Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன் 30 அக்டோபர் 2012 பெண்ணிலைவாதம் எனும் இடத்தில் எவரும் வர்க்கம், பாலினம், சாதி, இனம், மொழி, சூழலியல் என வேறு வேறு சமூகப் பகுப்புகளை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் அடையாள அரசியலும் சிறுபான்மையினர் உரிமைகளும் விடுதலை அரசியலின் பகுதிகளாகிவிட்ட இன்றைய நிலையில் இப்பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றையொன்று ஊடறுத்துத்தான் செல்கின்றன. ஓரு குறிப்பிட்ட தருணத்தில் 'இதில் எந்த முரண்பாடு மேலொங்கியிருக்கிறது' எனப் பார்ப்பதும், 'அதிகாரத்தில் இருப்போர் எந்தப் பிரச்சினையின் சார்பில் நிலைபாடு எடுக்கிறார்கள்' எனப் பார்ப்பதும், ஒரு குறிப்பிட்ட சமூக நிலைமையில் ‘மேலதிகமாக’ ஒடுக்கப்பட்டவர் எவர் எனப் பார்ப்…

  2. இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்! -கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed - திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஒருவருடைய வாழ்வில் மிக இனிமையானதும் மங்களகரமானதும் மறக்க முடியாததுமான விடயம் தான் திருமணம். திருமணத்தின் போது ஒருமை ஓரங்கட்டப்பட்டு பன்மை பதவிக்கு வருகிறது. ஈருயிர் ஓருயிராகிறது. மூன்றாவது உயிர் பிறக்கிறது. சட்ட ரீதியான முறையிலும் சமயம் மற்றும் குடும்ப சமூக அங்கீகாரத்துடன் ஆண் பெண் ஜோடி இணைந்து வாழ்வதற்கு திருமணம் புரிவது அவசியமாகிறது. மேலும் பல காரணங்களும் உள்ளன. திருமணம் புனிதமானதும் மனித தேவ…

  3. தனிப்பட்ட சுதந்திரம் ?. இது ஒரு மாறுபட்ட விவாதப்பொருள். நம்மில் எத்தனை பேர் நமது மனைவிக்காக, கணவருக்காக, காதலிக்காக, காதலனுக்காக நமது தனித்துவ அடையாளத்தை, சுதந்திரத்தை இழந்ததாக கருதுகிறீர்கள் ?. இதைப்பற்றி நாம் ஈல்லோரும் நன்கு அறிந்த புரட்சியாளர் சே குவாரா தனது முதல் காதலி சிச்சினாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ...... " நான் எந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு விஷயம். உனக்காக நான் என்னுடைய சுதந்திரத்தை விட்டு கொடுக்க விரும்பவில்லை. அப்படி நான் செய்தால் அது என்னையே விட்டு கொடுப்பதற்கு சமமாகும். இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார். அது நான்தான்" இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கி…

  4. அண்மையில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் இறந்துவிட்டான் என்ற துன்பமான செய்தி என் காதுகளை எட்டியதில் இருந்து மனது பல நூற்றுக்கனக்கான எண்ண ஓட்டங்களால் நிறைது போயிருக்கிறது..கடுமையான உழைப்பாளி அவன்..இரண்டு வேலை அதனுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னொரு வேலை என பணத்திற்காக கடுமையாக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்த ஒருவன்..இதுவரைக்கும் ஒரு சுற்றுலாகூட தன் குடும்பத்துடன் அவன் போனதில்லை..எனக்கு தெரிந்து வேலையிடம்,வீடு இந்த இரண்டையும் தவிர அண்மைக்காலங்களில் அவன் போன இடங்கள் என்று எதுவும் இல்லை..மரணம் மிகவிரைவாக அவனை அழைத்து சென்று விட்டது..அந்த தாக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனைகளே இவை.. எம்மில் அநேகமானவர்களின் வாழ்க்கை ஏதாவது ஒன்றை நோக்கிய ஓட்டமாகவே ஒவ்வொரு நொடியும் கழிந்துபோ…

  5. விழிப்புலனற்றவர்களுக்கு துணையாக இருப்போம்: சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் இன்று! உலகிலே உயிர் பெற்ற அனைத்து ஜீவராசிகளின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம். அதேவேளை கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடப்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும். உலக வெள்ளை 1961 முதல் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விழிப்புலனற்றோருக்கான வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக ம…

  6. எம்பரசிங் பாடீஸ் (Embarrassing Bodies) சானல் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடலில் ஏற்படும் பல்வேறு தர்மசங்கடமான உபாதைகளைப் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சைகள் பற்றியும் விளக்கும் சுவாரசியமான மருத்துவத் தொடர். தொடரின் இறுதியில், ´´ ... ஒருசிலரை ஒப்புநோக்கையில் நாம் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் தான் ´´ என எண்ணும் அளவிற்கு, சராசரி வாழ்வோடு போராடும் ஒருவரை தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமாக முன்னிருத்துவர். இந்த வார உதாரணம், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியைப் பற்றியது. அவர் தனது பருவ வயதை எட்டியிருந்த பொழுது அவரது உடலின் எதிர்ப்புசக்தியே அவரது இரு சிறுநீரகங்களையும் (கிட்னி) தாக்கி அழித்துவிட்டது. உடலில் சேரும் கழிவுகள் நச்சுக்களை உதிரத்தில் இருந்து ப…

    • 4 replies
    • 1.2k views
  7. திருமணமானவர்களுள் ஆண்கள் அனைவரும் தன் மனைவியை ஒரு பெரிய இராட்சசி என்று சொல்வார்கள். ஏனெனில் எப்போது பார்த்தாலும் மனைவிகள் அனைவரும் அவர்கள் கணவர்களை கோபத்தால் திட்டிக் கொண்டே இருப்பதால், ஆண்கள் பலர் தன் மனைவிகளை பற்றி மனதில் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு உங்கள் மீதுள்ள பாசம் தான் காரணம். அதனால் தான் அவர்கள் உங்களுடன் அவ்வாறு நடந்து கொள்கின்றனர். மேலும் உண்மையான பாசம் இருக்குமிடத்தில் தானே கோபம் இருக்கும். பாசம் யார் மீது வைத்துள்ளோமோ, அவரிடம் தானே உரிமையோடு கோபம் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக மனைவிகள் எப்போதும் தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதிலும்…

  8. .லண்டன்: வசீகரிக்கும் சிவப்பு நிற முகமுடைய ஆண்களையே, பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என, அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனின், நாட்டிங்காம் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆண்களின் சில புகைப்படங்களை பெண்களிடம் கொடுத்து, அவற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப, கணினியில் அழகு படுத்தும்படி கூறி, ஆராய்ச்சி நடத்தினர். அதில் பெரும்பாலான பெண்கள், ஆண்களின் முகங்களுக்கு மிதமான சிவப்பு நிறத்தைக் கொடுத்து மெருகூட்டியிருந்தனர். மிதமான சிவப்பு நிறமுடைய ஆண்களின் முகமே, பெண்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், அதிக சிவப்பு நிறம், ஆண்களின் கரடுமுரடான சுபாவத்தை குறிப்பதாக, பெண்கள் கருதுகின்றனர். இது குறித்து போர்ட்ஸ்மவுத் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் உளவியல்…

  9. நீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans Diesel Levi's Seven Jeans Apple Bottoms Von Dutchஎன பல பிராண்ட் களில் வருகிறது இது இரண்டு நூற்றண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்து விட்டது ஸான்ஃப்ரான்சிஸ்கோவில் வாழ்ந்த ஜெர்மனியாரான levistrauss என்னும் வணிகரால் 1850 களில் அடிமைத் தொழிலாளிகளான சுரங்கத்தொழிலாளிகளின் பாவனைக்காகத்தான் இந்த கரடு முரடன துணி முதலில் உருவாக்கப்பட்டது ... denim இது பிரெஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது பிரான்ஸ்சில் nimes நகரத்தில் பட்டு நூலையும் கம்பளியையும் கலந்து நெய்து serge-de-nimes என்ற பெயரில் தடித்த துணியை தயார் செய்தனர் de -nimes என்றால் நிம்சில்…

  10. எமது சமுதாயத்தில் இரு மதத்தவர் இடையே திருமணம் நடப்பது சாதாரணமானது. ஏமது ஈழ சமுதாயத்தில் இது பெரும்பாலும் கிறிஸ்த்தவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் தான் நடக்கும். இவ்வாறான சந்தர்ப்பஙளில் பெரும்பாலும் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் தமது மதத்தை விட்டுக் கொடுப்பவர் சைவ மத்தவராகவே இருப்பார். இது ஏன்? ஏன் சைவ மக்களால் தமது மதத்தை விட்டுக் கொடுத்து திருமணம் செய்ய தயங்குவதில்லை, அவர்களது பெற்றாரோ அல்லது சகோதரரோ ஏன் அவர்களுக்கு அறிவுறை கூறுவது இல்லை.எம்மைத் திருமணம் செய்பவரின் மதத்தை மதிப்பது முக்கியம் தான், அதற்கு இரு மத முறைப்படியும் திருமணத்தை நடத்தலாம், ஆனால் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் பலர்,முழுமையாக அல்லவா தமது மதத்தை விட்டுக் கொடுகின்றனர், …

  11. மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - கவிஞர் கண்ணதாசனின் குறிப்பு. [sunday, 2012-10-07 08:30:15] மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி. ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு …

  12. தங்கம் இன்றைக்கு விற்க்கும் நிலையில் வீட்டில் உள்ள அனைத்து சொத்தையும் விற்று தங்கத்தை வாங்கி அதனுடன் கார் இருக்கின்ற அனைத்து சாமான்களை வாங்கி பெண்ணை கட்டி கொடுத்தால் கட்டினவன் ஆண்மையற்றவனாக இருந்தால் எப்படி இருக்கும். அந்த பெண்ணின் நிலைமையை நினைத்து பாருங்கள் ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டும் என்று நினைத்தவுடன் என்ன செய்கிறார்கள். பையன் என்ன வேலை பார்க்கிறான். பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறானா மாதத்திற்க்கு எவ்வளவு சம்பாதிக்கிறான். லட்சத்தை தாண்டுமா என்று பார்க்கிறார்கள். லட்சத்தை பார்க்கிறார்களே தவிர ஆணுக்கு உடைய லட்சணத்தில் இருக்கிறானா என்று பார்ப்பதில்லை. நிறைய சம்பாதிப்பவன் என்ன செய்வான் வேலையை கட்டிக்கொண்டு அதனுடன் போராடிக்கொண்டிருப்பான் அவன் வீட்டிற்க…

  13. உறவுகளே இந்தப்படங்களை கொஞ்சம் பாருங்கள் மிருக வதையின் உச்சக்கட்டமாக இது தெரியவில்லையா? உலக ஐனநாயக அல்லது வளர்ந்த அல்லது மனித மற்றும் உயிரினங்களின் வதையை வெறுக்கின்ற நாடுகளிலேயே இவை செய்யப்படுகின்றன. இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அண்மையில் பிரான்சில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வந்தும்அது நிறை வேற்றப்படாது போய் விட்டது. ஏனெனில் ஆதரவு பாராளுமன்றத்தில் இல்லை. அன்று வானொலியில் வந்த அமைச்சர் ஒருவர் இந்தக்கேள்விக்கு தான் பதிலளிக்கவிரும்பவில்லை என்று பலமுறை மறுத்தும் வானொலி நடாத்துனரின் பிடிவாதத்தால் இறுதியில் ஒன்றைக்குறிப்பிட்டார். இந்த விளையாட்டு என்பது பல சமூக கலாச்சார இசை நடனம் என பலவற்றை பிரதி பலிக்கின்றது என்று. அத்த…

  14. [size=5]தம் பிள்ளைகள் எதிர்காலத்தில் மற்றையவர்களை விட பெரியவர்களாக, வாழ வேண்டும் என்றும், அதனால் தாங்களும் மதிப்பும், மரியாதையுமுடன் வாழலாம் என்ற அவாவில், ஒளிதரும் மெழுகு வர்த்திபோல் தம்மை உருக்கி உருக்கி உழைத்த முதியவர்கள் பலர் கவனிப்பாரற்று முதியோர் இல்லங்களிலும், கருணை இல்லங்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழ்வதை இன்று நாம் பார்க்கின்றோம்.[/size] [size=5]வயதான காலத்தில் தம் பிள்ளைகள் தம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை அனேகமாக எல்லா பெற்றோர்களிடத்திலும் ஏற்படுவது இயற்கையே. தாம் தம் பெற்றோருக்கு செய்ததை தமக்கும் தமது பிள்ளைகள் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடனே அவர்கள் வாழ்லின்றார்கள். பெற்றோர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பிள்ளைகளுடன் வாழ்வதையே விரு…

  15. ஒரு சமூகம், காதலைக் குற்றமென்று சொன்னால், நாம் அதை விவாதிக்கலாம்; அதற்கு எதிராகப் போராடலாம். ஆனால், காதலே குற்றங்களின் களமாக மாறிவிட்ட ஒரு காலத்தில், அன்பு என்பது இன்று, நஞ்சு தடவிய ஒரு வாள் போல, நம் முன் பளபளத்துக் கொண்டிருக்கிறது. அந்த வாள், எந்த நேரம் நம்மை பலிகொள்ளும் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு, நாளுக்கு நாள் ஆண், பெண் உறவுகள் வன்முறையின், குற்றத்தின் நிழல் படிந்ததாக மாறி வருகிறது.சில தினங்களுக்கு முன், சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ஒரு இளை ஞர், தான் காதலித்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் காதல் குற்றங்களை மறுபடியும் நி…

  16. [size=4]இதை இங்கு பதிவது சரியா தெரியவில்லை. சரியான இடத்திற்கு மாற்றிவிடுவீர்களா?[/size] [size=4]நன்றி[/size] புரட்டாதிச் சனி புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரிய பகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று…

  17. இயற்கை உணவு உண்டால்...300 வயது வாழ முடியும்..! - பொன்.செந்தில்குமார், படங்கள்:வி.நாகமணி [size=1]செ[/size]ன்னை அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள குறுக்கு சந்துக்கு பெயர் துரைசாமி ராஜா தெரு. அங்குள்ள ஏ.வி.ஜி ரெட்டி இயற்கை நல மருத்துவமனையில் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை இலவசமாக இயற்கை மருத்துவ முகாம் நடப்பதாக கேள்விப்பட்டோம். என்னதான் நடக்கிறது என்று பார்க்க நாமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றோம். நமக்கு முன்பு நாற்பது பேர் அங்கே ஆஜராகி இருந்தார்கள். ஒரு பக்கம் வாழைப்பழத் தார் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் முளைக்கட்டிய பயறுகள், பேரீச்சம் பழம், திராட்சை போன்றவை வைத்திருந்தார்கள். அந்த இடமே விநோதமாக காட்சியளித்தது. சுவையான தாமரை டீ, தேநீர் இடைவேளையி…

  18. குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் செய்யக் கூடாதது என்னென்ன? கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, ”உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே” என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, ”அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்” என்று சொல்ல நேரிடலாம். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை …

  19. [size=4]"மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” [/size] [size=4] எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அங்கொடை பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார்கள்.[/size] [size=4]சொந்த வீடுகளில் இருந்து அனுப்பப்பட்டவர்களும், தங்களுக்கு இவ்வாறானதொரு நோய் இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர்களும் அந்த வீட்டில் இருக்கிறார்கள். ஐ.டி.எச் பகுதிக்கு அண்மித்ததாக அங்கொடையில் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிறது அந்த வீடு. பெண்கள் சிலரும் ஆணொருவரும் அலி ஒருவரும் இருந்தார்கள். இவர்கள் சுமார் 25 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். ஆரம்பத்தில் எம்மோடு பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. எதற்காக வந்திருக்கிறோம…

  20. கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன…? 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். …

  21. அனைவருக்கும் வணக்கம் இத் தலைப்பில் மன அழுத்தம் எனப்படும் டிப்பிரசன் [dipression] பற்றி எனக்குத் தெரிந்ததை,நான் கேள்விப்பட்டதை எழுதுகிறேன் நீங்களும் இது சம்மந்தமாக உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். மன அழுத்தம் அநேகமாக தனிமையில் இருப்பவர்களைத் தான் அதிகம் தாக்கும்...இது ஆண்,பெண் வேறுபாடு,வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரும்...தங்களை மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று அதீத கோபத்திற்கு ஆளாகுவார்கள் ,வாழ்க்கையில் அதிக தோல்விகளை சந்தித்தவர்கள்,பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,தங்களது சுக,துக்கங்களை பங்கிட்டு கொள்ள ஒரு வித விரக்தி நிலைக்கு சென்று மன நோய்க்கு ஆளாகின்றனர். இத்தகைய நிலை கொலை செய்யும் அளவிற்கு க…

  22. தம்பதியரிடையேயான உறவு தனித்துவமானது. அவர்கள் இருவரைத் தவிர வேறு வேறு எவராலும் அந்த அன்பின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. நேசத்தை தெரிவிக்க ‘ஐ லவ் யூ' என்று வார்த்தைகள் தான் வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு செயலிலும் நேசத்தை உணர்த்தலாம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுகள் வார்த்தைகளை விட வலிமையானவை. சொற்கள் இல்லாமல் காதலை தெரிவிக்கும் விதம் பற்றி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். பூக்கள் சொல்லும் காதல் அலுவலகம் முடிந்து வருகிறீர்களா? உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பையில் மனைவிக்கு பிடித்த மல்லிகையோ, ரோஜாவோ வாங்கி வைத்திருங்களேன். அதை மனைவியின் கண்ணில் படுமாறு கவனமாய் வைத்துவிட்டு மறைந்திருந்து பாருங்கள். டிபன்பாக்ஸ் திறக்கும்போது அந்த பூக்களை விட உங்கள் மனைவிய…

  23. ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம். இந்த வாகனத்தில் மரபணு சோதனை நடத்த ுவதற்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளன. நிபுணர்களும் தயாராக உள்ளனர். மரபணு சோதனை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தினமும் நியூயார்க் நகரின் முக்கிய சாலைகளை சுற்றி வரும்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. ஏராளமான ஆண்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இந்த குழந்தை தங்களுக்குப் பிறந்தது தானா? என்று பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய…

  24. 'ஸ்வீட் கேர்ள்ஸை'க் கவருவதற்கு சில 'க்யூட் டிப்ஸ்'...! . உண்மையான காதல் என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதிலும் ஒரு நல்ல பிகரை மடக்க வேண்டும் என்றால் மிகவும் கடினமானது. ஆனால் அவர்களை மடக்குவது என்பது அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. டேலண்ட் இருந்தா கண்டிப்பாக மடக்கி, சந்தோஷமாக காதல் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். அது என்ன டேலண்ட் என்று கேட்கின்றீர்களா? பெண்களை கவர நிறைய வழிகள் இருக்கிறது. எப்படியெனில் இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் மிகவும் பிடித்தது என்று ஏதாவது ஒன்று இருக்கும். அதிலும் பெண்களுக்கு சொல்லவா வேண்டும். மேலும் பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்தது என்று நிறைய உள்ளது. இப்போது அதில் ஆண்கள் என்ன செய்தால், எப்படி இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் எ…

  25. தம்பதியரிடையேயான பிரச்சினைக்கு மூல காரணமே அன்பை சரியான அளவில் வெளிப்படுத்தாமல் விடுவதுதான். மனதில் டன் கணக்கில் அன்பும், பாசமும் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது வெற்றியின் ரகசியம். நான் இங்கே தவிக்கிறேன். அவருக்கு என்மேல அக்கறை இல்லாம இருக்கிறாரே என்று நினைத்தாலே போதும் விரிசலின் விதை ஊன்றப்பட்டு விடும். எனவே ஆண்களே உங்களின் மனைவி மீதான பிரியத்தை ஏதாவது ஒரு விதத்தில் வெளிப்படுத்துங்கள் ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான் என்கின்றனர் நிபுணர்கள். கணவரிடம் இருந்து மனைவி என்ன எதிர்பார்க்கிறார்? அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மனைவியின் இதய சிம்மாசனத்தில் இடம் பெறுவது எப்படி என்றும் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.