Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆழிப்பேரலையே – எங்கள் ஆன்மாக்களை புரட்டிப்போட்ட சுனாமியே ஆசியாவையே அழித்தொழித்து அகிலத்தையே அதிரவைத்த ஊளித்தாண்டவமே ஆண்டுகள் ஆயிரமானாலும் ஆறுதல் கோடிகள் சொன்னாலும் அடங்குமோ எங்கள் மனத்துயர்? அணையுமோ எங்கள் துயர் நெருப்பு? நினைவுகளை அழிக்கமுடியாமல் நித்தமும் கலங்கி நிற்கிறோமே…. மரங்களை அடுக்குவது போல் பிணங்களை அடுக்கிவைத்த காட்சிகள் மனக்கண்களில் விரிகிறதே – உடல் அணுக்கள் அனைத்தையும் உலுப்புகிறதே இறுதிக்கடன் செய்வதற்குகூட இனசனத்தை விட்டுவைக்காமல் குடும்பத்தோடும் குடியிருப்புக்களோடும் கூடிவாழ்ந்த ஊரோடும் உற்றார் உறவினரோடும் கொத்தொடும் குலையோடும் மொத்தமாகக்கொன்றொழித்த உன் கொடுமைதனை கோரத்தாண்டவத்தை எண்ணுகையில் உள்ளம் வெடித்த…

  2. குருதி வடிக்கும் கண்களின் வருத்தம் புரியா உலகமிது; நின்று யோசித்து நிமிர்கையில் – காலம் அதோ எங்கோ போகிறதே….!! சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா? சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம் பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ? சொல்லி அடித்த பரம்பரைதான் புது ரத்தம் தேடி – அலைகிறதோ; உயிர் செத்து மடிந்த சேதி கேட்டும் சுடும் கோபம் விடுத்து மரமானதுவோ?!! ஐயோ; மரம் கூட ஆயுதமானது இந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார், கோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும் எல்லாம் சகித்தாரே????????!!!!!!!!!!!!!!! இறையே!!!!!! இதில் ஏனோ நீயும் குருடானாய் நீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால…

    • 0 replies
    • 838 views
  3. படித்ததில் மனதை நெருடியது... ஆழியாள் அவுஸ்ரேலியா என்ர ஊர் சின்ன ஊர் பெரியம்மா, பெரியப்பாக்களாலும் – மாமா அத்தை சித்தி சித்தப்பாக்களாலும், கிளி மாமி, விஜி மாமி வடிவு அன்ரிஇ வனிதா அன்ரி சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.அம்மம்மா, அம்மப்பாவும் அப்பப்பா, அப்பம்மாவும் தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள். ஒரு நாள் மீன் விக்கப்போன செல்லம்மா பாட்டியை மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள். பெரிய மாமாவும், ராஜி அத்தையும் வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர். பிறகு ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார். வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்கு போனா. சேகர் சித்தப்பா காணாமல் போனார். …

  4. கிழிக்கப்பட்ட தாள்களில் வரையப்பட்ட ஓவியமாய் உடைந்த சிதைவுகளில் செதுக்கப்பட்ட சிற்பமாய் அதிகாலை கனவில் அவளின் அருகாமை வீணாய் போனது விடியலின் பொழுது விரிக்காத படுக்கை மடிக்காத உடைகள் வேண்டாத உணவு தீண்டாத தேநீர் காலையை தின்று மதியம் கொன்றது மங்கையின் நினைவு மரண வலியாய் தனிமை பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிலும் தடுக்கி விழுந்து மீண்டும் தொடர்ந்து கற்பனைகளில் சுழன்ற சுந்தர வதனம் கூரிய வாள்முனை குரல்வளை அறுப்பதாய் வேதனை தந்தது அந்தி சாய்ந்து ஆதவன் அணைகையில் மெல்லத் தவழ்ந்து கள்ளம் கலந்து கொல்லத் துடித்த கொள்ளை அழகில் உருகி…

  5. 1 பேச வாயற்று போன இடத்திலிருந்தே வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன; விழுகின்ற வார்த்தையினால் கொதிக்கும் ரத்தத்தில் தான் - மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!! ----------------------------------------------------------------- 2 நாம் அணியும் ஒவ்வொரு சட்டைக்குள்ளும் நம்மை காக்கும் - மானமும் இருக்குமெனில் அதற்குள் - விடுதலையும் இருக்கும்!! ----------------------------------------------------------------- 3 வெள்ளைக் கொடியில் விடுதலை எல்லாம் - இனி வெற்று வாய்க்கு மெல்ல வெற்றிலை போல்; உடல் கீறி ஒழுகும் ரத்தம் நனைத்தேனும் சிவக்கட்டும் - இனி வெள்ளைக்கொடி!! ----------------------------------------------------------------…

  6. Started by akootha,

    தேசிய கீதம் ஆனைவாய்க் கரும்போ? அனலிடைப்பட்ட புழுவோ? சட்டியிலிருந்து சற்றே சறுக்கி; அடுப்பினில் விழுந்த மனிதர் நாம் தாவார மில்லான், தனக்கொரு வீடில்லான், தேவாரம் மோதுதல் ஏதுக்கடி? தேசிய மேயில்லார்க்கு தேசிய கீதமொரு பொல்லாப் போடி? பொறுமையிழந்தவர் தம்மைப் போற்றி இசைப்பர் இன்னும் கோடி, இறைவனுண்டென்றால் சேருமொரு புது வாழ்வு தேடி. -அறியாதவன் http://www.valampurii.com/online/viewnews.php?ID=13381

  7. அண்ணனின் அருகமரும் அதிகாரம் உடையவரே சிங்களத்தை சிதறடித்த சூறாவளியே சுற்றும் பூமிக்கும் சுழலும் காற்றுக்கும் பேசக்கற்றுக்கெடுத்த ஆசானே பார் முழுதும் புலிக்கொடி பறக்க தேசமெங்கும் தமிழர் குரல் ஒலிக்க தண்ணீரில் வந்து தாயகம் தொட்ட தனையனே என் களதில் சிங்களம் எம் குரல்வளை நசுக்கி சூதுரைத்து நிண்றபோது உன்மைய்காய் ஒலித்தகுரலே பாலா அண்ணா திரைகடலோடியும் தமிழீழம் காண்போம் எண்றுரைத்த தமிழே கொடிய நோய் வந்து தேகத்தை வாட்டினாலும் வேகத்தைக்குறைக்காமல் கொடிது கொடிது மண்டியிடும் தமிழன் வாழ்வெண்ற வரிப்புலியே வெள்ளைத்தலைகளுக்குள் சரியாசனம் பெற்ற தளபதியே பாலா அண்ணா வஞ்சகரெல்லாம் வாழ்வாங்கு வாழ ஆழப்பிறந்த அண்ணன் தளபதியே கொடிய புற்றுநோயுங்களை காவு கொள்வதா …

  8. ஸ்ரீலங்கா தேசிய கீதம் தமிழில் பாடுவது தடை செய்யப்பட்டு விட்டது. இனி அங்கு வாழும் சிங்களம் தெரியாத தமிழர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பாடுவதற்கு ஒரு தேசிய கீதம் வேண்டாமா? அவர்களுக்காக எனது சிறிய முயற்சி: --------------------------------------------- ஸ்ரீலங்கா பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே தமிழரின் தலை கொண்டு புதைகுழிகள் யாவும் நிறைப்பாய் வெறி லங்கா ஞாலம் இகழ இனவெறி மதவெறி கொலை வெறி தமிழ் இரத்தம் கொள் லங்கா தமிழரின் கொலைக்களம் என ஒளிர்வாய் நமதருமை பேயே எக்கடன் பட்டும் கொலை தொடர்வோமே நமோ நமோ நமோ பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே http://gkanthan.wordpress.com/index/anthem/

  9. அடயாளத்தேடலுக்காக நிதானத்தை சாகடிக்கும் வித்தை தெரிந்தவர்கள் வித்துவான்கள் முடுக்கிக் கொண்டுவரும் மூத்திரம்போல் எதோ ஒரு திசையை சுட்டிக்காட்டுகின்றார்கள் சுட்டிக்காட்டுதலே இங்கு அனைத்திலும் பிரதானம் காட்டும் திசையில் பயணிக்கப் பாதைகள் இல்லையென்பதை சுட்டிக்காட்டினால் அது துரோகம். சிறுபோகமோ பொரும்போகமோ எதுவும் இங்கு சாத்தியமில்லை தற்போதைக்கு சாவை மட்டுமே யதார்த்தம் உணர்த்துகின்றது இருந்தும் பாடைகட்ட கொஞ்சப்பேர் பாடைக்கு குஞ்சம் கட்ட கொஞ்சப்பேர் தெளிவுதண்ணி கொடுப்பது குறித்துப்பேசினால் அது துரோகம் கேள்விக்குறிகளில் ஊஞ்சல்கட்டி ஆடிக்கொண்டிருப்பதில் எப்போதும் பெருமை செய்திகளும் புத்தகங்களும் தரும் அரசியலை விட போர் தந…

  10. உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு அக்கிரமம் இறுதியில் பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம் அதற்கு நீயும் விலக்கில்லாமல் ஆழ்கடல் நுனிமட்டும் அலைகிறதுன் ஆத்ம ஓலம்…… கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும் கதைசொல்லும் பொன்முகமும் பூவினும் இனியதாய் பொலிந்த உன் பெண்மையும் நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்…… நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை அலங்கோலமாய் அணுவணுவாய் படம்பிடித்து மகிழும் காட்சியாய் நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம் நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது…… தீயெரித்த கண்ணகியின் கோபத்தை கதைகளில் தான் படித்தோம். ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை சமகாலத்தில்…

    • 0 replies
    • 2.2k views
  11. எப்படி நீ ஊமையாய் உட்கார முடியும்? இன்னும் நீ எழவில்லை. சக்தியின் வடிவமாய் உலா வரவில்லை. கன்னங்கள் சிவக்கவும், காதலின் வசீகரங்களில் கூர்ப்பழிந்து கிடக்கவும், நீண்ட மயக்கத்திலும், உனக்கு மட்டுமான சுயத்தின் பிடிப்பிலும் கட்டுண்டே கிடக்கிறாய். நேற்றொருத்தியின் முகம் தென்றலாய் வந்து தேவிட்டாத மொழியில் பேசியபோது காதினிக்கக் கேட்டாய், கண் விரித்து இரசித்தாய். இன்றவளே பேரினவாத இராணுவத்திற்கிரையானாள். இன்றும் பார்த்தாய் பலப்பலவாய் கோணங்களில் அவளின் பெண்ணுடலை மறைப்புக்கள் அற்று மனிதத்தின் பெயரால் உலகமே உற்றுப்பார்த்து உச்சுக் கொட்டுகிறது. யார் அவள்? உன் தாய் உன் சேய் உன் தோழி உன் மண்ணின் மானம் காத்தவள். …

  12. மானத்தி அவள்; தமிழச்சி!! செய்தித் தொகுப்பாளர் இசை ப்ரியா! 1 மண்ணின் விடுதலைக்குப் போராடிய தமிழச்சியின் நிர்வாணம் இணையமெங்கும் ஒளிபரப்பு; உயிரிருந்தும் உலவும் நாம் - அதை கண்டும் - சாகாத; இழி பிறப்பு!! ————————————————————– 2 மானத்தில் - தொட்டால் சுடும் நெருப்பு, இழிவாய் - பார்த்தாலே பாயும் மின்சாரம், அவள் - தாயிற்கும் ஒரு படி மேல் என்று இனி புரியும் – சிங்களனுக்கு!! ————————————————————– 3 அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால் ஒன்று பார்த்தவரையெல்லாம் எரித்திருப்பாள், அல்லது – தன்னையாவது எரித்துக் கொண்டிருப்பாள்!! ————————————————————– 4 தப்பித் தவறி அவள் பிள்ளை இதை பார்த்திருந்தால்- எத்த…

  13. நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் யாரின் முகமூடி கிழிக்கவோ திறந்த முகத்தில் குத்தி கூர்பார்கவோ அல்ல எமக்கான விளையாட்டு காற்றில் கத்தி வீசுவது என் தூரம் அறிந்தே வீசுகிறேன் எல்லைக்கு உட்பட்டு மழுங்கிய கத்தி கொண்டே வீசுகிறேன் காற்றை கிழிக்கும் ஓசை எனக்கானது காற்றின் அறைகூவல் வீசட்டும் மணலில் கத்தி சொருகி நிலை கொண்டிருப்பேன் அது ஓயும்வரை ஒளி, ஒலி பிழை இருக்கலாம் காற்றை கிழிப்பதில் இருக்கிறது விளையாட்டின் வெற்றி எனக்கும் பிரிகையில் காற்றுக்கும் இதுவரை தோற்றாலும் இது ஒரு விளையாட்டு அவ்வளவே! http://pakkam5.blogspot.com/2006/05/blog-post…

  14. அர்த்தமற்ற விடியலிற்காய்..... மித்திரன் ----------------------------------------- தூரத்து விடியலுக்கய் இன்னமும் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் பாதையற்று... குந்தியிருக்க குடிநிலமின்றி கூப்பாடுபோடும் மந்தைக்கூட்டமாய் தொலைந்துபோனதாக நாம் நினைத்த நிம்மதியும் நிலவொளியும்..... கட்டிய கோவணமும் உருவ உனக்கு நாள் குறித்த பின்னர் எதற்கு அலங்காரமும் அபிசேகமும்... விதைநிலங்கள் எங்கும் விஷங்களின் விதைகள் இனி உனக்கெதற்கு விளைநிலங்கள்? உறவிழந்தபோதும் உன் விண்ணப்பங்கள் விடையறியாமலே விழுதொடிந்து போகிறது..... எனினும் உன்னுள் உறங்கிக் கிடக்கிறது விடுதலையின் வினாத்துளி..... தினம்தினமாய் நீ …

    • 3 replies
    • 892 views
  15. போராடிப் பெருவீரர் சாய பிழை பிடித்த இனம் தமிழினம் பலநூறாய் பொதுமக்கள் சாக பண்டிகை எடுத்த இனம் தமிழினம் எதிரியின் எச்சில் இலைக்காக ஏவல் செய்யும் இனம் தமிழினம் சிறீலங்கா கிரிக்கெட்டில் ஜெயிக்க சிரித்து மகிழ்ந்த இனம் தமிழினம் தமிழீழம் தவித்து ஏங்க தமிழகத்தில் தூங்கிய இனம் தமிழினம் மண்ணில் தோன்றிய இனங்களிலே மானங் கெட்ட இனம் தமிழினம் http://gkanthan.wordpress.com/

  16. என் இனமே! சாகாவரத்தோடு உயிர்போகும் ரணவலியையும் இலவசமாய்ப் பெற்ற இனம் எம் தமிழினம்! அதனால்தானோ என்னவோ, இன்னும் குற்றுயிராய்த் துடிக்கின்றது! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழினம் என்பார்கள்! இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை -இன்னும் தலைகுனிந்தே நிற்கிறது அகதியாய்...வாடகை நிலத்தில் ! கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கைவன்னியன், கரிகாலனுக்கு ஒரு கருணா என தலைமுறையாய் தவறாது தொடரும் தமிழினத்தின் சாபக்கேடுகள்!!! காசுக்குக் காட்டிக்கொடுக்க ஒரு கூட்டம்! காரியத்துடன் காய்நகர்த்த இன்னொரு கூட்டம்!! கேவலமாய் இருக்கின்றது "தமிழன்" என்று சொல்ல!!! வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்ற…

  17. மனதில் ஓர் காதல் பரிசு..... கவிதை - இளங்கவி சேர்ந்த உதடுகளுக்கிடையில் சீனப் பெருஞ் சுவராய் அவளின் தலைமுடிகள அவன் உதட்டை உறுத்தின........ அவள் மூச்சின் வெப்பம் மூச்சால் வெளிவர மறுத்து அவள் கண்களூடே வெளிவர அவன் கண்களோ- அவளின அனல் மூச்சின் வெப்பம் தாளாமல் அதைத் தணிப்பதற்கு வேறு இடம் தாவியது....... அங்கே குளிரும் அறையில் கொதி மலைகளின் தழுவல்..... இரத்த நாடிகளின் வேகம் அதன் உச்சத்தில் இருக்க... இரத்த நாளங்களோ அதற்குப் பக்கத் துணையிருக்க.... போதாது என்று- அவன் ஏக்கம் கூடவும்..... போதும் வரை போராடு என்று அவளின் உணர்வும் சேரவும்.... அந்த அறையில் சில நிமிடப் புயல்கள்.... சில கணங்கள் அமைதி.... பல நிமிட அணுயுத்தம் …

  18. Started by nunavilan,

    அரோகரா! அரோகரா! அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு…

  19. இல்லாதவர்களின் கனவு மீள் எழுத்து : தீபச் செல்வன் அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாட…

  20. களத்திற்கு வரும் பொது கவிதையுடன் வருவதென முடிவெடுத்து மாவீரர் கனவுகளை நினைவாக்க கருத்தியலால் கவிதை வடிக்க நடுங்கியது இரு கரமும் சொல்லுண்டா மாவீரர் தியாகத்தை கவிதையாக்க நிகருண்டா அவர்கள் தியாகத்திற்கு வெதும்பியது மனம் கல்லாக்கி மனத்தைக் கருங்கல்லாக்கி வித்தாகிப்போன மாவீரர் கவிதை எழுத சொல்லுண்டா என் மனம் துடித்தது மல்லுக்குக் கவிதைஎழுதி மாவீரர் வில்லுக்கு வினை சேர்ப்பதா நான் எல்லைக்கும் செல்லாதவன் எல்லை கடந்தவரை எழுதிப் பழி சேர்ப்பதா சூரியதேவன் குழந்தைகளின் கூரிய இலக்கினை ஆரியன் அடக்கினான் எனப் பேருக்குப் பொய் எழுதுவதா பாரினிலே ஈழம் பிறந்திட மாரினிலே தழும்புடன் பகைவன் பாசறை புக…

  21. எங்கள் அன்னை மண்ணை மீட்க ஆயுதம் ஏந்தி மரணித்த நீங்கள், கல்லறை தெய்வங்களாய் எம் தேசமெங்கும் காவல் காத்தீர்கள். மரணித்த உங்களைக்கூட மன்னிக்க தெரியாத மானங்கெட்ட சிங்கள காடையர்கள் எங்கள் காவல் தெய்வங்களின் கல்லறைகளை அழித்து உங்களையும் வென்றுவிட்டதாக எண்ணி மார்தட்டிக்கொள்கின்றார்கள். மானங்கெட்ட சிங்களவன், யார் இந்த சிங்களவன்? கல்லறைகளைக்கூட மன்னிக்க தெரியாத இவர்கள் புத்தர் வழி வந்த புண்ணியர்களா? யார் அந்த புத்தன்? இவனும் ஒரு அரக்கர்கூட்ட தலைவனா? அல்லது நல்வழி காட்டிய நல்லவனா? விடை தெரியாமல் பாவப்பட்ட தமிழர் நாம் இன்று இவர்கள் பிடியில். இவர்களுக்கு உங்கள் கல்லறைகளை மட்டும் தான் அழிக்க முடியும். எங்கள் இதய அறைகளில் இருந்து உங்கள் நினைவுகளை ஒரு துரும்ப…

  22. இயல்பினை கடந்த திடத்துடன் இயற்கையை வென்றவர்கள் எப்பொழுதும் இறப்பதில்லை! அறத்தினை மீறிய உலகிற்கு மறமென்றால் இதுவெனக் காட்டியோர் தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள் புலத்தினில் புதிதாய் கதைகள் உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும் எம் பரம்பரை உம்மைத் தொடரும் உம் இலட்சியம் அடையும் வரை! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்!

    • 3 replies
    • 1.2k views
  23. பாராட, பார்த்தாட, பாதைபல வார்த்தாட வகுத்த பிரபாகரம் வாழீ போர்த்து மழைத்துளி பொழியும் பொன்முகிலைச் சுமக்கும் ஆகாய வெளியே! நீ வாழீ ஆர்த்து அலை எறிந்து அன்பு நுரை சுரக்கும் ஆனந்தக் கடலே! நீ வாழீ பார்த்து வர்ணப் புன்னகைக்கும் வனப்புகளில் கோலமிட பூத்தெழுந்த பூமகளே! வாழீ - இங்கு வார்த்து ஒரு வாழ்த்துரைக்க வல்லமை கோர்த்துவந்த திகட்டாத செந்தமிழே! வாழீ காலமகள் புதல்வனை தூளியிலே தந்த கார்காலத் திங்களே! வாழீ - அக் கதிரவனின் கால் தடங்கள் வலயவரப்பெற்ற வல்லமைத் திருமண்ணே! வாழீ சூரியப் புதல்வனைத் தழுவிச் சுழல்கின்ற கனிவான காற்றே! நீ வாழீ - அடர் காட்டிடை அணைத்துக் களைப்பாற்றி அனுப்பிய அழகான தருகளே! வாழீ மானமகன் தலைசாய்ந்த…

  24. மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்….. உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு உயிர் கொடுக்கப் போனவர்கள் தவிர்க்க முடியா நில…

    • 3 replies
    • 929 views
  25. கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கடலளவு கருணை இல்லாவிடினும்‍‍‍ _சிறு கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில் வீர வரலாறு எழுதினாயேடா தோழா வீர வரலாறு எழுதினாயே... தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய் தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா தினம் தினம் சிலுவை சுமந்தாயே... உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும் ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா இன்னுயிரை ஈய்ந்தாயே... கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில் குண்டு சுமந்தாயேடா தோழா குண்டு சுமந்தாயே... இரக்கப்பட்டு விடும் கண்ணீரையே …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.