நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
மனித உடலில் மணிக்கட்டில் (நீர் கட்டி ) ஏற்படும் கட்டிகள் பற்றிய தவல்கள்:- இத்தகைய கட்டிகள் ganglion என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். பொதுவாக இத்தகைய கட்டிகள் மணிக்கட்டின் பின் புறத்தில் தோன்றுவது அனால் சிலருக்கு முன் புறத்திலும் தோன்றலாம். சிலருக்கு கால்களின் மேல்புறத்திலும் தோன்றும், சிலருக்கு மிக அரிதாக முழங்காலுக்கு அருகிலும், கனுக்காலடியிலும் தோன்றலாம். இது எவ்வகையிலும் அபாத்தான கட்டியல்ல . இது தோளுக்கு கிழே உள்ள தோலுடன் ஒட்டிக்கொண்டிருக்காது , வழுக்கிக் கொண்டிருக்கும், நீர் கட்டி (Cyst ) போன்றது அதற்குள்ளே நீரை விட சற்று தடிப்பான ஜெலி போன்ற திரவம் இருக்கும் எப்படி ஏற்படுகிறது :- இத்தகைய ஜெலி போன்ற திரவம் தான் நமது மூட்டுகளையும் ,தசைநார்களையும் வரட்ச்சியடையாது…
-
- 4 replies
- 1.8k views
-
-
பேலியோ உணவு முறையை பின்பற்றுவதால் நீரிழிவு ஏற்படுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் பேலியோ உணவுமுறையைப் பின்பற்றத் தொடங்கிய பிறகு நீரிழிவு நோய் ஏற்பட்டு, அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு கோமாவில் இருந்தவர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பேலியோ உணவுமுறையைப் பின்பற்றுவது நிரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துமா என…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
மூல நோய் என்பது என்ன? எப்படிக் கண்டறிவது? பட மூலாதாரம்,GETTY IMAGES 21 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 5சதவீத பேர் மூலநோயால் பாதிப்பட்டிருப்பதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. மூல நோய் பாதிப்பு குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் மற்றும் அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, மூலநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் …
-
- 0 replies
- 889 views
- 1 follower
-
-
நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா? இல்லை .... நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா?பாரம் தூக்குவது மட்டுமல்ல உங்கள் நாளந்த செயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகளை கொண்டு வரலாம் நாரிப்பிடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கவே முடியாது. தமது வாழ்நாளில் என்றாவது ஒரு நாளாவது இதை அனுபவித்தே இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதர்களை அதிகம் பீடிக்கும் பிர்சனையாக இருக்கிறது. நாரிப்பிடிப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது எமது பின்புறத்தின் கீழ் முள்ளெலும்புகள் உள்ள பகுதியில் ஏற்படும் வலியாகும். Low backpain என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதேபோல பின்புறத்தின் மேல் பகுதியிலும் வலி ஏற்படலாம். இதை…
-
- 0 replies
- 1.7k views
-
-
கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வாக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 99 மில்லியன் மக்களிடம் குறித்த ஆய்வு நடத்த…
-
-
- 4 replies
- 779 views
- 1 follower
-
-
நமது உடல் உறுப்புகளிலேயே, தோலும், அதைச் சார்ந்த முடியும், நகங்களும் மட்டுமே, முழுக்க முழுக்க மரபணுக்களைச் சார்ந்தது என்பது, நம்மில் பலர் அறியாத அறிவியல் உண்மை. ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் ஒருவர், தோல், முடி, நகம் போல், இன்னொருவருடைய தோல், முடி, நகம் இருப்பதில்லை. இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும், அவர்களுடைய தோலும், முடியும், நகங்களும், அவரவர் மரபணுக்களுக்கேற்ப தனித்துவம் வாய்ந்தவை.எனவே தான், என்றென்றும் கைவிரல் ரேகை, மனிதர்களின் தன்னிகரற்ற, யாராலும் மாற்றவியலாத தனித்துவமிக்க அடையாளமாக, உலகெங்கும் சட்ட ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.கரு உருவான எட்டாவது வாரத்தில் உருவாகி விடும், தோலும், முடியும், நகமும், நம் மரபணுக்களோடு இரண்டறக் கலந்திருப்பத…
-
- 0 replies
- 348 views
-
-
[size=4]உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!![/size] [size=4][/size] [size=4]* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
எலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து!! எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உ…
-
- 2 replies
- 4.3k views
-
-
வேண்டாம் அலட்சியம்! - ஜாசன் புற்றுநோய் என்பதே சிலர் விஷயத்தில் மட்டும் உடலோடு ஒட்டிப் பிறக்கும் ஆபத்து. புகையிலைதான் புற்றுநோயின் அதிமுக்கிய வாகனம். குடும்பத்தில் வேறு எவருக்கும் புற்றுநோய் இருப்பின் மற்றவர்கள் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்றுத் தெளிவது அவசியம்! வாய், குரல்வளை, தொண்டை, உணவுக் குழல், நுரையீரல், வயிறு போன் றவை புற்றுநோய் மிக மோசமாகத் தாக்கும் பகுதிகள். இவைபோக, பெண்களுக்கு கருப்பை மற்றும் மார்பகப் பகுதிகள்! ஆறாத புண், இயல்புக்கு மாறான ரத்தக் கசிவு, காரணம் தெரியாமல் ஏற்படும் வீக்கம், உணவை விழுங்குவதில் தொடர் சிரமம், மலம்-சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம், மரு, மச்சத்தில் ஏற்படும் மாறுதல், குரல் மாற்றம், தொடர் இருமல், குரல்…
-
- 3 replies
- 1.5k views
-
-
இன்று தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது எதேச்சையாக fat, sick and nearly dead எனும் ஒரு விவரண படத்தை பார்க்க நேர்ந்தது. இதில், அதிகரித்த உடல் நிறை கொண்ட ஒருவர், உடல் நிறை அதிகரிப்பால் ஏற்படும் பக்க விளைவுகளை போக்க நாளாந்தம் பல்வேறுபட்ட மருந்துகளை குடித்து வந்தது பற்றியும், அதில் இருந்து விடுபடுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியையும் சொல்கிறது. உடல் நிறையை குறைப்பதற்காகவும், மருந்து பாவனையை குறைக்கவும், அவர் 60 நாட்களுக்கு மரக்கறி, பழச்சாறுகளை மட்டுமே உண்கிறார். அதன் முடிவில் 100 பவுன்ஸ் (45 கிலோ) உடல் நிறை குறைவை எட்டி இருக்கிறார். அத்துடன் பல மருந்துகள் எடுக்கும் தேவையும் இல்லது போய் இருக்கிறது. அவர் சொல்லும் முக்கியமான ஆலோசனை, இப்படி மிக கடுமையான உணவு கட்…
-
- 7 replies
- 1.9k views
-
-
இதயத்தின் ஆரோக்கியத்துக்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்யக்கூடாது என்று நாமே மருத்துவராகி அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வோம். அதே சமயம் கல்லீரல் நம் உடலில் என்ன வேலைகளைச் செய்கிறது என்பதுகூட நம்மில் பலருக்குத் தெரியாது. சமூகத்தில் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு இருக்கும் அளவுக்குக்கூட கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் கிடையாது. கல்லீரல் pixabay ``இதயத்தில் ஏதேனும் பாதிப்பு என்றால் அறிகுறிகள் வெளியே தெரிந்துவிடும். இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தில் 10 சதவிகிதம் தடைபட்டால்கூட நெஞ்சு வலி ஏற்பட்டுவிடும். ஆனால் கல்லீரலில் மிகுதியான பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்" என்கிறார் கல்லீரல் மாற…
-
- 1 reply
- 545 views
-
-
இப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா? ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோய் என்கிறீர்களா? பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள்இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல்போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாகபாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள்ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலவித அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபெர்னாண்டா பால் பதவி,பிபிசி செய்திகள் 2 ஜூலை 2023 "முதல் முறை இந்த அனுபவம் ஏற்பட்டபோது, அவன் மயக்கத்தில் இருந்ததாகவே நான் உணர்ந்தேன். அதனால் அவனை எழுப்ப முயன்றேன். அமைதியாக இருக்கச் சொன்னேன். ஆனால், அவன் வேறு ஏதோ ஒரு உலகில் மிகத்தொலைவில் இருந்ததைப் போல் நடந்துகொண்டான்." சாண்டியாகோ டி சிலியில் வசிக்கும் ஒலிவியா கார்சியா 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மகன் ஜுவான் - அப்போது 4 வயது - இரவு நேரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையி…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அமண்டா ருகேரி பதவி, பிபிசி 11 ஆகஸ்ட் 2024, 05:56 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாக ஒரு பெண் கருவுறும்போது அவர் என்ன சாப்பிடுகிறார், அருந்துகிறார் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவது வழக்கம். எனவே கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு புதிய ஆராய்ச்சி, தந்தையின் மதுப்பழக்கமும் கருவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்னும் கருத்தை முன் வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
முயலிறைச்சியை மட்டும் வேறு எதையும் உண்ணாமல் தொடர்ந்து தின்றால் மரணம் சம்பவிக்குமாம். இன்று பிபிசி 2 - கியூ ஐ புரோக்கிராமில் சொன்னார்கள். நமது பிள்ளைகள் காடுகளில் அலைகிறார்கள். அவர்களுக்கு இந்தச்செய்தி பிரயோசனமாயிருக்குமென்று கருத்துக்களத்துக்கு எழுதுகிறேன். உணவில்லாமல் காடுகளில் நெடுநாள் இறைச்சிகளையே உண்பவர்கள் முயலிறைச்சியைத் தனியே தொடர்ந்து உண்பதைத் தவிர்க்கவும். வேறு உணவுகளோடு உண்டால் பிரச்சனையில்லையாம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
லண்டனில் விற்கப்படும் ஆபத்தான தோலை வெண்மையாக்கும் கிரீம்கள் லண்டனில் விற்கப்படும் ஆயிரக்கணக்கான தோலை வெண்மையாக்கும் கிரீம்களில் உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. இத்தகைய கிரீம்களில் இருக்கும் வேதிப்பொருட்களின் விவரங்கள் அவற்றின் மேலட்டைகளில் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து குறித்து பரவலாக தெரிவதில்லை. இந்த கிரீம்களில் ஹைட்ரோகுய்னான் என்கிற ஆபத்தான வேதிப்பொருள் இருக்கிறது. ஐரோப்பாவில் இது தடை செய்யப்பட்ட வேதிப்பொருள். காரணம், அது தோல் பிரச்சனைகளையும் அதைவிட மோசமான உடல்நல ஆபத்துக்களையும் உண்டாக்கவல்லது. ஆனால் லண்டன்…
-
- 2 replies
- 400 views
-
-
9 மணி நேரங்களுக்கு முன்னர் தினமும் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டியுள்ளது என்று நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ஆணுறையைப் பார்த்து வெறுத்தது உண்டா? நல்லது நண்பர்களே, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பொது சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளில் இரண்டு கருத்தடை சாதனங்கள் அநேகமாக சிறந்தவையாக இருக்கும். அதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி, புத்திசாலித்தனமான இந்தப் படைப்புகள் - உலக கருத்தடை நாள் - என்று கௌரவிக்கப்படுகின்றன. கருத்தடை சாதனங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தலை நோக்கமாகக் கொண்டு உலகம் முழுக்க உள்ள வெவ்வேறு அமைப்புகளின…
-
- 0 replies
- 720 views
-
-
அனைவருக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்களைப் பற்றி நன்கு தெரியும். இதுவரை அந்த எண்ணெயை கூந்தலுக்கு தடவ மட்டும் தான் செய்வோம். சிலர் அந்த எண்ணெயை வைத்து தலைக்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளிப்பார்கள். அதிலும் எண்ணெயை சூடேற்றி, காய வைத்து, பின் மசாஜ் செய்வார்கள். ஆனால் தற்போது கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, பட்டுப் போன்று மின்னுவதற்கு தேங்காய் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் செய்யலாம். இப்போது அந்த தேங்காய் எண்ணெயை வைத்து எப்படி மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!! தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்- கூந்தலை நன்கு ஈரப்பசையோடு வைப்பதில் தேங்காய் எண்ணெயும், தேனும் மிகவும் சிறந்தது. ஆகவே அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, ஸ்கால்ப்பிற்கு தடவி, சிற…
-
- 1 reply
- 658 views
-
-
கற்றுக் கொண்டால் குற்றமில்லை - சோம்பல் அறுங்கள் ஆக்கம்: 'எழுத்துச் சித்தர்' பாலகுமாரன் சங்கருக்கு தூக்கம் என்பது மிக மிகப் பிடித்தமான விஷயம். குறிப்பிட்ட நேரத்தில் சோறு இல்லாமல் இருந்துவிடலாம். தூக்கமில்லாமல் இருந்துவிட முடியுமா? தூங்கினால் தானே சோம்பல் நீங்கும். சோம்பல் நீங்கினால் தானே சுறுசுறுப்பாக இருக்க முடியும். சுறுசுறுப்பாய் இருந்தால் தானே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எனவே, வாழ்வை ஜெயிப்பதற்ககு தூக்கம் அவசியம் என்பது சங்கரின் வாதம். வாதம் சரிதான். ஆனால், எப்போது தூக்கம்... எவ்வளவு நேரம் தூக்கம் என்பது மிகப் பெரிய கேள்வி. எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் என்றால், ஏழு ஐம்பத்தைந்து வரை தூங்குவது சங்கரின் வழக்கம். ஒன்பது மணிக்கு கல்லூரி என்றால், எட்டு நாற்பது வரை…
-
- 0 replies
- 17.8k views
-
-
பெண்கள் கருத்தரிக்காமலே போனால் உலகம் என்னவாகும்? செயற்கை கருப்பையின் புதிய கண்ணோட்டம் ㅤ பிபிசி ரீல்ஸ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் அவசியம் இல்லாமல் போனால் என்னவாகும்? பெண்களுக்கு பதில், ஒரு சிறிய கருவி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்தால் எப்படி இருக்கும்? என்ன? அறிவியல் புனைகதையைப் போல் இருக்கிறதா? உலகெங்கிலும் ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகள் இதனை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மனித கருப்பையை ஒத்திருக்கும், அதைப் போலவே செயல்படும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு... இந்த உணவுகள் கை கொடுக்கும்! ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும். சமீபத்திய புள்ளி விவரங்கள் படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது. இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி செய்வதற்கான …
-
- 14 replies
- 17.3k views
-
-
மன அழுத்தம் விலக ஆசனப் பயிற்சிகள் மனம் விரிந்து குவிந்தது மாதவ மனம் விரிந்து குவிந்தது வாயு மனம் விரிந்து குவிந்தது மன்னுயிர் மனம் விரைந்துரை மாண்டது முத்தியே. மனம் நிம்மதி, மன அமைதி பெற ஒரு சில யோகப் பயிற்சிகள், பிராணாயமாப் பயிற்சிகள் குறிப்பாக சாந்தி ஆசனம் அத்துடன் நெற்றி ஈரத்துணிப்பட்டி, வயிற்று ஈரத்துணிப் பட்டி செய்திட மிக மிக நல்ல பலனை இலகுவாக, சுலபமாக செலவில்லாமல் செய்யலாம். உடல் களைத்தும், சோர்வாகவும் இருக்கும் சமயம் 10 நிமிடம் செய்தால் இரண்டு மணி நேரம் தூங்கியதன் பலன கிட்டி நாம் நல்ல புத்துணர்ச்சி பெறலாம். அற்புதமான காற்று, ஆகாயம் என்ற இரு பஞ்ச பூதங்கள் இணைந்த சிகிச்சையாகவும் உள்ளது. அனைவரும் தினமும் அவசியம் செய்யவேண்டும். சாந்தி ஆசனம் செய்முறை: காலை, மாலை…
-
- 0 replies
- 3.7k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல தோல் பிரச்னைகளுக்கு புற ஊதா கதிர்கள் தான் காரணமாக இருக்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், அனுஜா வைத்யா லத்தி பதவி, பிபிசிக்காக 4 செப்டெம்பர் 2023 சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து மிக்க சரிவிகித உணவுகளை உட்கொள்ளவேண்டும். மேலும், தோல் பராமரிப்புக்காக எந்த மாதிரியான பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். தோல் பராமரிப்பில் மூன்று முக்கிய விஷயங்களை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றில் முதலாவத…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட டெங்கு வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதன். கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அதோடு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபு…
-
- 12 replies
- 630 views
- 1 follower
-
-
.மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம் மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டு…
-
- 4 replies
- 1.1k views
-