Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆரம்பப் பாடசாலைகளில் ஹிஜாப் அணியத் தடை: ஒஸ்ரியாவில் சட்டமூலம் நிறைவேற்றம் ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டமூலம் ஒஸ்ரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் வலதுசாரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவிற்கு நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், யூதர்கள் அணியும் யார்முல்கே மற்றும் சீக்கியர்கள் அணியும் பட்கா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆளும் வலதுசாரி மக்கள் கட்சி மற்றும் வலதுசாரி சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavanne…

    • 1 reply
    • 1.2k views
  2. (CNN)Thousands of protesters targeted Trump buildings in New York and Chicago on Wednesday, chanting anti-Trump slogans as protests against President-elect Donald Trump popped up throughout the United States. In Austin, Texas, protesters blocked a highway. Students burned a flag on the campus of American University in Washington, and they walked out of class in high schools and colleges across the country the day after the presidential election. http://www.cnn.com/2016/11/09/politics/election-results-reaction-streets/index.html நியூயோர்க் சிக்காக்கோ உட்பட பல மாநிலங்களில் வீதிகளை மறித்து ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்

  3. சென்னை: அரசியலில் நுழைந்துள்ள தமிழக நடிகர்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெரு வியாதிக்காரரா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டமாக கேட்டுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறுகையில், தமிழகத்தை பீடித்துள்ள வியாதி (நடிகர்கள் அரசியலுக்கு வருவதை அப்படிக் குறிப்பிட்டார்) இப்போது ஆந்திராவுக்கும் பரவி விட்டது என்று கூறியிருந்தார். இதற்கு விஜயகாந்த் படு காட்டமாக பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அரசியலில் நுழைவது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா, தமிழகத்திற்கு பிடித்திருந்த வியாதி ஆந்திராவுக்கும் பரவியுள்ளது என்று கு…

    • 3 replies
    • 1.2k views
  4. பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் படுகொலை போராட தயாராகுமாறு இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: இந்தியாவில் தேர்தலுக்கு பின் அரசு மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரும் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடிவு செய்து கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்துள்ளது. அதைவிட பல மடங்கு அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவ உதவியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இச்செய்திகள் நமது நெஞ்சங்களைப் பிழிகின்…

    • 2 replies
    • 1.2k views
  5. புதியமுறையில் குழந்தை கடத்தல்! டெல்லியில் உள்ள இந்துராவ் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தவர், சுனிதா ராவ்(38). இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பது போல கடந்த 9 மாதங்களாக நடித்து வந்தார். பின்னர் அதே ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், அந்த ஆஸ்பத்திரியில் சோபனா என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை திருடிச்சென்று விட்டார். அந்த குழந்தை தனக்கு பிறந்ததாக கூறிக்கொண்டார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, நர்சு சுனிதாவை கைது செய்து, குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை, சோபனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • 5 replies
    • 1.2k views
  6. ஹாங்காக் போராட்ட களத்தில் ராணுவத்தை சீனா முதன்முதலாக களமிறக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து தொடங்கப்பட்ட போராட்டம், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்ட பிறகும் நீடிக்கிறது. சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற புதிய கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், ஹாங்காக் போராட்ட களத்தில் சீன ராணுவம் முதன்முதலாக களமிறக்கப்பட்டுள்ளது. வழக்கமான சீருடையில் அல்லாமல் டி-சர்ட், சாட்ஸ் அணிந்து தடுப்புகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டனர். https://www.polimernews.com/dnews/89033/ஹாங்காக்-போராட்ட-களத்தில்முதன்முதலாக-ராணுவத்தைகளமிறக்கியது-சீனா

  7. காஞ்சிபுரம்: தமிழகத்தில் ரௌடிகள் வேட்டை தொடர்கிறது. காஞ்சிபுரம் அருகே பயங்கர ரௌடியான கொர கிருஷ்ணா என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். கொலை, கொள்ளை வழிப்பறி, ஆள் கடத்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கந்து வட்டி, மாமூல் வசூல் என பல வகையான ரௌடித்தனங்கள் செய்து வந்தவன் இந்த கொர கிருஷ்ணா. 40 வயதான இவனுக்கு கள்ளச்சாரயம் மூலம் பணம் குவிந்தது. இதனால் காஞ்சியில் மிகப் பெரிய பங்களாவைக் கட்டி வாழ்ந்து வந்தான். இவனுக்கு காட்பாடியிலும் நெமிலியிலும் பெரிய பங்களாக்கள் உள்ளன. காஞ்சியிலும் காட்பாடியிலுமாக தனது ரௌடி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தான். 24 மணி நேரமும் குண்டர் படையோடு பல கார்களில் சுற்றுவது கொர கிருஷ்ணாவின் ஸ்டைல். இவன் மீது காஞ்சிபுரம் மாவட்டம் தவிர வேலூர், திருவண்ணாமல…

  8. மனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் – கற்பனை அல்ல:- ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கற்பனை அல்ல என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்று மற்றொரு சாரார் கூறுகிறார்கள். கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே அவை என்று…

  9. லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும், இலங்கையின் வெள்ளைக் கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சேர்ட் நகரில் கேணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்

    • 2 replies
    • 1.2k views
  10. பெப்ரவரி 17, 2021 அன்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த பொலிஸாரின் தேடுதல்களை அடுத்து பிரஞ்சு ஊடகம் கொடுத்த தகவல் பிரான்சிலே வாழுகின்ற தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கின்றது என தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் அவ் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளதாவது... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மேலாளருக்குச் சொந்தமான இடத்திலே கண்டெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்படாத தங்கம் உருக்கும் செயல்பாடு குறித்த விசாரணையைப் பற்றி செய்தியிடும் போது குறித்த அவ்வானொலியின் ஊடகவியலாளர் உச்சரித்த வார்த்தைகள் பிரான்சில் வாழும் தமிழர்களுக்கு இழிவை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை பற்றிய பிரஞ்சு செய்தி ஊடகங்கள் ஏத…

  11. மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை 11 பாடல் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒலிப்பேழைகளாக வெளிவந்தவை தற்போது ஒலிக்குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. இந்தப்பாடல்கள் அனைத்தும் அரசியல் சார்பு கொண்ட தமிழக மக்களிடம் பிரபலம் என்றால் மிகையில்லை. ம.க.இ.கவின் மையக்கலைக்குழு தோழர்கள் இதற்கு இசையமைத்து பாடியிருக்கிறார்கள். எமது பொதுக்கூட்டத்தில் அவர்கள் நடத்தும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருவார்கள். ஒவ்வொரு குறிப்பான அரசியல் காலகட்டத்தை மனதில் கொண்டு அவர்கள் தயாரிக்கும் பாடல்கள், நிகழ்ச்சிகள் தமிழகத்தின் புரட்சிகர வரலாற்றின் கலைப்பதிவாய் இடம் பெற்றுவிட்டன. நடைமுறையில் இப்படி இயங்கும் இந்த மக்கள் இசையை இணையத்தில் இருக்கும் வினவின் வாசகர்கள் பலர் அ…

  12. பிரேசில் நாட்டில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்: பிரேசில் நாட்டின் கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட்விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மனாஸ் நகரில் இருந்து புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 140 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் பரா மாநிலத்தில் உள்ள சீரா டி.கேக்சிம்போ பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது அந்த ஜெட் விமானம் இன்னொரு விமானம் மீது மோதியது. இதில் இன்னொரு விமானம் நிலை தடுமாறியது. அந்த விமானத்தை விமானி அருகில் உள்ள வயல் வெளியில் அவசரமாக தரை இறக்கி விட்டார். இதனால் அந்த விமானம் தப்பியது. 140 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அமேசான் காட்டுப்பகுதியில் அந்த வ…

    • 2 replies
    • 1.2k views
  13. பதிவு பெற்ற கட்சியானது சரத்குமாரின் அ.இ.ச.ம.க. சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007 டெல்லி: நடிகர் சரத்குமார் தொடங்கியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. சமீபத்தில் அரசியலில் குதித்த சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை சென்னையில் தொடங்கினார். இந்தக் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்ேபாது சரத்குமாரின் கட்சியை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக அனுமதித்துள்ளது. பதிவு பெற்ற அரசியல் கட்சியாக இருந்தபோதிலும் சரத்குமார் கட்சிக்கு சுயேச்சை சின்னமே தேர்தல்களில் ஒதுக்கப்படும். தேர்…

  14. ஈராக்கின் பஸ்ரா நகரிலுள்ள பிரிட்டிஷ் படைகள் முழுவதையும் அங்கிருந்து விலக்கிக் கொள்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அங்கிருந்த முகாமொன்றிலிருந்த பிரிட்டிஷ் படைகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந் நகரில் பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறாமையினால் இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென ஈராக்கிய படைகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நகரிலுள்ள சதாம் ஹுசைனின் மாளிகையில் முகாம் அமைத்துள்ள ஏனைய 500 படையினரும் விலக்கிக் கொள்ளப்படவுள்ள அதேவேளை, எதிர்காலத்தில் பஸ்ரா நகருக்கு வெளியிலுள்ள படைத்தளத்திலேயே பிரிட்டிஷ் படைகளுக்கான முகாம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ; குறிப்பி…

    • 3 replies
    • 1.2k views
  15. லண்டனில் வாழ மிகவும் ஆபத்தான பகுதிகள் போலீசார் வெளியிட்ட பட்டியல் லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தலைநகரான லண்டனில் இருக்கும் குரோய்டோனில் வன்முறை குற்றங்கள் பொதுவாக 5,978 பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவர…

  16. கலைஞர் தொலைகாட்சியின் ஊடக பயங்கரவாதம்! திரு.கபில்சிபல், மத்திய அரசில் அ.ராசா விட்ட இடத்தை தொடர்பவர்.தி.மு.க வையும் காங்கிரஸ் கட்சியின் இமேஜையும் கட்டி காக்க மத்திய அரசின் தனிக்கை துறை அமைப்பின் அறிக்கையயே அபத்தம் என்பவர்..... சட்டம் கொஞ்சம் தெரிந்தவர் (வழ்க்குறைஞர்) என்பதால், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தினை பூசி மொழுகி உண்மையை குழிதோண்டி புதைக்க சோனியா கபில்சிபலை பயன்படுத்தி வருகிறார். இதில் அகமகிழ்ந்த கபில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தனிக்கை துறை குற்றம் சாட்டியது அபத்தமானது,அடிப்படை இல்லாதது" என கூறினார். சி.ஏ.ஜி.யின் அறிக்கை அடிப்படையிலேயே இதுகுறித்…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 31 ஜூலை 2024 சர்வதேச அரசியலில் எப்போதுமே பதற்றமான பிராந்தியமான மத்திய கிழக்கில் அண்மைய நிகழ்வுகள் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளன. ஒருபக்கம் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயின் ஹனியே, இரான் தலைநகர் டெஹ்ரானில் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பக்கம் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஹெஸ்பொலா தளபதியை வான்வழி தாக்குதல் மூலம் இஸ்ரேல் கொலை செய்துள்ளது. ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டதை இஸ்ரேல் அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மாதக்கணக்கில் நீளும் நிலையில் இந்த நிகழ்வுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் பதற்றத்தில் தள்ளியுள்ளன…

  18. காரைக்கால் : காரைக்காலில் நடந்த வேளாண் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் வைத்திலிங் கம் மலர் அரங்குகளை சுற்றிப் பார்த்தார். ஒவ்வொரு ஸ்டால் களிலும் விவரங்களை கேட்டறிந்த வைத்திலிங்கம் வனத் துறை சார்பில் அமைக்கப்பட் டிருந்த பாம்புக் கூண்டுகள் பக்கமாக வந்தார். அப்போது வனத்துறை ஊழியர் ஒருவர் ஆர்வக் கோளாறில் கண்ணாடிக் கூண்டுக்குள் கைவிட்டார். நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்தவர் பொசுக்கென்று அமைச்சரின் கைகளில் திணித்தார். "ஏதோ பொக்கே போல' என்று நினைத்து கை நீட்டியவர் திடுக்கிட்டு பின்வாங்கினார். உடன் வந்த எம்.எல். ஏ.,க்கள் உற்சாகப்படுத்த "ஐயோ வேண்டாம்ப்பா' என் றபடி அலறி பின்வாங்கினார் அமைச்சர். உடன் வந்த கட் சிப் பிரமுகர் ஒருவர், "மனிதனை விட பாம்பு எவ் வளவோ தேவலை' என்று குரல் கொடுத்தார்…

  19. மும்பாயில் இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் - 21 பேர் பலி ! இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பாயின் மூன்று வெவேறு இடங்களில் சனநடமாட்டம் அதிகமுள்ளா நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர்வரை இதுவரை கொல்லப்பட்டிருப்பதாக அம்மாநில ஆளுனர் கூறியிருக்கிறார். மேலும் 144 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை இத்தாக்குதலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் உள்நாட்டு அமைச்சர் "தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலுக்குப் பொறுப்பு " என்று வாய்மொழிந்தருளியிருக்கிறார். ஒரு நிமிட நேர இடைவெளியில் வெடித்துள்ள இந்த மூன்று குண்டுகளும் ஒன்றில் காரிலோ அல்லது மோட்டார் உந்துருளியிலோ வைத்தே வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. மும்பாயி…

  20. சிரிய அதிபர் அசாத்தின் இறுதி நகர்வுகள் 10/12/2012இலன்று சிரிய அரசின் வெளியுறவுத் துறைப் பேச்சாளர் ஜிகாத் மக்திஸ்சி பதவி விலகியது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியின் சரிவின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. அசாத்தின் படைகளின் இரு போர் விமானங்களை கிளர்ச்சிக்காரர்கள் சுட்டு வீழ்த்தியதும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை ஐக்கிய அமெரிக்கா அங்கீகாரம் செய்தமையும் அசாத்தின் ஆட்சிக்குப் பேரிடிகளாகும். விமானப்படையும் ஏவுகணைகளும் சிரிய உள்நாட்டுப் போரின் சமநிலை கிளர்ச்சிக்காரர்களிற்குச் சாதகமாக 2012 மே மாதத்தில் இருந்து மாறிவிட்டது எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுவரை காலமும் அல் அசாத்தின் விமானப்படைகள் போர் முனையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் போர் விமா…

    • 7 replies
    • 1.2k views
  21. உளவுப் பணியில் ஈடுபட்டதாக சவூதி அரேபிய அதிகாரிகள் கழுகு ஒன்றை பிடித்துள்ளனர் 05 ஜனவரி 2011 Bookmark and Share குறித்த கழுகின் உடலில் ஜீ.பி.எஸ் ரக கருவியொன்று பொருத்தப்பட்டி ருந்ததாகவும், உளவுப் பணியில் ஈடுபட்டதாக சவூதி அரேபிய அதிகாரிகள் கழுகு ஒன்றை பிடித்துள்ளனர் உளவுப் பணியில் ஈடுபட்ட குற்றச் சாட்டிற்காக சவூதி அரேபிய அதிகாரிகள் கழுகு ஒன்றை பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்காக குறித்த கழுகு உளவுப் பணியில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த கழுகின் உடலில் ஜீ.பி.எஸ் ரக கருவியொன்று பொருத்தப்பட்டிருந்ததாகவும், அந்தக் கருவியில் தெல் அவீவ் பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. எனினும், இ…

  22. காங்கிரஸ் தலைவர்கள் பற்றி இயக்குநர் செல்வமணி ஆவேசம் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருமாவளவன் உண்ணாவிரதத்தை ஆதரித்து, வாழ்த்து தெரிவிக்க செல்வமணி, பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட இயக்குநர்கள் மறைமலைநகர் சென்றனர். அப்போது பேசிய செல்வமணி, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் கருணாநிதி தலைமையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க சமீபத்தில் டெல்லி சென்றனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவள…

  23. இயக்குநர் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளப் பயந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, "அண்ணே தயவு செய்து என்னுடைய தொகுதிக்கு மட்டும் பிரச்சாரத்துக்கு வந்துடாதீங்க" என்று வேண்டி கடிதம் எழுதியுள்ளார். நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான். தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டும் அவர் அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள். அவரது பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஊர்களில் சீமான் அடுத்து …

  24. பாகிஸ்தானில் தலிபான்களின் கடும்போக்குக்கு எதிராகக் குரல்கொடுத்ததன் விளைவாக அண்மையில் சுடப்பட்ட 14 வயதான மலாலா யூசுப்சாய் என்ற சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலாலா யூசுப்சாய் சுவட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் கடும்போக்கு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் பி.பி.சி ஊடாக வெளியுலகுக்கு தெரியப்படுத்தி வந்தார். அவர் வசித்து வந்த பகுதியில் பெண்களுக்கான கல்வியுரிமை தலிபான்களால் மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலா குரல்கொடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மலாலா யூசுப்சாய் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது தலிபான்களால் சுடப்பட்டார். அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததுடன் அவர் உடனடி…

  25. பெனாசிரின் படுகொலை தொடர்பில் திடீர் திருப்பம் லேசர் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் [04 - January - 2008] [Font Size - A - A - A] * பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கதிரியக்கத் துப்பாக்கி (லேசர்) மூலமே சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிர் பூட்டோவின் கொலை தொடர்பில் நாளாந்தம் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பெனாசிர் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் கொல்லாமல் லேசர் துப்பாக்கி மூலமே கொல்லப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. இதை மறுத்த பாகிஸ்தான் அரசு, காரின் மேற்பகுதி இரும்பு இடித்ததில் …

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.