Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? கொந்தளிக்கும் விமர்சகர்கள் குடும்பத்துடன் இந்தியா வந்த கனடா பிரதமர் இந்தியப் பிரதமரால் வரவேற்கப்படாமல் விவசாயத்துறை அமைச்சர் ஒருவரால் வரவேற்கப்பட்டதற்கு பலத்த விமர்சனம் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் UAE இளவரசர் ஆகியோர் இந்தியா வந்தபோது மட்டும் மணிக்கணக்கில் அவர்களுக்காக காத்திருந்த பிரதமர் கனடா பிரதமரை வரவேற்க மட்டும் ஏன் வரவில்லை என்னும் கேள்வி எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக கனடா பிரதமர் வந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் அவரை வரவேற்கச் செல்லாததற்கு வேறு சில முரண்ப…

    • 21 replies
    • 2.3k views
  2. நளினிமுருகன் மகள் தமிழகம் வந்தார்: சிறையில் பெற்றோரை சந்திக்கிறார் ஜனவரி 10, 2006 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியினரின் மகள் ஆரித்ரா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார். இன்று வேலூர் சிறைக்குச் சென்று தனது பெற்றோரை அவர் சந்திக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் முருகன் மற்றும் நளினி. கணவன், மனைவியான இவர்களில் முருகன் இலங்கையைச் சேர்ந்தவர், நளினி தமிழகத்தைச் சேர்ந்தவர். சிறையில் வைத்து நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. முருகன் மற்றும் நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் நளினியின் வேண்டுகோளை ஏற்று அவரது …

    • 8 replies
    • 2.3k views
  3. புடின் போர் குற்றவாளி – ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கூட்டு இராணுவ தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் எனவும் விளக்க…

  4. மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரின் 15 அடியை இன்று காலை அதிகாரிகள் இடித்தனர். அப்பகுதியில் தலித் மக்களுக்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தபுரம், உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமம். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் 21வது நூற்றாண்டில் பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கிராமம் மட்டும் கற்காலத்தை நோக்கி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 1989ம் ஆண்டு இந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், இன்னொரு வகுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிக் கலவரத்தில் 8 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது பகுதிக்குள் வருவதைத் தடுக்க இன்னொரு சமூகத்தினர் ஊரில் சுவர் எழுப்பி, தங்களது ப…

  5. இதயம் இனிக்க வேண்டும், கண்கள் பனிக்க வேண்டும். இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” இந்த பிரபலமான வார்த்தைகளைச் சொன்னது யார் ? வேறு யார்…..? கருணாநிதி தான். இந்த வார்த்தைகளை இவர் சொன்ன தருணம் எது தெரியுமா ? மாறன் சகோதரர்கள், தயாளு அம்மாளுக்குப் பிறந்த இவரது மகள் செல்வியின் முயற்சியாலும், போலித் தற்கொலை முயற்சி காரணமாகவும், கருணாநிதியின் முதலைக் குடும்பத்தோடு இணைந்ததுதான் காரணம். சரி. இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பை ஏன் வைக்க வேண்டும் ? சவுக்குக்கும், இதயம் இனிக்கும், கண்கள் பனிக்கும். எப்போது. கனிமொழி, திஹார் சிறையில் கால் வைக்கும் போது. எப்போது வைப்பார் ? நாளை தெரியும். இரண்டு வாய்ப்புகள். ஒன்று, கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்…

  6. மன அழுத்தம் குறைந்த ஜெர்மன் நகரவாசிகள் மன அழுத்தம் மிகக் குறைந்த நாடுகள் என்ற பட்டியலைத் தயாரித்தபோது , ஜெர்மன் நாட்டின் ஸ்டுட்காட் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன . தெரிவாகிய முதல் 10நகரங்களுள் , நான்கு ஜெர்மன் நகரங்களாகவே இருப்பதும் தெரியவந்துள்ளது . ஆய்வு செய்த 150 நகரங்களுள் ஜெர்மனியின் ஹனோவர் நகரம் , மூன்றாம் இடத்தில் நிற்கின்றது . இன்னொரு ஜெர்மன் நகரமான மூனிச் ஐந்தாவது இடத்தையும் , ஒன்பதாவது இடத்தை ஹாம்பேர்க் நகரும் பிடித்துள்ளன . வேலையில்லாத நிலை, கடன் பளு , போக்குவரத்து நெரிசல் , பாதுகாப்பு ஸ்திரத்தன்மை, சூழல் மாசடைவு ,என்று பல விடயங்கள் அலசப்பட்ட பின்னரே , பிரித்தானிய…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா மற்றும் கனடா இடையே ராஜ்ஜிய ரீதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 14 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. அக்டோபர் 19-…

  8. ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜொன் ஹோவார்ட் தோல்வி ஆஸ்திரேலியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தையும் அதனை வழிநடத்த ஒரு புதிய தலைமுறையையும் தெரிவு செய்துள்ளார்கள். இன்று சனிக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சியாக இருந்துவந்த தொழிற்கட்சி பெருவாரி வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழமைவாத பிரதமர் ஜொன் ஹோவர்டிடமிருந்து 11 ஆண்டுகள் கழித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஹொவர்டைக் காட்டிலும் 20 வயது குறைவான நாட்டின் புதிய தலைவர் கெவின் ருட், முன்பு ராஜீய அதிகாரியாக இருந்தவர். ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று உறுதியளித்ததோடு, நாடு தனது சரித்திரத்தில் ஒரு புதிய பக்கத்தை எழுதப்போகிறது என்று வெற்றிபெற்ற பின்னர் முதன்முதலாக கருத்துவெளியிட்ட கெவின் ருட் …

    • 12 replies
    • 2.3k views
  9. ஆரம்பித்தது சண்டை... நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம்! மதுரை: தன்னையும், மதுரை ஆதீன மடத்தையும் மதிக்காமல் நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தான்தோன்றித்தனமாக நடந்து வருவதால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளாராம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். இதனால் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இது வெடித்து வெளிக்கிளம்பி அம்பலத்திற்கு வரும் என்றும் ஆதீனத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 1500 ஆண்டு பழமையான மதுரை ஆதீன மடத்தின் இளைய வாரிசாக என்று நித்தியானந்தா நியமிக்கப்பட்டாரோ அன்று முதலே மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதருக்குத் தலைவலிதான். இப்போது அது திருகுவலியாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள் விஷயம…

  10. விவாகரத்து கோரி 89 வயது முதியவர் வழக்கு சென்னை வில்லிவாக்கத்தில் 89 வயதான முதியவர் வசித்து வருகிறார். இதே வீட்டில் 80 வயதான அவருடைய மனைவி வசித்து வருகிறார். 89 வயதான முதியவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: "எனக்கும் எனது மனைவிக்கும் 1949 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 60 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் பிறந்தன. மகன்கள் தொடங்கிய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இப்போது எனது மகன்களோடு சேர்ந்து கொண்டு எனது மனைவி என்னை துன்புறுத்துகிறாள். மேலும் என்னை ஒதுக்கி வைத்து விட்டார். ஆகவே எனது மனைவியிடம் இ…

  11. ஆடைக் கண்காட்சியில் இந்துமதம் நிந்திப்பு:சர்வதேச இந்து மதபீடம் கண்டனம் [saturday, 2011-05-07 04:07:46] அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னி யில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற அவுஸ்திரேலிய பஷன் வீக் ஆடைக்கண்காட்சியில் இந்துக்கடவுளான மஹாலஷ்மியின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட நீச்சல் உடை பற்றி சர்வ தேச இந்து மதபீடம் நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது இந்து மதத்தையே கேவலப்படுத்தும் செயலாகும் எனவும் இந்து மதபீடம் தெரிவித்துள்ளது. மஹாலக்ஷ்மி பொறிக்கப்பட்ட நீச்சல் ஆடையும், உள்ளங்கியும் இந்து மக்களின் புனித உணர்வை தெய்வீக தன்மையை மழுங்கடிக்க செய்கின்றது. இது பற்றி சர்வதேச இந்து மத பீடம் இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இச்செய்…

  12. ."நீங்கள் சைவமா? அசைவமா?' என்று கேட்டால், "நான் நுõறு சதவீதம் சைவம் தான்' என்று நீங்கள் சொல்வீர்கள்! ஆனால், நீங்கள் சைவம் என்றாலும், அசைவம் தான்! எப்படி தெரியுமா? நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், படியுங்கள்: மருந்துக்கடையில் வாங்கும் "கேப்சூல்'களில் 99 சதவீதம், அசைவத்தால் ஆனது. மிருகங்களின் கொழுப்பில் இருந்து தான், "கேப்சூல்'களின் ஓடுகள் தயாரிக்கப்படுகின்றன. சர்வதேச நிறுவனங்களும், மிருக கொழுப்பில் இருந்துதான், "கேப்சூல்' ஓடுகளை தயார் செய்கின்றன. இந்தியாவில் உள்ள நிறுவனங்ளில் 90 சதவீதம் வெளியிடும் "கேப்சூல்'கள் அசைவம் தான். அரியானாவில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழக பயோடெக்னாலஜி மையத்தின் இயக்குனர் டாக்டர் பசந்த் குமார் பகேரா, இது பற்றி ஆராய்ச்சி செய்தார். மிருக கொழுப்ப…

    • 6 replies
    • 2.3k views
  13. ஜெயா டி.வி யின் கடைசி கட்ட அதிரடி பிரச்சாரம் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க வின் கடைசி கட்ட அதிரடிப் பிரச்சாரம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை வழங்கப்பட்டு பின்னர் கருணை மனுவால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நளினியின் சகோதரி கல்யாணியின் கணவர் ராஜா விக்ரம் இயக்கிய, எடிட்டரரகப் பணியாற்றிய, தயாரித்த "கலைஞரின் கண்ணம்மா" திரைப்படம். கலைஞருடன் இன்வர்களுக்கு என்ன தொடர்பு என்று திடீரென ஒரு தகவல்களை ஒளிபரபுகிறது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பிளவுறுமா? இது எவ்விதத்தில் அ.தி.மு.க விற்குப் பலனளிக்கும்? http://pithatralgal.blogspot.com/2006/05/85.html http://therthal2006.blogspot…

  14. கருணாநிதியின் பதிவி ஆசை பலவீனத்தை பயன்படுத்தி தமிழகத்தில் இந்தி தினிப்பு முயற்ச்சி மிக வேகமாக நடுந்து வருகிறது http://www.ndtv.com/convergence/ndtv/new/N...=344&#VPlay

  15. வீரகேசரி வாரவெளியீடு - இந்த உலகம் விசித்திரமானது. பலவான்கள் சேர்ந்து ஒருவனை கள்வன் என்றால் அவன் தீயவன் ஆகின்றான். ஆனால், ஒருவன் தீயவனாக மாறக் காரணமாக இருந்தவர்கள் எவரோ, அவர்கள் தம்மை நல்ல பிள்ளைகளாகக் காட்டிக் கொள்வதுதான் விந்தை எனலாம். இன்று உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களை வில்லர்களாக சித்திரிக்கின்றன. இந்தப் பிரச்சினைக்குள் ஆழமாக மறைந்துள்ள யதார்த்தமும் நல்லவன் தீயவன் பற்றிய உதாரணத்தைப் போன்றது தான். சோமாலிய கடற்பரப்பில் இயங்கும் கடற்கொள்ளையர்கள் சர்வதேச கப்பல்கள் மீது தமது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். அந்தக் கடற்கொள்ளையர்களை ஒடுக்குவதற்காக உலக நாடுகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சின்ன விஷயத்திற்க…

  16. நடிகர் ஷோபன்பாபு மரணம்! உப்பு ஷோபன சலபதி ராவ் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நடிகர் ஷோபன்பாபு இன்று மரணமடைந்தார். அவரது வயது 71. நான்கு முறை ஃப்லிம் பேர் விருதும், ஐந்து முறை நந்தி விருதும் மற்றும் ஏராளமான விருதுகளும் பெற்ற தலைசிறந்த நடிகர் அவர். 30 ஆண்டுகளில் அதிக விருதுகள் பெற்ற ஆந்திராவின் ஒரே நடிகர் அவர் தான். 1965ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தெலுங்கு படங்களில் கதாநாயகனாக 1997 வரை நடித்துக் கொண்டிருந்தார். என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற ஜாம்பவான்கள் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட ஷோபன்பாபுவுக்கு என்று ரசிகர்களும், ரசிகைகளும் ஆந்திராவில் அதிகளவில் இருந்தார்கள். ஷோபன்பாபு படங்களில் மிதமான மேக்கப்பில் மிக அழகாக உடையணிவா…

    • 2 replies
    • 2.3k views
  17. ராஜீவ்: உண்மையான சதிகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை-நளினி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 3, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலைக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் உண்மையான சதிகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மன்னிப்பால் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. வேலூர் மகளிர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார் நளினி. சில மாதங்களுக்கு முன்பு அவரை சோனியா காந்தியின் மகள் பிரியங்கா நளினியை சிறைக்குச் சென…

  18. மூன்றாம் உலகப் போர்... முரசு கொட்டும் வடகொரியா!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-1) போரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்றும் உலகுக்குப் போரின் வலி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்த போர்களின்போது இடம்பெற்ற மோதல்களும் தாக்குதல்களும் அந்தந்த நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில்தான் நாஸ்ட்ரடாமஸ் சொன்ன ஜோதிடத்த…

  19. அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா?: சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம் [திங்கட்கிழமை, 9 சனவரி 2006, 01:53 ஈழம்] [ம.சேரமான்] தமிழக அப்பாவி மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியக் கூட்டரசின் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடித விவரம்: சிறிலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பாக் நீரிணை அருகே உள்ள பகுதியான கச்சத் தீவில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. ராமேஸ்வ…

    • 9 replies
    • 2.2k views
  20. தமிழர்களை உறைய வைக்கும் 'பந்த்' கர்நாடகாவில் திரும்புகிறதா 1991? உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. பாஜக, மஜத உட்பட நூற்றுக்கணக்கான கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ளதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள். பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் வீடு புகுந்து தாக்குவோம் என்ற அடாவடி அறிவிப்பு அவர்களை மிரட்சிக்குள்ளாக்கியுள்ளது. 700க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதரவோடு …

  21. "3-வது திருமணம் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். திவ்யாவை விட்டு விலக தயாராக இருக்கிறேன்'' என்று போலீசாரிடம் சுருட்டு சாமியார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சுருட்டு சாமியார் சென்னையை அடுத்த உள்ளகரம்-புழுதிவாக்கம் பகீரதி நகரில், துர்கா அறக்கட்டளை மற்றும் மதுரை வீரன் கோவில் நடத்தி வருபவர் பழனிச்சாமி (வயது 45). சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்ட இவர் அங்கு குறி சொல்லி வந்தார். அவருக்கு சந்திரா மற்றும் மணிமேகலை என 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில், ஓமியோபதி டாக்டரான திவ்யாவை 3-வது திருமணம் செய்து கொண்டார். தனக்கு தெரியாமல் 3-வது திருமணம் செய்து கொண்டது குறித்தும், சாமியார் பழனிச்சாமி பற்றியும் முதல் மனைவி சந்திரா, போலீசில் சரமாரி புகார்களை தெரி…

    • 3 replies
    • 2.2k views
  22. வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக "சோ" அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மோடியிடம் டெலிபோனில் பேச்சு நடத்திய ரஜினிகாந்த், அவருடைய பாஸிட்டிவ்வான பதிலை கேட்டு பெரும் திருப்தியில் இருக்கின்றாராம். விஜயகாந்த் போல தனிக்கட்சி ஆரம்பித்தால் பணமும் பெருமளவில் செலவாகும், அதே நேரத்தில் அரசியல்வாதிகள் தனிமனித அறிக்கை தாக்குதல் நடத்தினால் பெரும் சங்கடத்தில் தவிக்க வேண்டும் என எண்ணிதான் இவ்வளவு நாளாக அரசியல் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தார் ரஜினி. ஆனால் தற்போது ஒரு பாதுகாப்பான தேசிய கட்சியில் இணைவதால், பணப்பிர…

  23. . மஹாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கரைக்கப்பட்டது. பிபிசி 1/31/2010 12:39:24 PM - மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர். 1948 இல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன. அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி …

    • 6 replies
    • 2.2k views
  24. கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!! பெ.மணியரசன் காத்திருந்து தமிழினத்தைக் காவுகொண்டுவிட்டது இந்தியா. நயவஞ்சகத்தை மறைத்திட, நளினப்பேச்சு; கூட்டங் கூட்டமாகக் கொல்வதை மறைத்திட, “பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாமல் போர் நடத்துக” என்னும் போலிக்கூற்று; விடுதலை இயக்கத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் வெறியை மறைத்திட, ‘அரசியல் தீர்வு’ என்னும் ஆசை மொழி. ஈழத் தமிழினத்தை ஒழித்துக்கட்ட இந்தியா கையாளும் உத்திகள் இவை! ஆறுகோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் அருகில் நம் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கில் காக்கை, குருவிகளைச் சுட்டுக்கொன்றால் கூட, உலக நாடுகள் தலையிட்டு, உயிர்வதை கூடாது என்றும், உயிரிச் சமன்பாட்டில் ஊனம் ஏ…

    • 0 replies
    • 2.2k views
  25. :- 21 செப்டம்பர் 2015 உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115. சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர். அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவர். போஸ் சம்பந்தமான ஆவணங்களை மம்தா பானர்ஜி அரசு வெளியிட்டது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், நிஜாமுதீன் பகிர்ந்துகொள்ளும் செய்திகள் போஸ் தொடர்பான மர்ம முடிச்சுகளை மேலும் அவிழ்க்கின்றன. * சுபாஷ் சந்திர போஸிடம் நீங்கள் பணியில் சேர்ந்தது எப்படி? பிழைப்புக்காக தம் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவிட்ட என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.