கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பதினைந்து வயது வாலைக் குமரியடி பார்ப்போரை மயக்கும் பருவ மங்கையடி அதனாலோ அத்தனை பேர் உன் அழகில் கண்மயங்கி உனைக் காண உச்சிப் பொழுதிலும் உனைத்தேடி வருகின்றார்???? ஒரு முறை உனைக் கண்டார் உன்மத்தம் கொண்டு உன் பின்னே வருகின்றார் ஊனின்றி உறக்கமின்றி உன்னில் மதிமயங்கி உன்னைப் பார்த்திருப்பார் உள்ளத்தெழும் உணர்வை உரைத்திட அனைவரும் முத்தமிழால் உனக்கு முத்தாரம் சூட்டிடுவார் சொக்குப் பொடிபோட்டு சொக்க வைப்பதில் நீ சுந்தரி சொல்லாடல் செய்து சூரர்களைக் கூட சுணங்க வைப்பதில் சூத்திரி சோலை மலர்விழியாள் உன் சோபை கண்டதனால் சொற்களால் உனைச் செம்மையாக்கிச் சுற்றி வருகின்றோம் கதைக்கள், கட்டுரைகள், கவிதைகளாக்கி கண்குளிரக் காண்கின்றோம் பதினைந்து ஆண்டுகள் முன் உ…
-
- 25 replies
- 2.3k views
-
-
பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே பாட்டு இன்றே கேட்கலாம் வாங்க http://vaseeharan.blogspot.com/ please click on here... பாட்டைக் கேளுங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி வழங்குங்கள் அன்புடன் தமிழ்வானம் யாழ்கள உறவுகளுக்காக மட்டும்
-
- 25 replies
- 4.4k views
-
-
......::::::: கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....! இங்கே உள்ள சித்திரம் உங்கள் மனங்களில் தோற்றுவிக்கும் கவிதைகளை தாருங்கள். என்றும் அன்புடன் - இதயநிலா
-
- 25 replies
- 3.6k views
-
-
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம். திரு.பொலிகை ஜெயா - சுவிஸ் திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க் திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க் திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க் திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி திரு. நோர்வே நக்கீரா – நோர்வே திரும…
-
- 25 replies
- 3.1k views
-
-
ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து.) அழகு. நீல வானம் அழகு - அதில் பறக்கும் குருவிகள் அழகு பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில் மலரும் மலர்கள் அழகு உயர்ந்த மலைகள் அழகு -அதில் வளரும் தேயிலை அழகு நீண்ட கடல் அழகு - அதில் விளையும் முத்து அழகு பூக்களின் இதழ்கள் அழகு - அதில் தேனுறிஞ்சும் தேனீ அழகு பச்சை புல்வெளி அழகு - அதில் மேயும் பசு அழகு மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )
-
- 25 replies
- 3.9k views
-
-
வேலி நிமிர்ந்து நின்ற வேலி - இன்று மல்லாக்காய் கிடக்கிறது. இதற்கு ”எல்லை” என் பூட்டன் போட்டது. "கதியால்" என் அப்பு போட்டது. "கம்பி" என் அப்பா போட்டது. "மட்டை "என் அண்ணா வரிந்தது. அவனுக்கு உதவியாய் மட்டை எடுத்துக்கொடுத்தது நான். ஆனால் இன்று வேலி மல்லாக்காய் விழுந்து கிடக்கு. என் பூட்டன் யார் எல்லைக்குள்ளும் போகவில்லை. என் அப்பு கதியாலை ஆழமாய்த்தான் போட்டார். நான்கு வரியில் அறுக்கையாய்த்தான் அப்பா கம்பி போட்டார். இறுக்கமாய்த்தான் அண்ணா மட்டை வரிந்தான். அப்ப எங்க “பிழை” நடந்தது? எவனோடும் எல்லைத்தகராறுக்கு போகவில்லையே. எவனோடும் வீண் வம்புக்கும் போகவில்லையே. எங்களின் வீட்டுக்குத்தானே வேலி அடைத்தோம். எவனடா எங்களின் வேலியை தள்ளி விழுத்தி…
-
- 25 replies
- 2.4k views
-
-
கள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தத் திரியில் நான் என்னுடைய சில குறுங்கவிதைகளை( அது கவிதையா இல்லை மொக்கையா என்று நாங்கள்தானே சொல்லணும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்யுறது எல்லாம் நானும் ஒரு கவிதை எழுதிடவேணும் என்ற ஆர்வக்கோளாறுதான். ) பதியலாம் என்றிருக்கிறேன். நீங்களும் உங்களுடைய குறுங்கவிதைகளைப் பதியுங்கள் (பார்ரா..சேர்ந்து அடிவாங்குறதுக்கு ஆட்கள் சேர்க்கிறான் என்று இன்னும் சிலர் முறைப்பது இப்பவே மனக்கண்ணில் தெரியுது.) எதுநடந்தாலும் நான் பின்வாங்கிறதா இல்லை.(அப்ப என்ன ஆணிவாங்கப்போறியா என்று யாரும் கடந்தநூற்றாண்டில் காலவதியான மொக்கையை போடாதீங்க.) இந்த திரியை நானே தைரியமாக தொடக்கி வைக்கிறேன்.(பயப்படுறது எழுத்தில தெரியலைதானே) அடைத்துச் சா…
-
- 25 replies
- 3.3k views
-
-
மாவீரர் அஞ்சலி கவிதை - இளங்கவி உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்..... சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்..... மலைகளைப் பிழந்து தமிழன் வீரம் சொன்னவர்கள்.... உலகையே எதிர்த்து நின்று எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்... உலகச் சதிகளினால் மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்.... இறந்தும் நம் மானம் காக்கும் தமிழினத்தின் வித்துக்கள்.... ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தையாயிரத்துக்கு மேல் தங்கள் மூச்சுக்களைத் திறந்து எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்.... வியூகம் உடைக்க வாவென்று அழைக்கு முன்னே.. வரிசையில் முதல் சென்ற வரலாற்று நாயகர்கள்.... சுய நலம் நீங்கி பொது நலம் தாங்கி... விடுதலையே மேலோங்கி ; அதற்காய் மரணித்த …
-
- 25 replies
- 4.4k views
-
-
வான் வெளியில் வண்ண நிலா பொட்டு வைத்த வட்ட நிலா சேயைத்தாலாட்டும் தங்கத்தாய் அவளா கார் இருளில் விண் தாரகையா கண் சிமிட்டும் பெண் காரிகையா காதலன் விழிகளில் காதல் பைங்கிளியா வான வில்லின் வர்ண ஜாலங்களா கண்களில் அவள் காமா பாணங்களா மேகத்தில் தீட்டிய மேனகைதான் அவளா பொறுமையில் அவள் பெண் பெட்டகமா உயிர் கொடுத்த உன்னத சித்திரமா சுமைதாங்கும்-அந்த தூண்கள் அவள்தானா கவிதைகளில் அவள் காதல்க் கற்பனையா இனிக்கின்ற தமிழ் தேன் சுவை உச்சமமா பேசும் மொழிகளின் தாயும் அவள்தானா அவள் என்கின்ற தலைப்பில் முத்தமிழ்மன்றத்துக்காக புனைந்த கவி இது
-
- 25 replies
- 3.5k views
-
-
காதலுக்குள்ளும் மனிதத்திற்குள்ளும் கரைந்துவிட்ட நேசம் பணத்திற்குள்ளும் பகட்டுக்குள்ளும் பனித்துளியாகி விட்ட பாசங்கள் உறவுகளை தேடி உரைத்திட மொழியின்றி படித்திட வரியின்றி கண்களில் கண்ணீர் கனவுகளும் கற்பனைகளும் காணமல் போய்விட்டது சோகமும் வேதனையும் கண்ணுக்குள் வந்து விட்டது தேற்றுவார் அன்றி தேடுவார் அன்றி இருக்கும் காலமும் வந்துவிட்டது தேடவேண்டும் உணர்வுகளை சல்லடை போட்டு அவர்களிடம் வழியும் கண்ணீரை துடைத்திட மனமின்றி வழி மேல் விழி வைத்து காத்திருந்த உறவுகள் நீலக்கண்ணீர் வடித்து நிஐம் என நிருபிப்பார்கள் வென்றிட வழியின்றி வெற்றியின் பாதையில் அநியாயங்கள் ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல் ஆயிரம் முறை ஆப்பு வைக்க …
-
- 25 replies
- 4.1k views
-
-
ம(ர)ணமாலை பச்சை நிறமறியா.. இறுகிக்கிடந்த மன வெற்றுநிலத்தில் வந்து விதை போட்டாள்.. வெளியில் கிடந்த விதை...இளகி.. முளைகள் விட தன்னைப் படுத்தியே.. தண்ணீர் ஊற்றினாள்.. தன் கையைக்கீறியே.. செந்நீர் ஊற்றினாள்.. காளை மனதிலே ஈர கங்கை பாய்ந்தது.. காதல் முளைத்தது.. காலம் இனித்தது.. பார்வையில் உயிரைப் பகிர்ந்து பாவையின் மடியில் துயின்று... இதழ்களை இதழ்களால் இழுத்ததும்..குளித்ததும்.. இருபது விரல்களும்.. பனியில் தளிராய்.. இறுகிக்கிடந்ததும்.. ஊரை இருட்டென ஏய்த்து உயிருக்குள் தீப்பந்தம் கொழுத்தி வைத்திருந்ததும்.. தெளிந்த நீலவானில் ஒரு விண்கல புகையின் கோடாய் கூட்டத்தில் காதல் ஜோடி..கூடித்திரிந்தது.. …
-
- 25 replies
- 3.9k views
-
-
மோகிப்போம் வா......... ( 18+) மெதுமெதுவாய் மேல் எழும்பும் கறையான் புற்றைப்போல் , என் மனதை அரிப்பவளே வா ......... பள்ளியறையில் மோகிப்போம் வா . ஆனானப்பட்ட வாத்ஸசாயனனே முயற்சி செய்துதான் எழுதினான் காமசூத்திரத்தை . எனக்கும் உனக்கும் என்னதான் வெட்கம் சயனவறையில் ??? அடி என்னவளே !!!! மோகம் என்றால் என்னவென்று தெரியுமா ??? கண்டவுடன் ருசிப்பதல்ல கண்டு ரசிப்பது ........ அடி சூரியகாந்தப்பூவே !!!!! இரவின் மடியில் என் ஆண்மையும் , உன் பெண்மையும் அவசியம் . இதைவிடப் , பொறுமையும் திறமையும் என்ற இரு மைகள் அத்தியாவசியமடி ........ அடி என் வெல்லக்கட்டியே !!!!!!! நாங்கள் என்ன மிருகங்களா உச்சக்கட்டத்தை நோக்கி உடனே செல்ல ....... காதல் இல்லாத காமமும் ,…
-
- 25 replies
- 17.6k views
-
-
பொய்மையும் கயமையும் கொட்டமடிக்கும் வேளையில் வாய்மையும் நீதியும் நடைபயிலவேண்டும் நாணிக் குறுகி நிற்கும் என் இனம் வீறு நடைபோடவேண்டும் அடிமைச் சங்கிலியை உடைத்த தமிழச்சிகள் தரணியில் வாழவேண்டும் கறையான் புற்றில் குடியிருக்கும் பாம்புகள் குளறியோடவேண்டும் தகரக் கொட்டகை வாழ்வு உக்கியே போகவேண்டும் உழுத்த எம்வாழ்வு உயரவே வேண்டும் எங்கள் நண்டுக்குணம் மாறி திமிறித் திரண்டால் நடக்கும் இவை நடக்குமா ??????????
-
- 25 replies
- 2.5k views
-
-
காசு இல்லாத உலகம் வேண்டும் மாசு இல்லாத சூழல் வேண்டும் எல்லை இல்லாத தேசம் வேண்டும் கோசம் இல்லாத அரசியல் வேண்டும் ஊழல் இல்லாத அரசாங்கம் வேண்டும் நடுநிலையான நீதி வேண்டும் வேஷம் இல்லாத மேடை வேண்டும் தேசம் மதிக்கும் ஆடை வேண்டும் யுத்தம் இல்லாத மண்ணிலம் வேண்டும் இரத்தம் தோயாத செந்நிலம் வேண்டும் தமிழில் பேசும் தமிழர்கள் வேண்டும் தமிழருக்கென்று ஒரு நாடும் வேண்டும் மானம் காத்த பெண்ணினம் வேண்டும் பெண்மையைப் போற்றும் ஆணினம் வேண்டும் தன்னினம் காத்த மறவர் வேண்டும் மண்ணில் அறம்காத்த மாவீரர் வேண்டும் விலைபோகாத தலைவன் வேண்டும் தலைவணங்காத தன்மானம் வேண்டும் மறைந்தவை மீண்டும் தோன்ற வேண்டும் நல்லதைச் சொல்லும் நண்பர் வேண்டும் நல்லதை அறிந்திடும் நன்ம…
-
- 25 replies
- 2.6k views
-
-
அன்பு பெருக்கும் கனிவு வேண்டும், துன்பம் உதிர்க்கும் உறவு வேண்டும், ஊக்கம் கொடுக்கும் உளம் வேண்டும், ஏக்கம் தணிக்கும் பரிவு வேண்டும், வீழ்வு தடுக்கும் உறுதி வேண்டும், தாழ்வு போக்கும் விரிவு வேண்டும், சஞ்சலம் நீக்கும் தெளிவு வேண்டும், அஞ்சாமன மாக்கும் பக்தி வேண்டும், வேற்றுமை விலக்கும் வலிவு வேண்டும், ஒற்றுமை படைக்கும் புத்தி வேண்டும், வாழ்வு பெருக்கும் சக்தி வேண்டும், ஈழம் அமைக்கும் பலம் வேண்டும்! தமிழ் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்!! - சயனி
-
- 25 replies
- 2.5k views
-
-
என்ன செய்ய??!! பூக்களை தருவதற்காய் நான் வந்து கொண்டிருக்கிறேன் மாட்டுவண்டி ஒன்றிலே கரடு முரடான பாதையிலே மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன் கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட சொகுசுக் காரிலே எனக்குப் போட்டியாக அவர்களும் வருகிறார்கள் வாண வேடிக்கைகள் முழங்க சுவரெல்லாம் செய்திகள் சொல்ல ஆடம்பரமாய் அவர்கள் வருகிறார்கள் நான் தருவதற்கு பூக்களை கொண்டு வருகிறேன் அவர்கள் விற்பதற்கு மலத்தைக் கொண்டு வருகிறார்கள் மக்கள் எல்லோரும் காரை நோக்கியே கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள் ஓடி வந்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து அவர்கள் கொடுத்ததை சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள் என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான் யாரு…
-
- 25 replies
- 3.5k views
-
-
அம்மா - நீ பெத்த கடனுக்கு நடையாய் நடக்கிறாய் கிடையாய் கிடக்கிறாய் ஆனாலும் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். மண்றாடிப் பயனில்லை மண்டியிட்டும் பயனில்லை நான் தெளிவோடு சொல்கிறேன் அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். வரலாற்றைப் புரட்டிப் பார் சிக்கென்று இருந்த நீயே சிதைந்து போனது எதனால்..??! சில்லறை கூட வேண்டாம் சிலிர்த்து வந்த சிங்கத்தை கட்டி - நீ ஆண்டும் கண்டதென்ன..?! அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ ஒரு காலத்தில் சிங்கக் குட்டிகளை பெற்றதாய் பெருமை கொண்டாய் அந்தக் குட்டிகள் - இன்று எலிக் குஞ்சுகளாய் பதுங்கும் நிலை பார்த்தாய் தானே அம்மா - நான் இந்தக் course படிக்கமாட்டன். அம்மா - நீ கெஞ்சிக் கூத்…
-
- 25 replies
- 1.9k views
-
-
வேதனையை வாழ்க்கை ஆக்கிவிட்டவள் அன்புக்கு அர்த்தம் கேட்டால் காயங்களை மட்டும் காரணமின்றி தந்தவள் காதலுக்கு கருத்து கேட்டால்... நேற்று வந்த யாரையே நேசித்தவளுக்கு... நெடுநாளாய் நேசத்தை மட்டும் காட்டிய என் உணர்வு உறைக்காமல் போனது -என் துரதிஸ்டமே... கற்பனையில் என் காதல் கடந்து சென்று விட்டது களிப்புடன் -அதற்குள் கனவை கலைத்ததால் கழிப்பும் காணாமல் போனது ஆயிரம் சோதனை தாங்கிய ஆணிவேர்கள் கூட அழிந்திடும் நிச்சயம் காதலில் தோற்றிருந்தால் ஆனாலும்... இறைவனிடம் கேட்க எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி நிறைவேறா ஆசையினை முடிவுறா பயணமதை வாழ்வழிக்கும் காதலை- ஏன் வரவைத்தாய் என் மனதில்? சத்தியம் செய்து விட்டதால் சமர்களம் எனை வெறுத்த…
-
- 25 replies
- 4.6k views
-
-
அன்னை மடிதொட்டு தந்தை கரம்தொட்டு மாமன்உறவைத்தொட்டு மாமியின்பாசம் தொட்டதால் அன்பே உனைத்தொட்டு இன்பம் எனைத்தொட்டு மழலைகள் வாழ்வைத்தொட்டு சொர்கம் எனைத்தொட்ட வேளை சோதனை நமைத்தொட்டு இறப்புக்கள் வாழ்வைத்தொட்டு பிரிவுகள் எனைத்தொட்டதால் இதயம்வலியைத்தொட்டு கண்கள் நீரைத் தொட்டு கவிதைசோகம்தொட்டு தவிப்புகள்எனைத் தொட்டு துடிக்கின்றேன் உன்னால் இதுதான் விதியா?
-
- 24 replies
- 3.8k views
-
-
பணம் மனிதனின் உடலை வருத்தி மனதை திடப்படுத்தி சேகரிக்கத் தூண்டுவது பணம்.... தம் அன்றைய தேவைகளிற்காக எதிர்காலக் கனவுகளின் தேடல்களிற்காக சிறுகச் சிறுக சேர்த்துவைக்க தூண்டுவது பணம்... மனிதர்களின் நல்வழியையும் தீயவழியையும் சந்தோஷத்தையும் துக்கத்தையும் உருவாக்குவது பணம்.... மொத்தத்தில் பணம் தான் வாழ்க்கை என்று வாழ்பவர்களின் நிலை கடலினுள் இறங்கி உப்புத் தண்ணீரை பருகுவது போன்றது.... அடிப்படை வாழ்க்கைக்கு பணம் அளவுடன் தேவை என்று வாழ்பவர்களின் நிலை தெளிந்த நீரோடையில் மீன்கள் வசிப்பது போன்றது....
-
- 24 replies
- 3.3k views
-
-
வாசனை --- வ.ஐ.ச.ஜெயபாலன் அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது அவளது வாசனையை உணர்ந்தேன். நாங்கள் பிரிந்தபோது வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும் ரொறன்ரொவை நீங்கின. ஒன்ராறியோ ஏரியின்மீது தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள் கண்ணீரை மறைத்தபடி நாம் விடைபெற்றோம். அந்த வசந்தத்தில் சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய ஒன்ராறியோ ஏரிக்கரையின் எந்தச் செடிகளை விடவும் பூத்துப்போயும் வாசனையோடும் என் படகில் இருந்தாள். படகை விட்டு இறங்கும்போது ஈழத் தமிழர் தலைவிதி என்றாள். நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில் சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள். வானை வெண்பறவைகள் நிறைத்தன. ஒருகணம் போர் ஓய்ந்தது. வடமோடிக் கூத்தர்களி…
-
- 24 replies
- 4.6k views
-
-
வகை வகையாய் வடிவடிவான கோபியரொடு கொண்டாடினும் கொள்கையோடு இருந்தான் இந்த நவீன கண்ணன். அந்த வேளையில்... இணையத்தில் வந்தாள் கண்ணா என்றாள் கண்ணடித்தாள் கருத்தைக் கவர்ந்தாள் காகித ரோஜாவால் காதல் செப்பினாள். காளை இவன் களிப்படைந்தேன் கதைகள் பல பேசி களைப்பும் அடைந்தேன். கடைசியில்.. போன் சிம்மை கழற்றி வீசினாள் கண்ணனோடு மீராவின் காதல் முடிந்தது என்றாள்..!! அந்த மீராவுக்கோ ஒரு தம்புரா துணை இந்தக் கண்ணனுக்கோ தனிமை துணை..!!!
-
- 24 replies
- 5.8k views
-
-
கனடாவில் வாழ்வு பத்தொன்பது ஆண்டுகள் கண்ணை மூடி முழிப்பதற்குள் ஓடி மறைந்து விட்டது. திரும்பிப் பார்த்தால் அண்டப்.. பெருவெளியில் நீண்டதொரு பயணத்தின் நடுவில் நின்று கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமா இல்லை என்னோடு சேர்ந்து இன்னும் பலர் பயணிக்கிறார்களா.....??? கடந்து போன ஆண்டுகள் தராத வேதனையை அடிக்கடி வந்து போகும் வெண்பனி தந்து சென்றது. எங்கே போனேன்-எங்கே வந்தேன் ஒன்றுமே தெரியவில்லை. சிட்டுக்குருவியாய் சிறகு விரித்து வானவெளியில் பறக்க-எனக்கும் ஆசை ஆனால் சிறகு உடைந்தவள் ஆச்சே-இல்லை இல்லை விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி.. எதைச் சொல்ல எதை விட எனக்குள்ளும் ஆயிரம் ஆசைகள்-ஆயிரம் நிறை வேறாத கனவுகள். விபத்தும் என்னை தன்னுள் அடக்காமல் இன்…
-
- 24 replies
- 2k views
-
-
நாள்.. நட்சத்திரம் சொல்லி ஒரு கல்யாணம் அடுத்து வந்த ஆண் பெண் உடல் கலவி கூட அடுத்தவன் சொல்லி வைத்த சுப முகூர்த்தத்தில்.. தென்னிந்திய சினிமா பார்த்து வளைகாப்பு அது கூட சுப நேரத்தில்..! "இது அதிஸ்டக் குழந்தை" ஊராரின் வாழ்த்தொலிகளோ கரு முதல் தொட்டில் வரை..! முதல் பிறந்த தினம் வெகு கொண்டாட்டம்.. குடும்பக் "குண்டுமணிக்கு" குதூகலத் திருவிழா..! பட்டென்ன பள பளக்கும் நகையென்ன..! அழகு கொஞ்சும் என் மேனி முத்தமிடா இதழ்களில்லை பதியாத கரங்களில்லை ஜொலிக்கும் நட்சத்திரமாய் அன்று நான்..! அடுத்து வந்த ஆண்டுகளும் அளவில்லா மகிழ்ச்சி தான். பள்ளிப் பருவத்தில் சுட்டிக் குழந்தை புளுகாத ஆசிரியர் இல்லை புகழாத ஊரார் இல்லை.…
-
- 24 replies
- 1.9k views
-
-
இது எங்கள் தாயகத்தைவிட்டு வெளிநாடு செல்ல ஏஐன்சிக்காரரிடம் காத்திருந்து, பின் ஏமாந்து போனவர்களுக்காகவும், இன்னும் வெளிநாடு வரமுடியாது. இலங்கை முழுவதும் அலைந்து, மனம் உடைந்து திரியும் உறவுகளுக்காக... என்ன? யாழ்கள உறவுகளே உங்களில்கூட எத்தனை பேர் இப்படிக் கஸ்டப்பட்டு வெளிநாடு வந்திருப்பீர்கள். அந்தக் காலத்தை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் கண்களில் கண்ணீர் வழியலாம்.. உங்கள் மனதை தலாட்ட இப்பாடல் காதல் மொழி இறுவட்டில் இருந்து வரும் ஐந்தாவது பாடல்...கேட்டு மகிழுங்கள். http://vaseeharan.blogspot.com/ -please click here to listen... கருத்தைச் சொல்லுங்கள். பல்லவி ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான்- என் கதிர்காம முருகன் காப்பாத்திட்டான் அப்பாவின் காசு காற்றோடு போச்சு …
-
- 24 replies
- 3.5k views
-