நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லது அங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம். இதைத் தடுப்பது மிகவும் இலகு. கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது. கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரையை வைத்தியரின் அனுமதி இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் குறைவு.…
-
- 0 replies
- 1.7k views
-
-
தந்திரம் எண் 07:பகுதி எண் 37:பாடல் எண் 03: மொத்தப் பாடல்களின் வரிசை எண் 2104 ஒன்றே குலமும் ஒரு்வனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்க்கதி இல்லுநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்னினைந் து்ய்மினே. 07:37:03:2104 (திராவிடநாடு கோரிக்கையைக் கைகழுவியபின்,பகுத்தறிவுப் பகலவர்கள் தேர்தலில் ஓட்டுச் சேகரி்த்திட ஏற்றுக்கொண்ட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" திருமூலர் தந்ததுதான்.) திருமூலர் ஓர் சித்தர். தமிழகத்தில் வாழ்ந்தவர். திருமந்திரம் என்ற நூலை இயற்றியவர். திருமந்திரத்தில் 3000-ம் பாடல்கள் இருக்கின்றன. திரு்மந்திரம் கூறும் உடற்கூறு் வாழ்வியல் தத்துவங்கள் அறிவியல் அறி்ஞர்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. திருமூலர், நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை-என்னும் திருத…
-
- 8 replies
- 1.9k views
-
-
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம். ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை. வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும். ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி…
-
- 6 replies
- 10.7k views
-
-
கறிச்சட்டி/கரிச்சட்டி ஆய்வு! உலக ரீதியில் பஞ்சம், பட்டினி, போசணைக் குறைபாடுகள் உயிர்கொல்லிகளாக ஒரு இருபது ஆண்டுகள் முன்பு வரை இருந்திருக்கின்றன. இன்றும் சில பிரதேசங்களில் இவை பிரச்சினைகளாக இருக்கின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் உருவாகியிருக்கும் இன்னொரு ஆரோக்கியப் பிரச்சினை மிகைப் போசணையால் விளையும் அதிகரித்த உடற்பருமனாதல். உலகின் 180 இற்கு மேற்பட்ட நாடுகளுள் அனேகமானவற்றில் இன்று மரணத்தின் முதன்மைக் காரணங்களாக இருப்பவை: இதய நோய், உயர் குருதி அமுக்கம், நீரிழிவு ஆகிய மூன்றும் தான்!. இந்த மூன்று நோய்களோடும் நேரடியான தொடர்பு அதிகரித்க உடற்பருமனுக்கு இருக்கிறது. எனவே உடல் மெலியவும் அதனோடு சேர்ந்த ஆரோக்கியத்தைப் பேணவும் காலத்திற்குக் காலம் புதிய உணவு முறைகள் பலரால் கண்டற…
-
- 2 replies
- 996 views
-
-
கறிவேப்பிலை நீரிழிவிற்கு சிறந்த மருந்து! கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் ம…
-
- 14 replies
- 1.1k views
-
-
-
கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும். ‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும…
-
- 1 reply
- 582 views
-
-
கறுப்பான பெண்கள் சிவப்பழகியாக கறுத்த சருமம் கொண்ட எல்லாப் பெண்களுக்கும் ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற வீட்டிலிருந்தவாறு செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் சில. பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ரோபெரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஓரேஞ்ச் சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள், தேன…
-
- 0 replies
- 956 views
-
-
கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை. அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத். பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி…
-
- 6 replies
- 2.1k views
-
-
கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை; முந்தைய இரண்டையும் விட இது ஆபத்தானதா? க.சுபகுணம் Mucormycosis ( AP Photo/Amit Sharma ) சர்க்கரை அளவு அதிகமுள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, கறுப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை பாதிப்புகள் இந்தியாவில் தீவிரமடைந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது மீண்டும் மஞ்சள் பூஞ்சை என்று மற்றுமொரு பூஞ்சை பாதிப்பு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. இந்த மஞ்சள் தொற்று, கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளைவிட மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். …
-
- 0 replies
- 225 views
-
-
மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி. மழையும், வெயிலும் மாறி மாறி தோன்றும் பருவகாலத்தில் சளி, இருமல், தொண்டையில் கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வாக இருப்பது கற்பூரவல்லி. இது கொடுக்கக்கூடிய மருத்துவப் பலன்கள் ஏராளம். வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகைப் பொருட்களில் கற்பூரவல்லியும் ஒன்று. . மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி…
-
- 1 reply
- 783 views
- 1 follower
-
-
கற்பூரவள்ளி வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும். கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே இது தேரையர் குணபாடம் கூறுவது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறு…
-
- 1 reply
- 1.2k views
-
-
(Aloe vera) கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எ...த்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ…
-
- 12 replies
- 5k views
-
-
கலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் "என்.முருகன்" கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை அன்றாடம் காய்கறிகளை விற்றுப் பிழைப்பு நடத்திவந்த செல்வத்துக்கு, திடீரென வயிற்றில் கடுமையான வலி. அதனைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை, அடுத்த சில நாட்களிலேயே கல்லீரல் முற்றிலும் செயல் இழப்பு ஏற்பட்டு, இறந்துபோனார். இன்று, அவர் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் ஆதரவு இன்றித் தவிக்கின்றனர். செல்வத்தின் மரணத்துக்குக் காரணம், கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) நோய். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மது அருந்தியதன் விளைவுதான், கல்லீரல் செயல் இழப்புக்குக் காரணம். மது அருந்தியதன் காரணமாக், கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2024, 10:37 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்று உடல்நலத்தைப் பற்றிப் பேசுகையில், பெரும்பாலும் பலரும் கேட்கும், அல்லது எதிர்கொள்ளும் கேள்விகள், ‘எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறீர்கள்?’, ‘ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு உட்கொள்வது ஆரோக்கியமானது?’ ஆகியவைதான். இன்று பொதுவாக, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற வாழ்க்கை முறை நோய்களுடன் உப்பு தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. அதேபோல், கல் உப்பு, பொடி உப்பு என்று பொதுப் புழக்கத்தில் இருக்கும் இருவகை உப்புகளைப் பற்றியும் ப…
-
- 0 replies
- 762 views
- 1 follower
-
-
நமது உடம்பில் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் ஒன்று, கல்லீரல். இது கருஞ்சிவப்பு நிறமுடையது. கல்லீரல், உடம்பில் பெரிய இரத்த வடிகட்டியாகவும், இரண்டாவது பெரிய நோய் எதிர்ப்பு அமைப்பாகவும் இயங்குகிறது. வயிற்றின் இடதுபக்கத்தில் உதரவிதானத்துக்குக் கீழே இடம்பிடித்திருக்கிறது. இது, சுழற்சியில் இருக்கும் இரத்த செல்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நோய்த்தொற்றுகளில் இருந்து உடம்பைக் காக்கிறது.குடல்வாலைப் போல கல்லீரலும் தேவையற்ற ஓர் உறுப்பு என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வந்தது. சோகஉணர்வுக்குக்காரணமான கறுப்பு திரவத்தை கல்லீரல் சுரப்பதாக ஹ்ப்போகிராட்டஸ் என்ற மருத்துவர் ஆய்வாளர் கருதினார். கல்லீரல் முற்றிலும் புதிர்கள் நிறைந்த உறுப்பு என கேலன் என்ற அறிஞர் கூறினார…
-
- 0 replies
- 519 views
-
-
கல்லீரலும் அதன் பாதிப்பால் ஏற்படும் நோய்களும் நம் உடலானது நரம்புகள், தசைகள், எலும்புகள், இரத்த நாடி, நாளங்கள் என பலவற்றால், பிண்ணிப் பிணைக்கப் பெற்று உருவாக்கப் பெற்றதாகும். எமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தத்தமது பணிகளை சிறப்பாக செய்வதற்கு உடலின் உள்உறுப்புகள் யாவும் ஒழுங்காக செயல்பெற வேண்டியது கட்டாயமாகின்றது. இவற்றுள் ஏதேனும் ஒரு உறுப்பு செயலிழந்தால் அல்லது ஊறு பட்டால்; அது அவற்றுடன் இணைந்து செயல் பெறும் மற்றைய உறுப்புகளையும் செயலிழக்க அல்லது ஊறுபட வைத்து விடுகின்றது. எமது பழக்கவழக்கங்கள், உணவுமுறை, நாம் வாழும் சூழல் போன்ற பலவகையான காரணங்களினால் உடல் உறுப்புகள் அதனதன் செயல்களை செய்வதில் குறைபாடு ஏற்பட்டு அதனால் உடல் நலம் பல வகைகளில் பாதிக்கப்படுகிறத…
-
- 0 replies
- 17.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 30 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஹெபடைடிஸ் பாதிப்பை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், 2040ஆம் ஆண்டளவில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகளை விட ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கி…
-
- 0 replies
- 695 views
- 1 follower
-
-
கிராபியென் ப்ளாக் 10 Min Read கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM கல்லீரல் மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல். நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, …
-
- 2 replies
- 379 views
- 1 follower
-
-
கல்லீரல் சுருக்கம்...தடுப்பது எப்படி? "என்.முருகன்" கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை அன்றாடம் காய்கறிகளை விற்றுப் பிழைப்பு நடத்திவந்த செல்வத்துக்கு, திடீரென வயிற்றில் கடுமையான வலி. அதனைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை, அடுத்த சில நாட்களிலேயே கல்லீரல் முற்றிலும் செயல் இழப்பு ஏற்பட்டு, இறந்துபோனார். இன்று, அவர் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் ஆதரவு இன்றித் தவிக்கின்றனர். செல்வத்தின் மரணத்துக்குக் காரணம், கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) நோய். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மது அருந்தியதன் விளைவுதான், கல்லீரல் செயல் இழப்புக்குக் காரணம். மது அருந்தியதன் காரணமாக், கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரமா…
-
- 0 replies
- 2k views
-
-
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம். இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இ…
-
- 0 replies
- 601 views
-
-
நம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கல்லீரலுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம். ஆப்பிள் சீடர் வினிகர் ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் …
-
- 0 replies
- 2.3k views
-
-
கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்தும் ரீனியம் மருத்துவ சிகிச்சை கல்லீரல் என்பது எம்முடைய உடலில் சுரக்கும் இரண்டாவது பெரிய சுரப்பி. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கல்லீரலின் செயல்பாடு இன்றியமையாதது. இதன் செயல்பாட்டை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக திகழ்கிறது கல்லீரல் புற்றுநோய். தற்போது கல்லீரலில் புற்று நோய் வந்துவிட்டால் ரீனியம் மருத்துவம் மூலம் அதனை குணப்படுத்த இயலும். அதற்கு முன் கல்லீரலில் புற்று நோய் பாதிப்பினை தொடக்க நிலையிலேயே கண்டறியவேண்டும். அதற்கு தற்போது லீனியர் ஓக்ஸிலேரேற்றர் என்ற கருவிமூலம் துல்லியமாக கண்டறிய இயலும். அத்துடன் இத்தகைய புற்று நோய் பாதிப்பின் அறிகுறியையும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின்நிறம் …
-
- 0 replies
- 314 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கல்லீரல் 500க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் உறுப்பு (பிரதிநிதித்துவ படம்) 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகை தீபிகா கக்கர் தற்போது தனது வாழ்வின் மோசமான கட்டத்தைக் கடந்து வருகிறார். தீபிகாக்கு கல்லீரல் புற்றுநோய் (இரண்டாம் நிலை) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் ஷோயப் இப்ராஹிம் கூறியுள்ளார். நடிகை தீபிகா கக்கர், தனது உடல்நிலை குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது ரசிகர்களுடன் உடல்நலன் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, தான் எதிர்கொண்ட கடினமான நாட்களைப் பற்றி நினைவுகூர்ந்தார். தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தீபிகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "கடந்த சில வாரங்களாக கடினமான சூழ…
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
கல்லீரல்: நீரிழிவின் நடுநாயகம் "In Buckingham Palace, the butler is more powerful than the King" "பக்கிங்ஹாம் அரண்மணையில், அரசரை விட பற்லருக்கு பவர் அதிகம்" – ஒரு உள்ளூர் பிரிட்டிஷ் சிலேடை. இப்படிப் பட்ட ஒரு பற்லரைப் பற்றி இன்று பேசுவோம். நீரிழிவு தொடர்ந்து நிலைக்கவும், அதன் விளைவுகள் உடலைப் பாதித்து ஏனைய பக்க விளைவுகளைக் கொண்டு வரவும் அவசியமான கல்லீரல் பற்றிப் பேசுவது நீரிழிவைப் புரிந்து கொள்ள உதவும். கல்லீரலின் தொழில்கள் எவை? கல்லீரலுக்கு எங்கள் உடலில் பெரிதும் சிறிதுமாக பல தொழில்கள் இருக்கின்றன. முக்கியமாக, கல்லீரல் உடலின் அனுசேபத்தோடு தொடர்பான அங்கம். இதனால் தான் அது நீரிழிவிலும் பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால், கல்லீரலின் பல தொழில்கள் உடல…
-
- 9 replies
- 1.5k views
-