தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
மெரினா கடற்கரையில் இன்று ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு! சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். சென்னையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். இந தநிலையில் தற்போது நினைவிடப் பண…
-
- 1 reply
- 408 views
-
-
தினமலரின் நச்சு செய்தி. சொல்லாத செய்தியை தானாக எழுதி வாசிக்கிறார்கள்.
-
- 1 reply
- 534 views
-
-
பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் பழங்கால கோயில்களில் ஐம்பொன் சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கடத்தல் சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.எனினும் அவர் மீது நம்பிக்கை இல்லை என கூறி தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசின…
-
- 1 reply
- 646 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம் பதவி, பிபிசி தமிழுக்காக 22 மார்ச் 2024 ஊர் கட்டுபாடு என்னும் பெயரில் தொடரும் சாதிய வன்கொடுமையால் இரண்டு பட்டியலின சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுக்கப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர் …
-
- 1 reply
- 663 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 15 மே 2024, 09:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யானை - மனித மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகளும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் யானை - மனித மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 மனிதர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் இறப்பதாக அந்த…
-
- 1 reply
- 342 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுள் 64.2% மாணவர்கள்தான் இரண்டாம் வகுப்பு பாடங்களை வாசிப்பதாகவும் 40% மாணவர்களே வகுத்தல் கணக்குகளை போடுவதாகவும் கல்வி ஆண்டு நிலை அறிக்கை 2024 (ASER Rural 2024) கூறுகிறது. பள்ளி மாணவர்களிடையே வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் தொடர்பாக இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் ஜ…
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை?- காதலன் கண்ணீருடன் எஸ்.பியிடம் புகார் இருவருக்கும் திருமண வயது பூர்த்தியடையாததால், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று போலீஸார் கூறியுள்ளனர். புதுக்கோட்டை அருகே தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விவேக் (20). பெயின்டர் வேலை செய்து வருகிறார். திருவரங்குளத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரி (19). இவர் புதுக்கோட்டை அரசுக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். விவேக்கும், சாவித்திரியும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சாவித்திரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சம…
-
- 1 reply
- 679 views
-
-
தமிழீழ விடுதலைக்கான மருத்துவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த கோரி இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் 9 மணி முதல் மாலை 5 மணிவரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர் பல தமிழ் ஆவலர்கள் மாணவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13717:doctor-tamileelam&catid=36:tamilnadu&Itemid=102
-
- 1 reply
- 612 views
-
-
இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பரவல் – தீயணைப்பு வீரர்கள் போராட்டம் மாதவரத்தில் உள்ள இரசாயன குடோனில் தொடர்ந்தும் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை முழுமையாக அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இரசாயன கிடங்கில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென தீ பிடித்தது எரிந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரசாயன பேரல்கள் வெடித்து சிதறியது. அதில் இருந்து சிதறிய தீயால் அருகில் இருந்த மேலும் 2 கிடங்குகள் எரியத் தொடங்கின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம், மணலி, மாதவரம், ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், கொருக்குப்பேட்டை, சென்னை விமான நிலைய மற்றும் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவன த…
-
- 1 reply
- 499 views
-
-
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனால் இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர மத்திய அரசு அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற செயல். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்தது தான் நினைவுக்கு வருகிறது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இன்ப படுகொலை செய…
-
- 1 reply
- 823 views
-
-
7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, கடந்த மாதம் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் மூத்த அமைச்சர்கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார். பல கோணங்களில் அந்த ம…
-
- 1 reply
- 587 views
-
-
சசிகலா இன்று விடுதலை: இன்னும் எத்தனை நாட்கள் பெங்களூருவில்? மின்னம்பலம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலாவின் தண்டனைக் காலம் இன்றோடு (ஜனவரி 27) முடிவடைகிறது. இன்று காலை 9.30 முதல் 10 மணிக்குள் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக ஜனவரி 20 ஆம் தேதி சசிகலா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 27) சசிகலா …
-
- 1 reply
- 686 views
-
-
சென்னை: தரமணியில் செயல்பட்டு வரும் செம்மொழி நூலகத்தில் இருந்து பல அரிய நூல்களும், ஓலைச் சுவடிகளும் காணாமல் போய் உள்ளது. இது தொடருமானால் செம்மொழித் தமிழாய்வு மையம் மூடுவிழாவை கண்டுவிடும்போல் உள்ளது என வைகோ ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், உலக அளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்ற உயர் ஆய்வு நிறுவனம். இது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், தமிழ்மொழி ஆய்வு, செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மையம் என உட்பிரிவுகளை உருவாக்கி, பன்னிரெண்டு புலங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
-
- 1 reply
- 836 views
-
-
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி.ரவீந்திரநாத் பேசியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீர் மறுசீராய்வு சட்ட மசோதா 2019-ல் கொண்டுவந்த மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தன்னுடைய பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 1984-ல் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இதே மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீரில் சில பிரிவினையான சக்திகளால் மக்கள் ஒடுக்கப்படுகின்ற ஒரு சூழல் நிலவுகிறது, அதற்கு மத்திய அரசாங்கம் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், ஆளுநர் ஆட்சியை ஜம்மு-காஷ்மீரில் அமுல்படுத்த முடியுமா என்ற கேள்வியை எழுப்பியும், இந்தியாவுடன் ஜம்மு- காஷ்மீரை இணைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையாக மாநிலங்களவையில் எழுப்…
-
- 1 reply
- 456 views
- 1 follower
-
-
' வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!' -350 பக்கங்களில் விளக்கும் விஜய்குமார் ஐ.பி.எஸ். சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டபோதிலும், மேட்டூரில் உள்ள வீரப்பனின் சமாதிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்நிலையில்தான் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான முக்கிய விஷயங்களை எழுதி புத்தகமாக கொண்டு வர உள்ளார் வீரப்பன் ஆப்ரேஷனை நடத்திய முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான விஜய்குமார் ஐ.பி.எஸ். தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த வீரப்பனை, தருமபுரியில் வைத்து, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை. வீரப்பன் கதையை …
-
- 1 reply
- 1k views
-
-
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ்ச்சியைக் காணும் போது, கொடுமை, கொடுமை, இதைவிடப்பெரிய கொடுமையை வேறெங்கும் காண முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிங்கள இனவாத வெறியர் ராஜபக்சே ஒரு சர்வதேசப் போர்க்குற்றவாளி என்பதற்கு ஆதாரம் தேடி உலக நாடுகளோ, ஐ.நா. மன்றமோ வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. அதற்காக எந்த விசாரணையும் மேற்கொள்ளவும் தேவையில்லை. விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ…
-
- 1 reply
- 949 views
-
-
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்களை தேர்ந்து எடுத்து அனுப்ப வேண்டிய அரசியல் பணிகள் ஆரம்பித்த வேளையிலேயே , திமுக, கனிமொழியை அந்த பதவிக்கு என்று மனதில் வைத்து கொண்டு தேமுதிக , பா ம க , காங்கிரஸ் என்று அனைத்து கட்சி வாக்குகளை திரட்ட ஆரம்பித்து விட்டது , கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகளையும் கண்டு கொள்ளாமல் பா ம க வோடு நெருக்கம் என காண்பித்து கொண்டது இதற்காகவே . பா ம க தலைவர் ராமதாசை மருத்துவமனையில் சென்று திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கனிமொழி நேரில் பார்த்தனர் . ஆனால் எந்த கட்சியும் திமுகவை கண்டு கொண்டதாக தெரியவில்லை . பா ம கவும் தேர்தலை புறக்கணிக்கும் என்று சொல்லி விட்டது. இடையில் அதிமுக ஐந்து உற…
-
- 1 reply
- 586 views
-
-
இந்திய அரசின் பொது கொள்கைக் குழுவான 'நிதி ஆயோக்' (NITI AYOG), சமீபத்தில் நீடித்த நிலைத்த வளர்ச்சியை 2030ஆம் ஆண்டுக்குள் அடையவேண்டும் என்ற இலக்கில் வெற்றிகரமாகச் செயல்படும் நகரங்களைப் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியளவில் கேரளா முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. நீடித்த நிலைத்த வளர்ச்சியில் கேரளா, தமிழ்நாட்டைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகியவை முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. நீடித்த நிலைத்த வளர்ச்சியில் இந்திய மாநிலங்களும் நகரங்களும் என்ன நிலையில் உள்ளன, கவனம் செலுத்த வேண்டியது எங்கே என்பன போன்றவற்றை உள்ளடக்கி இந்தப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 75 மதிப்பெண்களோட…
-
- 1 reply
- 516 views
-
-
மலேசியாவுக்கு மருது சகோதரர்களின் வாரிசு நாடு கடத்தப்பட்ட வரலாறு - அதிர்ச்சிக்குறிப்புகள் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மருது சகோதரர்கள் மருது சகோதரர்களின் வாரிசுகளில் ஒருவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், அவர் அந்நாட்டிலேயே பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் நீண்ட காலமாக உலவி வருகிறது. காலஞ்சென்ற தமிழக முதல்வர் கருணாநிதிகூட மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அங்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இது குறித்துப் பேசியுள்ளார். அதன் பிறகுதான் மலேசிய தமிழர்கள் பலருக்கும் மருது சகோதரர்கள்…
-
- 1 reply
- 770 views
- 1 follower
-
-
ரூட் தல மாணவர்களுக்கு எச்சரிக்கை.. தண்டனை கடுமையாக இருக்கும்.. டி ஐ ஜி அருள் ஜோதி பேட்டிரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தலையோ, ஆபத்தையோ ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால், ரயில்வே சட்டப்படி கைது நடவடிக்கை பாயும் என, ரயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி . அருள் ஜோதி எச்சரித்துள்ளார். சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக பேருந்தில் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மற்றும் ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளிலும், சுமார் 90 "ரூட்டு தல" மாணவர்கள…
-
- 1 reply
- 771 views
-
-
'அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும்...!'- சத்தியம் வாங்கி நிவாரணம் வழங்கும் அ.தி.மு.க.வினர் அராஜகம்! கடலூர்: 'அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும்!' என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அ.தி.மு.க.வினர் அராஜக போக்குடன் நிவாரணம் வழங்குவதால், கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் ஆல்பேட்டையில், சேட்டு நகர், சேகர் நகர், முத்தையா நகர் போன்ற பல பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், வெள்ள நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-பாண்டி சாலையில் வெகு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து…
-
- 1 reply
- 832 views
-
-
ரஜினி யார்.. எம்எல்ஏவா, கட்சி தலைவரா? சேட்டைகளை சினிமாவோடு நிறுத்திக்கணும்.. தா.பாண்டியன் தாக்கு முதல்ல, இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்குன்னு ரஜினிகாந்த்துக்கு தெரியுமா? குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லைன்னு சொல்ல இவர் யாரு? எம்எம்ஏவா? கட்சி தலைவரா? ஒன்னும் இல்லை.. ஒரு நடிகர்.. அந்த நடிப்போடு அவர் நிறுத்தி கொள்வது நல்லது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழகத்தின் மிக சிறந்த பேச்சாளர்களில் ஒருவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக ஆட்சியை சரமாரி தாக்கினார்.. அக்கட்சிக்கு வக்காலத்து வாங்கி வரும் ர…
-
- 1 reply
- 710 views
-
-
பெங்களூரு சிறைத்துறை கெடுபிடி: சாதாரண கைதியானார் சசிகலா - 14 நாட்களில் 3 பேர் மட்டுமே சந்திப்பு சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, கடந்த 14 நாட்களில் 3 பேரை மட்டுமே சந்தித்து பேச அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஊடக செய்திகளின் எதிரொலியால் சிறைத்துறை அதிகாரி கள் சசிகலாவிடம் கடும் கெடுபிடிகளை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 18 வரையிலான 31 நாட்களில் 28 பார்வையாளர்களை சசிகலா சந்தித்து பேசியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி அம்பலப்படுத்தினார். இதையடுத்து சசிகலா சிறை விதிகளுக்கு முரணா…
-
- 1 reply
- 502 views
-
-
தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 19 செப்டெம்பர் 2021, 03:03 GMT பட மூலாதாரம்,TN ARCHAEOLOGY படக்குறிப்பு, கொடுமணல் அகழ்வுப்பணி தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுக…
-
- 1 reply
- 614 views
- 1 follower
-
-
மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண்களைப் படம் பிடித்து அனுப்பிய மாணவி கைது 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN POLICE மதுரையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீடியோக்கள், புகைப்படங்களாகப் பதிவு செய்து அவற்றை ராமநாதபுரம் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட மாணவி ஒருவரும், அதைப் பெற்ற மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இணையதளங்களுக்கு விற்கப்பட்டனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விடுதியில் தங்கியிருந்த சக பெண்கள் தங்கள் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக விடுதி ஊழியரிடம் …
-
- 1 reply
- 351 views
- 1 follower
-