சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு – மீறினால் தடை! நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் அதனை நேரலையாக பேஸ்புக்கில் ஒளிபரப்பியது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேரலை வசதியை பயன்படுத்துவதில் பேஸ்புக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறியதற்காக தடை செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட சில நாட்கள் நேரலை வசதியை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. http:/…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியாவில் கூர்மையடைந்து வரும் இந்து முஸ்லிம் முரண்பாடுகளிலிருந்து இதை பார்க்கவும் சில வருடங்களுக்கு முன் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அவர் பெயர் அப்பாஸ் அஹமத் சுமார் அறுபது வயதிருக்கும். பழைய நடிகர் பாலாஜி போல் நல்ல பருமனான உடல். நல்ல நிறம். சிரித்த முகம், மணக்க மணக்க ஏதோ செண்ட் போட்டிருந்தார். வெள்ளை கோடு போட்ட கைலியும் ஜிப்பா போல ஒரே ஒரு பட்டன் வைத்த ஷர்ட்டும் அணிந்திருந்தார். சென்னையின் புறநகரில் நிலம் ஒன்று வாங்கப் போகதாகவும் அதுக்கு லீகல் ஒப்பினியன் வேண்டும் என்றும் சொன்னார். சில டாக்குமெண்டுகளை உடன் எடுத்து வந்திருந்தார் அதுக்கென்ன சார். பார்த்து சொல்கிறேன் என்றேன். என்னை எப்படி தெரியும் என்று கேட்டேன். அவர் மகளின்…
-
- 0 replies
- 865 views
-
-
முகமூடி மற்றும் குறிப்பிட்ட மருந்துவகைகளுக்கு ஜேர்மனி ஏற்றுமதி தடை விதித்துள்ளது. இதனடிப்படையில் ஜேர்மனியூடாக சுவிஸ் மற்றும் இத்தாலி செல்ல இருந்த முகமூடி மற்றும் மருந்துப்பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதே போல பிரான்ஸ் அரசும் முகமூடிகளின் ஏற்றுமதியைத் தடுத்து பதுக்கியுள்ளது. இது ஒரு மனிதாபிமானமற்ற செயலென சுவிஸ் அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந் நிலை தொடருமாக இருந்தால் சுவிற்சர்லாந்தில் எந்த ஒரு அறுவைச்சிகிச்சைகளும் நடைபெறமாட்டாதென மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள். Inuvaijur Mayuran ############ ########### ############## பிரான்சில்.... முகக் கவசம் மருத்துவர் எழுதித் தந்தால் மட்டுமே பார்மசிகளில் வாங்க முடியும்.... நேரடியாக பாமர…
-
- 0 replies
- 779 views
-
-
வாழ்க்கை மட்டுமல்ல, இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது. சிறீலங்கா என உங்களால் அழைக்கப்பட்ட தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை உலகறியா ஏராளம் ஏராளம். இன்று இந்த உலகம் சந்திக்கின்ற அத்தனையும், இதனையும் விட அதிகமாக நாம் எதிர்கொண்டோம். ஆம்...! எம்மீது நீண்ட பொருளாதார தடை போட்டார்கள். வாயை கட்டி வயித்தைக்கட்டி உள்ளூர் உற்பத்திகளை நம்பித் தாக்குப் பிடித்தோம். நிலத்திலும் கடலிலும் பாதைகளை துண்டித்து, எல்லைகளை கைப்பற்றி எம்மை கு…
-
- 2 replies
- 995 views
-
-
முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• செய்யப் போறீங்களா, •••••••••••••••••••••••••••••• ஒரு நிமிடம் இதை படியுங்கள். ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்தச் சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டு வந்த பாத்திரங்களை திரும்பவும் ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக…
-
-
- 3 replies
- 1.1k views
-
-
முறுக்குள்ள (Proud) செய்தியாளர் சசி- -- ------------- ----------- கிழக்கு மாகாணச் சுயாதீனச் செய்தியாளர் சசி புண்ணியமூர்த்திக்கு, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை ஊடக சுதந்திரத்துக்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை சசி புண்ணியமூர்த்தியிடம் இல்லை என்ற ஒரு காரணத்தினால், அவர் ஊடகவியலாளர் அல்ல என்ற முடிவுக்கு வருவது மிகவும் அபத்தமானது. அப்படியானால் அரசாங்கத் தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டை இல்லாத ஏனைய செய்தியாளர்கள் சிலரை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கொள்ள அனுமதித்திருக்கக் கூடாது. …
-
- 0 replies
- 356 views
-
-
''தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது என முன்னாள் போராளி சூசை எங்களிடம் தெரிவித்தார்.'' என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (T. Sathiyamoorthy) தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் நக்கீரன் சபை - புட்டுக்கதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”2008 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி முள்ளிவாய்க்காலில் முக்கிய போராளிகளான சூசை, பானு, சொர்ணம் ஆகிய மூவரையும் சந்தித்தோம். தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது எனவும் ஐக்கிய நாடுகள் முகவர்கள் வருகின்ற போது இந்த ஆயுதங்களை கையளித்து விட்டு நான் ப…
-
- 0 replies
- 511 views
- 1 follower
-
-
ஒரு மாதத்தில் மட்டும், முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள் அண்மையில் தெளஹித் ஜமாத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் தொடர்புபட்டிருந்தார். இப்பெண் திருகோணமலையை பூர்விகமாக கொண்டவர் அதேவேளையில் இப்பெண் தற்கொலை குண்டு தாரியாக மாற்றப்பட்டிருந்தார்.மேலும் சாய்ந்த மருதில் இவர் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தார் இதை போல் இன்னுமொரு அதிர்ச்சி தகவல் தமிழர் தரப்புக்கு கிடைத்துள்ளது அதாவது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் கடந்த மே மாதம் 2018 ல் மட்டும் எட்டு தமிழர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இனம் மற்றும் மதம் மாற…
-
- 19 replies
- 4.3k views
- 1 follower
-
-
முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலிப்போம்! பாத்திமா மாஜிதா வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால், அரசை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒருவிதத் தப்பித்தல்தான். “தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை” என்று சப்பைக்கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதிவிடுவோம். கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் முன்னோக்கிப் பார்க்கிறேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் இருந்தத…
-
- 3 replies
- 1.8k views
-
-
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யா. இவருக்கு 45 வயதில், முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருந்தது. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்து 70 வயதில் தடகள வீராங்கனையாக 30-க்கும் பதக்கங்களை வென்றுள்ளார். #Shakuntalapandya #Sports #Athlatic இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
Thevarasa Kailanathan மூத்த ஊடகவியலாளர் #இரட்ணம் #தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் #யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். புலம்பெயர் சமுகத்துடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மூத்த #ஊடகவியலாளர் Ratnam Thayaparan தனது #மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, பின் பக்கமாக வந்த #வாகனம்அவ…
-
- 0 replies
- 718 views
-
-
மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 16, 2025 1 Minute கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட சீறுநீரகங்கள் வேறு தேவையான நபர்களுக்கு பொறுத்தப்படவுள்ளன. இந்நிலையில் மனிதனில் இறப்பு என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, மூளைச்சாவு என்றால் என்ன, மூளைச்சாவு – சட்ட ரீதியான வலு என்ன மற்றும் மூளைச்சாவின் பொழுது உறவினர்கள் உடல் அங்க தானங்களுக்கு பின்னிற்க மத ரீதியான காரணங்கள் என்ன போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு அலசுகின்றது. மருத்துவத் துறையில் இறப்பு என்றால் எமது இருதயம் நுரையீரல் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதாவது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியன முற்றாக நிறுத்தப்படுவதினை தொடர்ந்து மூ…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
தொடர்ச்சியாக செல்போன் பாவிப்பதால் மூளை செயலற்றதாக மாறுவதாக காணொளியில் கூறுகிறார்கள்.
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
படிக்க படிக்க தலை சுத்துது ! Dr. Swamy letter to PM on P Chidambaram. வருமான வரித் துறையின் சென்னை புலனாய்வு பிரிவு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளி நாடுகளில் இருக்கும் சொத்து மற்றும் வங்கி இருப்பு பற்றிய முழு விவரங்களை 2௦௦ பக்கங்களுக்கு மேல் அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது. பி ஜே பி கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அண்மையில் ஊடகவியலார் சந்திப்பின் போது இந்த சொத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டார். ஆனால் ப. சிதம்பரத்துக்கு வேண்டிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இச்செய்தியை வெளியிடாமல் மறைத்துவிட்டன. வருமான வரி துறையும் அமலாக்கத் துறையும் நடத்திய பல …
-
- 0 replies
- 1.7k views
-
-
மெய்ப்பொருள் காண்பது அ(ரிது)றிவு. “தம்பி ஊரில என்ன நடக்குது ஒவ்வொரு நாளும் வெட்டுக்குத்து ,ஆவா குறூப்பின் அடாவடி எண்டு ஊர்ப்புதினத் தலையங்கத்தில அடிக்கடி வருது , கோயில் திருவிழாவுக்கு வேற வரோணும் இப்ப எப்பிடி நிலமை அங்க“ எண்டு தொடங்கின கனடாக் கோல் இடையிலயே cut ஆகீட்டுது. காலமை கோல் கதைச்சு முடியாமல்ல வேலைக்கு வெளிக்கிட வீட்டில மாமி வேற, “இப்ப பேப்பரைப் பாக்கவே ஏலாது முன் பக்கம் வெட்டும் கொத்தும், சண்டை எண்டுதான் இருக்கு” எண்டு புறுபுறுத்தபடி தேத்தண்ணிக் கோப்பையை கழுவப் போனா. இதை நம்பி வாட்டுக்குள்ள போய் வந்த newsன்டை எடுப்புக்கு ஏத்த மாதிரி நாலு “பீமன்கள்” இருப்பாங்கள், கை கால் எண்டு வெட்டுப்பட்டு தொங்கிக்கொண்டு இருக்கும், எப்பிடிப் பொருத்தப்போறம் எண்டு பாத்தா…
-
- 0 replies
- 420 views
-
-
ஆர்மேனியர்களுக்கு நடந்த படுகொலைகளை உலகம் ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கேட்டு நடக்க வேண்டிய தூரமும் வெகு தொலைவாகவே இருக்கும். அதைப் பார்க்க நாம் உயிரோடு இல்லாது போனாலும், நமது ஏதோ ஒரு தலைமுறை அதை நிகழ்த்திக் காட்டும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆக, நாம் இப்போது செய்யவேண்டியது தொடர்ச்சியாக இந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தியபடி நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டியதுதான். அதேவேளை எமது இயக்கம்/இயக்கங்கள் 'விடுதலை'யின் பெயரால் நிகழ்த்திய அநீதிகளையும் நாம் மனதார ஒப்புக்கொண்டாக வேண்டும். இல்லாதுவிட்டால் நாம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பொருட்டு கோரிநிற்கும் நீதியில் அர்த்தமிருக்காது. இந்த…
-
- 0 replies
- 210 views
-
-
எமக்கென ஒரு நாடு இருந்தது .. ..! அங்கு தமிழ் மட்டும்தான் வாழ்ந்தது.. .! மதம் என்பதை யாருமே கொண்டாடியதோ .. வெறுத்தத்தோ .. போற்றியதோ இல்லை .. ..! அவரவருக்கு வேண்டிய சமயச் சொற்பொலிவுகள் அந்தந்த இடங்களில் நடந்தது .. பிரிவினைவாதம் மதவாதம் இங்கு இருக்கவில்லை .. ..! பிராமணர்களும் இருந்தார்கள் .. அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்தார்கள் .. ! மொத்தத்தில் எல்லோருமே தமிழர்களாக மட்டுமே வாழ்ந்தார்கள் .. ..! அந்த நாட்டையும் ஒரு பெருமை மிகு தமிழ் மன்னன் ஆண்டான் .. .! சேர ,சோழ, பாண்டிய ஆட்சி எல்லாளன் தொடக்கம் பண்டாவன்னியன்வரை அத்தனை வீரத்தையும் ஒருவனாய் சுமந்து நின்றார் ....! சுபாஸ் சந்திரபோஸ் தொடக்கம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
Saravanan Vel மேற்கு வங்கத்தில் மமதாவின் தோல்வி எப்படி ஏற்பட்டது? --------------------------------------------------------- உலகிலேயே தீவிரமான மொழிப்பற்று உடையவர்கள் வங்காளிகள். உலகத் தாய்மொழி தினம் என்பது வங்க மொழியை வைத்தே கொண்டாடப் படுகிறது. முட்டாள் தனமாக வங்க மொழியின் மீது தாக்குதல் தொடுத்தார் மமதா. பள்ளிக் கல்வியில் உருது மொழியைத் திணித்தார் மமதா. பள்ளி கல்லூரிப் பாட நூல்களில் உர…
-
- 0 replies
- 1.2k views
-
-
#யாழ்ப்பாண_மொக்கங்கடையைத்தேடி யாழ் பட்டினம் திட்டமிடப்படாத நகரம். அதுவாய் அமைந்த Organic city. திட்டமிட்ட நகரங்களிலில்லாத ஒரு ஐந்து சந்தி யாழில் உண்டு. அதுதான் யாழ்ப்பாண முஸ்லீம்களின் ஏரியா. 1யாழ்ப்பாணத்தில், அஞ்சு லாம்படிச் சந்திக்குக் கிட்ட ' ஹமீதியா கபே' எண்டு ஒண்டு இருந்தது! ஹமீதியா கபே எண்டு கேட்டால் ஒருத்தருக்கும் தெரியாது! மொக்கன் கடை எண்டால், தெரியாத இளம் தலைமுறையே இருக்காது! அங்க சில பேர் ' ஆட்டு மூளை' ஓடர் பண்ணுவினம்! அபப, முதலாளி 'மொக்கன்' ஒரு கத்துக் கத்துவார்! தம்பி... ஐயாவுக்கு ஒரு ' மூளை' கொடு! அதே போல தம்பி.. இரண்டு ' பிஸ்டேக்' கொண்டோடி வா எண்டும் சொல்லுவார்! பிஸ்டேக்' எண்டால் என்ன எண்டு எல்…
-
- 1 reply
- 926 views
-
-
மொழித் திணிப்பு என்பது நமது பிரச்சினைகளை அவர்கள் தெரிந்து கொள்ள அல்ல. அவர்கள் சொல்வதை நாம் கேட்க. https://www.facebook.com/share/r/15D29WwYGF/
-
- 0 replies
- 470 views
-
-
-
- 0 replies
- 863 views
-
-
23 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டின் இரெண்டு உடான்ஸ் சாமிகள் மோதி கொண்ட காட்சி. இதில் ஒருவர் இப்போ கைதாகியுள்ள சிவசங்கர் பாபா. இந்த பேட்டியை வைத்து மறைந்த விவேக் செய்த காமெடி பேட்டி கீழே.
-
- 0 replies
- 1k views
-
-
நம்மட அடையாளங்கள், பண்டைய கோவில்கள் என்பன பல இந்த தீவை சுத்தி இருக்கிற போதிலும். பலரின் அலட்சியதன்மை, அறியாமையால் இளம் சமூகத்திற்கு அவை கடத்தபடாமலே செல்கிறது, அப்படி ஒரு இடம் தான்இதுல சொல்லி, காட்டி இருக்க இந்த சோழர் காலத்து சிவன் கோவிலும், அதனுடன் சேர்ந்த தமிழ் மொழி கல்வெட்டும். திருகோணமலையிலிருந்து 25- 45 KM தொலைவில் காணப்படுகிற இந்த இடம் பலருக்கு தெரியாமலே செல்கிறது, தொல்பொருள் திணைக்களத்தின் அலட்சியத்தால் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. நீங்களும் பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 5 replies
- 1k views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில கச்சாய் துறையில இருந்து ஒரு சின்ன தீவுக்கு போவம், இது பாக்க மாலைதீவுகளில இருக்க ஒரு சின்ன தீவு மாதிரி வடிவான ஒரு இடம், ஆனா யாருமே இங்க இப்போ இல்லை, ஒரே ஒரு சின்ன கோவில் மட்டும் இருக்கு, வாங்க நாங்க போய் எப்பிடி இருக்கு எண்டு பாப்பம்.
-
- 10 replies
- 1.3k views
-
-