உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
உலகின் அதிசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜேர்மனி கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 177 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம். இரண்டாம் இடத்தில் சுவீடனும் (176 நாடுகள்) மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தும் (175 நாடுகள்) 4வது இடத்தில் பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்காவும் (174 நாடுகள்) உள்ளன. நியூசிலாந்து கடவுச்சீட்டு 7 வது இடத்திலும்(171 நாடுகள்) ஆஸ்திரேலியக் கடவுச்சீட்டு 8 வது இடத்திலும் (169 நாடுகள்) காணப்படுகின்றன. ஏனைய அனைத்து நாடுகளினதும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. Germany – 177 2. Sweden – 176 3. Finland, France, Italy, Spain, UK – 175 4. Belgium, Denmark, Net…
-
- 18 replies
- 1.5k views
-
-
சரத்குமாரின் அரசியல் களத்தில் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் இப்போது நடந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தி.மு.க.வில் உறுப்பினாரக இணைந்த சரத்குமாருக்கு எம்.பி. பதவி கொடுத்து அழகு பார்த்தது தி.மு.க. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மனக்கசப்புகளால் அதிருப்தியில் இருந்த சரத்குமார், தி.மு.க.வில் இருந்து விலகியதோடு எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் மனைவி ராதிகாவுடன் ஜெயலலிதாவை சந்தித்து அ.திமு.க.வில் இணைந்த சரத்குமார் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பல கூட்டங்களிலும் பேசினார். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழி போல அ.தி.மு.க.விலும் சரத்குமாருக்கு தகுந்த மரியாதை கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் நைனாதேவி இந்துக் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மக்கள் நெரிசல் காரணமாக அங்கு சிக்கி 123 பேர் உயிரிழந்துள்ளனர், என அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் அதிகமான பெண்களும்,குழந்தைகளும், உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரியவருகின்றது. நிருபர்:அன்பு http://www.tamilseythi.com/world/123-dead-...2008-08-03.html
-
- 8 replies
- 1.5k views
-
-
தன்னிடம் படிக்கும் மாணவிகள் 23 பேரை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு ஆசிரியையைக்கும், அவர் கணவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சீனாவில் நடந்தது. கய்ஷு மாநிலத்தைச்சேர்ந்தவர் ஜாவோ குயிங்மேய். பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கிறார். அவரும், அவர் கணவரும் சேர்ந்து மாணவிகளை விபசாரத்தில் தள்ளிவிட்டனர். குயிங்மேய், தன் வகுப்பைச்சேர்ந்த 23 மாணவிகளை கட்டாயப்படுத்தி, நிலக்கரி சுரங்க அதிபர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள செய்தார். அவர்களில் 6 பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் இருவருக்கும் கோர்ட்டு மரணதண்டனை விதித்தது. viparam.com
-
- 1 reply
- 1.5k views
-
-
கண்டிப்பாக இருதய பலமற்றவர்கள் இந்த இணைப்பை அழுத்த வேண்டாம். http://thamizhaathamizhaa.weebly.com/
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
சூப்பர் பம்பர் பரிசு ரூ. 10 கோடி தருவதாக கூறி இண்டர்நெட் மூலம் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகள் தமிழக இளைஞர்களை குறி வைத்து தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன. இதைப்பெறுவதற்காக பலர் தொடர்ந்து பணம் கட்டி வருகின்றனர். இதில் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் நமது மாலை மலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த பரபரப்பு அனுபவம் குறித்து தெரிவித்தனர். சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். திரைப்பட வினியோகஸ்தர். இவரது மகன் பாலாஜி (வயது 22). இவர் இண்டர்நெட் லாட்டரியில் ரூ. 4 கோடி பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:- நான் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறேன். தினம…
-
- 1 reply
- 1.5k views
-
-
அல் கைடா தலைவர் ஒசாமா பின் லேடன் சுகவீனம் காரணமாக கடந்த மூன்று கிழமைகளுக்கு முன் மரணமடைந்தார் என உறுதிப்படுத்தபடாத செய்திகள் வெளியாகி இருக்கின்றன மேலதிக செய்திகளை எதிர்பார்க்கிறேன்.
-
- 4 replies
- 1.5k views
-
-
மத்திய தரை கடலின் கிழகில் துருக்கிக்கு கீழே அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவு நாட்டுக்குத்தான் பெயர் சைபிரஸ். ஐரோபிய ஒன்றியத்தில் யூறொ வலைய நாடுகளில் வந்திருக்கும் நிதிச் சீர்குலைவு இந்த நாட்டையும் பலமாக தாக்கியிருக்கு. கிறீசு, ஸ்பெயின் இத்தாலி.... என்ற வரிசயில் இன்று சைபிரஸ் வங்குகொரோத்தில் வந்து நிற்கிறது. யூறொ வலையம் நாட்டை காப்பற்ற வேண்டுமாயின் புதிய நூதன கண்டிசன் போட்டிருக்கு. நாட்டினது வங்கிச் சாதாரண வைப்பாளிகளின் பணத்தில் 10% தண்டம் கேட்கிறது. அதை 40% மாக அடிக்கசொல்லி ஆலோசனை கூறியது IMF. நன்றி ரூசிய வங்கி வைப்பாளர்களுக்கு. அவர்கள் அந்த நாட்டு வைப்புகளில் பிரதாண பாகம் உள்ளவர்களாகையால் அவர்களின் ஒத்துளைப்பு திட்டத்திற்கு தேவைப்படுகிறது.; அவர்கள் இது பச்சை அநியாயம் என்று…
-
- 2 replies
- 1.5k views
-
-
யுக்ரெய்ன் விமான தளத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றினர்! [Friday, 2014-02-28 19:35:09] யுக்ரெய்னின் தென்பிராந்தியமான கிரைமீயாவில் செவாஸ்டபோல் என்ற ஊரின் இராணுவ விமான தளத்தை ரஷ்ய கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சர் கூறுகிறார். இது ஒரு ஆயுதப் படையெடுப்பு என்றும் ஆக்கிரமிப்பு என்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறும் செயல் என்றும் கூறி உள்துறை அமைச்சர் ஆர்சென் அவகொவ் கண்டித்துள்ளார். கிரைமீயாவில் நடந்துவருபவற்றை ஐநா பாதுகாப்பு சபை கண்காணிக்க வேண்டும் என யுக்ரெய்ன் நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த விமான தளத்துக்குள் யுக்ரெய்னிய படையினரும் எல்லைக் காவல் படையினரும் இருக்கிறார்கள் என்றும், மோதல் எதுவும் நடக்கவில்லை என்றும் அவகொவ் தெரிவித்த…
-
- 17 replies
- 1.5k views
-
-
ராஜபக்சே போர்நிறுத்தம் செய்யாததை வன்மையாக கண்டிக்கிறேன்: கலைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் 21 பேரின் பெயர் பட்டியலை முதலமைச்சர் கருணாநிதி நேற்று அறிவித்தார். வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவரும் முதலமைச்சர் கருணாநிதியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர், முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இலங்கையில் விடுதலைப்புலிகளின் அனைத்து இடங்களையும் ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், அவர்களது ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் பிரபாகரனும், அவருடைய புதல்வரும் தமிழர்கள் வாழ்கிற பகுதிகளில் மறைந்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றதே?. இது போர்களத்துச் செய்தி. நாங்கள் பொதுவாக இலங…
-
- 2 replies
- 1.5k views
-
-
டயானாவின் கொலை சம்பந்தமான தீர்ப்பு 07/04/2008 நீதிமன்றால் வழங்கப்பட்டது. அவர்களின் சாவுக்கு .............................................................. மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 4 replies
- 1.5k views
-
-
சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம் சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
மாஸ்கோ: கிர்கிஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி 70 பயணிகள் பலியாயினர். 20 பேர் உயிர் தப்பிவிட்டனர். முன்னாள் சோவியத் குடியரசு நாடான கிர்கி்ஸ்தான் தலைநகர் பிஷேக் அருகே உள்ள மனாஸ் விமான நிலையத்தில் இருந்து ஈரான் நாட்டின் மஷாத் நகருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. போயிங்௭37 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை விமானிகள் மனாஸ் விமான நிலையத்துக்கு திரப்பினர். ஆனால், விமான நிலையத்துக்கு 2 கி.மீ. தூரத்தில் வந்து கொண்டிருந்தபோதே அந்த விமானத்தில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 70 பேர் பலியாயினர். விமானி உள்பட சுமா…
-
- 6 replies
- 1.5k views
-
-
தம் தரப்பு வெற்றியை கொண்டாடும் வாக்காளர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 31 உள்ளூராட்சிப் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 1,914,187 பேரும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,539,920 பேரும் வாக்களித்திருந்தனர். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திர…
-
- 15 replies
- 1.5k views
-
-
சிங்கள சேவையில் எவ்விதம்மாக உண்மையை மறைக்கிறார்கள் என்பதை நீங்களும் படியுங்கள். உந்களுடய கருத்தை பதிவு செய்யுங்கள். http://www.bbc.co.uk/sinhala/ http://www.bbc.co.uk/sinhala/highlights/st...412_forum.shtml
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈராக்கில் 70 மாணவிகள் உடல் சிதறி சாவு: பல்கலைகழகத்தில் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் பாக்தாத்,ஜன.17- ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் உசேன் 148 ஷியா பிரிவினரை கொன்ற வழக்கில் கடந்த 30- ந்தேதி தூக்கிலிடப்பட்டார். இதை தொடர்ந்து சதாம்உசேன் ஆதரவு சன்னி தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் சதாம் உசேனின் தம்பி பர்சான் இப்ராகிம், முன்னாள் நீதிபதி அவதாத் அமீது ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் தூக்கில் போடப்பட்டனர். இதில் தூக்கு கயிறு இறுகி சதாம் உசேனின் தம்பி தலை துண்டாகிவிட்டது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் தீவிரவாதிகளிடம் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீவிரவாதிகளை ஒடுக்க கூடுதலாக 20 ஆயிரம் ராணுவத்தினரை அனுப்ப போவதாக அமெரி…
-
- 3 replies
- 1.5k views
-
-
பீகாரில் ஓடும் ரெயில் மீது பாலம் இடிந்து விழுந்து விபத்து: 47 பேர் பலி பகல்பூர், டிச.3-:ஓடும் ரெயில் மீது மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 37 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். 55 பேர் படுகாயம் அடைந்தனர். பீகார் மாநிலம் பகல்பூர் ரெயில் நிலையத்தில், நேற்று காலை இந்த கோர விபத்து நடந்துள்ளது. கிழக்கு ரெயில்வே பிரிவில் அமைந்துள்ள அந்த ரெயில் நிலையத்தின் நடைபாதை மேம்பாலம், பழுதடைந்து இருந்தது. 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பாலம், படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி இடிக்கப்படாமல் இருந்தது. அதிவேக ரெயில்கள் அந்த வழியாக சென்று வந்ததால், அதிர்வு காரணமாக அது இடிந்து விழும் நிலையில் இருந்திருக்கிறது. இந்த நிலையி…
-
- 9 replies
- 1.5k views
-
-
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் சீனாவின் பிஜிங் நகரில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு வந்தது. 136 பயணிகளுடன் வந்த அந்த விமானம் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரை இறங்கும்போது அதன் என் ஜினில் திடீர் கோளாறு ஏற் பட்டது. சக்கரங்கள் இயங்கவில்லை. கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் உள்ள புல்தரையில் பயங்கரமாக மோதி இறங்கியது. இதனால் விமானத்தின் அடிப்பகுதி மற்றும் இறக்கைகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் விமானத்தில் இருந்தவர்களில் 13 பேர் காயம் அடைந்தனர். அந்த விமான தளத்தில் இருந்து இன்னொரு விமானம் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அவரது மனைவி ஆகியோருடன் சீனா புறப்பட தயாராக நின்றது. விபத்தில் சிக்கிய விமானம் தாறுமாறா…
-
- 4 replies
- 1.5k views
-
-
ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு பற்றி டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் “இது நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் இது போன்றவர்களை விடுதலை செய்தால், தவறான தகவலை அனுப்புவதாக அமையும்” என்று கூறியுள்ளார். மேலும் விலைவாசி உயர்வு, கியாஸ் விலை உயர்வு போன்றவற்றையே அரசியலாக்க விரும்புவதாகவும், மதரீதியான அரசியலை செய்ய விரும்ப மாட்டோம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். http://ww…
-
- 26 replies
- 1.5k views
-
-
பெல்ஜியம் - 1 பெல்ஜியம் நகரில் உள்ள மன்னரின் அரண்மனை. பெல்ஜியம் சாக்லெட்டுகள் உலகப்புகழ் பெற்றவை. பெல்ஜியத்தில் உருவான ‘டின்டின்’ என்ற காமிக்ஸ் கதாபாத் திரம் பல குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். பெல்ஜியம் பீர் புகழ் பெற்றது. பெல்ஜியத்தில் உள்ள தொன்மை யான, அற்புதமான கட்டிடங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். ஆனால் இதையெல்லாம் புறம் தள்ளும்படி சமீப காலத்தில் பெல் ஜியம் வேறு ஒன்றுக்காக செய்தி களில் இடம்பெற்று வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெல்ஜியம் அடைக்கலமாகிறது! சமீபத்தில் பிரான்சின் பல பகுதி களில் கோரத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் பெல்ஜிய நாட்டிலிருந்து வந்த வர்கள் என்பதுதான் அ…
-
- 11 replies
- 1.5k views
-
-
நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி! (2 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்த நிலையில் சுனாமி தாக்கியுள்ளது. சுமார் 2 மீட்டர் உயரத்தில் (6.6) சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதால் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!( 1 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவின் சுலாவேசி பிராந்தியத்தில் 7.5 ரிச…
-
- 6 replies
- 1.5k views
-
-
அல்கைதா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியும், 'முதலாவது பயங்கரவாதி' என்று அழைகப்படுகின்றவருமான 'அல் அவ்லாக்கி' இன்று அமெரிக்க தாக்குதல் ஒன்றில் யேர்மனியில் கொல்லப்பட்டு உள்ளார் எனும் நல்ல செய்தி வெளியாகியிருக்கு உலகு முழுதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில் முழு உலகையும் இஸ்லாமிய மயப்படுத்த முனையும் பயங்கரவாதிகளுக்கு இன்னுமொரு பெரும் இழப்பு ----------------------- Anwar al Awlaki, the U.S.-born cleric dubbed “Terrorist Number One” was reportedly killed Friday by an air strike in the mountains of Yemen. A statement emailed from Yemen’s Washington embassy announced his death under with the subject line: “Breaking News: Awlaki Dead.” The 40-year-old cleric …
-
- 7 replies
- 1.5k views
-
-
விமானத்தில் மது அருந்திய பெண் குழந்தையுடன் சிறையிலடைப்பு விமானப் பயணத்தின் போது மது அருந்தியதற்காக பெண் வைத்தியர் எல்லி ஹோல்மேன் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன். பல் வைத்தியரான இவர், லண்டனிலிருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் கடந்த ஜூலை 13ஆம் திகதி தன் 4 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு உணவுடன் மது வழங்கப்பட்டுள்ளது. எல்லி அதை அருந்தியிருக்கிறார். இதையடுத்து, துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எல்லி ஹோல் மேனின் விசா காலாவதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், உடனடியாக லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். …
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாணவி கடத்தல் கடலூர்: கடலலூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பள்ளி மாணவியைக் கடத்திச் சென்றவரைப் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவானான்பேட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் இமானுவேல் (55), மீனவர். இவரது மகள் தமிழ்ச்செல்வி (15). குள்ளஞ்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதே முகாமை சேர்ந்தவர் சிவனாடி மகன் ராஜா (19). தமிழ்ச்செல்வி தினமும் பள்ளிக்கு செல்லும் போது அவரை ராஜா பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமி பள்ளிக்கு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுபற்றி குள்ளஞ்சாவடி போலீசில் இமானுவேல் புகார் கொ…
-
- 3 replies
- 1.5k views
-
-
அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு அறுவை சிகிச்சை வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் புஷ் நெற்றி பொட்டில் இருந்த இரண்டு கரும்புள்ளிகள் சிறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அந்த கரும்புள்ளிகள், புற்று நோய்க்கான அறிகுறியா என்பது குறித்து அறிய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் புஷ் தனது இடது நெற்றி பொட்டில் சிறிய கரும்புள்ளி இருப்பதாக கடந்த வாரம் குடும்ப டாக்டரிடம் தெரிவித்தார். அப்போது, அந்த டாக்டர் மற்றொரு கரும்புள்ளி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அதையடுத்து, நேற்று முன்தினம் வால்டர் ரீட் மருத்துவ மையத்தின் தோல் நோய் நிபுணர் ஸ்டீவ் கிரிவ்டா, அதிபர் புஷ்ஷுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்து அந்த இரண்டு கரும்புள்ளிகளையும் அகற்றினார். முன்னதாக அதிப…
-
- 2 replies
- 1.5k views
-