Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம் உலகில் பரவலாக அறியப்படும் காதல் இணையரான ரோமியோ - ஜூலியட், ஆன்டனி - கிளியோபாட்ரா, லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்று சங்க காலத்தில் நம் தமிழ் நிலத்தில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலானது காவியம் போல் பேசப்பட்டுள்ளது என்பது சங்க இலக்கியங்களான குறுந்தொகை, அகநானூறு, மற்றும் சங்க மருவிய காலத்து சிலப்பதிகாரம் மூலமாகத் தெளிவு. ஆனால் இன்றைய பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் இக்காதலை அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. ஈழத் தமிழறிஞரான திரு.கந்தையா விநாயகலிங்கம் அவர்கள் யாழ் இணையதளத்தில் எழுதிய கட்டுரையானது அடியேனையும் எழுதத் தூண்டியது எனலாம். அன்னார் எழுதியதிலிருந்து பெரிதும் வேறுபட்ட எதனையும் எழுத எண்ணாமையால், …

  2. கணிதத்தின் மகுடம் கணக்கதிகாரம்.. முன்னுரை கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மையான இடம் உண்டு. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலப் புலவர்களின் கணித அறிவினைப் பறைசாற்றுகின்றன. கணிதம் ஒரு கலை என்பதினை ‘கணக்கதிகாரம்’ என்ற நூலால் அறியலாம். கொறுக்கையூர் காரி நாயனார் என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவர் காவிரி பாயும் சோழ நாட்டு மன்னர் வழி வந்தவர் என்றும், இவரின் தந்தை பெயர் புத்தன் என்றும் நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இந்நூலில் காணப்படும் வியப்பான கணித முறைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கணக்கதிகாரம் இந்நூல் காரிநாயனாரின் கற்பனைத் திறனையும், கவிதை நயத்தையும், கணிதத்தில் இவர் பெற…

    • 2 replies
    • 3.9k views
  3. குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், வேதியல் என்பன போன்று மலையும் மலை சார்ந்தவற்றையும் குறிஞ்சியியல் (credit: திருவள்ளுவன் இலக்குவனார் ) என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலையியல் தொடர்பான கலைச் சொற்கள் : அடிவாரம், தாள், வெற்பு - மலையின் அடிப்பகுதி (spur / Foot of a hill/mountain) அடுக்கம் - பன்மலை வரிசை (a complex mountain range.) அறைவாய், கணவாய், கண்டி - (mountain pass) ஆரிப்படுகர் - (very difficult mountain path with ascents and descents) அரிதின் முயன்று ஏறியும் இறங்கியும் செல்லும் கடிய மலை வழி கது, கிழிப்பு, பிளப்பு, விடர், விடரளை, விடம்பு,…

  4. ரசித்த சில சிலேடைகள் திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும். அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார். “அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்." அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் common(காமன்)" என்றார் விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சி…

    • 4 replies
    • 14.9k views
  5. இங்கு பொன்னியின் செல்வன் பகுதியை தொடர்ந்து இணைக்க போகிறேன், நல்ல எழுத்து நடையில் கல்கியால் எழுதப்பட்டது, நான் கன தரம் வாசித்துவிட்டேன், இன்னும் இதில் உள்ள மோகம் தீரவில்லை. என் கதாநாயகன் வந்தியதேவன் & கதாநாயகி பூங்குழலி. உங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தை பற்றி நீங்கள் விபரமாக எழுதாலம் அல்லது கீழே உள்ள வெப் இல் போய் சுட்டு இணைத்துவிட்டு அடுத்த அத்தியாத்தை வாசிக்கலாம் முதல் அத்தியாயம் வாசித்து முடித்துவிட்டால், சிலவேளைகளில் நான் இடையில் காணாமல் போய்யிடுவேன் பின் தங்கிய கிராமங்களுக்கு வேலை நிமித்தமாக. நீங்கள் உங்கள் தார்மீக ஆதரவை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன் முதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள் By kalki - Posted on 29 October 1950 htt…

  6. தும்மல் விளைவித்த ஊடல்! தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது. தும்மல், "நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும். இவைதவிர மனவியல் காரணங்களாலும் தும்மல் உருவாகும் என்று கூறப்படுகிறது. மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசும்போது தும்மல் போடுபவர்கள் கடிந்துகொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. தும்முபவர் ஒற்றைத் தும்மலுடன் நிறுத்திவிடாமல், மேலும்…

  7. 1980இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டில் எம்.ஜி.ஆர். அவர்களால் அறிவிக்கப்பட்டு 1981ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி அண்ணா பிறந்த நாளில் தஞ்சையில் ஆரம்பிக்கப்பட்டது தமிழ் பல்கலைக்கழகம். இதற்கு தமிழக அரசால் 1000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதன்நோக்கம் தமிழ்மொழியின் வளர்ச்சி, பண்பாடுகளை பாதுகாத்து மக்களிடம் கொண்டு செல்வது, பிற மொழிகளில் சிறந்த நூல்களை தமிழில் கொண்டு வருவது, முக்கியமானது, அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்வது என்பதற்காக உலகம் முழுவதும் தமிழ் மக்களின் சார்பாக மொழிக்கென்று உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்தான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம். கலைப்புலம், மொழிப்புலம், வளர் தமிழ் புலம், சுவடிப்புலம், அறிவியல் தமிழ்புலம…

    • 0 replies
    • 1.2k views
  8. உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்? இதன் நோக்கம் யாழ் கள நண்பர்களிடையே தமிழ் பழ மொழிகளின் பாவனையை அதிகரிக்கச் செய்வதாகும். சிரமமான பழமொழிகளிற்கு தயவு செய்து விளக்கத்தையும் கூறி விடுங்கள். உங்கள் வாழ்வனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதோ நான் ஆரம்பித்து வைக்கின்றேன் - எனக்கு மிகப் பிடித்தமான வாழ்பனுபவத்தில் கற்றுணர்ந்த பழமொழி: மதியாதார் வாசல் மிதியாதே!

  9. யானைக்கு 60 பெயர்கள்! யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள். # யானை (கரியது) # வேழம் (வெள்ளை யானை) # களிறு # களபம் # மாதங்கம் # கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) # உம்பர் # உம்பல் (உயர்ந்தது) # அஞ்சனாவதி # அரசுவா # அல்லியன் # அறுபடை # ஆம்பல் # ஆனை # இபம் # இரதி # குஞ்சரம் # இருள் # தும்பு # வல்விலங்கு # தூங்கல் …

  10. முதிர்கள்ளி முரிமுள்ளி முதல்வாகை முதல்ஈகை முட்காரைவேல் வெதிர்நெல்லி விடத்தேறு வெட்பாலை இவையெல்லாம் இரணிய வதைப் பரணியில் கூறப்படும் பாலை நிலத்து மரங்கள். இதில் வாகை என்ற மரம் தமிழர்களின் களிப்பை உணர்த்துவதாகும். சங்க காலத்தில் போரில் வெற்றிப் பெற்றால் மன்னரும் வீரரும் வாகைப் பூவை சூடி வெற்றிக் களிப்பை கொண்டாடுவார்கள் என இலக்கியங்களில் காணப்படுகிறது. இன்றும் "வெற்றி வாகை சூடினான்" என்று பல இடங்களில் கேள்விபட்டிருப்போம். வெற்றிப் பெற்றவர்கள் வாகைப் பூவை சூடுவதாலே இந்தப் பெயர் வந்தது. இது பாலை நிலத்திற்குரிய பூவாகும். இது விடுதலைப் புலிகளின் காலத்தில் தேசிய மரமாகவும் கொண்டாப்பட்டது. மேலும் இது வெட்சி, கரந்தை, தும்பை, வாகை என புறத்திணைகளில் ஒரு வகையாகும். இதில் …

  11. இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம் கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது. இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு அடக்கல் என்பது “அடக்கி” அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ …

  12. அகநானுற்றில் பதுக்கை.! தமிழர் பண்பாடும் வழிபாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவ்வாறிருக்க பழந்தமிழரின் பதுக்கை எனப்படும் இறந்தவர்களின் புதையிடங்களும் அவற்றை வழிபடும் முறையையும் இக்கட்டுரை ஆராய உள்ளது. அதில்,அகநானூற்றில் குறிப்பிடப்படும் நடுகல் மரபும், பதுக்கை மரபும் விவாதப் பொருளாகின்றது பல்வேறு இலக்கியங்கள் நடுகற்கள், பதுக்கைகள் குறித்து பேசியிருப்பினும் அகநானூற்றில் அவை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இங்குக் காண்போம். நடுகற்கள் பதுக்கை அறிமுகம் நடுகற்கள் போரிலோ சண்டையிலோ மாண்ட ஒரு வீரனுக்காக வைக்கப்படுவதாகும். இதனால் இதனை வீரக் கற்கள் என்றும் அழைக்கும் வழக்கு உள்ளது. நடுகல் இறந்த மனிதனின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாலேயே நடப்படுகிறது. இறந்…

  13. கறுப்பு-கருப்பு எது சரி? | பிழையுடன் பயன்படுத்தும் சொற்கள்

  14. தமிழில் கணிதச் சொற்கள் அடிப்படை அலகு 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முன…

    • 0 replies
    • 1.2k views
  15. இலங்கையின் இனவரலாறு இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான். அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர். புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன் தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார்.கி.முன் (247-207)தேவ நம்பிய தீசன் அனுராத புரத்தை தலை நகராய்க்கொண்டு ஆட்சிசெய்தான்.அப்பொழுதே பௌத்தம் முதன் முதலாய் இலங்கையிட்கு வந்தது . கி.பின் ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் என்ற நூல் தாதுசேனன் அரசனின் சகோதரனான மகாநாம தேரரால் பாளி மொழியில்தொகுக்கப்பட்டது.பௌத்தத்தில் இரு பிரிவுகளான மகாயானம்,தேரவாத…

    • 0 replies
    • 1.1k views
  16. கயமூழ்கு மகளிர் கண்கள். தலைவன் தன்னைவிட பரத்தையரையே பெரிதும் விரும்புகிறான். இதைத் தோழிக்குத் தெரியக்கூடாது என்று மனதுக்குள்ளே மறைக்கிறாள் தலைவி. தலைவனோடு ஊடல்கொள்ள தலைவிக்கு இது போலப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைத் தன் மனதில் கொள்ளாமல் தோழி வாயிலாக வந்தமை ஏற்றுத் தலைவனின் தவறை மறந்தாள் மறைத்தாள். உப்பங்கழியில் நெய்தல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களின் காம்பு இலைகளுக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளது. அலைபெருக்கெடுத்து வரும்போதெல்லாம், நெய்தல் மலர்கள் நீருள் மறைந்து மறைந்து தோன்றுகின்றன. இக்காட்சி, குளத்திலே குளிக்கும் போது நீருள் மூழ்கி மூழ்கி எழும் பெண்களின் கண்களைப் போலவே காட்சியளிக்கின்றன. கண்களல்லாத நெய்தல் மலரானது, மகளிர் கண்கள் போலக் காட்சி தருகிறது. க…

  17. பிழை இருந்தால் திருத்துங்கள்!! மிதி வண்டிக்கான பாகங்கள் seat, saddle = குந்துகை, இருக்கை handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.) wheel = வளவி (கையில் போடுவதும் வளவி தான்.) mud guard = மட் காப்பு (மண்+காப்பு) stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.) carrier = தூக்கி pedal = மிதி spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழுக்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.) wheel rod = வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டையே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப்பலவற்ற…

  18. என்னடா இது! இந்த மதுரைக்கு வந்த சோதனை! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி திருவிளையாடல் புராணத்தில் வரும் பாண்டிய மன்னன் - ஏமனாதப் புலவர் - பாணபத்திரர் - மதுரைச் சொக்கநாதர் சோமசுந்தரக் கடவுள் போன்று அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பகிரலாம் என்றிருக்கிறேன். எடுத்துக்காட்டுகள் ஒரு பொது-ஒப்புமைக்காகச் சொல்லப்பட்டதே தவிர அதை அப்படியே எடுத்து, இதில் யார் மன்னன், யார் ஏமனாதப்புலவர், யார் அவைக்களப் புலவர், யார் சொக்கநாத சோமசுந்தரக்கடவுள் என்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம் என்று அன்புடன் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இனி கதைக் களத்துக்கு வருவோம். கடவுட்கொள்கை சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் வடதுருவமும், தென் துருவமும் போன்று கருத்து நி…

  19. “வலியின் புனைபெயர் நீ” பாரதிசந்திரன் (முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் ) தமிழ்ப் பேராசிரியர் “தீப்பிடித்து எரிகிறது அந்தச் செங்கொன்றை என்று பயமுறுத்தமாட்டேன் அது உனக்கான ஆராதனை” (’வலியின் புனைபெயர் நீ) சங்க இலக்கிய மரபில் காதலிக்குக் காதலன் உவமை சொல்லுகிறபொழுது, நீர்த்தடாகத்தில் பூத்திருக்கின்ற செங்கொன்றை மலர்களை எல்லாம் பார்க்கிறபொழுது, தீப்பற்றி எரிந்த காட்சிபோல் என் கண் முன்னதாகக் காட்டுகிறது என்று காதலியிடம் கூறிச் செல்லுகின்றான். அந்தக் காட்சி வண்ணத்தின் அடிப்படையாக உவமித்துச் சொன்னதாகும். ஆனால், பூப் போன்ற காதலியிடம் சொல்லுகிறபொழுது, “தீ” என்கிற வார்த்தை, அவளுக்கு ஏத…

  20. தமிழர் திருமண முறை-அன்று முதல் இன்று வரை - ச.மாடசாமி குடும்பமும் திருமணமும் ""இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். அதன் காரணமாய் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட் கருத்து. "வனத்தில மேஞ்சாலும் இனத்தில வந்து அடையணும்" என்ற தமிழ்ச் சிந்தனை அவர் கூற்றை நிரூபிக்கத்தான் செய்கிறது. அவரவரினன் குடும்பம் அவரவருக்குள் ஒண்டிக் கிடக்கிறது.தூரங்களால்-நாகரிகங்களால்-சொந்தக்குடும்பத்திலிருந்து பிரிந்து கிடப்பவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குடும்பத்தின் பிடிமண் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் கிடக்கிறது. வீட்டுக்குள் பண்பாட்டுப் பிரச்சினை தோன்றும் போதெல்…

  21. da44756905feac6712a2c9c19b9be2e2

  22. ஈழநூல் 70 நூல் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் ஆசிரியர் சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்) மின்னூலாக்கம் இ. பத்மநாப ஐயர் மின்பதிப்பு ஈழநூல் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் பதிப்பாசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு வெளியீடு ---------------------------------------------------. ARTS COUNCIL TAMIL DRAMA PANEL SERIES Published under the authority of the Arts Council of Ceylon GENRAL EDITOR S.VITHIANANTHAN, M. A. ph. D. Chairman, Tamil Drama Panel, Arts Council of Ceylon SECOND EDITION 1962 Price Re. 1.00 --------------------------------------…

    • 5 replies
    • 7.8k views
  23. வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !!! இத்துடன் வேங்கையின் மைந்தன் சரித்திர நாவலை நிறைவு செய்கின்றேன் . நாம் யார் ??? எமது பின்னணி என்ன ??? எமது இனம் செய்த வீரதீரங்கள் என்பனவற்றை இந்த சரித்திர நாவலில் அகிலன் சரியாகவே சொல்லியிருக்கின்றார் . நான் இந்த நாவலில் கற்றுக்கொண்டது என்னவென்றால் , இந்த நாவல் ஓர் வரலாற்றுப் புதினமாக இருந்தாலும் , இதில் வருகின்ற ரோகணத்து ஐந்தாம் மகிந்தர் , அவருடைய சதித்திட்டங்கள் இறுதியில் சோழரிடம் படுதோல்வியில் முடிந்தாலும் , கால ஓட்டத்தில் அதே பெயரை நவீன மகிந்தராக வரித்துகொண்டு அதே ஈழத்தில் புதுயுகம் படைக்க வந்த சோழசாம்ராஜயத்தின் வாரிசுகளை சூழ்சியால் வென்ற சரித்திரத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை . ஒரு கற்பனையான வரலாற்றுப்புதினம் எவ்வாறு எமது …

  24. Started by karu,

    கலித்தொகை சங்க நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றை எட்டுத்;தொகை நூல்களுள் அடக்குவர். அகவற்பா, விருத்தப்பா(ஆசிரியம்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாவென்னும் ஐந்து பாவினங்களுள் கலிப்பாவென்னும் பாவகையைச் சார்ந்து பல புலவர்களால் இயற்றப்பட்ட செய்யுள்களின்; தொகுப்பாயமைந்தது கலித்தொகையாகும். கலித்தொகையும் பரிபாடலும் இசைகலந்து எடுத்துப் பாடப்படக்கூடிய இன்னிசைப் பழம்பாட்டுவகையினவென்று இசைவல்லார் கூறுவர். கலித்தொகை பண்டைய தமிழரின் அகவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் அகத்திணைநூலாகும். பாலை, குறிஞ்சி, மருதம் முல்லை, நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பண்டைத்தமிழரின் காதல் வாழ்வுபற்றிய செய்திகளை அந்நூல் க…

    • 2 replies
    • 7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.