Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 1 இறுக்கி பற்றி பிடித்து இருந்த .. உன் கைகள் லேசாய் பிடி தளரும் .. போது நான் புரிந்து இருக்க வேணும் .. நீ வளர்த்து வருகிறாய் என்று .. மகனே ... 2 ஓடும் உன் மகனை ... பிடிக்கும் வயதில் நான் .. இல்லை மகனே .. முதுமை .! 3 அப்பா என்று என்னை நீ அழைத்தபோது .. இன்னும் ஒருமுறை கூப்பிட மாட்டானா .. என் பிள்ளை என்னை என்று ஏங்கிய.. என்னை இப்பொழுது உனக்கு ஒன்னும் .. தெரியாது போப்பா அங்கால என்கிறான் ... லையிட்டா வலிக்குது மகனே மனது ..! 4 என்ன உனக்கு தொப்பை எட்டி பார்க்குது .. என்று கேட்பவர்களுக்கு தெரியுமா .. அது உனக்காக வளர்த்து தொப்பை என்று .. நீ சிரித்து சறுக்கி விளையாட மகனே ..! 5 உன்னுடன் மிட்டாய்க்கு இட்டா .. சண்டையை விட உன் எச்ச…

  2. அப்பா அம்மா அண்ணா அக்கா தம்பி தங்கை இவையெல்லாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறவு ஆனால் நீ அப்படி இல்லையடா எனக்காக நான் தேர்ந்தெடுத்த உறவு உன்னை ரசித்து உன் குணத்தைப் புரிந்து நீ எனக்கானவன் என நானே முடிவு செய்து எனக்கு என நானே சொந்தமாக்கிய உறவு உன்னை எவருக்காகவும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எப்பொழுதும் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்

  3. அழகாயிருப்பேனா..? காயாத ரணங்கள் கொண்ட மனது கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால் கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால் நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின் நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே அழகின் வரைவிலக்கணம் எது என்று அறியவில்லை இதுவரை சிலந்திவலையை கொண்டு விண்மினை பிடிப்பது போல் இருக்கின்றது வாழ்க்கை இறந்த பிறகாவது நான் அழகாயிருப்பேனா..?

  4. வைரமுத்துவின் கவிதைகள் 1. சங்க காலம் ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை நெகிழ்த்து மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து வாட்கண் மயங்க உண்டதை மீண்டும் பசலை உண்ணும் பாராய் தோழி 2. காவிய காலம் பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும் கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில் கரும்பிருக்கும் என்பார் கவி. 3. சமய காலம் வெண்ணிலவால் பொங்குதியோ விரக்தியால் பொங்குதியோ பெண்ணொருத்தி நான்விடுக்கும் பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால் விண்ணளந்து பொங்குதியோ விளம்பாய் பாற்கடலே! …

  5. பெண்ணியம் : பல கோணங்கள் ---------- பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம். 1) மிதவாதப் பெண்ணியம் இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது. 2) போராட்ட குணம் மிக்க பெண்ணியம் பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள…

  6. Started by Rasikai,

    ஜீவனே வா..! உயிரதில் ஒளிந்து கிடக்கிறான்.. எந்தன் உறக்கத்தை கொன்று தொலைக்கிறான்... எனை கைப்பிடிக்க பிறந்த கண்ணன்-அவன் கமலம் போல் நிறம் கொண்ட கள்ளன்! என் மனசின் ஓசை அறிவானோ? தன் மனசில் சிறை ஒன்று தருவானோ? உதிரமாய் என்னுள் வருவானோ? தன் உயிரினில் பாதி தருவானோ? தவமிருக்கும் நந்தவனமென்றானேன் நீ தந்துவிடு உன்னை.... மழை சலவை செய்த மல்லிகை மொட்டு என்றாவேன்... ஜீவனே வா.... என் உயிரை முழுதாய் எனக்கு திருப்பி தா...!

    • 42 replies
    • 6.1k views
  7. அஞ்சலி அஞ்சலி கண்ணீர் அஞ்சலி மண் மீட்க புறப்பட்ட மாவீரருக்கு அஞ்சலி மாவீரராகிவிட்ட வன்னி மக்களுக்கு அஞ்சலி அஞ்சலி செலுத்தி கடன் முடிக்க அருகதை சிறிதும் எனக்கோ இல்லை தளபதிகளுக்கு என் தாள் பணிந்து அஞ்சலி இனம் தெரியாத உறவுக்கும் இளையோருக்கும் அஞ்சலி கருவறையில் உலகம்கானாத கண்மணிக்கு அஞ்சலி கருவாகி உருவாகி மண் மீது தவளாத பாலகருக்கு அஞ்சலி வீரப்பெண் போராளிகளுக்கு அஞ்சலி உணவின்றி குடிக்க நீரின்றி உடுத்திய உடைகளுடன் துஞ்சிய உயிர்களுக்கு அஞ்சலி வெறி கொண்ட படையின் தடையற்ற வல் வளைப்பில் அழுகுரலோடு கற்பழிந்த பெண்களுக்கு அஞ்சலி சித்திரவதையில் சிதைந்த இளையோருக்கு அஞ்சலி "பேரர்களுடன் சாகிறேன் "என்ற பாட்டி மார்களுக்கு அஞ்சலி இரவென்றும் …

    • 6 replies
    • 6k views
  8. Started by Hariny,

    ¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð? þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ? ¯í¸û ¸Õò¨¾ þí§¸ À¡÷ô§À¡õ. PS: þí§¸ ¿¡ý "´Õ À¡¼ø À¢ÃÀøÂõ ¬ÅÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¸Å¢ø¨Ä. «¾É¡ø "¿øÄ þ¨ºÔõ ¸Õò¾¡É źÉí¸Ùõ Ó츢Âõ" ±ýÀ¨¾ §º÷ì¸Å¢ø¨Ä.

    • 39 replies
    • 5.9k views
  9. Started by சுமங்களா,

    சிவரமணியின் கவிதைகள் சிலவற்றை எனது பாடசாலை நாட்களில் படித்திருக்கிறேன். நல்ல கவிதைகள்.இவர் எண்பதுகளில் புளொட் அல்லது ஈ.பி்.ஆர்.எல்.எவ். அமைப்பில் இணைந்து இயங்கியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்..சரி யாகத் தெரியாது இவரைப்பற்றிய விபரங்கள் தெரிந்த யாராவது யாழ் களத்தில்இருந்தால் தெரியப்படுத்தவும்..அறிய ஆவலாயிருக்கிறேன்..அவரிற்கு என்ன மனவிரக்தியோ தெரியாது 90ம் ஆண்டளவில் தன்னுடைய கவிதைகளையெல்லாம் கொழுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாராம்.இங்கு அவரின் கவிதை ஒன்றை இணைக்கிறேன் அவர் 83ம்ஆண்டு எழுதிய கவிதையொன்று இன்றை காலத்துடனும் ஒத்துப்போகின்றது எழுதிய ஆண்டு: 1983 எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன் புத்திசாலித்தனமான கடைசி மனி…

  10. Started by அஞ்சரன்,

    ஆணா பிறந்தால் ஒரு வயதுக்கு பிறகு ஆரம்பிக்கும் அதீத ஆசை மீசை எப்பொழுதும் கண்ணாடியில் முகம் பார்க்க உள்மன கேள்வியில் எழும் ஒரு ஆதங்கம் எப்ப வளரும் எப்படி வளரும் நாம வளர்க்க வேணுமா அதுவா வளருமா தாடையை வழித்தா வருமா அல்லது வந்தபின் வழிக்க வேணுமா யாரிடம் கேட்கலாம் எப்படி கேட்கலாம் அப்பா சேவ்செய்யும் பிளேட்டை ஆட்டை போட்டு அடிவளவில் போய்நிண்டு கண்ணாடி இல்லாமல் கண்டபடி இழுத்து வெட்டுக்காயம் இப்பொழுதும் போகவில்லை அடையாளம் மீசையை முறிக்கிட்டு போறவனை பார்த்து பொறாமை பெரிய இவரு எண்டு நினைப்பு எங்களுக்கும் வளரும் எல்லோ உள்மன களிப்பு வளர்த்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை மீசை மேல் இருத்த ஆசையெல்லாம் குறைந்து தடுக்கும் யோசனை தான…

  11. Started by nunavilan,

    எழுச்சி பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம்! போராட நாள் குறித்தோம்! எறிகுண்டு பாய்ந்தாலும் இருகைகொண்டேற்போம்! எதற்கும் நாம் துணிந்துவிட்டோம்! நெறிகெட்ட பகைவரின் முறைகெட்ட வாழ்வால் நெருப்பாக மாறிவிட்டோம்! வெறிகொண்டு தாவினோம்! வீரத்தின் மடியில் விளையாடத் தொடங்கிவிட்டோம்! திசையெட்டும் அதிரயாம் பறைகொட்டி நின்றோம்! தெய்வத்தை வணங்கி வந்தோம்! தசையெலாம் முறுக்கேறி நின்றோம்! எழுந்தோம்! தாயின் மேல் ஆணையிட்டோம்! வசைகெட்டு வாழாத வரலாறு கொண்டோம்! வல்லமை நூறு கொண்டோம்! இசை பெற்ற மிளிர்கின்ற எதிர்காலம் ஒன்றை இப்போதே செய்து வைப்போம்! கடல் பொங்கினாற்போல் உடல்பொங்கி வந்தோம் களத்திலே ஆட வந்தோம்! படைகொண்டு மானத்தின் நடைகொண்டு வந்தோம் பழி தீர்க்…

    • 4 replies
    • 5.9k views
  12. நண்பர்களுக்கு ஓரிரு வார்த்தைகள். எல்லாருக்கும் மணிவாசகனின் வணக்கங்கள். இந்தக் கவிதையும் கொஞ்சம் நீளமாத் தான் போச்சுது. அதுக்காக கோவிச்சுக் கொண்டு இடையிலை நிப்பாட்டிப் போடாமை முழுக்க வாசியுங்கோ சும்மா ஆக்களைக் கவரத் தான் இப்படித் தலைப்பு ஒண்டு போட்டனான். அதுக்காக ஆம்பிளைப் பிள்ளையள் வாசிக்காமை விட்டிடாதேங்கோ. ஆம்பிளைப் பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள் எல்லாம் என்ரை கவிதையை முழுசா வாசிச்சுப் போட்டு என்ரை கவிதை மாதிரி நீளமா உங்கடை விமாசனத்தை எழுதுங்கோ. நல்ல பிளைளைகள் தானே. இப்ப கவிதையைத் தொடங்கட்டே? சீர்தூக்கிப் பாருங்கள் சீரழிவாய்ப் போய்விட்ட சீதனம் செய்துவிட்ட சிறுமையினைப் பாரென்று சினந்திருக்கும் பெண்களுக்கு சந்தோச வாழ்க்கைக்கு சாபமாய்ப்…

    • 29 replies
    • 5.9k views
  13. எல்லாருக்கும் வணக்கம், நட்பு என்று சகீரா அவர்கள் ஒரு கவிதையை எழுதி யாழில் இணைத்து அதுபல நீண்ட விவாதங்களை கண்டது. எமது தரப்பு நியாயத்தை வலுப்படுத்த நானும் ஒரு கவிதையை எழுதி இங்கு இறக்குகின்றேன். தமிழ்கூறும் நல்லுலகம் எனது கவிதையை - கருத்தை வரவேற்கும் என்று நினைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் ஏதாவது இருந்தால் திருத்தி படிக்கவும். நன்றி! உன்னையெனக்கு பிடிச்சிருக்கு! உடலாலும் மட்டுமல்ல உயிராலும் இணைவதற்கு கரங்கோப்பாய் என்தோழி! பூவே நான் உனக்கு பூச்சூடி மகிழ்வதற்கு தகுதியென்ன கேட்கின்றாய்? தயங்காது சொல்லு! சினேகிதனாய் இருப்பவன் காதலனாய் வருவதில் தடையென்ன கண்டாய்? தயவுசெய்து சொல்லு! அன்புடன் பழகியெந்தன் உள்ளத்தை கொள்ளையிட்ட நண்ப…

  14. நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

  15. Started by nedukkalapoovan,

    வகை வகையாய் வடிவடிவான கோபியரொடு கொண்டாடினும் கொள்கையோடு இருந்தான் இந்த நவீன கண்ணன். அந்த வேளையில்... இணையத்தில் வந்தாள் கண்ணா என்றாள் கண்ணடித்தாள் கருத்தைக் கவர்ந்தாள் காகித ரோஜாவால் காதல் செப்பினாள். காளை இவன் களிப்படைந்தேன் கதைகள் பல பேசி களைப்பும் அடைந்தேன். கடைசியில்.. போன் சிம்மை கழற்றி வீசினாள் கண்ணனோடு மீராவின் காதல் முடிந்தது என்றாள்..!! அந்த மீராவுக்கோ ஒரு தம்புரா துணை இந்தக் கண்ணனுக்கோ தனிமை துணை..!!!

  16. உயிர் நீட்சி குடித்த விஷம் அழைத்து வந்த மரணம் அறைக்குள் நட்பு சம்பாஷணையொலிக்க பேச்சு முடியட்டும் போவோம் என்று பொறுத்திருந்தது மிச்சமிருந்ததை இன்னொரு முறை பருகி துரிதப்படுத்தினேன் விளைவுகளை அது என்னவென்றறியாத நண்பன் எனக்கும் என்று கை நீட்டவில்லை கேட்டிருந்தாலும் உன் பங்கும் சேர்ந்துதான் தீர்ந்தது என்றிருப்பேன் நொறுக்குத் தீனியிருந்தால் நேரம் போகுமென்றெண்ணி மரணம் உலவுகிறது குறுக்கு நெடுக்காக தற்காலிகமாய் விடைபெற்று நண்பன் அகன்றான் உத்வேகமாய் வந்த மரணம் தன் தொழில் பெட்டியை திறக்கும்முன்பு தட்டப்பட்டது தாழிட்ட கதவு "இங்கே என் நண்பன் இருக்கிறானா?" நிலை மறந்து வாய் தவறி மரணமே பதிலிறுத்தது "இருக்கிறான் இருக்கிறான்" உள்ளேயிருந்து கேட்ட குரல் உன்னுடை…

  17. அன்னையர் தினம்..! அகிலத்தின் அன்னையர்களுக்கு…, இது ஒரு தினம் ! என் தேசத்து அன்னையருக்கு.., இது ஒரு செய்தி! எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம், நினைத்துப் பார்க்கையில்…! இதயத்தின் ஆழத்தில் …, எங்கோ ஒரு மூலையில், இலேசாக வலிக்கின்றது! அப்பா என்னும் ஆண் சிங்கம், பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்.., அடங்கிப் போன அம்மா! பிரசவங்களின் போதெல்லாம்,, மரணத்தைத் தரிசித்து…, மீண்டு வருகின்ற அம்மா! ஆண் என்றாலும். பெண் என்றாலும், ஆண்டவன் தானே தருகின்றான் என்று, ஆறுதல் கொள்ளும் அம்மா! அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை, ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்ல…

    • 12 replies
    • 5.8k views
  18. பார்வைகள் பார்க்கின்றேன் தொலைதூர இருள் வானில் . சிலசமயம் , சுவர்களையும் சுவாரசியமாய் ஊடுருவிக் காண்கின்றேன். என் கையின் ரேகைகள் ஏனோ இன்னும் புரியவில்லை ........... ஆண்கள் பெண்களை காவல் புரிவதால் , பெண்மை தாழ்ந்தது இல்லை . வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை , என்றும் காப்பாற்றுகிறது. தங்கம் தாழ்ந்ததென கருதுகிறதா உலகம் ???????? புரியவில்லை இன்னும் ஏனோ புரியவில்லை.......... ****** எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .

    • 55 replies
    • 5.8k views
  19. முதற் காதல் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் பஸ் வரும் வீதியில் தடைக…

    • 28 replies
    • 5.8k views
  20. எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. ஆராவது உதவி செய்வியளோ? அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............ எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே?

  21. முகப்புத்தகத்தில் கிறுக்கும் வரிகளை இங்கும் பதிவிடலாம் என்று... ------------------------------------------------------------------------------------------------------------------------ நாசித்துவாரங்களை நனைத்த மரணத்தின்வாசனை இன்னும் நீங்கவில்லை... காவுகொடுத்த குட்டித்தீவு காய்ந்து கிடக்கிறது குருதிச்சுவடுகள் அழிக்கப்பட்டு... வெறிகொண்ட காற்றை சாடுவதற்கு நட்பின் வாசத்தை தம் வேரிலும் துயரத்தின் கதையை தம் ஆன்மாவிலும் சுமந்து நிற்கின்றன சிறுமரங்கள்.. நண்பர்கள் கேள்விகள் அற்று பெருந்தெருவில் சுடப்பட்ட வண்ணாத்துப்பூச்சிகள்... 31/10/2013

  22. Started by nedukkalapoovan,

    பெண்ணே நீ.. மலரல்ல வாட... மானல்ல இரையாக... கண்ணல்ல கரைய.. நிலவல்ல எட்ட வைக்க... தேனல்ல எறும்பு மொய்க்க.. வண்டல்ல ஏமாற..! பெண்ணே நீ மதுவல்ல மயங்க... தண்ணியல்ல அடிக்க.. மஞ்சமல்ல தூங்க.. தங்கமல்ல கிண்ட... புதையலல்ல தோண்ட... மாவல்ல பிசைய... "குவிட்" அல்ல போர்த்திக்க.. பொன்னல்ல பதுக்கி வைக்க தேசமல்ல கட்டிக் காக்க...! பெண்ணே நீ புயலல்ல வீச.. எரிமலையல்ல வெடிக்க.. பறவையல்ல பறக்க.. கூண்டுக் கிளியல்ல விடுவிக்க.. ஈழமல்ல சுதந்திரம் வாங்க..! பெண்ணே நீ சரக்கல்ல திருட... சக்கரையல்ல ருசிக்க.. பிகரல்ல மாட்ட... பாடமல்ல படிக்க.. முத்தல்ல மூழ்கித் தேட சிப்பியல்ல திறக்க..! …

  23. நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு, துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு, தயக்கத்தில் கைகொடுக்க நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... புகழ் எதிர்பார்க்காதது நட்பு, சுயநலம் தெரியாதது நட்பு, தலைக்கனம் இல்லாதது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... குழந்தையில் விளையாடிட நட்பு, இளமையில் குறும்புகள் செய்திட நட்பு, முதுமையில் கலந்துரையாடிட நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உனக்கு உறவாக வாழ்வது நட்பு, உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு, உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உன்னை மனிதனாக்குவதும் நட்…

    • 14 replies
    • 5.7k views
  24. எல்லாமே மூன்று எழுத்து எல்லா இடத்திலும் பின்பற்று … எல்லோர் இடத்திலும் செலுத்து … நீயும் ஞானியாவாய் …. அன்பு ….!!! ####### உறவுகளிடம் சிக்கி தவிக்கும்…. உதறிவிட்டால் வாழ்க்கை வெறுக்கும்… இதுவும் ஒரு அழியாத கல்லறைதான் … பாசம் …..!!! ####### உள்ளவன் இல்லாதவனுக்கும் …. இருப்பவன் அனைவருக்கும் …. வற்றாத ஊற்றாய் கொடுக்கணும் … கருணை ….!!! ######## இல்லாதவன் இருப்பதுபோல் … இருப்பவன் பிரபல்யத்துக்காகவும் மாறி மாறி போடுவது …. வேசம் …..!!! ######### சந்தித்தால் வேதனையை தரும் சந்திக்காமல் சாதித்தவர்கள் இல்லை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.