சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா ? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா.? வாட்ஸ்அப் ஆக இருக்கட்டும்; ஃபேஸ்புக்காக இருக்கட்டும், இமாஜி பயன்படுத்தப்படாத உரையாடலே இல்லை எனலாம். ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் செய்திகளில் உணர்வை வெளிப்படுத்த பல்வேறு இமோஜிகளை உபயோகிக்கிறோம். ஜூலை மாதம் 17ம் தேதி, உலக இமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. தெரியுமா ? உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் இமோஜிகளுக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பட்டியலிட்டுக் காட்டுகிறோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இவர்தான் உருவாக்…
-
- 10 replies
- 3.1k views
-
-
வேட்பாளர்களே உங்கள் தொண்டர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கு பணத்தை மாத்திரம் கொடுக்காதீர்கள் கொஞ்சம் சமூக சிந்தனையையும் ஊட்டுங்கள்... திறக்கப்பட்டு சில நாட்களே ஆன இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரை நாசமாக்கி வைத்திருக்கும் இச்செயற்பாட்டின் மூலம் உங்கள் சமூக சிந்தனை கேலிக்கூத்தாகிறது. யாரோ ஒரு கூலித்தொண்டன் கொடுத்த காசுக்கு வேலைசெய்கிறேன் என கிஞ்சித்தும் சமூக சிந்தனையின்றி இதில் ஒட்டிவிட்டுச்சென்றிருக்கிறான். அந்தச்சுவற்றுக்கு வண்ணம் பூசி சில நாட்கள்தான் ஆகிறது. உங்கள் வீட்டின் சுவற்றில் இவ்வாறு போஸ்டர் ஒட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மக்கள் ஒட்டியவன் யாரென்று பார்க்க மாட்டார்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் உள்ளவர் யாரென்றுதான் பார்த்து காறித்துப்புவார்கள…
-
- 3 replies
- 1.2k views
-
-
•எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார். அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார். எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பய…
-
- 33 replies
- 4.5k views
- 1 follower
-
-
தயவு செய்து முழுவதுமாக வாசிக்கவும்! சுமந்திரன் பேசிய வழக்குகள்! 1. வெளியேற்ற வழக்கு (2007) ஜூன் 2007 இல், கொழும்பில் உள்ள லாட்ஜ்களில் வசிக்கும் தமிழர்கள் காவல்துறையினரால் நகரத்திலிருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அன்று காலை உச்சநீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது, செய்தித்தாள் அறிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் க…
-
- 28 replies
- 5.3k views
- 1 follower
-
-
வீரசாகசம் புரிவதாக நினைத்து, வீடியோ போடுவதால் பல வித பிரச்சினைகள் வரும், அதில் இது ஒருவகை. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ இந்த வீடியோ தற்பொழுது எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியாகச் சொன்னால் இந்த வீடியோ 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது, பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டில் உள்ள சாண்டோ மரியா எனும் ஆற்றில், சிர்லேய் ஒலிவிரியா மற்றும் அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வழியில் ஒரு அனகொண்டா பாம்பு எதிர்பட்டது. அதுபாட்டுக்கு இரை தேடி போய் கொண்டிருந்தது. பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - Jun 26 (International Day in Support of Torture Victims). இலங்கையில் தமிழர் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார்கள் / செய்யப்படுகிறார்கள் என்பதைக் காட்ட ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்தக் காணொளியில் கொடுக்கப்படும் வாக்குமூலங்களைக் கருதலாம். பெற்றோலில் நனைக்கப்பட்ட பையைத் தலையில் கட்டி அடித்து உதைக்கப்பட்ட ஆண். காலைத் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு அடித்து சித்திரவதை செய்து, பாலியலில் ஈடுபட வைக்கப்பட்ட ஒருவர். 4/5 ஆண்களால் ஒவ்வொரு இரவிலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வயர், மின்சாரத…
-
- 0 replies
- 603 views
-
-
கிழச்சிங்கமும், நரிகளின் திரி(ணி)ப்பும் !!! கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Systematic Genocide), ஒரு இனத்தின் வரலாற்றை சிறுகச்சிறுகக் கருவறுக்கும். இது பாரிய இனவழிப்பு யுத்தத்தின் மூலம் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிப்பதை விட அபாயமானது. அதுபோன்றே, திட்டமிட்ட கருத்தியல் விதைப்புக்களூடாக வரலாற்று மகோன்னதங்களின் விம்பங்களை உடைத்து, அவற்றுக்கு மாற்றீடாக நேரெதிர் விம்பங்களை மக்கள் சிந்தைக்குள் புகுத்தி, பட்டாபிஷேகம் நடத்தும் நுண்ணரசியற் பொறிமுறை. …
-
- 0 replies
- 1k views
-
-
இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்க ஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்து நிறுத்தியதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். ஏனெனில் அன்றைய யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நூலகம் திறக்கப்படவிருந்தது. செல்லன் கந்தையன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத…
-
- 35 replies
- 5.5k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் வரும்! பனைக்குக்கீழ் வீடுகட்டி வாழ்ந்தும்... பனைபற்றி அறியாமல் போனோமோ?
-
- 1 reply
- 910 views
-
-
மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பற்றி இலங்கையில் இருக்கும் இரு பெண்களது கருத்துக்களை கேளுங்கள் ..அதில் ஒருவர் சட்ட ஆய்வாளராகவும், சீனியர் லெக்சரராகவும் பணியாற்றுகிறார்.
-
- 1 reply
- 848 views
-
-
நானும் யாழ் இணையமும் - கோமகன் நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப் பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள் சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்…
-
- 14 replies
- 2.8k views
-
-
-
- 1 reply
- 891 views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்த தம்மையா, சிவராம், நடேசன் போன்ற புத்திஜீவிகளின் உயிர் பறிக்கப்பட்டது இதே ஏப்ரல் மே மாதங்களில் தான். 16 வருடங்களுக்கு முதல் நடேசன் 2004 மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மண்ணைவிட்டு வெளியேறிய நான் கடந்த இரு வருடங்களுக்கு முதல் மட்டக்களப்புக்கு சென்றிருந்தேன். தமிழ் ஊடகவியலாளர்களிடையே ஒன்றுமையும் பலமும் இருக்க வேண்டும் என உழைத்த நடேசன், சிவராம் போன்றவர்களின் கனவுகள் இன்று சிதைக்கப்பட்டு ஏட்டிக்கு போட்டியாக பல ஊடக அமைப்புக்கள், மட்டக்களப்பில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறாத நிலையிலேயே அங்கிருந்து …
-
- 0 replies
- 916 views
-
-
தூங்கா நகரின் ராப்பாடிகள்..... நான் தமிழகம் முழுவதிலும் சுற்றியலைய தொடங்கிய காலத்தில் மதுரை என்றாலே பலரும் உடன் விசாரிப்பது “உங்க ஊரில் நள்ளிரவிலும் சூடாக இட்லி கிடைக்குமாமே என்பது தான்”. மதுரை ஒரு தூங்கா நகரம் என்பதே வெளியூர்க்காரர்கள் எப்பொழுதுமே வியப்பாகவே இருக்கும். 2500 ஆண்டுகளாகவே மதுரை ஒரு தூங்கா நகரமாக வரலாற்றை விழித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது. மாலை நேரத்தில் விதவிதமான இடைத்தீனிகள் (Snacks) மதுரை தெருக்களை அலங்கரிக்கும், எந்த வீதியில் நடந்தாலும் இந்த நறுமணங்கள் வந்து மூக்கை துளைக்கும், நம்மை கடை நோக்கி அழைக்கும். உளுந்த வடை, பருப்பு வடை, கார வடை, கீரைவடை, பைரி (முள்ளுமுருங்கை வடை), தேங்காய் போலி, பருப்பு போலி, ரவா அப்பம், காரப் பணியாரம், இனிப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
Mano Ganesan <அஞ்சலி செய்வோம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்!!> இந்த நொடியில் என் மனதில்… (19/05/20) இன்று பெருந்தேசியவாதம், போர் வெற்றி விழாவை கொண்டாடுகிறது. சிங்களம், பெளத்தம் ஆகிய இரண்டு சிந்தனையோட்டங்களின் ஊடாக தனது அரசியல், இராணுவ பலத்தை உறுதி செய்துகொள்ள இன்றைய ஆட்சி எதுவும் செய்யும். இந்த கொண்டாட்டமும் அதில் ஒன்றுதான். “பிறிதொரு அந்நிய நாட்டுடன் போர் செய்யவில்லை”, “உள்நாட்டுக்குள்ளேயே நடந்த போர்”, “இறந்து போனவர்களும் இலங்கையர்களே” என்ற வாதங்கள் எல்லாம், இங்கே எடுபடாது. இந்த இனவாத இறுக்கம்தான், இவர்களது இருப்புக்கு அடித்தளம். இதை நா…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுமந்திரன் - சமுதித்த.... சர்ச்சைக்குரிய பேட்டி சிங்களத்திலிருந்து தமிழாக்கம் : சுவிசிலிருந்து ஜீவன் சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரை தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A. சுமந்திரன் அவர்கள் வணக்கம் சுமந்திரன்: வணக்கம் சமுதித்த : தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முக்கிய காரணம் என்ன சுமந்திரன்: உண்மையான காரணம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நியாயமான உரிமை கிடைக்கவில்லை எனும் எண்ணம் உள்ளது. அதை சரி செய்வதற்காக 1949 இல் தமிழரசுக் கட்சி உருவானது. அதன் பின்னர் அதுவே வெவ்வேறு பெயர்களில் மாறி வந்து இப்போது …
-
- 0 replies
- 1.4k views
-
-
வழக்கமா பார்த்து விட்டு கடந்து செல்லும் பதிவு இல்லை நிர்வாகம் பிழையென்றால் தூக்கி விடவும் அவவின் முகநூலில் செந்தமிழில் சரளமாய் எழுதி பின் எடிட் பண்ரா அவவின் முகநூல் முகவரி https://www.facebook.com/dila.ni.7731?__tn__=%2CdC-R-R&eid=ARCWvNQL_0Bifa3yfqHYcmLR-XhAp12OnSXSUfc8DEE36rNiVcSRJ7A2Yma22K1waM1JVVvXVP5fHSQt&hc_ref=ARRHXQTO4uf66afyxO2jw_uj9CXHbCd34Ko7IAFYxlATgGi80NZ7UoOrfiJ8ZeIGB2A&fref=nf மது குடிக்க வரிசையில் நின்றதைவிட இது என்னென்று சொல்வதென்று தெரியவில்லை !......
-
- 19 replies
- 3.2k views
-
-
பொலிஸ்.. அளவில்லாத கையுறையை கொடுத்து அணியச்சொன்னது முதல் தவறு... கையுறையை வெற்றுக்கையால் எடுத்து கொடுத்தது இரண்டாவது தவறு... அவரின் வயதுக்கேற்ற தடுமாற்றத்தை புரிந்துகொள்ளாமல் அதில் நிற்கவைத்து விளக்கம் அளித்தமை தவறு... மா.வை ஐயா விட்ட மிகப்பெரும் தவறு இந்த கையுறை அளவு காணாது வேறு கொண்டுவா என கூறாமல் விட்டது... ஒப்புக்கு அதை வாங்கி பாதிக்கையில் நுழைத்துக்கொண்டது தவறு... இப்பிடியெல்லாம் நடக்குமென்று தெரிந்து ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யாது சென்றது தவறு... ஒரு பொலிஸ்காரர் முன்பு ஸ்கூல் பையன் மாதிரி நின்று கதை கேட்டுக்கொண்டு நின்றது தவறு... தமிழரசின் தலைமையென்பது எதற்கும் தலைபணியாத தலைமையாக இருக்கவேண்டும்... இலங்கை அரசுக்கு நாகரீக அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் தமி…
-
- 4 replies
- 1.9k views
-
-
க.பொ.த. சாதாரணம் – சரியான முறையில் எதிர்கொள்வோம்! ======================================= இலங்கையில் மீண்டும் ஒருமுறை மாணவர்கள் பலருக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு கவலையையும் தரக்கூடிய சூழ்நிலை இப்போது. கல்விப் பொதுத் தராதரப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. வழமைபோல அனைத்துப் பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களைப் பலரும் பாராட்டித் தள்ளவும், பாடசாலைகள் தமது சாதனைப் பட்டியலை மீண்டும் தூக்கிப் பிடிக்கவும் இன்னொரு சந்தர்ப்பம் வந்துள்ளது. அதேபோல பிரபல பாடசாலைகள் தாம் பொறுக்கியெடுத்து வைத்துக்கொண்ட மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளை கல்வெட்டுகளில் பொறித்துக்கொள்வார்கள். ஊரெங்கும் தண்டோரா போட்டுச் சொல்வார்கள். அதே நேரம் இந்தப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுக…
-
- 3 replies
- 894 views
-
-
மனிதாபிமான உதவிகளும் மதுபானக் கடைகளும் ! ========================================= இலங்கையில் அண்மையில் COVID-19 தொற்றினைத் தடுக்கக் கொண்டுவரப்பட ஊரடங்கு உத்தரவை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் பல குடும்பங்களுக்கு வருமானம் அற்ற நிலை ஏற்பட்டது நாங்கள் அனைவரும் அறிந்ததே. அதையடுத்து அவர்களுக்கு உதவ புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பலவும் முன் வந்ததும், அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பொருட்களை அனுப்பி வைத்ததும் நாம் அறிந்ததே! அதே நேரம் இலங்கை அரசே வருமானம் குறைந்த, வருமானம் இழந்த குடும்பங்களுக்கு பணக் கொடுப்பனவுகளை மேற்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இலங்கையில் உள்ள சில மத அமைப்புக்களும் சமூக அமைப்புக்களும் தமது பங்குக்கு உணவுப் பொதிகளை வழங்கி வருகின்ற…
-
- 7 replies
- 1.2k views
-
-
விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?! பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று . இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொ…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழர் இளையவர்கள் மத்தியில் தற்கொலைகள். ==================================== அண்மையில் என் நண்பரின் தளத்தில் பார்த்த ஒரு செய்திதான் என்னை இந்த விடயத்தை இப்போது எழுதத் தூண்டியது. பதினாறு வயதேயான ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது எமது சமூகத்தில் நடக்கும் முதாவது தற்கொலையுமில்லை, இறுதித் தற்கொலையுமில்லை. எமது சமூகத்தில் ஏன் இளையவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று இதற்கு முன்னரும் பலரும் ஆராய்ந்துள்ளார்கள், இனியும் ஆராய்வார்கள். ஆனால் அவையெல்லாம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? நிச்சயமாக இல்லை. பதின்ம வயதினர் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பதுபற்றி எமது சமூகத்தினருக்கு தெளிவு ஏற்பட்டால் மட்டுமே இனிவரும் காலங்களில் இவ்வாறான தற்கொலையைத் தடுக்க முடியு…
-
- 0 replies
- 1.1k views
-