கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கண்ணீரால் முடியும் என் கவிதைகள்... --------------------- காதல் வெளியில் தூக்கம் தொலைத்த இலையுதிர்கால இரவொன்று ஒளிர்கின்றது... இதயத்தில் இருக்கும் பிரிவுத்துயர் தணல்கின்ற எரிமலைகள் எரித்துவிடுகின்றன ஒளிர்கின்ற இரவை.. அறையெங்கும் நிரம்பிக்கிடக்கும் விளக்கொளியின் நடுவே கண்களுக்கு தெரியாமல் குறுக்கும் மறுக்குமாய் அலைகின்றன நினைவுகள்... பாறையெனக் கிடந்த உன் பொழுதுகளின் மீது பக்குவமாய் நான் வரைந்த காதல் ஓவியத்தை நீ கிழித்தெறிந்த போது சிதறியவைகளாக இருக்கலாம்.. புன்னகை எழுதிய முகத்தை கண்ணீர் மூடிமுடிக்கும் முன் நினைவுச்சிதறல்கள் சுழன்றெழும் வீச்சில் சிறைப்பிடிக்க வேண்டும் கவிதைகளில்... பாதைகள் எங்கும் காதலுடன் பரவிக்கிடந்த பூக்களை வாரி அணைக்க சேர்த்துவைத்த அன்ப…
-
- 18 replies
- 14.6k views
-
-
விரிந்து கிடக்கும் பூக்களில் தேன் குடிக்கும் வண்டினைப்போல்... திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!! அதிசயம் ஆனால் உண்மை...! பக்கத்து வீட்டில்தான் பால்நிலா வசிக்கிறது!!! நிலவுக்கும் எனக்குமான சில அடி தூரங்களும் பலகோடி ஒளியாண்டு இடைவெளியாய்த் தெரிகிறதே!!! இத்தனை நாளாய்ப் பார்க்காமல் எத்தனை அமாவாசைகளை கடந்திருப்பேன்!!! ஏய் நிலவே...!!! பறந்து போகும் என் எண்ணங்களுக்கு சிறகுகளை இலவசமாய்... நீதான் கொடுத்தாயோ??? மொத்தமாய் மறந்துபோகிறேன் என்னை நானே..!!! வீசுகின்ற பருவக் காற்றை நீதான் அனுப்பி வைத்தாயோ??? மெதுவாய் என் பக்கம் வந்து உன் பருவத்தின் வாசனையை பக்குவமாய்ச் சொல்லுதடி!!! அங்கே நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கையிலே இங்கே கூடுவிட்டு நழுவுதடி எ…
-
- 16 replies
- 1.3k views
-
-
காதல்கொள்! மண் மீதும் மண்ணைக் காதலித்து மரணத்தை வென்ற மாவீர் ஈகத்தின் மீதும் காதல் கொள்!
-
- 3 replies
- 1.3k views
-
-
கேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி:- கேப்பாபிலவு அடங்கி இருந்து உடைமையைபெற்றிட உறங்கியிருந்தனர் முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும் முடிவு! அடக்கிவந்தவர் உடைமைகளை முடக்கிக்கொண்டனர் முடிந்தளவுமுனுமுனுத்தனர் முற்றுப்புள்ளியில்லை பசுமைவயல் தென்னந்தோப்பு குளிரூட்டும் தென்றல் அப்புச்சி இருந்தமாமரம் அதன் கீழ் ஒருஊஞ்சல் – என கண்ணைநிறைத்திடும் நிணைவுகளுடனும் விவசாயம் செய்யதுடித்திடும் மனதுடனும் அகிம்சைவழியில் உரிமைகள் கோரினர் பெரியதலைகள் – உதவிக்கரங்களை நீட்டுவதுபோல் நீட்டிமுடக்கிக்கொண்டன உரிமைகள் வாய் மூட பலவா…
-
- 0 replies
- 777 views
-
-
போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்த பொழுது எழுதிய கவிதை. விடுதலைப் புலிகளின் உள்சுற்று இலக்கிய சஞ்சிகையான வெளிச்சம் இதழில் வெளிவந்தது. . 1.அம்மா போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வ…
-
- 0 replies
- 843 views
-
-
முன்னிரவு பெய்த மழையில் ஈரம் ஊறிய என் படுக்கை அறை சுவர்களில் இருந்து நான் இராக் காலங்களில் கண்ட கனவுகள் உருக் கொண்டும் உயிர் கொண்டும் வெளித் தெரிகின்றன என் கனவுகளில் நெளியும் புழு ஒன்று சுவரின் ஒரு ஓரத்தில் இருந்து இன்னொரு ஓரத்துக்கு நகர்ந்து செல்கின்றது ஒரு அந்தி சாயும் வேளையில் நான் நல்லூர் தேரடியில் அவள் உதட்டில் இட்ட முத்தம் கனவுகளின் ஊடாக பயணித்து சுவர்களில் பதிந்து வர்ணங்களால் நிரம்புகின்றது என் படுக்கை அறை சுவர்களுக்கு வெட்கம் இல்லை என் கனவுகளை பிரதி எடுத்து பின் ஈர இரவு ஒன்றில் கசிய விட்டு ரசித்துக் கொள்கின்றன கனவுகளில் வெறி பிடித்த மிருகம் சுவர்களில் அமைதியாக தெரிகின்றது கொலைகாரர்களின் துப்பாக்கிக்கு பயந்து ஓடிய என் பூனை …
-
- 6 replies
- 2.2k views
-
-
-
வயல்காட்டில் ஒருநாள்...... ஊரின் ஒதுக்குப்புறம்-அமைதி உறங்கிக் கிடக்குமிடம் தென்றல் தழுவிச்செல்ல-பூக்கள் தெம்மாங்கு பாடுமிடம் ஆசை நோய்பிடித்த-உலகின் அசிங்கங்கள் தீண்டாமல் இயந்திர இரைச்சல்விட்டு-அமைதியாய் இயற்கை உறையுமிடம் போலி மனிதர்களின் -பெருமை போற்றும் உலகைவிட்டு நாடி நின்மதியை-ஒருநாள் தேடி இங்குவந்தேன் ஓடிக் கவலையெல்லாம்-எனைவிட்டு ஒருநொடியில் போகக்கண்டேன் மனிதர் தேடும்நின்மதியோ-இங்கே மலைபோல்க் குவிந்துகண்டேன் கானம் இசைத்தபடி-வண்டுகள் கவிதை படிக்கக்கண்டு நானும் ஒருவனாகி-இயற்கை நதியில் கரைந்துவிட்டேன் வானம் இறங்கிவந்து-இந்த வயற்காட்டில் நடக்கக்கண்டு ஞானம் பெற்றதைப்போல்-எனக்குள் மோனநிலை அடையக்கண்டேன் …
-
- 3 replies
- 1.2k views
-
-
வெள்ளி முளைக்கும் ஒரு மாலை நேரத்தில் முள்ளிவாய்க்காலின் பரந்த மணல் வெளிகளில் புதிதாகத் தோன்றியிருந்த குழிகளைக் கண்டு பூமித் தாயின் முகம் கூடத் தனது முகம் போலப் பார்க்குமிடமெல்லாம் எரி வெள்ளி விழுந்து வெடித்த எரிமலைகளின் வாய்களைப் போல, வட்டமாகத் தனது முகத்தைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல, எண்ணிய படியே தன் பாதையில் நகர்ந்தது நிலவு! இரண்டு வருடங்களாக, இந்தப் புதை குழிகளுக்குள் மறைந்து கிடக்கும் கதைகளும், மனிதக் கூடுகளும் துரத்தித் துரத்தி வேட்டையாடப் பட்ட அவர்களின் சரித்திரமும், செத்துப் போன நினைவுகளும் புதையுண்டு கிடக்கும் புனிதக் கனவுகளும், ஒரு நாள் விதையில் இருந்து துளிர் விடும் மரங்களாய், வளரும் என்ற கனவி…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
இனியவளே... தளர்நடை பாதங்களுக்கு உனது கரங்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்த குடை தான் இப்போது துணையாயுள்ளது குடைக்கார ஐயாவிற்கு சாப்பாடு போடு குடைக்கார கிழவனை திண்ணையில் துங்க விடாதே குடைக்கார தாத்தாவிற்கு லூசு பிடிச்சுருக்கு என ஒற்றை அடையாளமுமாய், வாழ்தலின் சான்றாயுமுள்ளது அடைமழை நாளில் நனைந்து வருமென்னை துவட்டியபடி வரும் உனது வசவுகளை போலல்லாது மௌனமாய் நின்று காக்கிறது பெருமழைகளில் முன்னெப்போதையும் விட பலவீனமாய் இருந்தாலும் இந்த குடையை விரிக்குமளவு திரானியோடிருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு பிராயத்தின் நினைவுகள் அலையோடும் பொழுதுகளில் குடையை விரித்து சுற்றியபடி இருப்பேன் கானல் வெளியில் நாமிருவரும் குடைக்குள் நடந்து போ…
-
- 16 replies
- 1.2k views
-
-
விழிமூடிய அந்த செந்தமிழ் வீரர்கள் By திலீபன் on May 23, 2015No Comment ஆண்ட தமிழினத்தின் இழிவு நிலை கண்டு மீண்டும் தமிழர் நிலை இவ்வுலகில் உயரவெனக் களமாடத் தானைத் தலைவனின் வழி சென்று எங்கள் தலைவனின் எண்ணமதை நிறைவேற்ற மகிழ்வோடு புன்னகைத்து தம்முயிரை தந்து விழி மூடியவர்களே அந்தச் செந்தமிழ் வீரர்கள்! எம் செந்தமிழ் வீரர்கள் விழிமூடிய மண்ணிலே நரிகளும் பேய்களும் ஆட்சி புரிகையிலே அவர்கள் கல்லறைகளைக் கூடக் காணமுடியாத அவல நிலைக்குள்ளே எம் தேசம் அழுகின்ற சூழலை எண்ணுகையில் என் இதயம் வெடிக்கிறது இணைந்தெழுவோம் நாமிங்கு தேசம் மீட்பதற்காய்! நாம் மடிந்தாலும் எமது புலம்பெயர் உறவுகள் எம் விடுதலைப் பணியை முன்னெடுப்பாரென்றே விழி மூடினார்களே அந்தச் செந்தமிழ் வீரர்கள் அவர்களின் கனவை ந…
-
- 0 replies
- 658 views
-
-
இதமான வசந்த காலம் தன் வனப்பை இழந்து நொடிந்து போகிறது தெளிவான அந்த நீல வானமும் கருமையை வேண்டி பூசிக்கொள்கிறது குதூகலிப்புடன் பூத்து குலுங்கிய மலர்களும் தன் சோபையை பறிகொடுத்து வாடி வதங்குகின்றன பச்சை வர்ண இலைகள் மண்ணில் விழுந்து ஒப்பாரி வைக்கிறது அதெப்படி முடிகிறது ? வசந்தகாலத்தில் இலையுதிர்காலம் எப்படி நுழைந்தது ? நேற்றைய சந்தோஷ வானில் இன்று மின்னலுடன் கூடிய பேரிடி ! நட்சத்திர விளக்குகள் அத்தனையும் அணைந்த நிலையில் வானமும் இருண்ட நிலையில் ! என் சந்தோஷ இறகுகள் விரிக்க திரணியற்று வலுயிழந்து போன நிலையில் உணர்வலைகளும் தோற்றுப் போய்விட்டன இன்று நட்பாக வந்த நல்ல இதயம் நஞ்சு ஊறிப்போய் தன் சுயநல போர்வையில் நினைவுகளுக்கு சுகமான ராகம் மீட்ட நினைத்த வேளையில் நரம்பருந…
-
- 8 replies
- 2.3k views
-
-
தேடல் உனக்காக நானும் எனக்காக நீயும் எம் மழலைகளுக்காக நாமும் எத்தனை இரவுகள் தூக்கத்தைத் தொலைத்தோம் ஆனாலும் நீ நிரந்தரமாய் தூங்கிய அந்த இரவில் மட்டும் நான் நிரந்தரமாய்த் தொலைத்தது என் தூக்கத்தை மட்டுமா? நிரந்தர இருளுக்குள் நித்தமும் தேடுகின்றேன் உன்னை மட்டுமல்ல என்னையும் தான்
-
- 3 replies
- 1.2k views
-
-
வருமானம் தருகின்ற உணவுகளில் செரிமானம் தராத பரோட்டாவே முதலிடம்! சிலர் பரோட்டா என்பர் சிலர் புரோட்டா என்பர் இதில் எது சரியென்று தெரியாது ஆனால் இவ்வுணவே சரியில்லை என்பதுதான் உண்மை! இது பண்டை காலத்து உணவல்ல... அண்டை நாட்டு உணவு! வயிற்றை நிரப்பி வாழ் நாளை குறைக்கும்! சுண்டி இழுக்கும் அண்டிப் போகாதே! இப்போதெல்லாம் எமதர்மன் மாடு மீது வராமல் மைதா மாவுமீது வருகிறான்... எச்சரிக்கை!!! 😋 😋.... 🙂 படித்ததில் பிடித்தது.
-
- 1 reply
- 316 views
-
-
வள்ளுவனின் காமத்துப்பாலில் ஆறு குறள்களுக்கு வள்ளுவனையும் வாசுகியையும் கதைமாந்தர்களாக்கி முன்னர் எழுதப்பட்ட புனைவுகளோடு இது ஏழாவதாக தரவேற்றப்படுகிறது. வள்ளுவன் காதல் 7 ஆக்கி வைத்த அமுதுண்ணச் செந்நாப்போதன் அன்று வரவில்லைப் பல் அறிஞரோடு போக்கி விட்டுப் பொழுதையெல்லாம் இல்லம் நோக்கி; போகின்றான் வாசுகியாள் தவித்துப் போனாள். வாய்க்கு ருசியாய்ப் பலதும் பார்த்துப் பார்த்து வந்திடுவார் பசியோடு என்று வேர்த்து (அப்) பேய்க்கென்று செய்தேனே எங்கே போச்சு பிசு பிசுக்கு(து) உடம்பெல்லாம் குளிக்க வேணும் போக்கில்லை, பொறுப்பில்லை இவருக்கெங்கும் போய்விட்டால் என் நினைவே வருவதில்லை யார்க்கென்ன நட்டம் வீண் பசியால் காய்வார் நமக்க…
-
- 0 replies
- 900 views
-
-
ஆண்மகன் ........என்றாகிய போது . அவன் தாய் பெற்ற போது .........மகன் ஆகினான் என் கூட பிறந்த தங்கைக்கு .......தம்பி ஆகினான் எனக்கு முன் பிறந்து .................அண்ணா ஆகினான் என் தாயை கண்ட போது .........காதலன் ஆகினான் என் தாயை கட்டிய போது ...... கணவன் ஆகினான் என்னை பெற்ற போது ........... தந்தை ஆகினான் என் கணவனுக்கு ....................மாமன் ஆகினான் என்பிள்ளை பிறந்த போது ......தாத்தா ஆகினான் என் பேரனுக்கு ........................அப்பப்பா ஆகினான் ..ஒரு முழு மனிதன் ஆகினான் . ஆண் மக்கள் வாழ்க
-
- 11 replies
- 4.2k views
-
-
இனித் தமிழர் அடிமையென தலை பணிவதில்லை என்ற பாடலை உங்களோடு சேர்ந்து பாடவேண்டுமென்று எனது மனம் விரும்புகிறது. பாலை இசை குறுந்தகட்டில் மிகவும் பிரபலமான 10வது படல் அது. வாசுகியுடன் சேர்ந்து பாலை இசை தட்டு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கிறபோது பாலையாகிப்போன காலங்கள் வயிற்றினுள் பாம்புபோல நெழிகிறது. பழம்கனவாய்ப்போன இனத்தின் வாழ்வும் பாலையாகிவிட்டது. தனிப்பட என்னை அமுக்கிய பாலை கடன் சுமையை அடைக்க திரைத் துறைக்கு போக நேர்ந்ததது. என்னினும் 1996ல் ஆரம்பித்தது போலவே, ஜெயசுக்குறு தருணத்தில் தீவிரப் பட்டதுபோல எனது ஆய்வுப் பணிகளும் அறிக்கைகளும் தொடர்ந்தன. ஏனோ முன்போலலாமல் என் தோழர்கள் கேட்க்கவிம் பார்க்கவும் தவறிவிட்டனர். தைமாதமே தீப்பற்றிய புல்வெளியாய் என் தயகம் சா…
-
- 47 replies
- 14.1k views
-
-
அதிகாலை எழுந்து..... ஆண்டவனை நினைத்து ..... இனிய புன்னகையுடன்..... ஈகை எண்ணத்துடன்...... உழைக்க ஆரம்பியுங்கள்.... அனைத்தும் வெற்றியாகும்.....!!! ^^^^^ இனிய காலை வணக்கம் இனிய உள்ளங்களே இவன் உங்கள் இனியவன் ^^^^^^ இனிய காலைமதியம் மாலை இரவு வணக்கத்தை தெரிவிக்க விரும்பும்உறவுகள் இந்த திரியில் தொடர்ந்து வாழ்த்தலாம் நன்றி நன்றி
-
- 0 replies
- 1k views
-
-
எனது கறுப்பு வானம் அகப்பை காம்பால் மாவு கிளறி அரிசிப் பேணியால் கொத்தி ஓலைப்பெட்டியில் அவியும் அம்மாவின் புட்டையும் பழங்கறிச்சட்டியையும் நான் ... பதம் பார்த்ததையும்... அக்காளும் தங்கச்சியும் மாத்துலைக்கை போட்டு கை வலித்த போது – விரல்களுக்கு நான் நல்லெண்ணை தடவியதையும்... ஒல்லித்தேங்காய்களை இணைத்து வாய்க்காலுக்குள் நீந்தப்பழகியபோது காற்சட்டை கழன்றதை பக்கத்துவீட்டு பார்வதி பார்த்து சிரித்ததையையும்... புத்து இடித்து கறையான் கொண்டுவந்து அப்பா வளர்த்த கோழி குஞ்சுகளை கீரியும் பிலாந்தும் சண்டை பிடித்து திண்றதையும்... வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் - அப்பா அப்பாவுக்கு பிடிக்கும் ஆடி அமாவாசை விரதத்தையும் ... ஓடியல் கூழும் ஒற்றை…
-
- 1 reply
- 652 views
-
-
யாழ் நகர் இந்துக்கல்லூரி பல கலை பயில் கழகமும் அதுவே தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே கீதம் இசைத்த கல்லூரி...! நல்லூரின் வீதியிலே இராசையா திலீபனை பட்டினிப் போரிலே கிடத்திய கல்லூரி..! பொன்னம்மான் தொடங்கி... பல நூறு வேங்கைகள் தமிழீழக் களத்தில் அணிவகுக்க அழகு பார்த்த கல்லூரி..! ஒப்பரேசன் லிபரேசனிலே ராதா என்ற சாதனையாளனை சரித்திரமாக்கிய கல்லூரி..!! இன்று.. கிரிக்கெட் தொடர் என்று ஆனந்தாவோடு போடுவதென்ன.. சதிராட்டமா..???! ஆனந்தாவின் சிங்கள மைந்தர்கள் கோத்தபாய முதல் பொன்சேகா கண்டு பசில் ராஜபக்ச வரை.. பேரினச் சிங்களச் சேனையின் மூத்த இனவெறியர்கள்..! அன்னையே தெரியுமா அந்தச் சேதி உந்தனுக்கு..! தமிழினக் கொலையின் போர்க்குற்றவாளிகள் வேறு யா…
-
- 3 replies
- 1.1k views
-
-
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் மாகாண …
-
- 0 replies
- 470 views
-
-
கால ஓட்டத்தில் பிறந்தது கார்த்திகை ......... மழைக்கால ஆரம்பம் ,மண் மீது தூறல்கள் ஒவ்வொரு இதயத்திலும் இனம் தெரியாத சோகங்கள். மத நம்பிக்கையில் கார்த்திகை மறைந்தவர்களுக்கானது ஈழத்து மக்களின்,வீர வேங்கை களின் நினைவுகளும் பிறந்த தினமும் ஒரு சேர மகிழ்வுற்றா ஒரு பொழுதும் மண்ண்ணில் விதைத்த மாவீரருக்காய் , என்இதய மெளனங்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நொடி. எத்தனை எதிர் பார்ப்புக்களுடன் மண் சென்ற வீரர் ... கார்த்திகை தோறும் கல்லறைத் தீபங்கள். மலர்களுடன் , கண்ணீர் அஞ்சலிகள் இறுதிப் போரிலே , மண் சென்ற மக்களே சிந்திய குருதியாறே..சீறிப் பாய்ந்த கந்தக குண்டுகளே .... சிந்துகின்றோம் கண்ணீர் , சிந்தையிலே துன்பங்கொண்டு மண…
-
- 0 replies
- 895 views
-
-
அடிமைச் சங்கிலி அறுப்போம்...! -கவிஞர் தணிகைச்செல்வன் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், காவியக் கவிஞர் வாலி தலைமையில் "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தை கவிஞர் மு.மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் பழனிபாரதி, பா.விஜய், தணிகைச் செல்வன், இளம்பிறை, உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் உள்ளிட்டோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர். ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு கோணத்தில் வாசித்த நிலையில், ஈழத்தைப் பற்றி அதிகம் பேசிய தணிகைச்செல்வனின் கவிதை வரிகள், திரண்டிருந்த மக்களிடம் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது கவிதையிலிருந்து... முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிம…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
விழுந்தவனைத் தான் இங்கு மாடும் ஏறி மிதிக்குது நொந்தவன் புண்ணில் அம்பு வந்து குத்துதூ சுமைதாங்கி மீதுதான் இடியும் வந்து விழுகிது கட்டிய மனக் கோட்டை எல்லாம் சுக்கு நூறாய்போகுது பரதேசி போலத்தான் இந்த உயிரும் சுத்துது கால்கள் போன போக்கிலே இந்த உயிர் போகுது வாழ்க்கை என்பதே அர்த்த்ம்யின்றி வீணாகப்போகுது முடிவு உள்ள வாழ்கையில் முன்னேற மனம் துடிக்குது பரந்து பட்ட உலகத்தில் இறக்கை இன்றி பறக்கத்துடிக்குது கிடைததே போதும் என்று மனமும் தடுக்குது
-
- 4 replies
- 1.7k views
-