "ஒளிவுமறைவற்ற செய்தி" என பொருள்படும். இவ் அலைவரிசை ஆரம்பித்ததன் நோக்கமும் கூட ஒளிவுமறைவற்ற செய்திகளை மக்களுக்கு வழங்குவதற்காகத்தான் ஆனால் கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வாரத்தில் 6 நாட்கள் அந்தந்த நாட்களின் முக்கிய செய்திகளை அரை நிர்வாணமாகவும், பல வேளைகளில் முழு நிர்வாணமாகவு…

  9. "டிரம்ப் ஒரு முஸ்லீம்" (video) நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் எனவும் அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் எனவும் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்களின் எதிரியாக பார்க்கப்படும் டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் என நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானில் பிறந்த டிரம்ப் குழந்தையாக இருந்தபோது அவரது உண்மையான பெற்றோர் 1954 ஆம் ஆண்டு ஒரு வீதி விபத்தில் இறந்துள்ளனர். பின்னர் டிரம்பை புதிய பெற்றோர்கள் தத்தெடுத்ததாகவும் அதற்கு ஆதாரமாக சிறிய வயது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்ப…

    • 2 replies
    • 513 views
  10. உலகின் பணக்கார செல்லப்பிராணியாக ஆறாம் குந்தர் என்ற வளர்ப்பு நாய் கருதப்படுகிறது. இந்த நாயானது, ஹாமா தீவுகளில் சொந்தமாக வீடு முதல் சொந்தமாக ஆடம்பரப் படகு என்று செல்வந்த மனிதர்களுக்கு இணையாக வாழந்து வருகிறது. குறிந்த செல்வந்த நாய், பாடகி மடோனா முன்னர் வாழ்ந்து வந்த வீட்டில் தற்போது வாழந்து வருகிறது. ஜெர்மன் ஷெபர்ட் வகையை சேர்ந்த இந்த நாயின் வீடானது, 65 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ஒரு வீடாகும். இந்நிலையில், ஆறாம் குந்தரின் சொத்து மதிப்பு, 300 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது. அதேவேளை, குந்தனின் முன்னாள் உரிமையாளரான செல்வந்தரான Karlotta Leibenstein என்னும் ஜேர்மானிய சீமாட்டி, தான் மரணமடையும் நேரத்தில் தனக்கு குடும்பம் என்று எதுவு…

  11. மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார். சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியபடியே நீண்ட நேரம் அவர் பேசினார். விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்... நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம். அவர்கள்தான் வந்தார்கள், அவர்கள்தான் கூப்பிட்ட…

  12. மலேசிய இளவரசி துங்கு துன் ஆமினா சுல்தான் இப்ராகிம் (31). இவர் ஜோகேள் சுல்தானின் ஒரே மகள் ஆவார். நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டென்னிஸ் எவர்பாஸ் (28). டென்னிஸ் சிங்கப்பூர் கால்பந்து அணியில் மார்க்கெட்டிங் மானேஜராக பணிபுரிந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா வந்து இருந்தார். ஒரு ஓட்டலில் காபி குடிக்க சென்றபோது இளவரசி துங்குவை சந்தித்தார். அதன் மூலம் நண்பர்களான இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதை தொடர்ந்து டென்னிஸ் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை டென்னிஸ் முகமது அப்துல்லா என மாற்றிக் கொண்டார். அதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் மலேசியாவில் ஜோகேளில் உள்ள செரீன் ஹில் அரண்மனையில் நடந்தது.…

    • 2 replies
    • 349 views
  13. போலி போலீஸ் நிலையம்: 8 மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த நிஜ போலீஸ் – சிக்கியது எப்படி? christopherAug 19, 2022 19:59PM பீகாரில் இரு பெண்கள் உட்பட 6 ரவுடிகள் சேர்ந்து போலியான போலீஸ் நிலையத்தை கடந்த 8 மாதங்களாக நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் அனுராக் கெஸ்ட் ஹவுஸ் என்ற ஓட்டலில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்த இரு பெண்கள் உள்ளிட்ட 6 ரவுடிகள், அதனை போலீஸ் நிலையமாக மாற்றினர். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், காவலர் என்ற ரேங்க் வாரியாக போலீஸ் உடைகளையும் வாங்கி அவர்கள் அணிந்து கொண்டனர். அதற்கு ஏற்றவாறு நாட்டு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினர். நடை, உடை, பாவனையில் ய…

  14. படத்தின் காப்புரிமை GURUCHARAN KURDIKAR இப்போது இந்த கிராமம் சிலரின் நினைவில் மட்டுமே வாழ்கிறது. இந்த கிராமம் குறித்து பசுமையான நினைவுகள் அந்த மக்களின் மனதில் இப்போதும் இருக்கிறது. அதனால்தான், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உயிர்பெறும் இந்த கிராமத்தை காண, முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் திரள்கிறார்கள். அது எந்த கிராமம்? அந்த கிராமத்திற்கு என்ன ஆனது? - விரிவான தகவல்களை வழங்குகிறார் பிபிசிக்காக செய்தி வழங்கும் கோவாவை சேர்ந்த பத்திரிகையாளர் சுப்ரியா வோரா. ஒரு நதி, இரு குன்றுகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் …

  15. மனைவி வெளிநாட்டில் ; மாமியுடன் உல்லாசம் ; துண்டானது மருமகனின் உதடு மாமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மருமகன் கீழ் உதட்டின் ஒருபகுதியை இழந்தவாறு கிரிந்திவெலப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் 65 வயதுடைய மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 44 வயதுடைய குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் பின் கதவினூடாக உட்பிரவேசித்த மருமகன் தனியாக இருந்த மாமியாரை பாலியல் துஷ்பிரியோகம் செய்ய முயன்றவேளையில் அவரிடமிருந்து தன்னைப் காப்பாற்றி கொள்வதற்காக, மருமகனின் கீழ் உதட்டின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கி அவரிடமிருந்து தப்பி தனது கடைசி மகளின் வீட்டுக்குப் பாதுகாப்புக்காகச் சென்ற மாமியார், கிரிந்திவெலப் பொலிஸ் நிலையத்தில் மேற்க…

  16. திருப்பதி : திருப்பதி ஏழுமலையானுக்கு நீளமான முடி காணிக்கை செலுத்துபவர்களுக்கு 5 லட்டுகளை இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் பணக்கார சாமியாக போற்றப்படுபவர் திருமலை ஏழுமலையான். இங்கு வரும் லட்சோப லட்சம் பக்தர்கள் தங்கள் முடியை காணிக்கை செலுத்துகின்றனர். இந்த முடி ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் மட்டும் கோவிலுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் முடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பரிசு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதாவது 31 அங்குலம் நீளம் கொண்ட முடியை காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 5 லட்டு இலவசமாக வழங்க திருமல…

  17. உணவகத்தின் எண்ணெய் குழாயில் சிக்கிய நபர் இரண்டு நாட்களின் பின் மீட்பு! கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சீன உணவகம் ஒன்றின் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படும் குழிக்குள் சிக்கியிருந்த 29 வயதான ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அந்த நபர், உணவகத்தில் களவாடும் நோக்கில் வந்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ பகுதியில் உள்ள குறித்த விருந்தகத்தின் கழிவு எண்ணெய் அகற்றும் குழாயில் இருந்து ‘உதவிக்கான அவலக் குரல்’ வந்ததை அடுத்து அவசர மீட்புப் பிரிவில் அங்கு சென்று ஆராய்ந்துள்ளனர். குறித்த நபர் மிகவும் சோரவடைந்திருந்ததுடன், உடல் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார…

  18. தோழியின் இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த பெண்கள் பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் வேரா லூசியா டா சில்வா என்ற 44 வயது நிரம்பிய பெண்ணிற்கு (44) தனது கணவருடன் வசித்து வரும் வேராவிற்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு பல வருடங்களாகவே ஒரு புதுவித ஆசை இருந்து வந்துள்ளது. அதாவது தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு சென்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் வேராவின் அந்த புதுவித ஆசையா இருந்துள்ளது. குறித்த ஆசையை தற்ப…

    • 2 replies
    • 679 views
  19. 650 கோடி செலவில் இந்திய தொழி­ல­தி­­பர் மகளின் திரு­மணம்; திரு­மண சேலைக்கு 17 கோடி! 2016-11-17 12:05:28 முன்னாள் கர்­நா­டக அமைச்­சரும் சுரங்கத் தொழிலதி­ப­ரு­மான காளி ஜனார்த்­த­ன­ரெட்­டியின் மகள் திரு­மணம் நேற்று பெங்­க­ளூ­ரில் மிக பிர­மாண்­ட­மான முறையில், 650 கோடி இந்­திய ரூபா (சுமார் 1,430 கோடி இலங்கை ரூபா) செலவில் நடை­பெற்­றது. ஆந்­திர மாநிலம் சித்­தூரில் செங்கா ரெட்டி என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு மக­னாகப் பிறந்­தவர் ஜனார்த்­தன ரெட்டி. பின்னர் கர்­நா­டக மாநிலம் பெல்­லா­ரியில் வளர்ந்­த­வர்கள். கடந்த 1999ஆம் ஆண்­டு தான் ஜனார்த்­தன ரெட்­டியும் அவ­ரது சகோ­த­ரர்களான கரு­ணா­கர ர…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அறிவியல் ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களை விட, ஒருவரோடு ஒருவர் இருப்பதற்கு தொடர்ந்து விரும்பினால், அவர்கள் நண்பர்கள் என்று கருதப்படுகிறார்கள். 27 ஆகஸ்ட் 2023 நீங்கள் நட்பைப் பற்றி யோசிக்கும் போது, உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? இரவெல்லாம் நண்பருடன் தொலைபேசியில் பேசியதா? பாப்கார்ன் பகிர்ந்துகொண்டே படம் பார்ப்பதா? பீர் குடித்து குதூகலமாக இருப்பதா? மனித அனுபவத்தின் முக்கிய அங்கமாக நட்பு உள்ளது. நமது கதைகள், பாடல்கள், உரையாடல்கள் எல்லாமே நட்பு என்ற சரடைச் சுற்றியே நெய்யப்பட்டுள்ளன. அறிவியல்ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களைவிட, ஒருவரோடு …

  21. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரேநேரத்தில் திருமணம் செய்துள்ளனர். வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், “இஸ்லாம் மதத்தில் திருமண வாழ்வு அடக்கத்தையும் எளிமையையும் எடுத்துரைக்கிறது. அதன்படி, நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமைய…

  22. உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu) 15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். இதனை அவரது அவரின் அலுவலகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்சியாக 14 மணிநேரம் 54 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும், நடுநடுவே தொழுகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது ஓர் ஜனாதிபதி நிகழ்த்திய உலகச் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, 14 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க…

  23. ”விஜய்யுடன் ஒரு ஃபோட்டோ” - கியூவில் நின்ற ஆஸ்திரேலிய மக்கள்!(வீடியோ) தமிழ்த்திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் விஜய்க்கு இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பிற்குச் செல்லும் போது அங்குள்ள ரசிகர்களுடன் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பது, ஆட்டோகிராஃப் போட்டு கொடுப்பது போன்றவற்றின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கிறார். சமீபத்தில் ‘தலைவா’ படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்ற விஜய், அங்குள்ள ரசிகர்களை சந்தித்திருக்கிறார். அந்தந்த நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் விஜய் நடிக்கும் படங்கள் ரிலீஸாகும் போதும் அவற்றிற்கு மாபெரும் வரவேற்பு தருகிறார்கள். http://www.nakkheeran.in/#

    • 2 replies
    • 732 views
  24. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நேற்று (26) பிற்பகல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தகாத வார்த்தைகளினால் திட்டியதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது அமைச்சின் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விவகாரம் குறித்து எமதுக்குக் கிடைத்தத் தகவல்களை முழுமையாக தருகிறோம். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மில்கோ நிறுவனத்தின் தலைவராக ரொஹான் விக்ரமசிங்க என்பவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவே நியமித்துள்ளார். எனினும், அண்மைக்காலமாக இந்த நிறுவனம் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் எவ்வரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஜனாதிபதியின் பாரியாருக்க…

  25. Started by akootha,

    இந்த நூற்றாண்டின் மிக முக்கிய தினங்களில் ஒன்றாக இன்றைய தினம் (12.12.12) வானியல் கணித மேதைகளா லும், அறிவியலாளர்களாலும் கரு தப்படுகின்றது. 12ஆம் திகதி 12ஆம் மாதம் 12ஆம் ஆண்டு அதாவது 12.12.12 எல்லாமே 12ஆக அமையப்பெற்ற புதுமைமிகு நாளாக இருப்பதை அவதானிக்க முடியும். இவ்வாறானதொரு நிகழ்வு கடந்த 11ஆம் ஆண்டிலும் (11.11.11) இடம்பெற்றது. அந்த வகையில் இன்றைய 12.12.12 சர்வதேச ரீதியாக பேசப்படுகின்றது. இதற்கான காரணம் இந்த 2000ஆம் ஆண்டில் இவ்வாறானதொரு தினம் இனிமேல் எவ்வாண்டிலும் ஏற்படப் போவதில்லை. குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் இந்த 2000ஆம் ஆண்டில் ஒரு ஆண்டிலும் ஏற்படமாட்டாது. இனிமேல் இவ்வாறானதொரு நிகழ்வு 2101ஆம் ஆண்டிலேயே அமையப்பெறும் அன்று 01.01.01 ஆக இருக்கும் அப்போது மன…

    • 2 replies
    • 676 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.