நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
பொடுகைப் போக்க சில வழிமுறைகள் - அறிந்து கொள்வோம் மண்டை ஓட்டை போர்த்தியிருக்கும் தோலில் பொதுவாக புதிய தோற்கலங்கள் உற்பத்தியாக தோலின் வெளிப்படையாக அமைந்த இறந்த கலங்கள் தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்படும். தோற்கலங்கள் புதுப்பித்தல் பல மடங்கு வேகத்தில் நடைபெறுமாயினின் அதிகளவு இறந்த கலங்கள் வெளித்தள்ளப்படும். இதுவே தலை சீவும் பொழுது ஆடைகளில் கொட்டிக்கிடக்கும். சில சமயங்களில் சொறியவும் நேரிடும். சில சமயங்களில் தலை மயிரில் மா தூவி விட்டது போன்று படிந்துமிருக்கும். எக்சிமா என்பது சொடுகு நோயின் தீவிரமடைந்த நிலையாகும். இது கண்புருவமி மூக்குஇ காது நெற்றி போன்ற இடங்களிலும் தோன்றக்கூடும். தோல் வியாதியும் சொடுகு போன்றே தலைத் தோலைப் பாதிக்கின்றது. இதன் பொழுது …
-
- 0 replies
- 3.3k views
-
-
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இந்தக் கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும். பயன்கள்! 1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும். 2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல…
-
- 0 replies
- 515 views
-
-
பொன்னான பொன்னாங்கண்ணி *தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிறது.கீரைகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர். *கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய கீரைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகின்றோம். இம்மாதம் மேனியைப் பொன்னாக்கும் சிவப்புப் பொன்னாங்கண்ணி பற்றி தெரிந்துகொள்வோம். *இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்…
-
- 11 replies
- 1.8k views
-
-
பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப் போல தினம் ஒரு கரட் உண்பவர்களின் உடலும் தகதகவென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு கரட் அழைக்கப்படுகிறது. காய்கறிகள் அதிகமான சத்துகளும், விட்டமின்களும் நிறைந்தவை என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்ததே, காய்கறி வகைகளில் ஒன்றான கரட் எல்லோரும் சாப்பிடுவதுண்டு. பச்சையாகவும் சாப்பிடுவர். மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் காணப்படும். எந்த வகை நோயாளர்களுக்கும் உகந்தது இது ஒரு கிழங்கு வகையாகும். மஞ்சள் முள்ளங்கி என்றும் கரட்டை அழைப்பர். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காணப்பட்டக காட்டுக் கரட்டிலிருந்தே மஞ்சள் முள்ளங்கி தோன்றியது என்கிறார்கள் . கரட்டை பச்சையாகவும் உண்ணலாம் . கரட்டை சம்பல் போட்டு…
-
- 2 replies
- 743 views
-
-
ஆசைக்கோ, ஆஸ்திக்கோ.. ஒரு பெண், ஒரு பிள்ளை வேண்டும் என்பது பலருக்கு ஆசை. நினைப்பதெல்லாம் நடக்கிறதா. மாறிப் பிறந்து பல வீடுகளில் சண்டை மண்டை உடைகிறது. இந்த விஷயத்தில் சூப்பர் அட்வைஸ் சொல்லியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். கர்ப்பிணிகளின் உணவுப் பழக்கத்துக்கும் பிறக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி ஹாலந்தின் மாஸ்ட்ரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தினர். முதலில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள், பெண் குழந்தைகளுக்கு விரும்பம் தெரிவித்தவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 23&42 வயதுக்கு உட்பட்ட 172 பெண்களிடம் விஞ்ஞானிகள் தொடர்ந்து 5 வருடங்கள் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு பிரட், காய்கறிகள், பழவ…
-
- 0 replies
- 600 views
-
-
போச்சுடா போச்சு இங்கேயும் கையை வைச்சிட்டாங்களா!!!!!! உணவில் சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக் கொண்டால் பசி குறைந்து உணவின் அளவும் குறையும். அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பசி ஏற்பட்டால் அளவுக்கு அதிகமான அளவு உணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும். பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் பசியைத் தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு ர…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
போடுங்கள் தோப்புக்கரணம், இது மூளைக்கான சிறந்த யோகா மூளைக்கான யோகா எமது முன்னோர்கள் ஏவ்வளவு அறிவாளிகள், நாம்தான் அதை சரியான வழியில் பயன்படுத்தவில்லை இது தமிழில்
-
- 3 replies
- 1.2k views
-
-
போதை தெளிவதற்கு உலகில் பின்பற்றப்படும் சில விசித்திரமான வழிகள்.! தற்போது விடுமுறை நாட்கள் வந்தாலே, பலர் பார்ட்டி அல்லது நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாடுகிறேன் என்று மது அருந்துவார்கள். சிலர் உடல் அலுப்பு நீங்குவதற்கு சரக்கு அடிப்பதாக கூறுவார்கள். அப்படி ஒரு நாள் வார விடுமுறையில் வயிறு நிறைய மது அருந்திவிட்டு, மறுநாள் அலுவலகம் செல்ல முடியாதவாறு பலர் ஹேங்ஓவரால் கஷ்டப்படுவார்கள். பொதுவாக ஹேங்ஓவர் பிரச்சனை அல்லது போதை தெளிவதற்கு எலுமிச்சை ஜூஸ், ப்ளாக் டீ போன்றவற்றை குடிப்போம். இது அனைவருக்குமே தெரிந்த பொதுவான வழிகள். ஆனால் உலகின் சில பகுதிகளில் இந்த ஹேங்ஓவரில் இருந்து விடுபட பல வித்தியாசமான மற்றும் விசித்திரமான வழிகளைப் பின்பற்றுகின்றனர். உங்களுக்கு அந்த வழிக…
-
- 9 replies
- 7.3k views
-
-
போதை பழக்கத்தை விட ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மது, சிகரெட்டை நிறுத்திவிடலாம்! பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன் நான் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவது, சிகரெட் பிடிப்பது, கண்டதையும் ஓட்டல்களில்சாப்பிடுவது, ரெüடித்தனமாகப் பேசுவது, செயல்களில் ஈடுபடுவது என்றெல்லாம் பழகிவிட்டேன். ஆனால் அவை தவறு என்பதை தற்சமயம் உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. நான் திருந்தி வாழ ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?கோவிந்தராஜ், வில்லிவாக்கம்.தீய நண்பர்களின் சேர்க்கை தோஷத்தினால் உடம்புக்கும், உள்ளத்துக்கும், பொருளுக்கும் கெடுதியையும் அழிவையும் உண்டு பண்ணும் தீய பழக்கங்கள் சிலகாலம் தொடர்ந்து பழக்கப்பட்டதாக ஆகிவிட்டால் அவற்றை எப்படியும் ஒழிக்க …
-
- 0 replies
- 3.6k views
-
-
ப்ராக்கோலியில் நினைத்து பார்க்க முடியாத அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன. ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த காய்கறியாகும். உடல் எடையை குறைப்பதில் இதில் உள்ள சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சரும நோய்களை குணப்படுத்துவது, மன நிலையை சரிசெய்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது என பல வழிகளில் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கிறது. செரிமானத்திற்கு உதவும் செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு ப்ராக்கோலியில் நோய் எதிர்ப்பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும். எலும்புகள் வலுவாகும் மற்ற காய்கறிகளை ஒப்பிடும் போது ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கி…
-
- 1 reply
- 2.3k views
-
-
தும்மல், இருமல் எல்லோருக்கும் அவ்வப்போது வரும். ஆனால் டயாபடீஸ் எனும் சர்க்கரை நோயும் இன்றைக்குப் பெரும்பாலானோர் மத்தியில் பல்கிப்பெருகிக் கிடக்கிறது. முன்னொரு காலத்தில் அது வசதி படைத்தவர்களின் நோய் என்று சொல்லப்பட்ட காலம் மலையேறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக யாருக்கு வேண்டுமானாலும் வருகிறது. "மருத்துவத்துறையில் நவீன கண்டுபிடிப்புகள் வந்தபோதிலும் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு இந்நாள் வரை பதில் தேட வேண்டியிருக்கிறது. ஆகவே, 'வரும் முன் காப்பது சிறப்பு' என்பதே சர்க்கரை நோயைப் பொருத்தமட்டில் சாலச் சிறந்தது" என்கிறார் பொது நல மருத்துவர் மற்றும் சர்க்கரை நோய் நிபுணரான பாஸ்கர். டயாபடீஸ் நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்தில…
-
- 0 replies
- 2.1k views
-
-
மகப்பேறின்மைக்கு காரணமாகும் சொக்லெட் சிஸ்ட் இன்றைய இளைய தலைமுறை தம்பதிகளின் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது மகப்பேறின்மை. இதையுணர்ந்து மருத்துவத் துறையினரும் ஏராளமான நவீன சிகிச்சை முறைகளை கண்டறிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்களின் உடல் எடையை சீராக பேணவேண்டும் என்றும், அதை அலட்சியப்படுத்தினால் குழந்தையின்மை பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கண்டறிந் திருக்கிறார்கள். அதே தருணத்தில் மகப்பேறின்மை மற்றும் குழந்தை பேற்றுக்கான தாம்பத்யம் குறித்து இன்றைய திகதியிலும் படித்த தம்பதிகளிடமும் ஏராளமான தெளிவின் மையை காண இயலுகிறது. முதலில் இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டு…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும். ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம். அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு …
-
- 0 replies
- 1.5k views
-
-
மகளிர் உடல்நலமும் ஹோமியோ மருத்துவமும் ஹோமியோபதி மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு சிறப்புத் தன்மைகளைக் கொண்டது. பிற முறை மருத்துவர்கள் ஐந்தறிவு படைத்த எலி, பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே (ஆரோக்கியமான) மனிதரிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. மருந்தின் அமைப்பு, வீரியப்படுத்துதல், மருந்தைத் தேர்வு செய்தல் அனைத்திலும் ஹோமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபடுகிறது. ஹோமியோபதியில் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கு பிரதானப் பங்கு உண்டு. உடலும், மனமும், உயிரும் இணைந்த படைப்பாக முழுமையாக மனிதனைப் பார்க்கிறது. உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவுகளை வியாதி என ஹோ…
-
- 0 replies
- 2.9k views
-
-
மக்கட்பேறு - என் அனுபவம் #மக்கட்பேறு திருமணமாகி மக்கட்பேறு இல்லாததை பற்றிய ட்விட்கள் பார்க்க நேரிட்டது.. ஒவ்வொருவரின் genetics, உடல்வாகு பொறுத்து அடைத்தும் மாறுபடும்.. நான் மருத்துவர் இல்லை மற்றும் இது மருத்துவ ஆலோசனை த்ரெட் இல்லை. எங்களுடைய அனுபவங்களை பகிர்கிறேன் அவ்வளவே.. என்னுடைய pinned tweet-ல் இருக்கும் thread-ற்கு நேரெதிராக உணர்வு கொண்ட பதிவு இது.. பெண் பார்த்தது.. திருமணம் நடந்தது.. எல்லாம் வழக்கம்போல சந்தோசமாக நடந்து முடிந்தது.. இல்லற வாழ்க்கை தொடங்கியது.. திருமணம் முடிந்து மூன்றாவது மாதம்.. நாள் தள்ளிப்போவதாக மனைவி சொல்ல.. ஆனந்தத்தில் திளைத்தேன்.. உடனடியாக pregnancy test kit வாங்கி வந்து மறுநாள் விடியற்காலை சோதனை செய்தோம்.. இரண்…
-
- 8 replies
- 1.4k views
-
-
மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்…
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமான பயணி ஒருவரின் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய தொடர் வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில்…
-
- 0 replies
- 929 views
-
-
நான் அண்மையில் பார்த்த ஒரு அருமையான ஆவணப்படம். என்னை பாதித்த பலவிடயங்கள் இதில் உண்டு. supersize me http://video.google.com/videoplay?docid=-1432315846377280008&ei=yOflSrf5CKLwqAPui72vCQ&q=supersize+me&hl=en# முதலில் பாருங்கள்.தொடர்ந்து பேசுவோம்.
-
- 2 replies
- 1.4k views
-
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் உண…
-
-
- 36 replies
- 2.9k views
- 2 followers
-
-
உடம்பில் மச்சம் இருப்பதை சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள். சிலரோ இது எதுக்குப்பா 'எக்ஸ்டிரா லக்கேஜ்' என்று அலுத்துக் கொள்வர். ஆனால் அப்படி அலுத்துக் கொள்ளத் தேவையில்லையாம். மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் (King's College) ஆராய்ச்சிக் குழு ஒன்று மச்சம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அது மச்சம் இருப்பவர்களுக்கு மச்சம் இல்லாதவர்களை விட வலுவான எலும்புகள் இருப்பதாகவும், அவர்களுக்கு எலும்புகளைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் மிகக் குறைவு என்றும் இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது. மேலும் மச்சக்காரர்களுக்கு தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்குமாம். இது தவிர அவர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்…
-
- 1 reply
- 731 views
-
-
மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி? சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்... மஞ்சள் காமாலை. இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது? கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும். சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற…
-
- 0 replies
- 500 views
-
-
சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்... மஞ்சள் காமாலை. இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது? கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும். சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல…
-
- 0 replies
- 799 views
-
-
எனது வெள்ளைக்கார நண்பர் மரதன் ஓடுபவர். மாதம் ஒருமுறை என்றாலும் எங்காவது போய் ஓடிப் போட்டு வருவார். கடைசியாக அமெரிக்கா டிஸ்னி மரதன் ஓடினவர். அடுத்த மாதம் பாரிஸ் மரதன் பின்பு லண்டன் மரதன், இப்படியே அவர் விடுமுறைகள் மரதனுக் காகவே செலவழிக்கப் படுகின்றது. அவர் தினமும் பல விதமான வைட்டமின் மாத்திரைகளை எடுப்பார். இப்போது தனது நாளந்த குளிசைகளுடன் tumeric 10mg தினமும் எடுக்கிறார். இது மூட்டு பகுதிகளில் உள்ள திரவத் தன்மையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் (anti biotics) விளங்குகிறது. நம் முன்னோர்கள் இதை எப்பவோ சொல்லிப் போட்டார்கள். இப்ப மேற்கத்தியர் பாவிக்க வெளிக் கிட்டினம். மஞ்சளின் மகிமை இப்ப குளிசையில். kills germs என்று spray இலு…
-
- 1 reply
- 742 views
-
-
மஞ்சள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல் வாதம்) சிகிச்சையில் பயன்ப டுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம். அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச் சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்று…
-
- 10 replies
- 9.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தினமும் மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு, இறப்புக்கான ஆபத்து குறைவதாக, ஒரு ஆய்வு கூறுகிறது எழுதியவர், ஜெஸிகா பிரவுன் பதவி, பிபிசி மிளகாய், மஞ்சள் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்ற கூற்றுகள் உள்ளன. "நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்" என்றும் கூறப்படுவது உண்டு. ஆனால், நம் உணவில் இத்தகைய மசாலா பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கிறதா? உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து அவை நம்மை தடுக்கிறதா? பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மசாலா பொருட்கள் நம் உணவின் அங்கமாக உள்ளன. சிப்ஸ் வகைகளில் மேலே தூவியோ அல்லது இஞ்சி தேநீராகவோ, நம்முடைய உணவில் சேர்க்கப்படும் மிள…
-
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-