தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
கடலுக்கு அடியில் உள்ள சுரங்க காட்சியகத்தை விளக்கும் மாதிரி படம். நாட்டிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேசத் தரத் தில் கடல்சார் காட்சியகம் அமைப்ப தற்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. தமிழகத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, மாமல்லபுரத்தில் சர்வதேசத் தரத்தில் கடல்சார் காட்சியகம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதுதொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளை சுற்றுலா துறை ஒத்துழைப்புடன் மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது. தனியார் மற்றும் அரசு பங்களிப்பில் ரூ.253 கோடி செலவில் கடல்சார் காட்சியகம் அமைப்…
-
- 3 replies
- 894 views
-
-
டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் உறுதியானது! அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ.28 கோடி அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 1991 முதல் 1995 வரை வெளிநாட்டில் பலகோடி ரூபாய் முதலீடு செய்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து ரூ.28 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து, டி.டி.வி.தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், டி.டி.வி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தாெகையை உறுதி செய்ததோடு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தினகரனை திவாலானவராக அறி…
-
- 3 replies
- 936 views
-
-
மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் இடிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வீடுகள். மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புதிய வீடுகள் கட்டித் தருவதாக அதிகாரிகள் கூறியதை நம்பி, குடியிருந்த வீட்டுகளை இடித்துவிட்டு 52 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வீடின்றி தவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊருணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 இடங்களில் உள்ள முகாம்களில் 1,609 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் வசிக்கும் பழைய வீடுகளை இடித்துவிட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தலா ரூ.5 லட்சத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மானாமதுரை அருகே மூங்கில் ஊருணி முகாமில் 186 குடும…
-
- 3 replies
- 671 views
-
-
சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த, 11 அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. கட்டடம் இடிந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளிக்கப்பட்டும், மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டும் வருகிறது. சென்னை காவல்துறை, தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினை சே…
-
- 3 replies
- 633 views
-
-
கோவை : நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து, தான் முதல்வரானால் மாநில தலைநகரை மாற்றுவது உள்ளிட்ட பல மாற்றங்களை தமிழகத்தில் கொண்டுவருவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார். கோவையில் பிரசாரம் செய்துவரும் சீமான் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, "நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. ஓட்டு கேட்டு வரவில்லை. 4 ஆண்டுகள் படித்தோம். இப்போது தேர்வுக்கு நிற்கிறோம். நாங்கள் ஓட்டு கேட்டு வரலை. எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையை கேட்டு வருகிறோம். நாங்கள் குறை கேட்க வரவில்லை. குறை தீர்க்க வந்திருக்கிறோம். பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது என்ன பிரச்னை என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இவ்வளவு நாள…
-
- 3 replies
- 2.2k views
-
-
அரசியல் அமைப்பு சட்டத்தின் 13–வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இலங்கையில் நடைபெற உள்ள ''காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழக மீனவர்களை பாதுகாத்திடவும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திடவும் டெசோ அமைப்பு சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார். தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் பேராசிரியர் சுபவீர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்று ப…
-
- 3 replies
- 579 views
-
-
-
சென்னை ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப் பட்டனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானி சமார்த்தியமாக செயலபட்டதால் விமானத்தில் இருந்து 150பயணிகளும் உயிர் தப்பினார்கள்.யாருக்கும் காயம் இல்லை http://www.dailythanthi.com/News/State/2015/02/26103939/Flight-tire-exploded-accident-150-passengers-survived.vpf
-
- 3 replies
- 384 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் நடாத்தும் எழுச்சிகரமான போராட்டங்களை குழப்பும் நடவடிக்கையை சிறீலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ளதாக தற்போது கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், தமிழக போராட்டங்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்த அகில இந்திய பௌத்த பிக்குமார் சபை தீர்மானித்துள்ளது. மஹாராஷ்ரா மாநிலம் நாக்பூர் நகரில் எதிர்வரும் 13 ஆம் திகதி இந்த பேரணியும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் பௌத்தர்கள் அதிகம் வாழும் பிரதான நகரில் உள்ள புனித புத்த விகாரையில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வரை இந்த பேரணி நடத்தப்பட உள்ளது. அதேவேளை தமிழகத்தில் சிறீலங்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டித்து, அதற்கு எ…
-
- 3 replies
- 1.1k views
-
-
உண்ணாவிரதம் இருந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி! இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவரை கல்லூரி பேராசிரியர் திட்டியதால் மனம் உடைந்த அந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கார்ல்மார்க்ஸ் தலைமையில் கல்லூரி வளாகத்தில் 4வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு பிரதிநிதி தங்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கை. இதனிடையே, பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்தி்ற்காக வரும் சனிக்கிழமை காலை காரைக்…
-
- 3 replies
- 399 views
-
-
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்! சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், இன்று திடீரென மரணம் அடைந்தார். திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வயது 47. சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகன். இவரது மகன் மகாதேவன். மன்னார்குடியில் வசித்து வந்த மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகாதேவனை உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது, போகும் வழியில் மகாதேவன் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்…
-
- 3 replies
- 1.8k views
-
-
என் செருப்பு எங்கே?: இடிபாடுகளில் இருந்து 72 மணிநேரம் கழித்து மீண்ட நபர் கேட்ட முதல் கேள்வி! சென்னை: மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே? என்பது தான். சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 72 மணிநேரமாக தவித்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் திங்கட்கிழமை மீட்கப்பட்டார். கட்டடம் இடிந்தபோது இரண்டாவது மாடியில் வேலை பார்த்த குமார்(29) இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவ…
-
- 3 replies
- 608 views
-
-
நளினியை விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றில் மத்திய அரசு தகவல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை. இதற்கிடையில், ராஜீவ…
-
- 3 replies
- 814 views
-
-
மலைகளுக்கு மத்தியில் 'ஸ்மார்ட் க்ளாஸ்' நடத்தும் எட்டாம் வகுப்பு மாணவி தமிழக கேரள எல்லையில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படித்து வரும் அனாமிகா, மலைவாழ் குழந்தைகளுக்காக 'ஸ்மார்ட் க்ளாஸ்' எனும் வகுப்பறையை தனது இல்லத்தின் அருகே உருவாக்கி ஒரு மாற்றத்துக்கான விதையாக இருக்கும் கூலித் தொழிலாளியின் மகள்
-
- 3 replies
- 626 views
-
-
தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது. கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது. தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண…
-
- 3 replies
- 918 views
-
-
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 06:05 - 0 - 24 பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை (19) அன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர்கள் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, இந்த இரு இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நாய் இனங்கள், உரிமையாளரின் கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக செயல்…
-
- 3 replies
- 219 views
-
-
சென்னையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 7 முதல் 10 பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250 பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வின் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப் படுத்தியதால் ஐக்க…
-
- 3 replies
- 611 views
-
-
இன்று நடைபெற்ற தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் பயிற்று மொழியாக்கும் கோரிக்கை பேரணி மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது. எல்லா கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் சார்பிலும் பெரும்திரளான தோழர்கள் இந்த பேரணியில் பங்கேற்று கைதானார்கள். கைக்குழந்தையுடன் ஒரு தாயும் மற்றொரு தந்தையும் கொளுத்தும் வெயிலில் கலந்து கொண்டதை பார்க்கையில் நெஞ்சம் நெகிழ்ச்சியுற்றது. அன்னைத் தமிழை காக்க எத்தனை தியாகங்களும் செய்ய இவர்கள் அணியமாக உள்ளனர் என்பது மட்டும் தெரிந்தது. சாதி மதம் கடந்து அனைத்து கட்சிகளும் பேதங்கள் இன்றி இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. மதம் சார்ந்த கட்சிகளில் முஸ்லீம் முன்னேற்ற கழகம் சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கியது. தமிழ் மொழியை காக்க அணி அணியாக இளையோர்கள், வயதானோர், அற…
-
- 3 replies
- 690 views
-
-
நவிப்பிள்ளையிடம் கருணாநிதி கோரிக்கை! இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம்பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் இலங்கை செல்லயிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.டெசோ சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு 2012 ஆகஸ்ட் 12-ல் சென்னையில் நடைபெற்றது.இதில் ஈழ விவகாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை ஜெனீவாவுக்கு நேரில் சென்று நவநீதம்பிள்ளையிடம் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தல…
-
- 3 replies
- 626 views
-
-
பட மூலாதாரம்,MAHA_MARIAMMAN_VALLI_KUMMI கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டத்தில் நடந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை, ‘கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டு பையனையே...’ எனக்கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு உறுதிமொழி ஏற்க வைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழகத்தின் கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், தமிழ் கடவுள் முருகன் மற்றும் வள்ளியின் வாழ்க்கை குறித்தான வள்ளிக்கும்மி ஆடுவதற்கான பயிற்சி வழங்கப்படுவதுடன், விழாக்காலங்களில் வள்ளிக்கும்மி நிகழ்ச…
-
- 3 replies
- 359 views
- 1 follower
-
-
தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பூநாரைகள் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் jayashankar வலசை வரும் பூநாரை என்று தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் தற்போது தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் பகுதிக்கு அதிக அளவில் ஆஸ்திரேலிய ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருவது வழக்கம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்தப் பறவைகள் மிகப் பெரிய அளவில் தனுஷ்கோடி வந்து குவிந்துள்ளன. கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற் பகுதியில் இவை ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளன. ஃப்ளமிங்கோக்களில் அன்டீன் ஃப்ளமிங்கோ, அமெரிக்கன் ஃப்ளமிங்கோ, சைலியன் ஃப்ளமிங்கோ, ஜாம்ஸெஸ் ஃப்ளமிங்கோ போன்ற வகைகள…
-
- 3 replies
- 897 views
-
-
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.இந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெள…
-
- 3 replies
- 881 views
-
-
கோடீஸ்வரர்களிடம் இல்லை, உங்களிடம் நிதி கேட்டு நிற்கிறேன்: தொண்டர்களுக்கு, கருணாநிதி கடிதம். சென்னை: தேர்தல் பணிக்காக தாரளமாக நிதி வழங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசின் பொதுத்தேர்தல் வரவுள்ளது. 5 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப்பார்க்கும் போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், "அவர்கள் இல்லாவிட்டால் நாம் தானே", என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகளிடம…
-
- 3 replies
- 415 views
-
-
தமிழகத்தில் இரு புதிய கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க நடவடிக்கை மதுரை மற்றும் தாம்பரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இரு புதிய கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை, சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கினார். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் நடவடிக்க…
-
- 3 replies
- 405 views
-
-
. சென்னை: மு.க.ஸ்டாலினைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. மு.க.ஸ்டாலினுக்கு 60 வயது நிறைவடைகிறது. இது அவருக்கு மணிவிழா ஆண்டாகும். நாளை அவர் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளை தான் ஆடம்பரமாக கொண்டாடப்போவதில்லை என்று ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், தென் சென்னை திமுக சார்பில் 60 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைக்கும் வைபவம் இன்று சென்னையில் நடந்தது. திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது ஸ்டாலினை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் கருணாநிதி. கருணாநிதி பேசுகையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவை முன்னிட்டு இளைஞர்கள் எழுச்சி நாள் விழா கொண்டா…
-
- 3 replies
- 730 views
-