உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26862 topics in this forum
-
‘‘வினோதினியின் முன் நாம் எப்படி நம் முகத்தைக் காட்டப் போகிறோம்?’’ வினோதினி பற்றி நாம் முன்பு எழுதிய கட்டுரையின் இறுதிவரியாக இதை எழுதியிருந்தோம். இப்போது அந்த இறுதி வரிகளையே முதல் வரிகள் ஆக்கவேண்டிய வேதனையான கட்டாயத்தை காலம் நமக்கு இட்டிருக்கிறது. மூன்று மாதங்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வினோதினி பிப்ரவரி 12-ம் தேதி காதலர் தினத்துக்கு இரு நாட்கள் முன்பு தன் மூச்சை நிறுத்திக்கொண்டிருக்கிறாள்... மன்னிக்கவும் கொல்லப்பட்டிருக்கிறாள். அழகான முகத்தை உடைய அந்த சகோதரி ஒருவனை காதலிக்க மறுத்ததன் காரணமாக, முகத்தில் திராவகம் வீசப்பட்டாள். வேதனையும் வலியுமாக இத்தனை நாட்கள் மருத்துவமனையில் திணறிக் கொண்டிருந்த அவளை மரணம் அந்த வலியில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார். ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார். வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பத…
-
- 8 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தின் மகாராணியான எலிசபெத்திற்கு இன்று 90 ஆவது அகவை இங்கிலாந்து நாட்டின் மகா இராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத், இன்று தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இங்கிலாந்தின் புருடன் வீதியில் உள்ள எலகண்ட் இல்லத்தில் 1926 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி எலிசபெத் மகாரணி பிறந்தார். 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இங்கிலாந்தின் இராணி எலிசபெத் 117 நாடுகளுக்கு கடவுச்சீட்டு இல்லாமல் பயணித்துள்ளதுடன் அதிக காலம் ஆட்சியிலிருந்தும் சாதனை படைத்துள்ளார். இராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 1901 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி வரை இங்கிலாந…
-
- 1 reply
- 1.1k views
-
-
''கதவைச்சாத்து காதல் வரட்டும்'' கவர் ஸ்டோரி 111.pdf
-
- 10 replies
- 1.1k views
-
-
புதுடெல்லி:தொடர்ந்து வெளியாகும் ஊழல் புகார்களுக்கு பொறுப்பேற்றும், ஊழல்களை மூடி மறைப்பதற்காகவும் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். டெல்லியில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி தலைமையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், பிரதமர் பதவி விலக கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊழல்களுக்கு பொறுப்பு ஏற்கும் வரை மத்திய அரசுக்கு ஒத்தழைப்பு தரப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கைக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதமர் தமது கடமையை செய்ய பலமுறை தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா கருத்து தெரிவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இஸ்ரேலின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் கூறுகையில், பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும். எங்களைப் பின்பற்றி, பிற நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என நம்புகிறோம் என்றார் அவர். அண்மையில் சுவீடனின் பிரதமராகப் பதவியேற்ற ஸ்டெஃபான் லோஃப்வென், நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்றுகையில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விசயத்தில், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் ஐரோப்பிய யூனியன் நாடாக சுவீடன் இருக்கும் என்று அறிவித்திருந…
-
- 12 replies
- 1.1k views
-
-
கன்டெய்னர் லாரிகள், மினி பஸ் மோதல்: லண்டன் கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி பதிவு: ஆகஸ்ட் 28, 2017 00:57 லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள். லண்டன்: லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காஞ…
-
- 6 replies
- 1.1k views
-
-
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம் அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், அகதிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும் அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். Zero Tolerance எனும் அடிப்படையில் அமெரிக்கா எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இம்முடிவை தளர்த்தும் நிலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் த…
-
- 1 reply
- 1.1k views
-
-
பம்பாய் சென்னை தாக்குதல்கள் - இந்திய பாதுகாப்பில் ஓட்டை - வ.ஐ.ச.ஜெயபாலன் இந்தியாவின் பாதுகாப்பு ஓட்டைகள் தொடர்பாக 2006ல் இருந்து எச்சரித்துவரும் எனது சில நேர்காணல்களில் இருந்து ஒரு சில பகுதிகளை மீழ நினைவூட்ட விரும்புகிறேன். இந்திய பாதுகாப்பு ஓட்டைகலை அடைக்க இலங்கை தமிழர்போன்ற தென்னாசிய நட்ப்பு சக்திகளில் நல்லுறவு அவசியம் என்பதை இனியாவது இந்தியா உணரவேண்டும். பம்பாய் சென்னை தாக்குதல்களுக்கான சூழல் நிலவுவதை 2006ல் இருந்தே தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். இலங்கை உளவுத்துறையிலுள்ள சிலரது அனுசரனையுடனேயே பாகிஸ்தான் உளவுத்துறையின் இலங்கையில் செயல்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். வ.ஐ.ச. ஜெயபாலன் - 01.10.2006 நேர்காணல் - தீராநதி http://www.tamilcanadian.com…
-
- 5 replies
- 1.1k views
-
-
இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சரோன் மீண்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன..! "ஸ்ரோக்" தாக்கத்துக்கு உள்ளான சரோன் பெப்ரவரி 4 இல் இருந்து கோமா நிலையில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மூளையில் ஒரு சத்திரச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தின் தேர்த்தல் வெற்றியால் பிராந்திய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேலுக்கு சரோனின் இந்த நிலை மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணலாம்..! :idea: தகவல் மூலம் - பிபிசி.கொம்
-
- 1 reply
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள கசப்புணர்வைப் போக்க ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டில் தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள்மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் இந்தப் பிரச்சினையில் பெரிதாக அக்கறை காட்டாத ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டுக்கு படிக்கும் வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் குறைந்துவிடும் என்ற செய்தியால் ஆடிப் போயுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய இறக்குமதி தொழிலாகும். இந்த வருமானம் கெட்டு போகக் கூடாது என்பதில் தற்போது ஆஸ்திரேலியா மும்முரமாக செயற்பட்டு வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐரோப்பா இன்னும் எத்தனைக் காலம்தான் சுதந்திர மனப்பான்மை உள்ள நிலப்பரப்பாக இருக்கும்? படுபயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த உடனே சிந்திப்பதற்கு இது சரியான தருணம் அல்லதான். இத்தாக்குதலின் கொடூரம் காரணமாக, அரசை நிர்வகிப்போரும் மக்களும், மிகக் கடுமையாக இதை ஒடுக்க வேண்டும் என்றே ஆத்திரப்படுவார்கள். பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலுக்கு முன்னால்வரை, பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல்தான் நாடுகள் சோம்பிக் கிடந்தன. பயங்கரவாதச் செயல்கள் எப்படியெல்லாம் முற்றக்கூடும் என்று சில வட்டாரங்கள் எச்சரித்தபோதும்கூட பாதுகாப்பைப் பலப்படுத்துவது, ஒற்று வேலைகளைத் தீவிரப்படுத்துவது, மக்களைக் கண்காணிப்பது போன்றவற்றில் ஐரோப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்க எதிர்ப்பையும் மீறி யுனெஸ்கோ தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டது பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas யுனெஸ்கோவின் தலைமையகக் கட்டிடத்தில் நேற்று முதன் முறையாக பாலஸ்தீனக் கொடியை ஏற்றியுள்ளார். இது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைக் கோரி நிற்கும் பாலஸ்தீனத்தின் முதல் வெற்றியாக மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு கிடைத்த பெரும் தோல்வியாகவும் கருதப்படுகின்றது. இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனவும், சர்வதேச சமூகம் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான முதற்கட்டம் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, இஸ்ரேலுடனான சமாதான முயற்சிகளுக்கு ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
கனடாவில் கடும் வெப்பம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகின்ற நிலையில் அந்நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய கனடாவில் அமைந்துள்ள மொண்ட்ரியல் நகரில் கடும் வெயில் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான வெப்பம் நிலவுவதனால் தேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/86317/
-
- 6 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்து சிறப்புத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக கடந்த 1991 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டுள்ள தடையை, இந்திய அரசு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. இதன்படி கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையடுத்து, மத்திய தீர்ப்பாயம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. டெல்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம் ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் சென்னை, உதகமண்டலம், டெல்லியில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது. விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்ப…
-
- 13 replies
- 1.1k views
-
-
குட்டி ஏலியன்ஸ் வந்தாச்சு...! தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனும் 'ஏலியன்ஸ்' என்று செல்லமாகவும் அழைக்கப்படும் டி வில்லியர்சுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. தென்ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்சின் மனைவி டெனிலாநிறைமாத கர்ப்பிணியாக இருந்ததையடுத்து, அவருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனால் தென்ஆப்ரிக்கா திரும்பி சென்ற டி வில்லியர்ஸ் மனைவி டெனிலாவை அருகில் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில்,அவரது மனைவி டெனிலா நேற்று ஆண் குழந்தை பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக உள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
உக்ரேனில் ஹெலி வீழ்ந்ததால் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி By Sethu 18 Jan, 2023 | 02:09 PM உக்ரேனில் விமானமொன்று பாலர் பாடசாலையொன்றின் மோதி வீழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 16 பேர் உயிரிழந்துள்ளனர், உக்ரேனின் உள்விவகார அமைச்சர் டேனிஸ் மொனாஸ்டிரிஸ்கிம் இச்சம்பவத்pழல் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் துணை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாலர் பாடசாலையொன்றில் வீழ்ந்து தீப்பற்றியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறார்களும் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது, கியேவ் ப…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
அடுத்த மாதம் உலக ஜனத்தொகை 7.000.000.000 ஆகிறது உலக ஜனத்தொகை இந்த இலையுதிர் காலத்துடன் ஏழு பில்லியனாக உயர்ந்துவிடும் என்று ஐ.நா அறிவித்துள்ளது. இன்று உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும் சராசரி 2.6 பிள்ளைகள் பிறக்கின்றன. இந்த வேகம் இந்த மாத முடிவில் உலக ஜனத்தொகையை 7 பில்லியனாக உயர்த்துகிறது. தற்போது 1.3 பில்லியன் ஜனத்தொகை கொண்ட சீனாவை விரைவில் இந்தியா முந்திச் சென்று உலகில் ஜனத்தொகை கூடிய முதலாவது நாடு என்ற பட்டத்தை பெற்றுவிடும் என்றும் கணிப்புக்கள் கூறுகின்றன. வரும் 2050ம் ஆண்டு உலக மொத்த ஜனத்தொகை 9 பில்லியனாக உயர்ந்துவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இந்த நூற்றாண்டு புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் அரை முதல் ஒரு மீட்டர் உயரப்போகிறது. இதனால் …
-
- 14 replies
- 1.1k views
-
-
ஜெயலலிதாவுக்கு நான்கு வருடங்கள் சிறை நடந்தது என்ன? சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி அவர் தமிழக முதல்வர் பதவியை இழப்பார் எனத் தெரியவருகிறது. வழக்கின் பிண்ணனி கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் திகதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வே…
-
- 1 reply
- 1.1k views
-
-
காஷ்மீர் பிரச்சனையின் தொடக்கம் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திற்குப் பிந்தியது. தெலுங்கானா பிரச்சனை அதற்கு முந்தியது. பிரிட்டிஸ் ஆட்சி நிலவிய காலத்தில் தெலுங்கானா பிரச்சனை தொடங்கிய தோடு இன்று முற்றிப் பழுத்து இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஐதரபாத் என்ற பெயரில் பிரிட்டிசார் காலத்தில் நிலவிய ஆட்சிப் புலத்தில் கொடுங்கோலன் நிசாமின் அரசாட்சி காணப்பட்டது. நிசாமின் ஆட்சிப்புலத்தின் தென் மாவட்டங்களில் பொதுவுடமை இலட்சியம் கலந்த விவசாயப் புரட்சி வெடித்தது. இந்த மாவட்ட மக்கள் மிகவும் பின்தங்கிய வாழ்கை நிலையில் இருந்தனர். ஆண்டான் அடிமை நிலவரம் பரவலாக நிலவியது. இளைய தலைமுறையினர் தலைமையில் வெடித்த விவசாயிகள் புரட்சியை அடக்குவதற்கு நிசாம் மன்னர் அனுப்பிய படைகள் தோல்வி அடைந்தன. 25…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுவதால் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: டைம்ஸ் நவ் பா.ஜ.க கூட்டணி 249, காங்கிரஸ் 148, இதர கட்சிகள் 146 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க- 31, தி.மு.க- 7, காங்கிரஸ் -1 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. ஏ.பி.பி.- ஏ.சி. நீல்சன் பா.ஜ.க கூட்டணிக்கு 272க்கும் அதிகமான இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110…
-
- 6 replies
- 1.1k views
-
-
டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஆறு பேரில், இரண்டு பேர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பேர் சட்ட உதவி வேண்டும் என, கோரியுள்ளனர். டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி, ஓடும் பஸ்சில்,23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி, தூக்கி வீசினர். மாணவியின் ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோர்ட்டில் ஆஜர் : இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், நான்கு பேரின், 14 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் நேற்று, …
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன், ஸ்காட்லாந்தை வலியுறுத்தி உள்ளார். பிரிட்டனில் ஸ்காட்லாந்தின் பங்கு குறித்த ஆய்வறிக்கையை பிரிட்டன் அரசு திங்கள்கிழமை வெளியிட உள்ளது. இந்நிலையில், கேமரூன் கூறுகையில், ""300 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருந்த நாம் பிரிந்தால் சர்வதேச அரங்கில் பிரிட்டனின் பலம் குறைந்து விடும். பிரிட்டன் இப்போது நன்றாக செயல்படுகிறது. இதை ஏன் உடைக்க வேண்டும்?'' என்றார். பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல ஸ்காட்லாந்து திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த ஆண்டு மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதே நேரம், கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 23 சதவீத ஸ்காட்லாந்து மக்கள் மட…
-
- 14 replies
- 1.1k views
-
-
Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 09:53 AM 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று அமெரிக்க தலைநகர் மீது அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதால் காரணமாக கொலராடோவில் போட்டியிட முடியாது என்றும் நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்ய…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
May 2, 2011 / பகுதி: உலக வலம் / யார் இந்த ஒசாமா? (ஒரு சிறப்புப் பார்வை) அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த ஒசாமா? பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை. பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார். 1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். 1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான…
-
- 1 reply
- 1.1k views
-