சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
உலகத்தில் தந்தை,மகன் உறவு என்பது அதிகம் பேசப்பட்டு,அறியப்பட்டு இருக்கும்.ஆனால் பெரும்பாலும் தந்தை,மகன் உறவு சுமூகநிலையில் இருக்காது. [size=4]ஆனால் அப்பா,மகள் உறவு என்பது அப்படிப்பட்டதல்ல,அது ஒரு பாசமான,நெகிழ்ச்சியான,அன்பான உறவு.ஒருவன் தன்னுடைய தாய்க்குப்பின்,தாரத்திடம் தன்னை ஒப்படைக்கிறான்.அதற்கு பிறகு வயோதிக காலத்தில் தாய் காட்டிய அன்பையும்,தாரம் செய்த பணிவிடையையும் மகள் செய்கிறாள்.ஒருவனுக்கு வயோதிக காலத்தில் தன்னுடைய சுய தேவைகளை செய்ய முடியாத நிலையில்(தான் உடுத்திருக்கும் உடை களைந்த நிலையில் இருக்கும்போது சரி செய்ய இயாலாதநிலை)மேலும் எந்த நிலையில் இருந்தாலும்(உடை இல்லாம இருந்தாலும் கூட)மகனோ,மருமகளோ பணிவிடை செய்யமாட்டார்கள்.ஆனால் மகள் தாயைபோல் கருணை உள்ளத்துடன்…
-
- 9 replies
- 5.8k views
-
-
தந்தையின் ஆசீர்வாதம் வேண்டி, உயிரிழந்த அவருடைய உடல் முன் மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வமணி - செல்வி தம்பதியரின் மகன் அலெக்சாண்டர் (30). இவரும், மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் - அன்னபூரணி தம்பதியரின் மகள் ஜெகதீஸ்வரி (27) என்பவரும் மயிலத்தில் உள்ள தனியார் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். ஒரே இடத்தில் பணியாற்றும்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக, இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 2ஆம் திகதி மயிலம்…
-
- 0 replies
- 509 views
-
-
தந்தையாகப் போகிறீர்களா? ஒரு குட்டி அட்வைஸ் தாயாக போகும் பெண்களை விட, தந்தையாக போகும் ஆண்களுக்கு தான் பயம் கலந்த சந்தோஷம் இருக்கும். ஏனெனில் பெண் என்பவள் ஒரு கருவை தனது வயிற்றில் சுமக்கிறாள். ஆனால், ஆண் மனைவியோடு சேர்த்து தனது குழந்தையையும் மனதில் சுமக்கிறார். இந்த இரண்டு உயிர்களையும் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் பயங்களை எல்லாம் போக்கி, ஒரு நல்ல தந்தையாக விளங்குவதற்கு தயார்படுத்திக்கொள்வது அவர்களின் கடமையாகும். 1. தந்தையாக போகும் ஆண்கள், தங்கள் குழந்தைக்காக பாதுகாப்பான முறையில் வீட்டினை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது. 2. அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒவ…
-
- 6 replies
- 828 views
-
-
This Man, my lovely father-in-law, has been the key to me receiving one of my biggest blessings this year, my husband. Together, we have faced so many struggles and unexpected situations. But with his kindness and compassion, he always found a solution for me, for us. He made tough decisions so I can live the life I want and has helped me become more confident in my situation. With his help, I am able to walk into situations with my head high and feel at peace knowing that I have his support. I am sure that he …
-
- 13 replies
- 3.3k views
-
-
இந்தியாவின் ஆந்திர மாநில கவர்னருக்கு தாய் ஒருவர் ‘மனநலம் குன்றிய தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என, கடிதம் எழுதியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குறித்து மேலும் தெரியவருகையில், இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்வர்னலதா. என்பருக்கு, ஜான்வி எனும் ஒரு மகள் உள்ளார். ஜான்விக்கு 4 வயது முதல் உளவியல் பிரச்சினையும், 8 வயது முதல் ஜினிக் கோளாறும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜான்வியின் தந்தை உதவியாளராக பணிபுரிந்து வரும் வைத்தியசாலையில் ஜான்விக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையின் உளவியல் துறை புதிய தலைமை வைத்தியராக ராஜ்ய லட்…
-
- 1 reply
- 476 views
-
-
தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார். பெரிய வீடு; வசதியான குடும்பம்; ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதிய…
-
- 0 replies
- 262 views
-
-
தனிப்பட்ட சுதந்திரம் ?. இது ஒரு மாறுபட்ட விவாதப்பொருள். நம்மில் எத்தனை பேர் நமது மனைவிக்காக, கணவருக்காக, காதலிக்காக, காதலனுக்காக நமது தனித்துவ அடையாளத்தை, சுதந்திரத்தை இழந்ததாக கருதுகிறீர்கள் ?. இதைப்பற்றி நாம் ஈல்லோரும் நன்கு அறிந்த புரட்சியாளர் சே குவாரா தனது முதல் காதலி சிச்சினாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ...... " நான் எந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு விஷயம். உனக்காக நான் என்னுடைய சுதந்திரத்தை விட்டு கொடுக்க விரும்பவில்லை. அப்படி நான் செய்தால் அது என்னையே விட்டு கொடுப்பதற்கு சமமாகும். இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார். அது நான்தான்" இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கி…
-
- 8 replies
- 1.1k views
-
-
தனிமனிதர்களின் படத்தை செய்திகளில் பிரசுரிப்பது சரியா? அண்மைக்காலமாக குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி தனிமனிதர்களின் புகைப்படத்தை செய்திகளில் பிரசுரிக்கிறார்கள். இதிலும் பெண்களே மிகவும் பாதிப்படைகிறார்கள் ஏனெனில் திருப்பி கைவைக்கமாட்டார்கள் என்றதுணிவு. நியூ ஜப்பனா(newjaffna) என்ற இணையத்தளமே இவ்வாறு படங்களை அதிகமாக பிரசுரிக்கின்றது, லன்காஸ்ரீயும் அதை கொப்பி அடிக்குறது. திருட்டு சம்மந்தமாக: அண்மையில் யாழ்பாணத்தில் பெண் ஒருவர் சங்கிலி திருடியதாக வந்த செய்தியை யாழில் படங்களுடன் பிரசுரிக்கப்படிருந்த்து மிகவும் கவலையை ஏற்படுத்தியது. சிந்தித்து பாருங்கள், அவள் செய்தது சில படித்த கள்வர்கள் செய்யும் களவுடன் ஒப்பிட முடியுமா? அவள் ஏன் களவு செய்குறாள்? (விச…
-
- 2 replies
- 947 views
-
-
தனிமை – மாதா சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து வந்த மனிதன் குரங்குகளைப்போல் கூட்டமாக வாழ விரும்புகிறான். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும்தனிமையில் வாழ்ந்ததாக குறிப்புகள் இல்லை. விதவைகள், மனைவியை இழந்தோர், நோயாளிகள்,ஆகியோர் தனிமையாக வாழவில்லை. எந்த மனிதரும் சமூகத்தில் அடுத்தவர் துணையின்றிவாழமுடியாது. பண்டமாற்றம் நிகழ்ந்தது. தேவைகளையும், நிறைவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் நவீன வாழ்க்கை முறை எத்தனையோ மனிதர்களைத்தனியனாக்கியுள்ளது. வீடிருந்தும் வீடற்றவர்களாக உணர வைக்கிறது. 18ம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழிற் புரட்சி வந்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தனியார், பொதுத்துறை, தனிநபர், சமூகம் என பெரிய…
-
- 1 reply
- 891 views
-
-
அண்மையில் கோயிலில் ஒரு வயோதிபரை சந்தித்தேன்.அவருக்கு சுமார் 50லிருந்து 60ற்குள் இருக்கலாம் என நினைக்கிறேன்.அவர் என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார் நான் பதிலுக்கு அவருடன் தமிழில் கதைக்கும் போது அவர் சொன்னார் தான் தமிழன் எனவும்,தான் யாழை சேர்ந்தவர் எனவும் சின்ன வயதில் 58ம் ஆண்டு இனக் கலவரத்தின் போது தனது பெற்றோர் கொல்லப்பட தான் நாட்டை விட்டு வெளியேறிதாகவும் தன்னோடு தமிழில் கதைப்பதற்கு ஒருவரும் இல்லாத படியால் தன்னால் தமிழில் கதைக்க முடியாது எனவும் ஆனால் கொஞ்சம்,கொஞ்சம் விளங்கிக் கொள்ள முடியும் எனவும் சொன்னார்.தனக்கு தமிழ் கதைக்கவும்,தமிழரோடு பழகவும் ஆசையாய் உள்ளதாக சொன்னார். எனது நண்பி சொன்னார் அவர் லண்டனில் இருந்து தூரத்தில் இருக்கிறார்.அவவுக்கு தெரிந்த தாத்தாவும்,பாட்…
-
- 25 replies
- 3k views
-
-
தனிமையிலே இனிமை காண முடியுமா என அந்தக் காலத்தில் பாட்டு எழுதி வைத்தார்கள். திருமண உறவுதான் ஒரு ஆண் அல்லது பெண்ணின் முழுமை என்பதும் பலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலைமை என்ன ..? திருமண பந்தத்தை உதறவிட்டு அல்லது மறுத்து விட்டு தனிமை வாழ்க்கையை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஆணோ, பெண்ணோ திருமணம் செய்வதற்கு இப்போது அவசரப்படுவதில்லை. காரணம், பற்பல இருக்கலாம். சரி, தனிமையில் இனிமையாக இருக்க முடியுமா..? முடியும் என்கிறது ஒரு ஆய்வு. அதற்கு சில காரணங்களையும் அது அடுக்குகிறது. நமது உடலிலிருந்து அந்தக் காரணங்களை தொடங்குகிறது அந்த ஆய்வு.. திருமணமாகாதவர்களுக்கு உடல் எடை கட்டுக்குள் இருக்குமாம். கார்ன்வெல் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக நடத…
-
- 24 replies
- 3.7k views
-
-
தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள் தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள் உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு’ எனும் பழமொழி எங்கள் பெண்களைச் சுட்டியே அமைந்ததொன்று. ஆண்களுக்கு வழங்கி மீதமாக, மிஞ்சிப்போகிற உணவைத்தான் வீட்டிலுள்ள பெண்கள் உண்ப தென்பது தமிழ்ப் பாரம்பரிய, பண்பாடாக இருக்கிறது. இதனால் வீட்டுப் பெண்களுக்குச் சரியான, நிறைவான, திருப்தி யான உணவு கிடைப்பதில்லை. இதனை அடியொற்றியே மேற்படி பழமொழி வழக்கில் அமைந் ததாகக் கர…
-
- 0 replies
- 1.5k views
-
-
தனிவரிசை ஜெயமோகன் சென்ற மே 7 ஆம் தேதி அமெரிக்க விசா அலுவலகத்தில் இருந்த இரண்டுமணிநேரம் அற்புதமானது. அனேகமாக படித்த உயர்குடியினர், உயர்நடுத்தரவர்க்கத்தினர். கூடுமானவரை ஆங்கிலத்திலேயே தங்களுக்குள் பேசிக்கொள்பவர்கள். உயர்தர உடையணிந்தவர்கள். மென்மையான பாவனைகள் கொண்டவர்கள். பிற அனைவரையும் உடை, தோற்றம், நிறம் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ளும் விழிகள் கொண்டவர்கள். ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் எந்த வரிசையைக் கண்டாலும் இயல்பாகவே அதில் முண்டியடித்து ஊடுருவவே முயன்றனர். சிலர் நேராகச் சென்று வரிசையின் முன்னால் தனிவரிசையாக நின்றனர். பல இடங்களில் எழுதிவைக்கப்பட்டிருந்தும்கூட , கண்ணும்முன் வரிசை தெரிந்தாலும் கூட வரிசையில் சென்று இயல்பாக நின்றவர்கள் பாதிக்கும் கீழேதான் சீர…
-
- 2 replies
- 831 views
-
-
இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன். திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்த…
-
- 81 replies
- 11k views
-
-
-
சிறுவயதில் படும் கஷ்டம் வாழ்வில் நல்ல நிலையை அடைய வைக்கும்.
-
- 2 replies
- 393 views
- 1 follower
-
-
அந்த அறை முழுவதும் ஒரே அமைதி ஒரே சோகமயம் எடுத்திருப்பதோ வெறும் 183 ரன்கள் அறையில் நுழையும் போது அறையின் முழு சூழ்நிலையையும் புரிந்து கொண்டு எல்லோரையும் அழைத்து சிரித்த முகத்துடன் பேசத்துவங்குகிறார் கபில்தேவ் "நம்மைப் போன்ற சிறந்த வீரர்களை அவர்களால் 183 ரன்களுக்கு அவுட் செய்ய முடியுமென்றால் நம்மாளும் முடியும் நம்பிக்கையோடு விளையாடுங்கள்" என்றார். அன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு உலககோப்பை பெற்று தந்த ஆட்டம். உலகமுழுவதும் பொருளாதார பெருமந்தம் எங்கு பார்த்தாலும் வேலை நீக்கம்,பங்கு சந்தைவீழ்ச்சி.இது தீர 5 வருடங்கள் ஆகும் என் உலக வல்லுனர்கள் எல்லாம் கை விரித்தனர்.ஆனால் ஒரு மூலையில் மட்டும் "வெற்றி உனது வெற்றி உனது" என ஒரே ஆனந்த தாண்டவம் ஒரு சின்ன நம்பிக்கை சுடர் மட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
-
இவர் யார் ? என்ற விடைக்கு கீழே படியுங்கள்... ஒரு சோக நிகழ்வின் தொடர்ச்சியாகத் தான் பாண்டி எனக்கு அறிமுகமானார். அன்பு நண்பர் அந்தோணி 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென்று காலமானபோது தான். அந்தோணிக்கு தமிழ் வலையுலக நண்பர்கள் உதவியுடன் வாங்கிக் கொடுத்து இருந்த தானியங்கி சக்கர நாற்காலியை என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அந்தோணிக்குத் தெரிந்த பாண்டிக்கு அதை வழங்க, நண்பர்கள் சம்மதத்துடன் முடிவு செய்தேன். பாண்டி பிறந்து சில ஆண்டுகளிலேயே அவரது கால்கள் செயலிழந்து விட்டன என்று கேள்விப்பட்டேன். சற்றே பழுதடைந்திருந்த சக்கர நாற்காலியை பழுது பார்த்து பாண்டிக்கு கொடுத்தேன். பாண்டிக்கு மிகவும் சந்தோஷம். பாண்டியின் கால்கள் செயல் இழந்திருந்தாலும், அவரது கைகளில் அற்புதமான திறமை ஒளிந்திரு…
-
- 1 reply
- 722 views
-
-
தன்னம்பிக்கையே மிகப்பெரிய சொத்து யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலய முன்னாள் மாணவி தர்மினி அவர்களின் செவ்வி.
-
- 0 replies
- 435 views
-
-
தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகப்பார்வை பட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? “தனிநபர் வாழ்வு அவர்களது தீர்மானம்” என்பதைச் சமூகம் எப்போது புரிந்துகொள்ளப் போகின்றது? கட்டாய எதிர்ப்பால் ஈர்ப்பு, இயற்கையானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் சமூகத்தின் மீது திணிக்கப்படுகிறது. நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விதிமுறைகள், கொள்கைகள் என்பவ…
-
- 0 replies
- 930 views
-
-
விரும்பினா படியுங்கோ இல்லாடிலும் தயவு செய்து படியுங்கோ, நீங்கள் எப்படியும் படிப்பியள் என்று தெரியும். ஒ, படிக்க தொடங்கியிட்டியள் என்ன, இனி உடன விசயத்துக்கு போகத்தான் வேணும். அது ஒண்டுமில்ல இண்டைக்கு ஒரு இடத்தில கொஞ்சம் புத்திமதி சொல்லிச்சினம் அதை கேட்ட நேரத்தில இருந்து கையும் ஒடலை காலும் ஓடலை, எதுக்கு அவர் அப்படி அறிவுரை சொன்னார் என்று தலையை போட்டு உடைக்காதையுங்க போற போக்கில கட்டாயம் சொல்லித்தான் போவன். அவர் சொல்ல வெளிக்கிட்டதும் எனக்கு சட்டென்று ஊரில சைக்கிளில் திரிந்த நினைவுதான் வந்தது. சைக்கிளுக்கும் ஒரு பேர் மோனல். மோனல் யார் தெரியுமே சிம்ரனின் தங்கச்சி ,உந்த விசயத்த கேட்டுத்தான் அந்த பிள்ளை அப்படி ஒரு…
-
- 5 replies
- 1.4k views
-
-
தப்பிப் பறந்த சிட்டு ஒரு வாசகர் அழைத்து ஆச்சரியமானதொரு செய்தியை சொன்னார் - அவர் மென்பொருள் துறையில் பணி செய்கிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி இருக்கிறது. பெண் பார்க்க செல்லும் போது “உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று இவர் கேட்டதற்கு அவள் “எனக்கு சொத்து, பணம் எல்லாம் முக்கியமில்ல, என்னை அன்பா வச்சிக்கிட்டா போதும்” என சொல்லிட இவர் “அடடா நமது வாழ்க்கைக்கு ஏற்ற பெண்கள் இவள் தான்” என மகிழ்ந்து ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையே அப்பெண்ணின் மற்றொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவர் ஊரில் உள்ள தன் குடும்ப வீட்டை மறுசீரமைத்துக் கட்ட நினைத்திருக்கிறார். அதற்கு பணம் போதாமல் போக தன் அ…
-
- 4 replies
- 716 views
- 1 follower
-
-
பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய யாழ் கள உறவுகளே...கொடுக்கபடுகின்ற தபை;புகளின் கீழ் உங்கள் கருத்துக்களை உங்கள விவாதங்களை நீங்கள உங்கள் கண்ணகலால் நேரில் பாத்தவற்றை கூறுங்கள் யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுப்படையாக விவாதியிங்கள்............ உங்களுக்காக வழங்கப்படுகின்ற தலைப்பு "புல பெயர் நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்" அதாவது இங்கு நாங்கள் விவாதிக்க இருப்பத இன்றுறு எமது புலம் பெயர் நாடுகளி;ல் நடை பெற்று கொண்டு இருக்கின்ற ஒரு கவலைக்குறிய விடயம். வயது முதிர்நத பெற்றோர்களை தங்கள் தேவைகளுக்காக இங்கு அழைத்து பின்பு பிள்ளைகளை நம்மி வந்த பெற்றோர்களை கைவிடுதல் எல்லோரiயும் நாம் முற்றுமுழுதாக குற்றம் சாட்டவில்லை.. பெரும்பாண்மையாக நடைபெறுகி…
-
- 11 replies
- 2.5k views
-
-
பேசுடா..பேசு...உன்னை மாதிரி லட்ச்சம் இளைஞ்ஞர்கள் வரனும்...ஊத்தை அடைஞ்சு போய்க் கிடக்கும் இந்த சமூகத்தை,தமிழ் நாட்டுச் சமூகத்தை வெளுக்கணும்.... http://www.youtube.com/watch?v=qkHdmLRGQk8
-
- 0 replies
- 658 views
-