உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புடினைத்(Vladimir Putin) தவிர மற்ற ரஷ்ய(Russia)அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் திட்டம் இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், "நான் ரஷ்யர்களைச் சந்திக்க மாட்டேன், அது எனது திட்டத்தில் இல்லை. நான் ஒரே ஒரு ரஷ்யரை மட்டுமே-அதாவது புடினை மட்டுமே சந்திப்பேன். அதுவும் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பாவுடன் இரு நாடுகளுக்கான பொதுவான திட்டம் உருவான பிறகே, புடினுடன் அமர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவோம். அ…
-
- 4 replies
- 498 views
-
-
புடின் - செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு சாத்தியமானதாக இல்லை - கிரெம்ளின் 20 August 2025 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், யுக்ரைனின் வோலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையே விரைவில் ஒரு உச்சிமாநாடு நடைபெறுவதை கிரெம்ளின் இன்னும் சாத்தியமான விடயமாக அறிவிக்கவில்லை. எனினும், யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க இரண்டு தலைவர்களும் சந்திக்க வேண்டும் என்ற தனது அழைப்பை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி கடந்த வாரம் அலஸ்காவில் புடினைச் சந்தித்தார் பின்னர், ஏழு ஐரோப்பியத் தலைவர்களையும், செலென்ஸ்கியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னரே, ரஷ்ய-யுக்ரைன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்த அழுத்தம் வந்துள்ளது. இந்தநிலையில், "இந…
-
- 1 reply
- 236 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info எதிர்ப்பு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யா பின்னடைவு உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய …
-
- 82 replies
- 4.4k views
- 2 followers
-
-
புடின் இராணுவ அணிதிரட்டலை அறிவித்தார், மேற்கு ரஷ்யாவை அழிக்க விரும்புகிறது என்று கூறுகிறார் September 21, 2022 Admin 0 லண்டன்: ஆக்கிரமிக்கப்பட்ட சில பகுதிகளை மீட்டெடுத்த உக்ரேனிய எதிர்த்தாக்குதலில் ரஷ்யப் படைகள் போரிடுகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை (செப். 21) ஒரு பகுதி இராணுவ அணிதிரட்டலை அறிவித்தார். தேசத்திற்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், புடின் அதன் 2 மில்லியன் வலிமையான இராணுவ இருப்புக்களை ஓரளவு அணிதிரட்டுவது ரஷ்யாவையும் அதன் பிரதேசங்களையும் பாதுகாப்பதாகும், மேற்கு நாடுகள் ரஷ்யாவை அழிக்க விரும்புவதாகவும் உக்ரேனில் அமைதியை விரும்பவில்லை என்றும் கூறினார். “எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், எங்கள…
-
- 37 replies
- 1.5k views
- 1 follower
-
-
புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு! கடந்த ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு சற்று முன்பு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டியதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உலகத் தலைவர்களுடன் புடினின் தொடர்புகளை ஆராயும் பிபிசி ஆவணப்படத்தில் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, கிரெம்ளினுடனான அசாதாரண தொலைபேசி அழைப்பின் போது இந்த சம்பவம் நடந்தது. அதற்கு ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் என்று புடின் தன்னிடம் கூறியதாக ஜோன்சன் கூறினார். முன்னாள் பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, அழைப்பின் போது போர…
-
- 25 replies
- 1.6k views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா(Mongolia) நாட்டிற்கு ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்(Vladimir Putin) சென்றுள்ளார். ரஷ்யா - உக்ரைன் (ukraine)இடையே போர் நீடித்து வருகிறது. இப்போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக நெதர்லாந்தில் (netherland)உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. புடின் மீது கைது பிடியாணை அந்த வழக்கில் புடின் மீது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புடின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புடினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. …
-
-
- 3 replies
- 626 views
- 1 follower
-
-
புடின் தோல்வியடைந்தால் உலகதிற்கு அது நல்ல நேரம் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்ற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமரை உக்ரைன் அதிபர் வோல்மியுர் ஜெலென்ஸ்கி வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் ரஷ்யப் படைகள் பின்வாங்கிய பகுதிகளையும் போரினால் சேதமடைந்த பகுதிகளையும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தோல்வியடைந்தால், அது உக்ரைனுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் நல்ல நேரமாக அமையும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த பயணத்தின் போது கூறியது உலகம் முழுவதும் பலத்த விவாதத்தை உருவ…
-
- 2 replies
- 754 views
-
-
புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை உக்ரைன் – ரஷ்ய போர் சுமார் கடந்த 10 மாதங்களாக நிலவி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார், மீண்டும் அவர் எழுந்திருக்கவேமாட்டார் என முன்னாள் ரஷ்ய தூதர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நாவுக்கான முன்னாள் ரஷ்ய தூதரான Boris Bondarev என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புடின் பதவி விலக கட்டாயப்படுத்தப்படலாம். புடினுடைய ஆட்சி பயங்கரமான முறையில் கவிழ்க்கப்படலாம் அல்லது அவர் கொல்லப்படலாம். உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோல்வியை சந்திக்குமானால், ரஷ்ய செல்வந்தர்களாலேயே நிரந்தர தூக்குத்துக்கு புடின் கொண்டு …
-
- 0 replies
- 648 views
-
-
புடின் போர் குற்றவாளி – ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கூட்டு இராணுவ தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் எனவும் விளக்க…
-
- 29 replies
- 2.3k views
-
-
புடின் மேலும் இரண்டுமுறை ஜனாதிபதியாகும் வாய்ப்பு- புதிய அரசியலமைப்பில் கையொப்பமிட்டார்! ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் இருமுறை போட்டியிடும் வகையில் திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தில் விளாடிமிர் புடின் கையொப்பமிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற சட்டவரைபை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வரைபின்படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும். அதாவது, ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீண்டும் தேர்தல…
-
- 0 replies
- 253 views
-
-
புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..! உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். உக்ரைனை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணி புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார். ஆனால், உக்ரைன் இன்னமும் எதிர்த்து நிற்கிறது. ரஷ்ய தரப்பிலோ, சுமார் 200,000 படைவீரர்கள் பலியாகிவிட்டார்கள். 17 பில்லியன் டொலர்கள் அளவில் வாகனங்கள் முதலானவற்றை ரஷ்யா இழந்துவிட்டது என்கிறது உக்ரைன் தரப்பு. ஆக, இனி என்ன நடக்கும், ரஷ்யாவுக்கு என்ன ஆகும், புடின் என்ன ஆவார் என்பது குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், புடின் …
-
- 170 replies
- 11.6k views
- 1 follower
-
-
புட்டினை எதிர்த்துப் போட்டியிடும் 'பாலியல் குரு' ரஷ்யாவில் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக தன்னைத் தானே பாலியல் குரு ஒருவராக விளம்பரம் செய்து கொண்டுள்ள அலெக்சாண்டர் கிர்ரிலோவ் தெரிவித்தார். அவர் ஹோட்டல் அறையொன்றின் படுக்கையில் ஹோட்டல் பணிப்பெண்கள் போன்று ஆடை அணிந்திருக்கும் பெண்களை இசைக்கருவி போன்று கைகளால் மீட்டுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அவ்வாறு அந்தப் பெண்களை மீட்டும் போது அந்தப் பெண்கள் ஆபாசமான முறையில் குரலை எழுப்பி ஒரு இசை ப…
-
- 0 replies
- 432 views
-
-
இந்த செய்தி தான் நேற்றில் இருந்து பல சோசல் மீடியாக்களில் செய்தியாக வந்து கொண்டு இருந்திச்சு அதற்கான சில காணொளிகள்
-
-
- 2 replies
- 798 views
-
-
புட்டினின்... மகள்களுக்கு எதிராக, அமெரிக்கா பொருளாதாரத் தடை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள்கள் உட்பட அவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குடும்பம் மற்றும் முக்கிய வங்கிகளும் அடங்கும். உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ‘பொறுப்புள்ள நாடுகள் ஒன்றிணைந்து இந்த குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். புடினின் மகள்களான கேடரினா விளாடிமிரோவ்னா டிகோனோவா மற்றும் மரியா விளாடிமிரோவ்னா வொரொன்ட்சோவா ஆகியோர் புடின…
-
- 11 replies
- 640 views
-
-
புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள் By T. SARANYA 03 OCT, 2022 | 02:40 PM வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 221-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனிடையே, போரில் கைப்பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த பகுதி ஒட்டுமொத்த உக்ரேனின் 15 சதவிகிதம் ஆகும். …
-
- 6 replies
- 587 views
-
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்ய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சந்திப்பு குறித்த திகதி மற்றும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான தீர்வுகளைப் ப…
-
-
- 21 replies
- 1.3k views
-
-
புட்டினுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ளார். November 30, 2018 உக்ரைன் நாட்டு கப்பல்களை ரஸ்யா கைப்பற்றிய பிரச்சனையை மையப்படுத்தி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார் . உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஸ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அண்மையில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஸ்ய ராணுவம் கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ரஸ்யாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உக்ரைனுக்கு அதிக ஆதரவு வழங்குமாறு ஐரோப்பிய நாடுகளை வல…
-
- 0 replies
- 399 views
-
-
Published By: RAJEEBAN 14 FEB, 2025 | 03:11 PM ரஸ்ய உக்ரைன் யுத்தம் குறித்து உக்ரைன் இல்லாமல் அமெரிக்காவும் ரஸ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளதை தொடர்ந்து உக்ரைனிற்கு அமெரிக்கா துரோகமிழைக்கின்றதா என்ற கேள்வி சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் அமெரிக்கா உக்ரைனிற்கு துரோகமிழைக்கவில்லை என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்ய ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்காக நான் ரஸ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்…
-
-
- 4 replies
- 444 views
- 1 follower
-
-
புட்டினும் அசாடும் திடீர் சந்திப்பு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் இருவரும், மொஸ்கோவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை, ரஷ்யப் பேச்சாளரொருவர் இன்று வெளியிட்டார். செவ்வாயன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே அவர் பயணித்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளுக்கு அதிகம் பயணிக்காத பஷார், 2011ஆம் ஆண்டுக்கு மோதல்கள் ஆரம்பித்த பின்னர் வெளிநாடொன்றுக் சென்ற முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. சிரிய ஜனாதிபதி அசாடுக்கு ஆதரவாக, சிரியாவில் தாக்குதல்களை மேற்கொள்ள ரஷ்யா ஆரம்பித்துள்ள இந்தப் பின்னணியில், இச்சந்த…
-
- 7 replies
- 1.4k views
-
-
Published By: RAJEEBAN 19 JUL, 2023 | 12:13 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவரை கைதுசெய்வது யுத்தபிரகடனம் செய்வதற்கு சமமான விடயம் என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில்ரமபோச இதனை தெரிவித்துள்ளார். தனது நாட்டு ஜனாதிபதி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவரை கைதுசெய்வது யுத்தப் பிரகடனம் செய்வதற்கு சமமானது என ரஸ்யா தெளிவாக தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தமாதம் ஜொகனாஸ்பேர்க்கில் இடம்பெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு புட்டின் அழைக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு எதிராக சர்வதேச குற்றவிய…
-
- 4 replies
- 470 views
- 1 follower
-
-
புட்டினை... சந்தித்து பேசுகின்றார், ஐ.நாவின் பொதுச்செயலாளர் ரஷ்யா சென்றுள்ள ஐநா.சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் இன்று புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடன் மொஸ்கோவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். 60 நாட்களைக் கடந்தும் நடைபெற்று வரும் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தி சமாதானம் காண்பதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குட்டாரஸ், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகள் மூலமாக அமைதித் தீர்வு காண்பதற்கு ஐநா.சபை மிகுந்த முயற்சிகள் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை குறை…
-
- 0 replies
- 201 views
-
-
புட்டினை... போர்க் குற்றங்களுக்காக, விசாரிக்க வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்! உக்ரைனில் ரஷ்யப் படைகள் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்கள் வெளிவருவதால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், சர்வதேச கோபத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புடின் ஒரு மிருகத்தனமானவர் என்றும் புடின் ஒரு போர்க் குற்றவாளி என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யப் படைகள் அதன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு புச்சாவின் வீதிகளில் மணிக்கட்டு கட்டப்பட்ட நிலையில் குறைந்தது 11 இறந்த உடல்களை காட்ட…
-
- 0 replies
- 168 views
-
-
புட்டின் ஆட்சியின் கீழ் தடைசெய்யப்பட்ட ரஸ்யாவின் மனச்சாட்சி என வர்ணிக்கப்படும் மெமோரியலிற்கு அமைதிக்கான நோபல் பரிசு By RAJEEBAN 07 OCT, 2022 | 05:33 PM இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள அமைப்புகளில் ஒன்று மெமோரியல் மேமோரியலை புட்டின் ஆட்சியின் கீழ் தடைசெய்யப்பட்ட ரஸ்யாவின் மனச்சாட்சி என வர்ணித்துள்ள ஏஎவ்பி விமர்சனங்களை எழுப்பும் குரல்களிற்கு எதிரான ஒடுக்குமுறையின் போது மெமேரியல் மூடப்படவேண்டிய நிலையேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளது மெமோரியல் குறித்து ஏஎவ்பி மேலும் தெரிவிப்பதாவது 1990களில் ஜனநாயகத்தை நோக்கிய ரஸ்யாவின் குழப்பகரமான மாற்றத்தின்போது நம்பிக்கையின் சின்னமாக உருவெடுத்த இந்த அம…
-
- 3 replies
- 395 views
-
-
புட்டின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தவேண்டும் - அவுஸ்திரேலிய பிரதமர் Published By: Rajeeban 24 Feb, 2023 | 11:56 AM புட்டின் உக்ரைன் மீதான சட்டவிரோத ஒழுக்கக்கேடான ஆக்கிரமிப்பை நிறுத்தவேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் ஆரம்பித்து இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். உக்ரைன் படையினருக்கு 33 மில்லியன் டொலர் பெறுமதியான ஆளில்லா விமானங்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். இதேவேளை 90…
-
- 0 replies
- 252 views
-
-
புட்டின் வந்தால் நான் வரமாட்டேன்: உக்ரேன் ஜனாதிபதி இந்தோனேசியாலில் நடைபெறவுள்ள ‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு தனது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அந்த மாநாட்டு வருகைதருவாராயின் தான் வரமாட்டேன் என்று அறிவித்துள்ளார். ‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாடு, எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி யோகோ விடோடோவின் தலைமையில் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/படடன-வநதல-நன-வரமடடன-உகரன-ஜனதபத/50-306837
-
- 6 replies
- 767 views
-