Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தன. யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூ…

  2. [size=5]புலம் பெயர்ந்த தமிழ் பெற்றோர்கள் பலர் தமது குழந்தைகளுக்குத் தமிழ் பெயர் வைக்காமல் என்னென்னவோ பெயர்கள் எல்லாம் வைக்கின்றார்கள். ம்.......... அவர்களுக்கு சிறிது இந்த இணைப்புகள் உதவும் என நினைக்கின்றேன்!!![/size] http://www.shaivam.org/snmstham.htm http://linoj.do.am/index/0-83 http://suunapaana.bl...og-post_26.html http://namvaergall.b...og-post_24.html

  3. முதலிரவைத் தேடி..... காதல் அடுத்து கலியாணம் அடுத்து முதலிரவு. சாந்தி முகூர்த்தம் என்று அதற்கு சம்பிரதாயப் பெயர் வேறு. சாந்தி என்றால் என்னவென்று ராணியைக் கேட்டாராம் ராணி காணும் அந்தக் கேள்வியையே ராஜாவைக் கேட்டாராம் என்கிறது பழைய திரைப் படப் படல் வரிகள். தடையற்ற உடலுறவு மேலை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு முந்திய உறவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது. திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் வெளிப் பாடாகவும் கலவியில் பேரின்பம் காணும் அற்புதப் பேறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு மதமும் மதத் தன்மைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகமும் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் கட்டி…

  4. தோற்றம் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாத மிகப்பழமை வாய்ந்த சிறப்பினைக் கொண்டவை. நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் வாழ்வியலையும், வரலாற்றையும் புலப்படுத்தும் நாட்டுப்புற இலக்கியங்கள் நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகும். நாட்டுப்புற இலக்கியங்களிலே நாட்டுப்புற மக்களின் உள்ளத்து எழும் உணர்வுகளையும் கற்பனை ஆற்றலைக் காணலாம். மக்களால் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டுப் பாடப்பட்டு வந்த, வருகின்ற நாட்டுப்புற இலக்கியங்களுள் விடுகதையும் ஒரு கூறாகும். இது விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வினாவிடைப் போக்குடையது. சிந்தனையைத் தூண்டும் சிறப்புடையது. அறிவுக்கு உரைகல்லாக விளங்குவது. புதிர்மைப் பண்பினைக் கொண்டிலங்குவதால் ''புதிர்'' என்று அழைக்கப்படுகின்றது. ''விடுகதையால் கூறுபவனின் …

  5. சிதம்பர இரகசியம் ! சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியா…

  6. சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் : சென்னை: - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது. மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது. கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது. மாம்பலம்: மாம்லான் எனும் …

  7. பொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு பெரும்பாலான வலைமனை வாசிகள் எப்படியும் ஒருதடவையேனும் பொன்னியின் செல்வனை ரசித்து ருசித்துப்படித்திருப்பீர்கள். வந்தியத்தேவனுடன் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை, ஈழம், தஞ்சை என வலம் வந்திருப்பீர்கள். எத்தனையோ வரலாற்று நாவல்கள் வந்தாலும் பொன்னியின் செல்வன் படிப்பதுபோல் ஒரு உற்சாகம் ஏனைய நாவல்களில் குறைவாகவே இருக்கும். ஒரு வலையில் சுந்தரச்சோழரின் இறுதிக்காலத்தில் என்ன நடந்தது பற்றி அலசி ஆராய்ந்திருந்தார்கள்(அதன் சுட்டியை மறந்துபோனேன்) மதுராந்தகருக்கு என்ன நடந்தது? நந்தினி என்ன ஆனாள்? போன்றவற்றைப் பற்றிப் பலர் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் ஒரு காரியத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருந்…

  8. குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி சென்னை: திட்டக் குழு உறுப்பினர் ஜெகதீசன் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது: இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மண்டபத்திலே நடைபெற்றிருக்கின்றன. தந்தை பெரியார் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கத் தொடங்கிய அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தத் திருமணங்கள் நல்ல முறையிலே நடைபெற்றன என்பதும், அந்த வகையில் திருமணம் புரிந்துகொண்ட மணமக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்து கொண்ட பின்னரும்கூட, இன்னும் பலர் நம்மு…

  9. அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூட…

    • 23 replies
    • 8.6k views
  10. புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா? அன்பான யாழ் கழ உறவுகளே! நாம் புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களில் சிதறிக்கிடக்கிறோம். அப்படியிருந்தும் எமது மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்களை ஓரளவாவது கட்டிக்காத்து வருகிறோம். இந்நிலையில் நாம் வாழும் நாடுகளில் இதனைத் தொடர்ந்து கட்டிக் காப்போமா? கைவிடுவோமா என்றொரு கேள்வி என்னில் எழுகிறது. இதற்கான தலைப்பைத்தான் மேலே தெரிவு செய்துள்ளேன். இதனை வாதப்பொருளாகக் கொண்டு, உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து இளைய தலைமுறயினரை ஊக்குவிக்க ஆவன செய்வீர்களென எதிர்பார்க்கின்றேன். …

    • 19 replies
    • 8.6k views
  11. ஈழத்தில் ஆயுதவிடுதலைப்போர் தொடங்கிய காலத்தில் இலங்கையரசிற்கு எதிரான உணர்ச்சி வேகத்தில் ஈழத்தில் 33 போராட்ட இயக்கங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அவை எல்லாமே அன்றைய காகட்டத்தில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். அதனாலேயோ தமிழகத்தில் புலிகள் அமைப்பு பல சந்கடங்களை சந்தித்தது. அப்படி தொடங்கிய இயக்கங்களின் பெயர்களை எனது நினைவில் வந்தவற்றை இங்கு தருகிறேன். 1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.( P.L.O.T )தலைவர் உமாமகேஸ்வரன். வறுத்தலைவிளான் யாழ்ப்பாணம் 2)தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O )தலைவர் சிறீ சபாரத்தினம். கல்வியங்காடு யாழ்ப்பாணம். 3)ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி '(E.P.R.L.F. )தலைவர் பத்மநாபா .காங்கேசன்துறை யாழ்ப்பாணம். …

  12. தாம் தமிழர்கள் என்று...நவராத்திரி...தீபத்திரு

  13. தமிழில் அறிவியல் இல்லை, அறிவியலுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை , தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் தமிழின எதிரிகள் இழித்தும் பழித்தும் பேசி வந்துள்ளனர். அப்படி பேசியவர்களை தலைவர்கள் என்று தமிழர்களே தலையில் தூக்கி சுமக்கவும் செய்த கொடுமை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழின எதிரிகள் திட்டமிட்டு தமிழர்களுக்கு எந்த பண்பாடும் நாகரீகமும் அறிவும் இல்லை என்ற பொய்ப்பரப்புரை செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிதல் வேண்டும். சரி, அப்படி எத்தகைய அறிவை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை நாம் ஆய்வு செய்தல் அவசியமாகும். சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல்…

  14. வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது "தெள்ளாற்றுப் போர்". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் என்ன நடந்தது?.பார்ப்போம்.. "தெள்ளாறு", இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், அங்கு இருப்பவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை தங்கள் ஊர் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று.... பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன…

    • 1 reply
    • 8.4k views
  15. ஒரு பெண்போராளி பற்றி பொய்யான செய்தியை பரப்பியிருக்கும் ஒரு ஊடக வன்முறையாளனான றாமின் குறித்த கட்டுரைக்கான எதிர்வினை இது. இவ் எதிர்வினையை யாழ் இணையம் நீக்காது என நம்புகிறேன். எங்களுக்காக வாழ்ந்த பல பெண்போராளிகளின் வாழ்வை அழித்து வரும் றாம் ஒரு மூத்த தளபதியை புலனாய்வாளர்களுடன் தொடர்புபடுத்தி மோசமாக எழுதி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார். சக பெண்ணை ஒரு போராளியை ஒருவன் கேவலப்படுத்தியதற்கு பலர் எதிர்ப்புக்குரலைக் காட்ட பயந்துள்ளார்கள். என்னால் அப்படி பார்த்து ஒளிந்திருக்க முடியவில்லை. அதனால் இவ் எதிர்வினையை எழுதியுள்ளேன். இன்னும் பல பெண் போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாமை மக்கள் முன் அடையாளம் காட்டவே இவ்வெதிர்வினையை எழுதியுள்ளேன் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். …

  16. இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே. ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது. இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம். குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்… ௧) ஆபிரிக்கா, மடக…

  17. கடந்த திங்கட் கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்…

  18. தமிழன் கண்ட சித்திரக்கவி தமிழர்களது அழிந்து கொண்டுவரும் கலைகளில் ஒன்றான சித்திரக் கவி பற்றி ஆராய்வது எங்கள் முன்னே உள்ள தேவையை உணர்த்தி நிற்கின்றது . இந்த சித்திரக் கவி எப்படிப்பட்டது என்று பார்பதற்கு முதல் , சித்திரக் கவி என்றால் என்ன என்பதும் அதன் ஆதிமூலத்தையும் நாம் பார்க்க வேண்டும் . தமிழ் மொழியில் உள்ள ஐந்து வகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றில் , அணி இலக்கணத்தை விளக்குமுகமாக எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்தத் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் அண்ணளவாக பனிரண்டாம் நூற்றாண்டுகளாகும் ( (1133-1150) . இந்த தண்டியலங்காரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டு ( பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் ) சொல்லணியியலில் சித்திர…

  19. Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 1/5 Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 2/5 https://dai.ly/x276ecahttps://dai.ly/x276ecahttps://dai.ly/x276eca Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 3/5 ".. this bronze is made for Raja Raja when Europe still languishing in the dark ages incapable of producing anything approach to beauty and technical accomplishment of this piece .. " Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 4/5 ".. women in southern India practice ritual bathing every day, this is where Europe learned that it might be good idea to…

    • 43 replies
    • 8.1k views
  20. தீபத் திருநாள் - தீபாவளி எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி ஒரு முன்னோட்டம். தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை.வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே 'தீபாவளி". தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது, 1. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது. 2. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமண…

  21. சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி…

    • 12 replies
    • 8.1k views
  22. சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு சிலம்பு நா. செல்வராசு கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை. ''பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு'' (கலி.89) எனவும் ''நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்'' (பரி.11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே, கொற்றவைச் சிறுவன் (திருமுருகு.250) என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ''விறல் கெழு சூலி'' (குறு. 218) எனவும் ''உருகெழு மரபின் அயிரை'' (பதி. 79,90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர் (வித்தியானந்தன், 1954). நெடுநல் வாடையில் ப…

  23. வீர மங்கை வேலு நாச்சியார் இந்திய விடுதலைப்போரில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய முதல் பெண் வீரங்கனை வீரமங்கைவேலுநாச்சியார் ஆவார். தென்னிந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மகத்தான போர் நடத்தி வெள்ளையரையும்,ஆற்காடு நவாப்பையும் புறங்காண செய்த வீரமங்கை வேலுநாச்சியார்தான். இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் தம்பதிகளுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். வாள்வீச்சு, அம்பு…

    • 0 replies
    • 8k views
  24. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழர்கள் சூடுசுரணை அற்றவர்கள் என்றும், கருங்காலிகள் என்றும் தந்தை பெரியார் கடிந்து கொண்டதாக பல இடங்களில் குற்றச் சாட்டு இருக்கிறது. பெரியார் மீது பற்றுக் கொண்ட எங்களுக்கு இதை உண்மை என்று ஒத்துக்கொள்கின்ற பக்குவம் உண்டு. பெரியார் சொன்ன ஒன்றை சொல்லவில்லை என்று அடம்பிடித்து பொய் கூற மாட்டோம். அது எங்கள் வழக்கம் இல்லை. ஆனால் பெரியார் ஏன் அப்படி சொன்னார். தமிழை சீர்திருத்த வேண்டும் என்று அரும்பாடு பட்டவர் அவர். தமிழிசைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஆனால் அவர் ஏன் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். இதோ அவரே அதற்கு விளக்கம் சொல்கிறார் அட முட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு …

  25. இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் 271ஆவது பிறந்த நாள் 03.01.1740 " ========================= 03.01.1740 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு மண இணையருக்கு மகனாக பிறந்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு ஆண் உடன்பிறப்புகளும், ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு பெண் உடன்பிறப்புகளும் இருந்தனர். ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சால…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.