தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
'திராவிட இயக்கமே ஸ்டாலின்தான்!' - நாஞ்சில் சம்பத்தின் 'நள்ளிரவு தூது' அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான நாஞ்சில் சம்பத் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். 'தி.மு.கவில் இணைவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறார். நேற்று இரவு முழுக்க தீவிர ஆலோசனையில் இருந்தார். ஜனவரி முதல் வாரத்தில் இணைப்புப் பணி நடைபெறும்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 'முதலமைச்சர் பதவியையும் அவர் ஏற்க வேண்டும்' என ஆளுங்கட்சி அமைச்சர்கள் பேசி வருகின்றனர். சசிகலா தலைமையை ஏற்காத சீனியர்கள்கூட, அன்றாடம் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து வருகின்றனர். இந்தக…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழர்கள் பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்: சுப்பிரமணியன் சுவாமி வரம்பு மீறிய கருத்து! தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரு…
-
- 2 replies
- 828 views
-
-
அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா: அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். மதுரை: மதுரையில் டெங்கு காய்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், டெங்குவ…
-
- 2 replies
- 614 views
-
-
திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி: கருணாநிதி அறிவிப்பு திமுக தலைமையிலான கூட்டணியின் பெயர் ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை தாங்கி கருணாநிதி பேசியது:- திமுக கூட்டணியை இனி, ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அழைப்போம். எல்லா இடங்களுக்கும் நான் நேரில் சென்று பிரசாரம் செய்வதற்கு இயலாவிட்டாலும், எந்த வழியாக பிரசாரம் செய்ய வேண்டுமோ, அந்த வழியாக இடைவிடாது பிரசாரம் செய்வேன். திமுகவின் கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்யும்போது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது யார், அவர்கள் மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களா, இல…
-
- 2 replies
- 557 views
-
-
திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்துக்குத் தந்தது என்ன? 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநிலக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்தது. முதலில் மாணவராகவும், பிறகு மாநில நிர்வாகத்தில் அதிகாரியாக இடம்பெற்றும் அப்போதைய மாற்றங்களை நேரிலேயே பார்த்தவர் எஸ்.நாராயண். “தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கையாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” என்று தன்னுடைய புதிய நூலில் எழுதியிருக்கிறார். ‘தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகள்: அண்ணாவுக்குப் பிறகு… …
-
- 2 replies
- 675 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேர…
-
- 2 replies
- 540 views
- 1 follower
-
-
கருணாநிதி சிலை திறக்க சென்னை வருகிறார் சோனியா காந்தி : November 29, 2018 1 Min Read அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகைதரவுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் காலமான கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. அத்துடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பா…
-
- 2 replies
- 750 views
-
-
தூத்துக்குடி மடத்தூர், புதிய பஸ் நிலையம், அண்ணாநகர், பழைய பஸ் நிலையம் தேவர் புரம் ரோடு, காய்கறி மார்க்கெட் பகுதி, ஜார்ஜ்ரோடு, லயன்ஸ் டவுன், பீச் ரோடு மற்றும் பல பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுக்கு நேற்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் அவர்கள் கண் எரிச்சல் மற்றும் வறட்டு இருமலாலும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர். ரோட்டில் நடந்து சென்றவர்கள் மற்றும் வாகனங்களில் சென்றவர்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஏதாவது தொழிற்சாலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதால் மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வறட்டு இருமல் ஏற்பட்டிருக்கலாம் என கரு…
-
- 2 replies
- 542 views
- 1 follower
-
-
பேரவை நிர்வாகிகள் நியமன விவகாரம் : கணவருடன் தீபா குடுமிப்பிடி சண்டை ஜெ., அண்ணன் மகள் தீபா, புதிதாக துவக்கி யுள்ள பேரவைக்கு, நிர்வாகிகள் நியமிக்கும் விவகாரத்தில், அவருக்கும், அவரது கணவருக் கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள் ளது. பதவி தொடர்பாக, குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை, தீபா துவக்கி உள்ளார். இதன் தலை வர் மற்றும் செயலராக, தன்னுடன் இருக்கும் தம்பதியரான ராஜா - சரண்யா ஆகியோரை நியமித்துள்ளார். இதற்கு, பேரவை ஆதரவாளர் கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில், சென்னையில், நேற்று முன் தினம் இரவு, வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதா…
-
- 2 replies
- 552 views
-
-
ஆண்களைப் போல “சுகவாசி”யான ஒரு உயிரினம் உலகில் எங்குமே இருக்க முடியாது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் நேராக பஸ் ஸ்டாண்ட் சுவரை நோக்கி ஓடுவார்கள். சுகமாக இயற்கை உபாதையை கழிப்பார்கள். இந்த “சுதந்திரம்” மனிதர்களில் வேறு எந்தப் பிரிவினருக்கும் இல்லை. அதேபோல வழியில் எங்காவது உச்சா நெருக்கினால், உடனே இடம் பொருள் ஏவல் பார்க்காமல் கிடைக்கும் சுவர், விளக்குக் கம்பம் என ஜாலியாக நின்று விடுவார்கள். இந்த “சுதந்திரமும்” வேறு யாருக்கும் இல்லை. ரோடு, புதர், சுவர் என எல்லா இடத்தையும் ஈரமாக்கும் ஒரு உயிரினம் நாய்களுக்குப் பிறகு ஆண் இனம்தான் என்பதில் எந்த ஆணுக்குமே சந்தேகம் வரக் கூடாது. ஆனால் பெண்களின் நிலை.. சாலையில் போகும்போது இயற்கை அழைத்தால் அவர்கள் படும் பாடு இருக்கிறதே, மிகவும் துயரமானது…
-
- 2 replies
- 826 views
-
-
தேர்தல் விதிகளை மீறியதாக ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, தேர்தலின் போது பல வகையான இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகள் அளித்த நிலையில், அதற்கான நிதி ஆதாரங்களைத் தெரிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் தற்போது கண்டித்துள்ளது. மேலும் பல்வேறு இலவச பொருட்கள்-வாஷிங் மெஷின், இலவச மொபைல் போன்,கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் முழுவதுமாக தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பதை ஆணையம் சுட்டிகாட்டியுள்ளது. இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதத்தில் விளக்கம் க…
-
- 2 replies
- 547 views
-
-
வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்! -சாவித்திரி கண்ணன் குடும்ப வாரிசு அரசியல் வெளிப்பார்வைக்கு வெற்றிகரமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் புழுத்து நாறி அழுகி, வெளித் தோற்றத்தில் அழகாகத் தோன்றும் பழம் போன்றதே என்பதற்கு தற்போதைய வரலாறே சாட்சியாகும். ஸ்டாலின் – உதயநிதி, ராமதாஸ் – அன்புமணி, வைகோ –துரை வைகோ போன்ற வாரிசு அரசியலின் போதாமைகளும், பரிதாபங்களும் ஒரு அலசல்; கொள்கை, லட்சியம் சார்ந்து அரசியல் வாழ்க்கைக்கு சுயம்புவாக வந்து சாதித்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு தயார்படுத்துவதில்லை. அதை கொள்கை, லட்சியம் கொண்ட அடுத்த தலைமுறைக்கு தானாகவே கையளித்து சென்றுவிடுவார்கள் காந்தி, காமராஜ், மொரர்ஜி தேசாய், அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் தங்கள் வாரிசுகளை தலைவராக்க எண்ணியதில்ல…
-
-
- 2 replies
- 225 views
-
-
படத்தின் காப்புரிமை AFP Contributor நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிகள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாமகவுடன் பாஜகவும் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற சந்திப்பில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இந்த சந்திப்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் பாஜக தரப்பில் முரளிதர்ராவ், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். …
-
- 2 replies
- 534 views
-
-
திமுக மாணவரணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு திமுக மாணவரணி சார்பில் 24ம் திகதி நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் , குறித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி , திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுத…
-
-
- 2 replies
- 646 views
-
-
ரொட்டியிலும் ஜெ. ஸ்டிக்கர்! அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ரொட்டியிலும் ஸ்டிக்கர் ஒட்டி நீலகிரி மாவட்ட அதிமுகவினர் அமர்க்களப்படுத்தினர். அதிமுக அரசு மீது ஸ்டிக்கர் விமர்சனம் எழுந்துள்ள நிலையிலும், நீலகிரி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடந்த விழாவில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ரொட்டியிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஜெயலலிதா பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு, ஜெயலலிதா பிறந்த நாளன்று உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகள் பிறக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு ஒ…
-
- 2 replies
- 523 views
-
-
இந்தியாவில் விற்கப்படும் பாலில், சோப்பு தூள்,வெள்ளை பெயின்ட், சோடா என்று உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன், நாடளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளித்துப் பேசினார்.அப்போது அவர், இந்திய அளவில் பாலில் செய்யப்படும் பகீர் கலப்படம் குறித்து அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார். " நாட்டில் அன்றாடம் வினியோகிக்கப்படும் பால் குறித்து உணவுப் பொருள் ஒழுங்குமுறை அமைப்பினர் நடத்திய ஆய்வில் 68% பால் தரமானதாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர தவிர, பாலில் உடலுக…
-
- 2 replies
- 350 views
-
-
ஜெயலலிதா வீடு திரும்புவதில் தாமதம் ஏன்?- அப்போலோ அப்டேட்ஸ்! முதல்வர் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 55 நாட்கள் கடந்து விட்டன. அக்டோபர் 29-ம் தேதி தீபாவளி தினத்தன்றே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடுவார். தீபாவளியை போயஸ் கார்டன் வீட்டில் கொண்டாடுவார் என்றெல்லாம் ஊடகங்களிலும் பரவலாக தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா வீடு திரும்ப ஏதுவாக, அவரது வீட்டில் சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய அறை உருவாக்கப்பட்டுள்ளது. லிப்ட் வசதி அதற்கேற்ப செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. தொடக்கத்தில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டாலும், இங்கிலாந்து டாக்டர் அப்போலோவுக்கு வருகை த…
-
- 2 replies
- 830 views
-
-
தமிழக தீர்மானம்: இந்திய அரசை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ஆற்றல் மாணவரிடமே உள்ளது! - ருத்ரகுமாரன் தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மான வாக்கியங்கள் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசின் தமிழின விரோதப் போக்கையும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் ஆவணமாக அமைந்துள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அவர், இத்தகையதொரு சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளா…
-
- 2 replies
- 607 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரிக்க நாமக்கல் மாவட்ட சார்பு ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையினால் கடனைத் தீர்ப்பதற்காக சிறுநீரகத்தை விற்பனை செய்வது பல ஆண்டுகளாக நடந…
-
- 2 replies
- 219 views
- 1 follower
-
-
''நான் நலமாக இருக்கிறேன்.. எந்தக் கட்சியிலும் இல்லை!'' - மெரினா வைரல் பெண் (Video) ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற போது, பரவலாக கவனம் ஈர்த்தார் ஒரு பெண். ’தடை செய்... தடை செய்... பீட்டாவை தடை செய்’ என உணர்வும் குறும்புமாக இவர் பேசிய வீடியோக்கள் சகல தளங்களிலும் பரவியது. ஆனால், முதல் நாள் ஆச்சரிய லைக்ஸ் குவித்தவர் குறித்து, மறுநாள் கட்சி சார்பானவர் என சர்ச்சை கிளம்பியது. ’போராட்டத்தில் ஏன் அரசியல் தலைவர்களை விமர்சிக்கிறாய்..? 'உனக்கு ஏன் தேவையில்லாத வேலை? உடனடியாக மன்னிப்பு கேள்’ என்றும் மிரட்டல்கள் வந்ததாம். பத்தாததுக்கு, எதிர்தரப்பு கட்சிகள் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவர் அனுமத…
-
- 2 replies
- 2.2k views
-
-
தமிழக காங்கிரஸ் தலைவர்ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இந்திய ஜனநாயகத்தின் மாண்பை சிதைத்து ஒரு தனிநபருக்கு முழு அதிகாரம் என்ற தத்துவத்தை பாஜ அரசு அரங்கேற்ற முயலுகிறது. தேர்தலின் போது தமிழகம் வந்த மோடி, மீனவர் பிரச்னை, தான் ஆட்சிக்கு வந்த பிறகு தீர்ந்துவிடும் என்றும், தமிழக மீனவர்கள் எந்தவித பாதிப்புமின்றி மீன்பிடிக்க செல்லலாம் என்பதை போல பேசினார். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் 93 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 62 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களும் படகுகளும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் வாக்குறுதி வேறு, நடைமுறை வேறு என்பதை பாஜ வ…
-
- 2 replies
- 358 views
-
-
தமிழ்நாட்டில் கனமழை: சென்னை உலகளாவிய கவனம் பெறுவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் முக்கிய சாராம்சம் சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் பருவநிலையைக் கணிப்பது தொடர்ந்து சவாலாகிக் கொண்டே வருகிறது. மழைப் பொழிவின் போது மேற்பரப்பில் நீர் தேங்காமல் நிலத்தடியில் செல்ல வழி செய்வது வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி கோடைக்கால நீர்த்தேவை…
-
- 2 replies
- 723 views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்களிற்கு நீதி கோரி திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன் 09 JUL, 2025 | 10:52 AM சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது. 07.09.1996 அன்று சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் 11 சிங்கள ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொட…
-
- 2 replies
- 213 views
- 1 follower
-
-
கீதா குப்புசாமி: உருவமோ நிறமோ உங்களின் அடையாளம் அல்ல - தொழில் முனைவோராக உயர்ந்த 'உயர மாற்றுத் திறனாளி' ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, உயரம் குறைவுதான்; ஆனால் சாதிக்க அது ஒரு தடையல்ல பவானி தேவபுரத்தைச் சேர்ந்தவர் கீதா குப்புசாமி. உயரம் குறைவாக இருக்கும் 31 வயது மாற்றுத்திறனாளி. உயரம் குறைவாக இருப்பதால் சமூகத்தில் பல்வேறு கேலி, கிண்டல்களை சந்தித்த இவர் இன்று மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து... உங்களை பற்றி சொல்லுங்கள்? என் பெயர் கீதா குப்புசாமி. …
-
- 2 replies
- 432 views
- 1 follower
-