Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யேர்மனியத் தொலைக்காட்சி RTL இல் 2002ம் ஆண்டில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி Deutschland sucht den Superstar (யேர்மனி சுப்பர் ஸ்ராரைத் தேடுகிறது). வழமை போல் இந்த வருடமும் தை மாதம் ஆரம்பமான அந்த நிகழ்ச்சியில் Bad Friedrichshall என்ற நகரத்தில் வசிக்கும் டிலானி தெய்வேந்திரன் (24) பங்கு பற்றி அடுத்த கட்டத்துக்குத் தெரிவாகி இருக்கிறார். டிலானி வாழும் நகரத்தில் இருந்து வெளியாகும் Stimme என்ற பத்திரிகை அவரைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. https://www.stimme.de/heilbronn/nachrichten/nord/lokales/Dielani-Theivendran-aus-Bad-Friedrichshall-tritt-bei-DSDS-an;art140901,4314453 யேர்மன் மொழி தெரியாதவர்களுக்கு அந்த இணைப்பு https://e…

  2. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய ரொமானிய நகரில் பேக்கரி ஒன்றில் தொழிலில் ஈடுபட்டிருந்தஇலங்கையை சேர்ந்த இரு பெரும்பான்மை இன பணியாளர்கள் அந்த பணிகளில் இருந்து விலக்கப்பட்டு வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.ரோமானிய ஊடகமான 'ஹொட்நியூஸ்' இதனை தெரிவித்துள்ளது.டிட்ரு என்ற பகுதியில் செயற்பட்டு வரும் மாவிலான உணவுகளை தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளூரில் பணியாளர்களை தேட முடியாத நிலையில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை பணிகளில் சேர்த்து கொண்டுள்ளார்.இந்த பிரதேசம் ஹங்கேரியன் இனத்தினர் அதிகமாக வாழும் பிரதேசமாகும். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளால் குறித்த இரண்டு இலங்கையர்களும் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி…

    • 0 replies
    • 1.1k views
  3. பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு by : S.K.Guna பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) தெரிவிக்கையில்; நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் நன்கு தயாராகியுள்ளன. …

    • 13 replies
    • 1.6k views
  4. “காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா On Jan 26, 2020 13.01.2020 சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் பயிற்சி பெறத்தொடங்கிய மனுசா மக்களன்பன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இப்பயிற்சியைத் தொடர இருக்கின்றார். இவர் ஏற்கெனவே சுவிற்சர்லாந்தின் காவல்துறையில் எழுதுவினைஞராக மூன்றாண்டுகள் தொழிற்கல்வியை நிறைவு செய்தவர் ஆவார். அத்தொழிற்கல்வியை மேற்கொள்கின்ற போது, காவல்துறையின் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இவரும் பங்குபற்றியிருந்தார். “அந்த வேளையில் தான் காவல்துறையாக வர வேண்டும்” என விரும்பினார் மனுசா. தற்போது இவர் செய்து வரும் இந்த சுவிற்சர்லாந்தின் தரைப்படைப்பயிற்சி எதிர்காலத்தில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகும். மனுசாவிடம் …

  5. முன்னாள் பிரதமர் மல்றோனிக்குக் கனடியத் தமிழர் மரபு விருது கனடியத் தமிழர் தேசிய அவையின் ஊடக அறிக்கை: முன்னாள் கனடிய பிரதமர் பிறையன் மல்றோனி 1986 ல் தமிழ் மக்கள் அகதிகளாக கனடாவிற்கு படகு மூலம் வந்தடைந்த போது அவர்களை மானசீகமாக வரவேற்றதை அங்கீகரிக்கும் விதமாக ‘கனேடியத் தமிழர் மரபு விருது’ மாண்புமிகு பிரதமர் பிரையன் மல்ரோனி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் இன அழிப்பில் இருந்து தப்பி ஓடிய 155 தமிழ் மக்கள், 1986 ஆகஸ்டில் தெற்கு நியூபவுண்ட்லாண்டிற்கு வந்தடைந்த போது அவர்களை ஏற்றுக்கொண்டார் பிரதமர் பிரையன் மல்ரோனி. சில கனடியர்கள் ஆத்திரமடைந்து தமிழ் அகதிகளை மோசடி செய்பவர்கள், வ…

    • 0 replies
    • 544 views
  6. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் சாமிநாதன் பிணை நிராகரிப்பு! Last updated Jan 29, 2020 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவரது பிணை கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் பிணை மனுவை தள்ளிப்படி செய்த நீதவான், பொதுவாக, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் குறித்…

  7. கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரங்கள் இங்கு உ லாவுது.அதாவது வேலை அனுமதியுடன் குடும்பமாகவும் தனியாகவும் கனடா செல்லலாம் என்று.ஏற்க்கனவே எனக்குத் தெரிந்த ஒருவர் சில லட்ச்சங்களை கட்டிப்போட்டு இருக்கிறறார்.

  8. கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவிக்கு பாதுகாப்பு! கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் ரொறன்ரோ நகர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் என்பவர், கடந்த புதன் கிழமை இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இலக்கானார். ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் சந்தேகநபர், சுமார் 5’11’ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில்…

  9. ஜெர்மனியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=124945

  10. கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர… கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச…

  11. Aladdin, Tarzan, Tanz der Vampire, Koenig der Loewe போன்ற இசை நடன நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வரும் போதெல்லாம் ஒருதடவை போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நீண்ட காலங்களாக என்னுள் அந்த விருப்பம் இருந்தும் ஏனோ முடியவில்லை. ஒன்று நுழைவுச் சீட்டின் விலை அதிகம் என்பதால் இருக்கலாம் இல்லை அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும் என்பதாகவும் இருந்திருக்கலாம். இதை எல்லாம் தாண்டி இப்பொழுது அது நிறைவேறி இருக்கிறது. நிகழ்ச்சி முடிய இரவு 11 மணி ஆகிவிடும். குளிர்காலமாதலால் வீதிகளில் பனி படர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் வர ஒரு நாளுக்காக ஒரு ஹொட்டலில் தங்கி விட முடிவு செய்தேன். நுழைவுச் சீட்டுக்கு மட்டும் 142 யூரோக்…

    • 18 replies
    • 3k views
  12. பிரான்சு மண்ணில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானத்தை பிரெஞ்சு மாநகரமுதல்வருடன் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று 22.01.2020 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்! பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்தில் இருக்கும் சுவாசிலே றூவா பிராங்கோ தமிழ்சங்கத்தினதும் தமிழ் மக்களின் தொடர் முயற்சியில் மாநகர முதல்வரும் அவரின் சார்பானவர்களும் பல வழிகளில் தமிழ்மக்களுக்கும் அவர்களின் நியாயமான முன்னெடுப்புக்களுக்கும் உதவி வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழின மக்களுக்கு இழைக்கப்பட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி ஈருருளி பயணத்தையும், நட…

    • 1 reply
    • 978 views
  13. உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவள் Katja. அமெரிக்காவில் இருக்கும் அவளுக்கு வயது 19தான் ஆகிறது. ஆடம்பரத்தின் மடியில் படுத்திருக்க வேண்டும் என்பது அவளது பெரும் கனவு. ஆடம்பரம் என்றால் பணம்தானே மூலதனம். பணத்துக்கு என்ன செய்வது? என்று சிந்தித்த பொழுது தனது கன்னித் தன்மையை விற்றால் என்ன என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. Katja எடுத்த முடிவு அவ்வளவு எளிதானது அல்ல என்பது அவளுக்குத் தெரியும். விரும்பிய ஒருவனுடன் சாதாரண வாழ்வை ஆரம்பிப்பதா அல்லது பணத்துக்காக கன்னித் தன்மையை இழந்து ஆடம்பர வாழ்வை அனுபவிப்பதா என்று அவளுக்குள் ஒரு போராட்டம். இறுதியாக வென்றது அவளது ஆடம்பரக் கனவுதான். உடனேயே அவள் தனது கன்னித்தன்மையை விற்கப் போவதாக அறிவித்தாள். கூடவே `மாதம் ஒன்றுக்கு 10.000 சுவிஸ் பிராங்…

  14. சொத்துப் பிரிக்கும் போது குடும்பங்களுக்குள் அடிதடி, வெட்டுக்குத்து என்று சண்டைகள் நடப்பதுண்டு. அதற்காக நீதிமன்றம் போய் அங்கே ஒரு தீர்ப்புக் கிடைத்தாலும் அதன் பிறகும் அவர்களது சண்டைகள் சில இடங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். வாதியும் பிரதிவாதியும் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தால் கூட அது நீதிமன்ற வளாகமானாலும் வாய்த் தர்க்கமோ அல்லது கைகலப்போ அல்லது ஒருவருக்கு ஒருவர் முறைத்துக் கொள்ளும் நிலையோ கண்டிப்பாக இருக்கும். இதையெல்லாம் தமிழக சினிமாக்களில் காட்சிகளாகவும் அடிக்கடி நாங்கள் பார்ப்பதால் எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் பார்க்கும் யேர்மனியருக்கு இது புதிதாக இருக்கும். பொதுவாக அவர்கள் வெளிப்படையாக சட்டத்தை மதிப்பவர்கள் மட்டுமல்ல சட்டத்துக்க…

    • 13 replies
    • 2.2k views
  15. ஊர்ப் புதினம் கதைப்பதில் பெண்கள்தான் முன்னணியில் நிற்பதாக நான் இத்தனை நாட்களும் எண்ணியிருந்தேன். என் கணவர் கூட முன்னர் நானும் மகளும் யார் பற்றியாவது கதைத்தால் அல்லது நண்பிகளுடன் கதைத்தால் உடனே உங்களுக்கு வேறுவேலை இல்லை. உப்பிடிக் கதைப்பதை விட்டுவிட்டு உருப்படியான அலுவல் இருந்தால் பாருங்கள். இதுபோலத்தானே உங்களை பற்றியும் எத்தனைபேர் கதைப்பார்கள் என்பார். கதைத்தால் கதைத்துவிட்டுப் போகட்டும். எமக்குத் தெரியவா போகிறது? அதற்காக நாம் கதைக்காமல் விடமுடியாது என்பேன் நான். இப்ப ஒரு ஆண்டாக நான் கவனித்ததில் என் கணவரோடு வேலை செய்பவர்கள் சிலர் வாரத்தில் இரண்டு தடவையாவது தொலைபேசியில் கணவருடன் கதைப்பார்கள். பார்த்தால் காதலன் காதலியுடன் உரையாடுவதுபோல் மணித்தியாலங்கள் வரை கதை தொடரும்.…

  16. அரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார் சொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A.) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார். மாதங்கியின் இசைப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட Member Of The Most Excellent Order Of The British Empire ((MBE)) பதக்கத்தினை இளவரசர் வில்லியமிடமிருந்து பெற்றுக்கொண்டார். பதக்கத்தினைப் பெற்றுக்கொண்ட மாதங்கி அதனைத் தனது தாயாருக்கு அணிவித்துச் சிறப்பித்தார். பக்கிங்கம் அரண்மனையில் நடைபெற்ற இந்த பதக்கம் சூட்டும் விழாவில் தனது தாயார் கலா அருள்பிரகாசத்தினையும் அழைத்துவந்திருந்தார். கடந்த ஆண்டு ராணியின் பிறந்தந…

  17. தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க ஆதரவு கோரும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை ஹரோ, லண்டனில் 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற இடத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறுகின்றது. தமிழ் மக்களின் காலை, கலாசாரம், வரலாறு, விழுமியங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இன்றைய நிகழ்வில் நடைபெறவிருக்கிறது என்றும் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் வர்த்தக ச…

  18. அதிகாரத்தை வெல்ல ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும்: ரெபேக்கா லோங்-பெய்லி by : shiyani அதிகாரத்தை வெல்வதற்கு தொழிற்கட்சி ஒரு ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும் எனவும் அரசியல் ஸ்தாபனத்துடன் சண்டையிட வேண்டும் எனவும் தொழிற்கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னணி வகிக்கும் போட்டியாளரான ரெபேக்கா லோங்-பெய்லி தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் தொழிற்கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்விக்கு துக்கம் அனுசரிப்பதை நிறுத்திவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பயணத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இதுவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கார்டியன் பத்திரிகைக்காக ரெபேக்கா லோங்-பெய்லி எழுதிய கட்டுரையில், பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வெற்றிபெறத…

    • 0 replies
    • 491 views
  19. கடிதத்தை எழுதி முடித்த பின்னர் விலாசத்தை மாற்றி எழுதி வேறொருவருக்கு அனுப்பி மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். கடிதங்களை அஞ்சல் செய்வது குறைந்த விட்ட காலம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல்கள் தான் இப்பொழுது முதன்மை பெற்றிருக்கின்றன. என்னதான் இன்டர்நெட் காலமாக இருந்தாலும் தவறான முகவரி எழுதி பின்னர் விழி பிதுங்கும் நிலைமை மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யேர்மனியில், பேர்லின் நகரத்தில் இருந்த ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தின் வேலை வாய்ப்பை அறிந்த எகிப்தியர் ஒருவர் தனது விண்ணப்பத்தை மின்னஞ்சல் ஊடாக அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவரது விண்ணப்பம் அந்த நிறுவனத்தின் பெண் தலைமை அதிகாரியின் பரிசீலனைக்குப் போனது. அதிகாரி, விண…

  20. HS2 திட்டம் ஈடுசெய்ய முடியாத இயற்கை வாழ்விடங்களை அச்சுறுத்துகிறது by : shiyani 108 பண்டைய வனப்பகுதிகள் உட்பட ஈடுசெய்ய முடியாத இயற்கை வாழ்விடங்களை அழிக்கும் அபாயங்கள் HS2 திட்டத்தில் காணப்படுவதாக அறிக்கையொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் வடக்கு இங்கிலாந்தை இணைக்கும் அதிவேக ரயில் பாதையான HS2 அரிய உயிரினங்களை அழிக்கக்கூடும் என வனவிலங்கு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முன்னோக்கிச் சென்றால் பசுமையான அணுகுமுறை தேவைப்படும் எனவும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் அதன் ரயில்வே பாதையில் பசுமை தாழ்வாரத்தை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலை மதிக்கும் என இந்த திட்ட…

    • 0 replies
    • 765 views
  21. யேர்மனியில் Krefeld நகரத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் நல் வாழ்த்துக்களுடன் 2020 ஆம் ஆண்டை வரவேற்க விரும்பினார்கள். ஆனால் அவர்களது அந்த விருப்பம் Krefeld மிருகக் காட்சிச் சாலைக்கு ஒரு பேரழிவைத் தரும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். 2020 புத்தாண்டு தினத்தில் Krefeld நகரில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் இறந்து போயின. அந்த தீ விபத்துக்கான காரணம் இப்பொழுது வெளியே வெளிவந்திருக்கிறது. அறுபது வயது ஒரு தாயும் அவரின் நடுத்தர வயது இரு மகள்களும் ஐந்து வெளிச்சக் கூடுகளை இணையத்தளத்தில் வாங்கி புது வருடத்தில் வாழ்த்துக்களை இணைத்து வெளிச்சக் கூடுகளை அவர்கள் வானத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள். அதில் ஒரு வெளிச்சக் கூடு மிருகக் காட்…

    • 6 replies
    • 1.6k views
  22. 65 வயதான Haim-Swarovski 2010ம் ஆண்டு தன் தலைவிதியை நொந்து கொண்டார். ஒலிம்பியாவில் பங்கு கொள்ள நினைத்த அவரது தீராத ஆசை அந்த ஆண்டில் அழிந்து போயிற்று. யேர்மனியில் மூனிச் மாநிலத்தில் Fritzens என்ற இடத்தில் விவசாய நிலங்களை அண்டிய பகுதியில் ஒரு குதிரைப் பண்ணையை வைத்திருந்தார் ஒஸ்ரியாவைச் சேர்ந்த Haim. அவர் வளர்த்து வந்த 60 குதிரைகளில் முதன்மையானது Donna Asana என்ற குதிரை. பல போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி கொண்ட Donnaவை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக அதற்கு தினமும் Haim பயிற்சி கொடுத்து தயார்படுத்தி வந்தார். திடீரென ஒருநாள் Donna வுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இடைவிடாத இருமலில் Donna அவதிப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் நி…

  23. Zeynep யேர்மனியில் Essen நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் குருதீஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பெண். தனது ஐந்து பிள்ளைகளின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்து “என்னுடைய பெற்ற வயிறு பற்றி எரிகிறது” என்று இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். Zeynep 17வயதில் தனது தாயின் உறவினரான தன்னைவிட11 வயது அதிகமான Ali Khalilஐ திருமணம் செய்து கொண்டாள். இன்று 33 வயதில், தனது மணவாழ்வு என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்கிறாள். வாகனங்கள் திருத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த Ali Khalil பற்றி அவள் குறிப்பிடுகையில், “Aliக்கு சந்தேகம் என்னும் நோய் பயங்கரமாகப் பீடித்திருந்தது. எதுவுமே அவனுடன் பேச முடியாது. வீட்டை விட்டு வெளியே போக முடியாது. அடி, உதை என்று அவனிடம் இர…

  24. யாழ் இளைஞன், துருக்கியில்.. உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – கரவெட்டி – வதிரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துருக்கியில் உயிரிழந்துள்ளார். மயில்வாகனம் சிவரஞ்சன் என்ற 37 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகவரூடாக பிரான்ஸிற்கு செல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றதாக உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த இளைஞர் முகவர் ஊடாக பிரான்ஸிற்கு புலம்பெயர முயற்சித்த வேளை துருக்கியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் துருக்கியிலிருந்து சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது. http://athavannews.com/யாழ்-இளைஞன்…

  25. பனிச் சறுக்கலுக்காக யேர்மனியில் இருந்து விடுமுறைக்கு ஒஸ்ரியாவுக்குச் சென்ற பயணிகளுக்கு நடந்த அனர்த்தம் பற்றிய தகவல்கள் இப்பொழுது வெளிவந்திருக்கிறது. ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் 20 தொடக்கம் 25 வயதிலான யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டதுமன ஒரு துயரச் சம்பவம் 05.01.2020 அன்று அதிகாலை 1:00 மணிக்கு நடந்திருக்கிறது. மது போதையில் கார் ஓட்டி வந்த Kiens நகரைச் சேர்ந்த 28 வயது Stefan.L. என்ற இளைஞனது கார் மோதியதாலேயே இந்தத் துயரம் நடந்திருக்கிறது. இதில் படுகாயம் அடைந்தவர்களில் இன்னும் ஒரு பெண் நேற்று (06.01.2020) வைத்தியசாலையில் மரணமானார் என்று அறிவித்திருக்கிறார்கள். பஸ்ஸில் இருந்து இறங்கி தாங்கள் தங்கயிரு…

    • 2 replies
    • 908 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.