பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
யார் இந்த ஆனந்தரங்கப்பிள்ளை..? வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை இத்தகைய ஆவணங்கள்தாம். இதன் தொடர்ச்சிதான் 18ஆம் நூற்றாண்டில் காகிதங்களில் எழுதப்பட்டு மிகப்பெரிய ஆவணங்களாக எழுந்து நின்ற, ‘ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள்’. ஆனந்தரங்கப்பிள்ளை சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் திருவேங்கடம் பிள்ளை. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குத் தலைமகனாக 30 மார்ச் 1709 அன்று பிறந்தவர்தான் ஆனந்தரங்கம் பிள்ளை. இவரது தம்பி திருவேங்கடம் பிள்ளை (தந்தையின் பெயரே இவருக்கு வைக்கப்பட்டிருக்கிறது). பெரம்பூரில் வணிகம் செய்துவந்த திருவேங்கடம் பிள்ளை, பிரெஞ்சு வாணிபக் கழகத்த…
-
- 1 reply
- 842 views
-
-
மியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர். 1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்…
-
- 1 reply
- 841 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் – 10-ம் பதிவு நாள்: 07.07.2015 பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் 7-வது முழு நிலவு 02.07.2015 அன்று கடந்தது. 02.07.2015 அன்று இரவு 07.00 மணிக்குத் தோன்றி நள்ளிரவில் ½ மணி நேரம் பிந்தியதுடன் விடிந்த பின்னும் ½ மணி நேரம் போகாதிருந்தது. ஆயினும் சரிவிலிருந்து மீண்ட இரண்டாவது முழு நிலவாகக் கணக்கிடுவது பொருத்தமாகலாம். ஒருவேளை 8-வது முழுநிலவின் 30-ம் நாள் மேலும் பிந்தினால் 7-வது முழு நிலவையும் சேர்த்துத் தோல்வியுற்ற நிலவாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். கடந்த ஆண்டில் 7 முழு நிலவுகள் முறையே ஒவ்வொரு நாள் பிந்திய நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை நீடிப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். வளர்பிறையின் போக்கு: வழக்கம் போலவே இம்முறை வளர்…
-
- 0 replies
- 841 views
-
-
ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு! மச்சீர் கல்வி பிரச்சனை, செம்மொழி ஆராய்ச்சி அலுவலகம் இடமாற்றம், செம்மொழி பூங்காவில் பெயர் மறைப்பு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா என்று தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிரான சூழல் தாய் தமிழகத்தில் நிலவும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள் தமிழையும், தமிழ் பண்பாட்டையும் மறக்கவில்லை எனும் அளவுக்கு சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெளி நாடு வாழ் தமிழர்கள், தங்கள் வசிக்கும் நாடுகளில் தமிழ் பள்ளிகள் நிறுவி, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் டல்லாஸ் மாநகர ப்ள…
-
- 0 replies
- 839 views
-
-
நிலையில்லாத உயிர்வாழ்க்கையை விரும்பாது நிலையான மறப்புகழை விரும்பும் வீரர்கள்தான் மாவீரர்கள். ஒருவன், ஒருவர் அல்லது இருவரோடு பொருதுவது (சண்டையிடுவது) இயற்கை. ஆனால் ஒருவன் சிறிதும் அஞ்சாது ஒரு பெரும்படை முன் தனியாகச் சென்று எதிர்த்துப் போரிட்டு, அப்பெரும் படையை தோற்றோடும்படிச் செய்வது இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட செயலாகும். அத்தகைய வீரர்கள் செய்யும் செயல் மறவென்றி எனப்படும். ஒரு மறவன் இன்ன நேரத்தில் இப்படையை வெல்வேன். அப்படிச் செய்யத் தவறினால் தீயில் வீழ்ந்திறப்பேன் என வஞ்சினக் கூறி பொருதச் செல்வான். அவன் அந்நேரத்திற்குள் அப்படையை வெல்ல முடியாது போனால், தான் கூறிய வெஞ்சினத் தப்பாது, பெரியோர் முன்னிலையில் தீ வளர்த்து அதில் வீழ்ந்து உயிர் துறப்பான்.இதை சொல்வென்றி என…
-
- 2 replies
- 838 views
-
-
பின்வரும் இரண்டு வசனங்களுக்கும் கருத்தில் என்ன வித்தியாசம்? இரண்டு வசனத்திலும் ஒரே சொற்கள்தான் உள்ளன ஆனால் ஒழுங்கமைப்பு வேறு. வசனம் 1: இறுதியில் அவன் தான் வெல்வான் வசனம் 2: அவன் இறுதியில் தான் வெல்வான்
-
- 6 replies
- 837 views
-
-
-
ஈழம் - சோலையின் புதிய புத்தகம் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை திண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். பத்திரிகைத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை உடையவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் 9 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர். தமிழகத்தில் உள்ள இதழ்களில், நாளேடுகளில் அதிகமான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவரும் இவரே. புரட்சித் தலைவருக்கும் அமரர் ஜீவாவிற்கும் உற்ற நண்பனாக இருந்தவர். இவரது கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் தங்களின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்…
-
- 0 replies
- 836 views
-
-
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. ...முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்…
-
- 0 replies
- 835 views
-
-
பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை. பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் குடாநாடு தலை நிலத்துடன் இணையும் இடத்துக்கு அருகே, அமைந்துள்ள ஒடுங்கிய நிலப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கோட்டை ஆகும். இக்கோட்டையும், ஆனையிறவுக் கோட்டை, பைல் கடவைக் கோட்டை என்பனவும் யாழ்ப்பாண நீரேரியின் ஆனையிறவுக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்கு வடக்கே ஒரே கோட்டில் வரிசையாக அமைந்துள்ளன. தலைநிலத்திலிருந்து குடாநாட்டுக்கான நுழைவழியைக் கண்காணித்துப் பாதுகாப்பதே இக் கோட்டைகளின் நோக்கம். இக் கோட்டைகள் அமைக்கப்பட்டதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சியைப் பாதுகாத்தல், ஒல்லாந்தரின் வணிக நலன்களைப் பாதுகாத்தல், மக்களைப் பாதுகாத்தல் என்னும் நோக்கங்கள் இருந்ததாகத் தெர…
-
- 0 replies
- 835 views
-
-
-
கிராமப்புற மக்கள் எந்த செயலைச் செய்தாலும் முதலில் கடவுளை வணங்குவர். அந்த வகையில் ஏற்றப் பாட்டின் முதலில் கடவுள் வாழ்த்து இருக்கும். இடையிடையே எண்ணிக்கையும், வாழ்வியல் சார்ந்த கருத்தமைந்த பாடல்களுமாக ஏற்றப்பாட்டு அமைந்திருக்கும். ஏற்றப் பாட்டு பிள்ளையாரே வாரும் பெருமாளே வாரும் சிவனாரே வாரும் வேலவரே வாரும் சிவனும் பெருமாளும் சேர்ந்து ரதமேற அரியும் சிவனும் அமர்ந்து மலலேற குருவும் பெருமாளும் கூடி ரதமேற பொற் கொடையும் தேரும் போக வரவேணும் அறுவதியா லொண்ணு அறுவதியா ரெண்டு அறுவதியா மூணு அறுவதியா நாலு அறுவதியா லஞ்சி அறுவதியா லாறு அறுவதியா லேழு அறுவதியா லெட்டு ஆரணி நடுவ தாம்பர நடுவ வேலூரு நடுவ வெத்தல கிடங்கு வெள…
-
- 0 replies
- 834 views
-
-
கனடிய பிரதமர் தமிழர் புத்தாண்டு என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்ததையிட்டு சிறிலங்கா அரசாங்கம் குழப்பம் அடைந்திருக்கிறதாம். - தமிழ்நெற்
-
- 0 replies
- 832 views
-
-
BBC The Story of India PART 14 OF 24 http://www.youtube.com/watch?v=eKQQw6CEXu8&feature=mfu_in_order&list=UL http://www.youtube.com/watch?v=7EOva3nx2m0&feature=mfu_in_order&list=UL http://www.youtube.com/watch?v=Lbu_kwXuNCI&feature=related
-
- 0 replies
- 829 views
-
-
-
- 0 replies
- 829 views
-
-
தமிழீழம் வரலாற்றுத்தேவை வாழ்க்கையின் கட்டளை (நூல் விமர்சனம்) தோழர் தியாகு அவர்கள் எழுதி வெளி வந்த சில கட்டுரைத் தொகுப்புகளுடன் தலைப்புக்குரிய கட்டுரையையும் புதிதாக எழுதிச் சேர்த்து வாசகர்களாகிய நமக்கு அளித்துள்ள நூல்தான் தமிழீழம் - வரலாற்றுத் தேவை வாழ்க்கையின் கட்டளை: இந்தப் புத்தகத்தில் வரும் 17 கட்டுரைகளும் கடந்த நாட்களில் நடந்த பேச்சுவார்த்தைகளை, வீரப்போர்களை, அதன் தியாகங்களை நினைவுப் படுத்துவதுடன், நிகழ்கால தேவைகளை, எதிர்கால எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளையானாலும், வேறு உண்மையான தேசிய விடுதலை இயக்கங்களையானாலும் உலக அரசுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் முறியடிக்க முடியாது. வி…
-
- 1 reply
- 828 views
-
-
மாநாகன் இனமணி 119 https://app.box.com/s/wzrz6ggk1bdsndyt48x1354jo4i6lhch உடைப் பெரும் செல்வரும் சான்றோரும் கெட்டு புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகி கடைக்கால் தலைக் கண்ணது ஆகி குடைக்கால் போல் கீழ் மேலாய் நிற்கும் உலகு (நாலடியார் 37-38) உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ பல வயின் நின்ற குன்றின் கோடு (நற்றணை 139: 1-2) பொருள்:- கொடைப் பண்புள்ள செல்வந்தர்களும், அறிவுரை கூறும் அறிஞர்களும் மறைந்து போவர். வேற்றினைப் பெண்டிர் (புடைநெறி-விலகிய நெறி-சிலம்பு-காடுகாண்-169) மக்களும் கீழமைக் குணம் கொண்டோரும் பெருகுவர். கடைக்கால் மேலாகவும் தலையானது கீழாகவும் தொங்குமாறு போல உலகம் ஆட்டை தளர்ந்து நிற்கும். அது கேடு காலம்! மீண்டும் அறம் தலையெடுத்துத்தான் அந்தப் பிழையைச்…
-
- 0 replies
- 825 views
-
-
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ? ** 1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும். 2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர்…
-
- 0 replies
- 824 views
-
-
[size=4]தமிழ் இனி மெல்லச் சாகும் - என்றான் பாரதி . இப்போதைக்கு அந்த நிலைமை இல்லை என்றே தோன்றினாலும், ஒரு மொழி அழிவதற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இப்போது தமிழுக்கும் உள்ளது. [/size] [size=3][size=4]நண்பர் ஒருவர் அனுப்பியுள்ள இந்த கட்டுரை - நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை. எங்கே சார்? ஸ்ரீலங்கா வில அக்கிரமம் நடந்தப்போவே நாங்கள் எல்லாம் சும்மாதான் வேடிக்கை பார்த்தோம்.. இன்னும் நூறு வருஷம் கழிச்சு நடக்கபோற விஷயத்துக்கு ... கொஞ்சம் ஓவரா இல்லை ! .... .. என்று கேட்பவர்களுக்கு.....???? [/size] [size=4][/size][/size] [size=3][size=4]சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இற…
-
- 1 reply
- 824 views
-
-
கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இம் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மேலோங்கி தெரிகின்றது என்று எல்லோராலும் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. மொழிகளுக் கெல்லாம் தாய் நமது தாய்மொழி ''தமிழ்'' எனும் கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். நமது மருத்துவமும் விஞ்ஞானமும் கட்டிடக்கலையும் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கின்ற ஒன்று "முன் தோன்றிய மூத்த குடிகள்" என்று சொல்லுமளவு நமது வரலாறு பழமையானது ஆயினும் அந்த அளவு அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அச் சிறப்புப்புக்களை புலம்பெயர் தேசங்களில் ஆவணப் படுத்தியிருக்கின்றோம…
-
- 1 reply
- 823 views
-
-
நாட்டுப்பற்றாளர் தினம்-அன்னை பூபதி ஒரு குறியீடு! தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக, அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாக இந்த ஆண்டு தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. இந்த ஆண்டு அன்னை பூபதியின் நினiவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள். விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழ…
-
- 0 replies
- 822 views
-
-
சிலம்பாட்டம் http://youtu.be/vELr5M98UJw பழந்தமிழ்க் கலைகளுள் சிலவற்றைப் பெருமையாகப் பேசவும், அவற்றைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுமிருக்கிறது நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் எனச் சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்த போதிதர்மர் என்பார் சீனாவுக்குச் சென்று, அங்கிருந்த மக்களுக்கு தமிழ்க்கலைகளைக் கற்றுக் கொடுத்துக் காப்பாற்றினார். அதன் காரணமாகச் சீனர்கள் இன்றைக்கும் அவரைக் கடவுளாகப் பாவித்து வணங்கி வருகிறார்கள் எனும் இன்றைய நடப்பைச் சுட்டிக்காட்டி, அவர் கற்றுக் கொடுத்த கலைகள் சிலவற்றையும் திரையில் காணச்செய்கிறது ஏழாம் அறிவு. பழந்தமிழ்க் கலைகளுள் சிலம்பம், குத்துவரிசை, நோக…
-
- 1 reply
- 822 views
-
-
http://youtu.be/AwmRUSK4fNU
-
- 1 reply
- 821 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0 என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், …
-
- 1 reply
- 821 views
-
-
கார்த்திகை மாதம் மாவீரர்களின் நினைவேந்தல் மாதம் இப் புனித நாட்களை முன்னிட்டு யேர்மனியில் மீண்டும் கார்த்திகை பூ வடிவத்தில் தபால் முத்திரை பாவனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மாவீரர்களை அவர்களின் தியாகத்தை தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஈழத் தமிழினத்தை அடையாளப்படுத்தும் வகையில் மீண்டும் கார்த்திகை பூ வடிவத்தோடு ஆயிரக்கணக்கான தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் யேர்மனி உட்பட பல்வேறு நாடுகளில் தேசியத் தலைவர் தேசியக்கொடி தமிழீழம் தேசியச் சின்னங்கள் படம் பொறித்த தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டது. யேர்மன் தபால் அமைச்சின் விதிமுறைகளுக்கு உள்ளிட்டு எமது ஈழத்தமிழர்களின் விருப்பதிற்கு அமைய கடந்த வருட தேசியச் சின்னங்கள் பொறித்த முத்திரை வெளியீட்டை தொடர்ந்து ஸ்ரீலங்கா …
-
- 1 reply
- 820 views
-