Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கிட்கிந்தா காண்டம் சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர். அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார். சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார். அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார். இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள். அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர். வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர். சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார். இலங்கைக்குச் செல்…

  2. மணிமேகலையின் காதலும் துறவும் மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை.…

  3. உதாரணமாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் வைட் பால் என்ற ஆங்கில பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பு இப்போதைக்கு இல்லை என்று கூறும் ஜெகன்மோகன், அதை அகலப்பந்து என்று சில வர்ணணையாளர் கூறுவதைத் தவறு என்று கூறுகிறார். இப்படி தமிழைக் கொல்வதற்குப் பதில் வைட் பால் என்றே கூறிவிட்டுப் போகலாம்என்றும் கூறுகிறார் ஜெகன்மோகன். தகவல்: http://thatstamil.oneindia.in/news/2006/05...5/25/hindi.html நன்றி 'புறப் பந்து என்றும் கூறலாமே! இதை வர்ணணையாளர்கள் கவனிப்பார்களா? உங்கள் கருத்தென்ன? தமிழ்ச்சொல் இல்லையென்று அங்கலாய்க்காமல், இதை மற்ற தமிழ் அறிஞர்களிடம் கலந்தாலோசித்து ஆங்கிலச் சொல்லை தமிழ் பாவனையில் இருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்! அல்லிகா

  4. தமிழ் மொழிக் கல்வியில் பண்பாடும் மதிப்புகளும் (தகவுகளும்): அறிதல், புரிதல், நலம் பாராட்டுதல் by nmuthumohan Culture and Values in Tamil Language Instruction: Knowing, Understanding, Appreciating தமிழ் மொழிக் கல்வியில் பண்பாடும் மதிப்புகளும் (தகவுகளும்): அறிதல், புரிதல், நலம் பாராட்டுதல் பல்லினக் கலாச்சாரச் சூழலில் பண்பாட்டுக் கல்வியின் முக்கியத்துவம் இன்றைய உலகின் மிக அடிப்படையான உண்மையாக பல்லினக் கலாச்சாரச் சூழல் அமைந்திருக்கிறது. இந்த உண்மை உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய எதார்த்தமாக உள்ளது. ஆசிய நாடுகள், குறிப்பாகத் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகள் அடர்ந்த காடுகள…

    • 0 replies
    • 4k views
  5. படைப்பு, அழிப்பு என்ற சொற்கள் ஓர் அற்புதத்தைக் குறிப்பதற்கு மேலாக எந்த ஒரு மதிப்பும் பெற்றவையல்ல. நீங்கள் ஒரு தங்கக் காசை அழித்து விடலாம்; ஆனால் காசு என்ற அதன் நிலையைத்தான் நீங்கள் மாற்றி-யிருக்கிறீர்களே அன்றி, தங்கம் என்ற பொருளை நீங்கள் அழித்து விடவில்லை. அது போலவே படைப்பு, அழிப்பு என்பவையும் நிலைமாற்றத்தைக் குறிப்பனவே அன்றி, ஒரு பொருளின் தோற்றத்தையோ முடிவையோ குறிப்பவை அல்ல. இந்தப் பிரபஞ்சத்தைக் கட-வுள் படைத்தார் என்று ஆத்திகர் கூறும்போது, அக்கடவுள் தன்னிலிருந்தே இந்தப் பிரபஞ்-சத்தைப் படைத்தார் என்றோ அல்லது ஒன்-றுமே இல்லாத ஒன்றிலிருந்து படைத்தார் என்-றோதான் கருதுகிறார். ஆனால் பிரபஞ்சம் கட-வுளின் படைப்பு என்று நாத்திகரால் கருதமுடி-யாது. அவ்வாறு கருதுவது பிரபஞ்சத்தையும், க…

  6. MultiTier cropping reference in சீவக சிந்தாமணி தற்போதைய விவசாய தொழில் நுட்பத்தில் பயிர்களின் திண்மத்தை (Crop Intensity) அதிகரிக்க Multi-Tier Cropping என்னும் தொழிற்நுட்பத்தை கடைபிடிக்க பரிந்துரைக்கிறார்கள். Multi-Tier Cropping என்பது வெவ்வேறு உயரமுடைய மற்றும் மாறுபடும் தன்மை வாய்ந்த பயிர்களை அடுக்காக வளர்ப்பது ஆகும் முக்கியமாக மலை பகுதிகளில் அரிதாக கிடைக்கும் சூரிய ஒளியை முறையாக அறுவடை செய்து குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க உதவும். சூரிய ஒளி மட்டுமில்லாமல், மண் வளம் காக்கவும், களை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது. நவீன அறிவியலில் வேரில் வளரும் மைக்கோரைசா பூஞ்சானம் போன்றவை மாறுபட்ட பயிர்களிடையே உணவுப்பொருள் பரிமாற்றத்திற்கும் உதவுவதாக நிருபிக்க பட்டுள்ளது. …

  7. தமிழ் மொழி ஒர் அறிவியல் ஆய்வும் .. எதிர்கால தேவையும் சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மையான மேன்மையை உணர்ந…

    • 3 replies
    • 3.9k views
  8. மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது. பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ பற்றிக் குறிப்பிடுவது. காதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும். குறுந்தொகைப் பாடல் எண் - 27 ஆசிரியர் - வெள்ளிவீதியார் திணை - பாலைத்திணை தலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்…

  9. தமிழழைப் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் நாம் விடும் தவறுகள் பற்றி இதில் எழுதலாம் என்று நினைக்கின்றேன். இதை என்னால் மட்டும் செய்ய முடியாது. தமிழறிவு உள்ள கள உறவுகளும் கை கொடுத்தால்தான் முடியும். இன்றைக்கு தைத் திருநாள். இதற்கு "வாழ்த்துகள்" சொன்னவர்களை விட "வாழ்த்துக்கள்" சொன்னவர்கள் அதிகம். இது நாள் வரை நானும் "வாழ்த்துக்கள்" என்றே சொல்லி வந்தேன். ஆனால் அண்மையில் கலைஞர் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்ற திரைப்பட விழாவில், "வாழ்த்துக்கள்" என்ற பெயர் தவறு என்றும் அதில் "க்" வரக்கூடாது என்றும் சொன்னார். இப்பொழுது அப் படத்தின் பெயர் "வாழ்த்துகள்" என்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதை எம்மில் பெரும்பாலானோர் கவனிப்பது இல்லை. வானொலி, தொலைக்காட்சி, மேட…

  10. ஆய்வு முறைமைகளின் பல்வகைமைகளும் காலனித்துவ நீக்கமும் – கலாநிதி சி.ஜெயசங்கர். ஆய்வும் எழுத்தும் ஆய்வு என்பது எழுத்து வடிவத்திற்குரிய விடயமாகவே நவீன ஈழத்து தமிழ்ச் சூழலில் புழங்கப்பட்டு வருகிறது. காரண காரிய ரீதியானஇ அறிவுபூர்வமான விடயங்களின் மொழியாகஇ வடிவமாகஇ ஊடமாக எழுத்து வடிவம் கொள்ளப்பட்டு வருகிறது. காலனியத்திற்கு முந்திய காலத்தில் வாய்மொழி மரபுகள் அறிவின் மொழியாக அமைந்த நீண்ட உறுதியான பாரம்பரியம் இருந்தும்இ ஆய்வின் மொழியாக எழுத்து வடிவத்தைத் தாண்டிச் சிந்திப்பது அல்லது கற்பனை செய்வது கூட சாத்தியமற்றதாக இருந்து வருகிறது. நவீன மயமாக்கம் என்னும் கலனியமயமாக்கம் திணித்துவிட்ட எழுத்தின் ஆதிக்கம், அதிகாரம் வாய்மொழி மரபுகளின் அறிவுருவாக்கல் பண்புகளை நிராகரித்துவி…

  11. Started by nunavilan,

    முசுப்பாத்தி ... இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு: நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது. 'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'. 'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'. இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் ப…

  12. இந்தத் தலைப்பில் உண்மையில் பெரியார் என்ன சொன்னார் என்று ஒவ்வொரு விடயம் பற்றியும் எழுத/படி எடுத்துப் போட இருக்கிறேன்,அப்போதாவது பெரியார் எப்படிப்பட்டவர் என்பது விளங்கலாம் என்பதால். ஏனெனில் பெரியார் என்றால் எதோ பிராமணரை எதிர்க்கப் பிறந்த மனிதர் என்பதாக சிலர் இன்று தமிழ் இணயத்தில் அவர் மேல் வசைமாரிப் பொழியும் பிராமணர்களின் எழுத்துக்களை இங்கே வந்து போட்டுள்ளார்கள் அவர்களுக்கு பெரியார் மேல் இருக்கும் ஒரே கோவம் அவர் தாம் பிறந்த இந்து மதம் பற்றி அவர் வைத்த விமர்சனம் தான். அதற்கு மேல் இவர்களுக்கு அவர் என்ன சொன்னார் என்பதுவோ ஏன் சொன்னார் என்பபதுவோ புரிந்ததாகத் தெரியவில்லை. பகுத்தறிவு கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமயமலையின¢உயரத்தை ஏன் வெளி…

    • 18 replies
    • 7.5k views
  13. அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி…. எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ ..... ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை… எல்லா மொட்டிதழல்களும் மலர்வதற்குதான் குவிந்து காத்திருக்கிறது... எந்தக் காற்று அலாவுமோ என்ற ஏக்கத்தில்!. காற்றுகளுக்கு அலாவுதலின் அளவைச் சொல்லிக் கொடுப்பார் யாருமில்லை. இருந்தாலும் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும்போது ஏதேனும் ஒரு மொட்டு மலர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இசைக்காகவும், இன்குரலுக்காகவும் இந்தப் பாடலின் இனிமையில் இளைப்பாறிச் செல்பவர்கள் அநேகம்....! ஆனால்…

  14. "சங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi [தமிழிலும் ஆங்கிலத்திலும்] உலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, போன்றோர்களுக்கு சமமான காதல் கதை ஒன்று எமது இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட்டுள்ளது. இந்த காதலர்கள் ஆதிமந்தி - ஆட்டநத்தி என்ற ஆடுகளமகள் - ஆடுகளமகன் ஆகும். இது ஏனோ பலருக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஒரு கேள்விக்குறியே? இந்த சோகக் காதல் கதையை குறுந்தொகை 31, அகநானுறு 45, 76, 135, 222, 236, 376, 396 மற்றும் ச…

  15. தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள். நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே! நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே! பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே! பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே! திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர். பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன. ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது. நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர் நற்றவத…

  16. "பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா? 'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல். வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது. நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- …

  17. பழந்தமிழரிடையே இருந்த பல்வேறு விதமான உறவுகளுக்கான இலக்கியப் பெயர்கள் : காண்க - தாய் & தந்தை:- அம்மா, அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் கணவன் :- கணவன் என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் மனைவி :- மனைவி என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில் தம்பதி- மணவினையர், சோடி, இரட்டை. கணவன் மனைவியினை அழைக்கும் விதம் - பெண்டில் , என்னவள் , இஞ்சாருமப்பா, பெயர்கூறி அழைத்தல் (தமிழ்நாட்டு வழக்கு) மனைவி கணவனை அழைக்கும் விதம் - என்…

  18. இருக்க வேண்டிய - கூடாத ஆமைகள் 'ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்றுவளர்க்கிறார்கள். எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை. அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது! அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள்இருக்க வேண்டியது! வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்! இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டுஎதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர் வீட்டுப்…

    • 0 replies
    • 1.1k views
  19. அறிமுகம் [size=2][size=4]மொழிபெயர்ப்பு என்றால் என்ன? ஒரு மொழியில் குறிப்பிடப்பட்ட சொற்களின் அர்த்தத்தை மற்றொரு மொழிக்குக் கொண்டு செல்லும் செய்முறையை மொழிபெயர்ப்பு என்று கூறலாம்.[/size][/size] [size=2][size=4]இது ஒரு சிக்கலான செயல்பாடாகும். மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய செயல்பாடும்கூட.[/size][/size] [size=2][size=4]பல இலக்கிய மேதைகள் மொழிபெயர்ப்பு பற்றி வெகுவாக விவாதித்திருக்கிறார்கள். தங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். வகைப்படுத்தியும் இருக்கிறார்கள். இதில் ஒவ்வொன்றும் முக்கியமானது. ஒவ்வொன்றும் பயன்பாட்டில் உள்ளது.[/size][/size] [size=2][size=4]ஜான் டிரைடன் (1631-1760) ஆங்…

    • 4 replies
    • 6k views
  20. தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் 01.துணைவி 02.கடகி 03,கண்ணாட்டி 04.கற்பாள் 05 காந்தை 06.வீட்டுக்காரி 07.கிருகம் 08.கிழத்தி 09.குடும்பினி 10.பெருமாட்டி 11.பாரியாள் 12.பொருளாள் 13.இல்லத்தரசி, 14.மனையுறுமகள் 15.வதுகை 16வாழ்க்கை 17.வேட்டாள் 18.விருந்தனை 19.உல்லி 20.சானி 41.தலைமகள் 42.ஆட்டி 43.அகமுடையாள் 44.ஆம்படையாள் 45.நாயகி 46.பெண்டாட்டி 47.மணவாட்டி 48.ஊழ்த்துணை 49.மனைத்தக்காள் 50.வதூ 51.விருத்தனை 52.இல் 53.காந்தை 54.பாரியை 55.மகடூஉ 56.மனைக்கிழத்தி 57.குலி 58.வல்லபி 59.வனிதை 60.வீட்டாள் 61.ஆயந்தி 62.ஊடை 🤔🤔

    • 7 replies
    • 3.6k views
  21. தமிழில் பிறரை எவ்வாறு sir/ madam ஆகிய சொற்களை விட்டொழித்து விளிப்பது? பிறர் ஒருவரை அழைக்க தமிழில் பல சொற்கள் உள்ளன. ஆனால் தற்சமயம் 'ஐயா' என்னும் சொல்லினைத்தவிர ஏனைய அனைது சொற்களும் வழக்கிழந்து போய்விட்டன... அதற்குப் பதிலாத இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களான ஆணைக் குறிக்கப் பயன்படும் சேர் / சார் ( sir ) மற்றும் பெண்ணைக் குறிக்கப்பயன்படும் மேடம் / மாடம் ( madam ) ஆகிய சொற்கள் புழக்கத்திற்கு வந்து எம்மொழிச் சொற்களின் வழக்கழித்து விட்டன. இதனால் எம்மொழிச் சொற்கள் மெல்ல மெல்லப் புழக்கத்தில் இருந்து அருகிவருகின்றன. இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களை பயன்படுத்தும் அனைவரும் அது ஏதோ இனிமையாகவும் பார்பதற்கு புதுமையாகவும் இருப்பதாக எண்ணிக்கொண்டே பயன்படுத்துகின்றனர்... எழுதும் பொழு…

  22. வாலியிடம் பேச்சிழந்த இராமன் கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான். வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான். தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர் இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான் …

    • 0 replies
    • 2.4k views
  23. பதிற்றுப்பத்து வழி சேர மன்னர்களும் மக்கள் வாழ்வியலும்… தமிழ்ச் சமூக வரலாறு நீண்ட நெடிய வரலாற்றை, மனித குலம் தோன்றி நிலைபெற்ற செயல்முறையை விளக்கும் ஒளிவிளக்கமாய் திகழ்ந்து வருகிறது. தோண்ட தோண்ட நீர் பெருகுவது போல, ஆராய ஆராய பல புதிய கருத்துக்கள் தோன்றி பழந்தமிழர் வாழ்வை புதிய நோக்கில் ஆராயும் வேட்கையும் மிகுதியாகிறது. கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், இலக்கியங்களும் இன்ன பிற சான்றுகளும் வரலாற்றை வெளிக்கொணரும். அதே வேளையில் அவை முழுமையும் உண்மை நிலையை பிரதிபலித்து விடுவதில்லை. எனினும் பல்லாயிரம் கருத்துக்களை தம்முள் புதைத்தும், மறைத்தும் இன்று விதையாக நின்று புதிய கோட்பாடுகளோடு பொருத்தி ஆராய்கையில் புதிய வாழ்வியல் கருத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் ‘…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.