Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வாறீங்க, கூப்பிடுறீங்க, பேசுறீங்க, அழைக்கிறீங்க ல,ள,ழ என்ற எழுத்துக்கள் தமிழுக்கு எவ்வளவு அழகு சேர்க்கின்றன. “கரை போட முடியாத புது வெள்ளை ஆடை கலை மானும் அறியாத விழி வண்ண ஜாடை பார்வையில் இளமை வார்த்தையில் மழலை கூந்தலும் வணங்கும் காலடி நிழலை” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு சினிமாப் பாடலில் ல,ள,ழ க்களை அழகாகப் பயன் படுத்தியிருப்பார். சமீபத்தில் கூட இந்த மூன்று ல,ள,ழ க்களும் ஒன்றாக வரும் சொல் ‘தொழிலாளி’ என்று யாழில் தமிழ்சிறி பதிவிட்டிருந்தார். இன்று உலகத் தமிழருக்கான (ஒரு) வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது, இந்த ல,ள,ழகரங்களை புலம் பெயர்ந்த நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று எண்ணிப் பார்த்தேன். விடயம் இதுதான். …

    • 22 replies
    • 3.6k views
  2. தமிழ் பெற்றோர் தம் பெண் பிள்ளைகளின் பெண்ணுறுப்பில் கட்டுப்போடுகிறார்களா? இப்படியும் நடக்கிறதா? அல்லது அதி மிஞ்சிய போதைப்பொருளின் தாக்கத்தால் உளறியவையா? இவை லண்டனில் நடைபெற்ற புலி எதிர்ப்பு கூட்டத்தில் பேசப்பட்டவை: "புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பெண்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. முடியுமானவரை பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று பெண்களை உற்சாகப்படுத்தும் பெற்றோர் அதேவேகத்தில் அவர்களை அடக்கியும் வைப்பதால் முரண்பாடுகள் பிறக்கின்றன. எவ்வளவுதூரம் பெரிய படிப்புக்குப் பெண் தன்னை ஆட்படுத்துகிறாளோ அதேவிதத்தில் அவளின் அறிவும் வெளியாருடன் வரும் தொடர்புகளும் விரிகின்றன, அதனால் தனது வாழ்க்கையை எப்படி அமைக்கலாம் என்பதைப் பெண்கள் தீர்மானிக்கிறார்கள். இதை பெற்றோரால…

  3. நாடு கடந்த தமிழீழ அரசு அண்மையில் செனெட் சபையை உருவாக்கியிருக்கிறது. இதில் அங்கத்தவராக ஒரு சிங்களவரும் ஒரு தமிழரல்லாத அமெரிக்கரும் இடம்பெற்றிருக்கிறார்கள். சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் தாம் தமிழீழம் உருவாவதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று இன்று தெரிவித்திருக்கிறார். நாடு கடந்த தமிழீழ அரசுடன் எந்த தொடர்புகளையும் அமெரிக்கா வைத்திருப்பதாக தெரியவில்லை. தமிழீழத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்தியா தமிழீழம் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீடித்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனாவும் பாகிஸ்தானும் நீண்டகாலமாகவே தமிழீழத்துக்கு எதிரான நாடுகளாக இருக்கின்றன.

    • 41 replies
    • 3.6k views
  4. உறவுகளே! ரொரன்ரோ மற்றும் கனேடிய காவல்துறை உத்தியோத்தர்களிற்கும் அதிகாரிகளிற்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.(சிறு சிறு சம்பவங்களைத் தவிர) எங்களிற்கு பாரிய ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கும் காவல்துறையினரிற்கு நாம் நிச்சயமாக நன்றிகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உறவுகளே உதவுங்கள் நன்றி கூறுவதற்கு. உங்களிற்கு தெரிந்தவர்களைக் கொண்டும் நன்றி கூற வையுங்கள். இதனை CMR & TVIலும் தெரிவியுங்கள்.வேறு நாட்டில் உள்ளவர்களும் அழைத்து நன்றி தெரிவிக்கலாம். அத்துடன் மேஜர் டேவிட் மில்லரிற்கும் நன்றி தெரிவிக்கவேண்டும். (நன்றிகளை தெரிவித்துவிட்டு இங்கே உங்கள் அந்த அனுபவங்களை பதிவு செய்வீர்களானால் அது எல்லோரையும் ஊக்கப்படுத்தும்.)

  5. CNN தொலைக்காட்சியில் வந்த இலண்டன் கவனயீர்ப்பு நிகழ்வு http://edition.cnn.com/video/#/video/world...ref=videosearch

  6. அவசரமாக பிரபாகரன் அழைத்தார்: சத்தியசீலன் (தமிழ் மாணவர் பேரவை ஸ்தாபகர்) தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி,சத்தியசீலன். விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து ஈழ விடுதலை ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் தாய் அமைப்பான `தமிழ் மாணவர் பேரவை'யைத் தொடங்கி, பிரபாகரன் தலைமுறை இளைஞர்களை ஆயுதப் போராட்டத்துக்கு அழைத்து வந்தவர். சென்றவாரம் கனடாவுக்கு வந்திருந்த சத்தியசீலனைச் சந்தித்தோம். "தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், முதல் சயனைட் தற்கொலைப் போராளியான பொன்.சிவகுமாரனின் உரும்பராய் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். எங்களுக்கு வெகுகாலத்துக்கு முன்பே ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது. ஆனால், எல்லாமே தோல்வியில் முடிந்தன. சொற்ப உரிமைகள் தருவதாக வாக்குறுதி அளித்த சிங்கள அரசு…

  7. முருகபூபதி இவரைத் தெரியுமா? இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் இவரை அறிந்திருக்கமாட்டார்கள். இவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் இவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப்பராயத்தில் இவரை அவ்வாறுதான் அழைத்தேன். எங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா – …

    • 1 reply
    • 3.6k views
  8. கையில் பத்து நாட்களே நிரம்பிய பச்சைக் குழந்தை. மனம் நிரம்ப பயம். கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கம். வைத்தியசாலையிலிருந்து பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டு முற்றத்தைக்கூட மிதிக்க முடியாமல் விதி விரட்டி அடித்துக் கொண்டிருந்தது. ஓடி ஓடி வேலணை அராலி யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் தாண்டிக்குளம் என்று நாம் அனுபவித்த வேதனை நிரம்பிய அந்த நாட்களின் ஆரம்பமே எனது கடைசி மகளின் ஆரம்ப வாழ்க்கை. மழலைப் பருவத்திலேயே விதிவசத்தால் பெற்றவர்களைப் பிரிந்து இரண்டு வருடங்கள் என்னைப் பெற்றவர்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. காலம் கைகூடி கனடாவில் குடியேறி தனது ஆரம்ப பாடசாலை வாழ்க்கையை இங்கு ஆரம்பித்தார். புதிதாகக் குடியேறிய நாட்டில் ஆரம்ப காலம் எல்லோரையும்போல எமக்கும் பல சவால்கள் நிறைந்ததாகத்தான் இருந்தது. …

  9. கனடாவில் வாழையிலைச் சோறால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்! கனடாவின் ரொரொண்டோவில் வாழையிலை உணவால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகம், ரொரொண்டோ நகர் மிகப்பெரிய இலங்கை மக்கள் தொகையினைக் கொண்டதாக விளங்குகின்றது என்றும் ஸ்கார்பரோ பகுதி இலங்கை உணவுகளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளது. மேரி மார்டின் எனும் இலங்கை கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் பற்றியே அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோவிற்கு எண்பது தொண்ணூறுகளில் (1980-1990) ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் புலம்பெயர்ந்து சென்றதனால் அந்தப்பகுதியில் இலங்கை உணவு வகைகளே ஆட்கொண்டுள்ளதாக மேரி மார்டின…

  10. யாழ் சோழியன் அண்ணாவுடனான எமது அனுபவங்களையும் நினைவுகளையும் பதிந்து வைப்போம் உறவுகளே... யாழ் ஒரு குடும்பம் என்ற நாங்கள் சொல்வோம் சோழியன் அண்ணாவின் இழப்பு என்பது எமது யாழ் குடும்பத்தின் அதன் உண்மையான அர்த்தத்தை பாசத்தை சொல்கிறது நேற்றிலிருந்து எதுவுமே ஓடவில்லை ஒவ்வொரு செக்கனும் அவரது நினைவுகள் வந்து மோதுகின்றன கண்ணால் காணாது உறவு ஆனால் அவரை மறக்கமுடியவில்லை. என்னுடன் அவரது தொடர்புகளையும் எழுத்துக்களையும் இங்கு பதிகின்றோம் முடிந்தவரை எல்லோரும் பதியுங்கள். அவரது நினைவுப்பதிவாக காலம் காலமாக இங்கு இருக்கட்டும்.

  11. முள்ளிவாய்க்காலில் சிந்திய தமிழர்களின் இரத்தம் காய்ந்துவிட்டதோ தெரியாது. அகதிமுகாம்களில் மக்களின் துயர் துடைக்கப்படவில்லை. புலம்பெயர் தமிழர்களின் மனச்சுமை அகற்றப்படவில்லை. ஆனால் சுவிஸ் சுயநலவாதிகள் தங்கள் வசதிகளை பெருக்கிக்கொள்வதில் தங்கள் முன்னெடுப்புக்களை ஒருபோதும் கைவிடத் தயாரில்லை. சும்மா இருந்துகொண்டு வாழ்க்கையை சுவைத்தவர்கள் வசதிகளை இழக்கத்தயாரில்லை என்பதையே இந்த நிகழ்வு காண்பிக்கின்றது. மாவீரர் கிண்ண விளையாட்டுப்போட்டி. வியாபாரிகள் விளம்பரத்துக்காய் தகுந்த பேர் சூட்டுக்கொள்வார்கள். இவர்களும் குறைந்தவர்களா? தடுப்பு முகாம்களில் பத்தாயிரத்துக்கு அதிகமான போராளிகள் வாடிக்கொண்டிருக்க இந்த சுயநலவாதிகள் ஒரு நிமிட …

  12. இதைச் செய்வது கஸ்டமா? கனடாவிலுள்ள பிரபலமான பிற்சா உணவகத்தில் நேற்று நடந்த உரையாடல் பிற்சா வாங்க வந்தவர் : நான் வழமையா உங்கடை கடையிலை தான் பிற்சா வாங்கிறனான். ஆனால் இனிமேல் உங்கடை கடைக்கு வர மாட்டன் உரிமையாளர் : ஏன் தம்பி என்ன விசயம் பி. வா. வந்தவர் : இல்லை எல்லா இடமும் கத்துகினம். சிங்களப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லி. ஆனால் நீங்கள் என்ன எண்டால் ஓறெஞ்ச் பார்லியையும் நெக்டோவையும் விக்க வைச்சிருக்கிறியள். உரிமையாளர் : உண்மையிலை அண்ணை. அதை நாங்கள் இப்ப விக்கிறதில்லை. அவங்கள் தந்த கூலர் எண்ட படியால் டிஸ்பிளேக்கு மட்டும் தான் இருக்குது. பி.வா.வந்தவர் : நீங்கள் சடையிறியள். உரிமையாளர் : சரி அண்ணை நாளைக்கு வந்து பாருங்கோ. இந்தச் சோடா இருக்…

    • 28 replies
    • 3.5k views
  13. கனடா டொரண்டோ பல்கலைக்கழகத்தில் வரும் 18 ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளும் முகமாக இந்திய விஞ்ஞானி அப்துல் கலாம் கனடாவுக்கு வருகை தரவுள்ளார். மேலதிக செய்தி: http://www.southasianpost.com/portal2/c1ee...Pitroda.do.html

  14. கனடாவில் நடந்த்தாம்

    • 21 replies
    • 3.5k views
  15. ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் இங்கு வந்திருந்த போது தனது குடும்பத்துக்கு நேரிட்ட ஓர் அவலத்தை வேதனையுடன் தெரிவித்தார். இவரின் மகனுக்கு இங்குள்ள உறவினர்களிடமிருந்து பலர் பெண் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் பண வசதிபடைத்தவர்கள். "மன்னிக்க வேண்டும் நான் ஓர் ஏழைப் பெண்ணையே எனது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்" என்று இவர் ஒரேயடியாகக் கூறிவிட்டாராம். இவர் கூறியதைப் போலவே, மகனுக்கு ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து வெளிநாட்டுக்கும் அழைத்தார். இனித் தான் விவகாரமே ஆரம்பமாகிறது! வெளிநாடு சென்ற அந்தப் பெண்,தான் சுயமாகச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கண்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம். ஏழ…

  16. இலங்கைத்தமிழ்ச் சமூகத்தினது குறிப்பாக யாழப்பாணத்துச் சாதி வேளாளர்களது திமிர்தனம் அவர்களிடையே நடைபெறும் திருமணப் பேச்சுக்காலகளில் றடைபெறும் பேரம்பேசல்மூலமே அதிகமாக வெளிப்படும் இவை காலாகாலமாக நடைமுறையில் இருந்துவந்தாலும் தற்போதைய காலக்கட்டத்தில் பலமபொயர் தேசத்துப் புதுப்பணவரவு மற்றும் வன்செயல் பணக்காரர் ஆதல் போன்ற காரணங்களால் தமிழர் மத்தியில் புதுமணப்பொலிகாளைகளது விலையேற்றம் யாழ்ப்பாணக் காணிகளது விலையேற்றம்போல் ஏறுமுகமாகவே காணப்படுகின்றது. உதாரணமாக நான் ஓரிரு தினங்களுக்கு முனபு அறிந்தவதத்தில் ஒரு யாழ்ப்பாணத்துப் பொறியியல் பொலிகாளையது திருமண விலை விபரம், சீதனம் ஐந்துபோடி ரூபாய் அதைவிட கொழும்பில் இரண்டுகோடி பெறுமதியில் வீடு பொறியியலாளராகப் படித்துப்பட்டம்பெற்ற பெண். ச…

  17. ஈழத்தமிழ்ப் பெண் சிவராதை லோகநாதனின் சாதனை. http://www.nitharsanam.com/?art=17600 சிவராதை லோகநாதனுக்கு வாழ்த்துக்கள்

    • 14 replies
    • 3.5k views
  18. கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா?வாக்களியுங்கள் இது அனைவரின் கடமை இதுவொரு பத்திரிகையின் மக்கள் கருத்துபதிவு இதற்கு அனைவரும் உங்கள் ஆதரவை நல்குங்கள் பின்வரும் இனயத்தளத்துக்கு சென்று ஆம் என்றால் முதலாவதை அழுத்தி கீழ்மூலையில் வாக்கு என்ற பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும் மீண்டும் அதனை அழுத்தினால் தான் உங்கள் வாக்கு பதிவாகும் அல்லது கனடா அமெரிக்கா வாழ் உறவுகள் 1416 260 4005 என்ற இலக்கத்தில் தொடர்புகொண்டு ஒன்றை அழுத்தினால் ஆம் என்று அர்த்தம் வெளி நாட்டு உறவுகள் 001416 260 4005 என்று அழுத்தி அழைபை ஏர்படுத்திகொள்ளலாம் முடிந்தவரை அனைவரும் வாக்களியுங்கள் http://www.citynews.ca/polls.aspx?pollid=4786

  19. இன்று பிரான்சை அதிர்ச்சிக்கும் அவமானத்துக்கும் ஆளாக்கிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ஆசியரின் முகத்துக்கு மேல் ஒரு மாணவன் கடதாசியை சுருட்டி எறிந்ததை கண்டு கொண்ட ஆசிரியர் அவனது பெற்றோரை அழைத்து விடயம் சிக்கலடைவதை தவிர்க்க 300 ஈரோக்கள் மாமதாமாதம் படி 7500 ஈரோக்கள் தரவேண்டும் என ஒப்பந்தம் எழுதி செயற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க.......... Un enseignant de l'Avesnois aurait demandé 7.500 euros aux parents pour ne pas expulser leur enfant accusé d'avoir lancé une boulette de papier. Nord : un prof aurait racketté les parents d'un élève Créé le 01-02-2013 à 08h45 - Mis à jour à 09h57 Par Le Nouvel Observateu…

  20. Started by putthan,

    அண்மையில் தமிழ் மாணவர்களிற்கு சில போட்டிகளை அவுஸ்ரெலியா தமிழ்பட்டாதரிகள் சங்கம் நடத்தியது (அவுஸ்ரேலிய தமிழ் பட்டமில்லாத சங்கதிற்கு நான் தான் தலைவர்) :P அதில் எழுதுபோட்டி,உரையாடல்போட்டி,வ

    • 22 replies
    • 3.5k views
  21. வழக்கமாக நான் தமிழ் புத்தகங்களை இணைய தளங்களின் ஊடாக ஓர்டர் பண்ணி இந்தியாவில் இருந்து தருவிக்கின்றனான். ஆனால் இப்போது திடீரென அவர்களின் தபால் சேவை விலைகளில் அதிகரிப்பு ஏர்பட்டமையால், அதிக விலை கொடுக்க வேண்டி வந்துவிட்டது. இதன் காரணமாக இன்று ஒரு ஓர்டரை (ஓர்டர்: இதற்கு என்ன சரியான தமிழ் சொல்?) நிறுத்த வேண்டி வந்து விட்டது. (விலை 100 டொலர்களில் இருந்து, 200 டொலர்களாக அதிகரித்து விட்டது) உங்களில் யாருக்காவது கனடாவில், 'ரொரன்டோ' வில் நல்ல தமிழ் புத்தங்கள் விற்கும் புத்தக கடைகளின் விபரம் தெரியுமா? ஜெயமோகன், சுந்தர ராமசாமி, கி.ஜா.ரா போன்ற தீவிரமாக எழுதுபவர்களின் புத்தகங்களும், மொழிபெயர்பு புத்தகங்களும் இங்கே கிடைக்குமா?

  22. இலண்டன் ஐங்கரன் நிறுவன உரிமையாளரும் மில்லியனருமான தாயகத்தில் யாழ் இணுவிலைச் சேர்ந்த ------------ என்பவர் கடந்த வாரம் இலண்டனிலிருந்து கொழும்பு ஊடாக இந்தியா செல்ல முற்பட்டு கொழும்பு விமான நிலைய டிரான்சிட்டில் காத்திருந்த வேளையில் மகிந்தவின் குண்டர் படையால் கடத்தப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.