நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
அகத்திக் கீரை "அகர முதல எழுத்தெல்லாம்" என்று வள்ளுவர் குறளைத் துவங்குகிறார். கீரைகளைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது அகரத்தில் தொடங்கும் முதல் கீரை "அகத்திக் கீரையாகும்." அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். ஆகவே கீரைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதற்கு முதல்கீரையாக விளங்குவது அகத்திக் கீரையே ஆகும். அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயி¡¢டப் படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள். இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர். அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, கா£ரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத…
-
- 4 replies
- 7.2k views
-
-
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது. தோற்றம் : அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும். அடங்கியுள்ள பொருட்கள் : ஈரப்பதம் _ 73 ச…
-
- 5 replies
- 1.4k views
-
-
நகம் என்றால் கடிப்பதற்கும், ராவி விடுவதற்கும், பாலீஷ் போட்டுக் கொள்ளவும்தான் என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் அது அனேக வியப்பிற்குரிய விஷயங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே 'இன்ன நோய்' என்று சொல்லிவிடுவார்கள். நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், 'புரோட்டீன் _ கெராட்டீன்' என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது. நகங்கள்…
-
- 17 replies
- 13.9k views
-
-
கடந்த சில வருடங்களாக சூரியாசிஸ் என்கிற நோயினால் அதிக உபாதைகளை எதிர்கொண்டு வருகிறேன். நோர்வேயில் பல மருத்துவர்களிடமும், இந்த நோய் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களிடமும் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுவிட்டேன். சகலரும் இது ஆயுட்காலமும் அனுபவிக்க வேண்டிய நோய் என்று கூறிவிட்டார்கள். இது ஒரு தொற்று நோயல்ல ஆனால் இது ஒரு பரம்பரை நோயென்று அனைவரும் கூறினார்கள். என் குடும்பப் பின்னணி குறித்த விளக்கங்களை ஆழமாக கேட்டுத்தெரிந்துகொண்டார்கள்... பெற்றோருக்கு இந்த நோய் இருந்தால் 50வீத வாயப்பிருப்பதாக சகல மருத்துவர்களும் தெரிவித்தர்கள். அதாவது இது ஒரு பரம்பரை நோய் என்கிறார்கள். நான் இது குறித்து வாசித்து அறிந்த ஆய்வுகளும் அதையே ஒப்புவிக்கின்றன. இந்த நோய் என் தகப்பனாருக்கு …
-
- 0 replies
- 467 views
-
-
மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது அகால மரணத்துக்கு இட்டுச்செல்லக் கூடும் என்பதைக் காட்டும் கூடுதல் ஆதாரம் வெளிவந்துள்ளது. ஐரோப்பாவில் சுமார் ஐந்து லட்சம் மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வொன்று, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதால், 30 பேரில் ஒருவர் அகால மரணமடைய நேரிடுகிறது என்று கூறியது. பி.எம்.சி மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், தினசரி 20 கிராம்கள் இறைச்சி என்ற அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதைக் கட்டுப்படுத்துவது ( இது ஒரு துண்டு பன்றி இறைச்சிக்கு சமம்),ஓராண்டில் பல ஆயிரம் மரணங்களைத் தடுக்கக் கூடும் என்று கூறியிருக்கின்றனர். பதப்படுத்தபட்ட இறைச்சிகளை பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் ரசாயனப் பொ…
-
- 0 replies
- 515 views
-
-
அகோராஃபோபியா (திறந்தவெளி பற்றிய பேரச்சம்) திங்கள், 4 மார்ச் 2013( 16:17 IST ) அகோராஃபோபியா என்பது பயம் தொடர்பான ஒரு மன நோயாகும். இதுபோன்ற அச்ச உணர்வுள்ளவர்கள் திறந்தவெளி இடங்களையும், கூட்டம், நெரிசல் அதிகமான இடங்களையும், அதுபோன்ற சூழ்நிலைகளையும் கண்டு மனப்பீதி அடைவார்கள். அதாவது தான் தப்பிக்கவே வழியல்ல என்று நினைத்துக் கொண்டு பெரும் அச்சங்கொள்வார்கள். டிரைவிங் செய்யும்போது, பாலங்களைக் கடக்கும் போதும், கூட்டம் மிகுந்த இடங்களிலும் இவ்வகையான பேரச்சம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த இடங்கள் மட்டுமல்லாது, அதுபோன்ற சூழ்நிலைகளை கற்பனை செய்வதன் மூலமும் ஒரு சிலர் பேரச்சத்திற்குள் தள்ளப்படும் நிலையும் உண்டு. இதனால் சிலர் தங்கள் வீட்டை விட்டுக்கூட கிளம்பாமல் முடங்கிவிடும் அப…
-
- 0 replies
- 444 views
-
-
கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans) அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது. எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது. ‘ஓம் டொக்டர்… இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். இதைப் பற்றியும் உங்களிட்டை கேக்க வேண்டும் என்றுதான் வந்தனான். ஆரம்பத்தில் சாதுவாகத்தான் தெரிந்தது இப்பொழுது கொஞ்சம் கறுத்துத் தடித்துக் கொண்டு வருகிறது.’ என்றாள். அதுதான் அக்கன்தோசிஸ் நிஹிரிகான். இது ஓரு தோல் வருத்தம…
-
- 1 reply
- 780 views
-
-
அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும்.... அக்குபங்சர் அக்குபங்சர் சிகிச்சை முறை – கேள்விகளும், பதில்களும். வலைதளத்தில் இருந்து உங்களுக்காக தொகுத்து கொடுத்துள்ளேன் அக்குபங்சர் என்றால் என்ன? சித்தர்கள் வளர்த்த வர்ம அறிவியலுக்குச் சீன மக்களின் பங்களிப்பு அக்குபங்சர். சீனாவின் சித்தர்களாகிய தாவோ ஞானிகளின் உண்மைகளை உள்வாங்கிய தமிழர்களின் அறிவியல் அக்குபங்சர். மெல்லிய மயிரிழை போன்ற ஊசிகளைக் கொண்டு அகிலத்தின் ஆற்றல்களை நம் உடலுக்குப் பெற்றுத்தரும் அற்புத அறிவியல் மருத்துவம். அக்குபங்சர் முறையில் நோய்களை கண்டறிவது எப்படி? இது தனக்கே உரித்தான நோயறியும் முறைகளைக் கொண்டது. வர்ம மருத்துவம் போல் தனிச் சிறப்பான நாடி அறிதல் முறைகள் இ…
-
- 0 replies
- 1.9k views
-
-
அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்! . சலூனுக்குச் சென்று அல்லது விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி அக்குள் முடிகளை எடுக்கும் முயற்சியில் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். முடியை எடுக்க உதவும் கிரீம்களின் விலையும், மற்ற இடங்களுக்கு சென்று அதை எடுக்க ஆகும் செலவுகளும் மிகவும் உயர்நது விட்டன. ஆனால் இப்பொழுது, நாம் வீட்டிலிருந்த படியே அதிகம் செலவு செய்யாமல், கருமைத் தோற்றத்தைத் தரும் அக்குளில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும். இதை செய்யும் முறையை நாம் கீழ் காணும் பகுதியில் பார்க்கலாம். உங்களுடைய அக்குளில் உள்ள முடிகளை ஆபத்தில்லாமல் நீக்கும் வகையில் இயற்கையான கலவைகளை இப்பொழுது உங்களால் பெற முடியும். இதற்கு தேவையான பொர…
-
- 0 replies
- 473 views
-
-
அசிங்கமான ரகசியம் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள் . அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அட…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=4]அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.[/size] [size=4]சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மனஅழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே…
-
- 1 reply
- 2.1k views
-
-
இயற்கை நமக்கு தந்த ஓர் வரப்பிரசாதம் தான் சீரகம். சமையலில் பயன்படுத்தும் சீரகம் தன்னுள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய சீரகம் பயன்படுகிறது. அதில் செரிமான பிரச்சனை, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, ஆஸ்துமா, சளி, இரத்த சோகை, தூக்கமின்மை, பைல்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.அதுமட்டுமின்றி, சீரகம் தற்போது பலரும் அவஸ்தைப்படும் அசிடிட்டி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை வழங்கும். இதனை இயற்கை மருத்துவ வைத்தியர்களும் பரிந்துரைக்கின்றனர். மேலும் சீரகம் இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்தியினால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதையும் தடுக்கும். சீரகத்தில் உள்ள சத்துக்கள் :- சீரகத்தில் புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழுப்பு அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. ஒமேகா 3 உள்ள உணவுகள் ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது. இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பசலைக்கீரை, சணல் விதை எண்ணெய், கோதுமை போன்றவற்றில் அதிகமாக கிடைக்கும். சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கர்ப்பக் காலத்தில் பெண்…
-
- 5 replies
- 1.1k views
-
-
அஜினோமோட்டோ : ஒரு வரலாறு! குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோ மோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது. சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள், இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு மீறி தின்பர். ‘இதையாவது பிரியப்பட்டு தின்கிறானே’ என்று ஆசை ஆசையாய் பலரும் இதை அவனுக்கு வாங்கிக் கொடுப்பர். சில மாதங்கள், வர…
-
- 3 replies
- 2.9k views
-
-
நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் கூட்டு முயற்சியால் செரிமானம் நடைபெறுகிறது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவு செரிப்பது எப்படி?நாம் உண்ணும் உணவானது, நாக்கில் உள்ள உமிழ்நீருடன் கலக்கிறது. நாக்கினால் உணவை புரட்டி, பற்களால் அரைத்ததும், தொண்டை வழியாக இரைப்பைக்கு செல்கிறது.இரைப்பைக்குள் உணவு குறைந்தது 4 மணி நேரமாவது இருக்கும். இரைப்பையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சிறுகுடலின் சவ்வுகள் பல்வேறு மடிப்பு நிலையில் காணப்படும். இரைப்பை சுவரின் தசைகள் குறுக்கும் நெடுக்குமாக சூழ்ந்திருக்கும். அந்த தசைகளின் உதவியால், இரைப்பைக்குள் இருக்கும் உணவ…
-
- 0 replies
- 352 views
-
-
சின்ன கதை... சுப்பன்னைக்கு 56 வயது, 7 வருசமாய் பிரசர், 2 வருசமாய் சுகர், இண்டைக்கு காலமை நெஞ்சுக்க பிடிக்குது எண்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக, EKG / ECG, பிளட் ரெஸ்ட், எக்கோ காடியோ கிராம் எல்லாம் நோர்மல்..இப்ப அஞ்சியோ காடியோ கிராம் செய்யவேண்டும் எண்டு சொல்லுகினம்..... அங்கியோ காடியோ கிராம் என்றால் என்ன? ஏன் செய்வது? அஞ்சியோ என்றால், குருதி குழாய்கள் சம்பந்தமானது, காடியோ என்றால் இதயம் சம்பந்தமானது, கிராம் என்றால் அதைபற்றின (பட) விபரம். இதயதிர்ற்குரிய குருதி குழாய்களை படம் பிடித்தல். ஒரு விதமான "X ரே" குருதி குழாய்களை படம் பிடிக்கும். என்னவென்று செய்வது என்றால், தொடையில் உள்ள குருதி குழாய் ஊடக குழாய் ஒன்றை செலுத்தி (கதீட்டர்) இதயத்தின் பெருநாடி ஊடக இதயத்துக்கு …
-
- 11 replies
- 5.3k views
-
-
அடர்த்தியான அழகான கூந்தலுக்கு.. «Æ¸¡É, ÀÇÀÇôÀ¡É Üó¾ÖìÌ ¬¨ºôÀ¼¡¾ ¦Àñ¸û ¯ñ¼¡? ¯í¸û ¬¨º ¿¢¨È§ÅÈ º¢Ä ÀÂÛûÇ ÊôЏ¨Çò ¾ó¾¢Õ츢ȡ÷ ¦ºý¨É, ¾¢ÕÁ¨Äô À¢û¨Ç º¡¨Ä¢ø ¯ûÇ, ¬õÀ¢ÂýŠ இý¼÷§¿„Éø «¸¡¾Á¢Â¢ý «ÆÌì ¸¨Ä ¿¢Ò½÷ ±õ. †º£É¡ ¨ºÂò. ¦ºõÀÕò¾¢ இ¨Ä, â, ¦Åó¾Âõ, º¢¨¸ì¸¡ö §º÷òÐ «¨ÃòÐ, „¡õâ×ìÌô À¾¢Ä¡¸ò §¾öòÐì ÌÇ¢òÐ Åà Üó¾ø «¼÷ò¾¢Â¡¸ ÅÇÕõ. «§¾ §À¡Ä, Å¡ÃòÐìÌ ´ÕÓ¨È ¿øÄ Íò¾Á¡É §¾í¸¡ö ±ñ¦½¨Â (¦ºì¸¢ø ¬ð¼ôÀð¼, ¦ºÂü¨¸ ¿ÚÁ½õ ஊ𼡾, «ºø §¾í¸¡ö ±ñ¦½Â¡¸ இÕ󾡸 இýÛõ º¢Èó¾Ð)Á¢¾Á¡¸î ÝΦºöÂ×õ. ¾¨Ä¢ø §¾öòÐ, «¨Ã Á½¢ §¿Ãõ °È¢ Á¢ÕÐÅ¡¸ Áº¡ˆ ¦ºöÂ×õ. Á¢÷측ø¸û ÀÄõ¦ÀÈ ±Ç¢¨ÁÂ¡É ÅÆ¢ இÐ. ±ýÉ ¦ºö¾¡Öõ Óʦ¸¡ðθ¢ÈÐ. ÅÈðº¢Â¡¸ இÕì¸ÈÐ. «¼÷ò¾¢§Â இøÄ¡Áø ±Ä¢ Å¡ø §À¡Ä இÕ츢ÈÐ ±ý¦ÈøÄ¡õ ̨ÈôÀðÎì ¦¸¡ûÀÅ÷¸Ù측¸ ´Õ ЦÀ„ø…
-
- 64 replies
- 10.8k views
-
-
இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்… சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும். பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும…
-
- 1 reply
- 874 views
-
-
அடி வயிற்று கொழுப்பை கரைக்கும் அற்புத வீட்டு வைத்தியம்!
-
- 0 replies
- 480 views
-
-
அடிக்கடி பாப்கான் சாப்பிடுகிறீர்களா? : நுரையீரல் பாதிப்பு வரலாம் உஷார்! "பாப்கானுக்கு சுவை தர பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், நுரையீரல் பாதிக்கப்படலாம்' என, அமெரிக்க நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளதாவது: பாப்கானுக்கு வெண்ணெய்யின் சுவையை தர, "டையாசெடில்' என்ற செயற்கையான நறுமணப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தால், "லிம்போசைடிக் பிரான்கியோலிட்டீஸ்' என்ற நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மைக்ரோவேவ் பாப்கான் பேக்கேஜிங் யூனிட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், "டையாசெடில்' ரசாயனம் கலக்கப்பட்ட பாப்கானை அடிக்கடி சாப்பிட்டவர்களும், நுரையீரல் பாதிப…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? - அது ஒரு நீண்ட பயணம்! வாய் வழியாக சாப்பிடும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது. சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும். அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு 'மலம் வந்திருக்கிறது' என்ற தகவலை உணர்த்தும். அப்போதுதான் மலம் கழிக்கவேண்டும் என…
-
- 0 replies
- 562 views
-
-
இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… வயிற்றுக் கொழுப்பை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இவ்வாறு வயிற்று கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது சரியான வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாம் தோல்வியடைகிறோம். வயிற்றுக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று உறுதியா…
-
- 26 replies
- 152.5k views
-
-
அடுத்த 20 ஆண்டுகளில் புற்று நோய்க்கு ஆளாபவர்கள் எண்ணிக்கை 70% அதிகரிக்கும் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகப் புற்று நோய் தினமான இன்று உலகச் சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுக்கையில், 1 கோடியே 40 லட்சம் புதிய புற்று நோயாளிகள் உருவாகியுள்ளதாகவும், சுமார் 80 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகியுள்ளனர் என்றும் இதில் 60% ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. 2012-ஆம் ஆண்டு மனித இறப்பு விகிதத்தில் புற்று நோயே அதிக பங்களிப்பு செய்துள்ளது. இந்திய புற்றுநோய் அறிக்கை (2009-2011) படி, 2012 ஆம் ஆண்டு 10,57, 204 புற்று நோயாளிகள் என்பது 2013-இல் 10,867,83 ஆகவும் 2014-ஆம் ஆண்டு இது மேலும் அதிகரித்து 11,172,69 …
-
- 0 replies
- 560 views
-
-
அடுத்தவர் டூத் பிரஷ், ஷேவிங் ரேஸரைப் பயன்படுத்துகிறீர்களா? ஹெபடைட்டிஸ் அலர்ட்! உள்ளுறுப்புகளில் மிகப்பெரியதான கல்லீரல் நோய்த்தொற்றுக்கெதிராகச் செயல்படுவது, உடலுக்குத் தேவையான புரதச்சத்தையும் ஹார்மோன்களையும் சுரப்பது, ரத்தம் உறைய உதவுவது எனப் பல்வேறு முக்கியப் பணிகளைச் செய்கிறது. உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலில் மிகப்பொதுவாக ஏற்படும் பிரச்னை ஹெபடைட்டிஸ் (கல்லீரல் அழற்சி) வைரஸ் தொற்றுதான். உலகின் பல்வேறு நாடுகளில் இந்தத் தொற்று காணப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஹெபடைட்டிஸ் நோய் அதிகரித்துவருவதால், அது ஒரு பொதுசுகாதாரப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஜூலை 28-ம் தேதி ஹெபடைட்டிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வைரஸைக் கண்டுபிடித்…
-
- 0 replies
- 995 views
-
-
சொல்கிறார்கள் [size=4] அழகுக்கு மட்டுமல்ல நகை...[/size]அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்: நாம் அணியும் ஒவ்வொரு அணிகலன்களும், உடலில், உயிர் சக்திப் புள்ளிகளைத் தூண்டி, நம்மை சீராக இயங்க வைக்கின்றன. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அணிகலன்கள், ஆரோக்கியத்தையும் தருகின்றன. உதாரணமாக, பொட்டு வைக்கும் ஒரு பெண்ணை சீக்கிரத்தில், "மெஸ்மரிசம்' பண்ண முடியாது. பெண்ணின் இரு கண்களை உற்று நோக்கி வசியப்படுத்த முயற்சிக்கும் போது, மூன்றாவது கண்ணாக உள்ள பொட்டு, அந்த நபரை திசை திருப்பி விடும். தைராய்டு சிக்கல் உள்ளவர்களுக்கு, சரியான புள்ளிகளைப் பார்த்து காது குத்தினால், அந்த சிக்கலே தீர்ந்து விடும். கழுத்தில் செயின் அணியும் போது, அங்குள்ள புள்ளிகள் தூண்டப்படும். இதன் மூலம…
-
- 0 replies
- 841 views
-