கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
புத்தொளி வீசும் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத் தமிழ்ப்புத்தாண்டு சிந்தைக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு பழையன மறந்து மன்னித்து மகிழ ஒரு தமிழ்ப்புத்தாண்டு இனிய இப்புத்தாண்டில் புதிய நற்கனவுகளுடன் புதிய நற்கொள்கையுடன் பிறக்கும் இத்தமிழ் ஆண்டாவது இனிய தமிழ் உள்ளங்களுக்கும் எமது தேச உறவுகளுக்கும் நற் செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ........ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=5]தமிழ்மொழி வாழ்த்து [/size] [size=1][size=5]தான தனத்தன தான தனத்தன [/size] [size=5]தான தந்தா னே [/size] [size=5]வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! [/size] [size=5]வான மளந்த தனைத்தும் [/size][size=5]அளந்திடும் வண்மொழி வாழிய வே! [/size] [size=5]ஏழ்கடல் வைப்பினுந [/size][size=5]தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! [/size] [size=5]எங்கள் தமிழ்மொழி! [/size][size=5]எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழிய வே! [/size] [size=5]சூழ்கலி நீங்கத் [/size][size=5]தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! [/size] [size=5]தொல்லை வினை தரு [/size][size=5]தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே! [/size] [size=5]வாழ்க தமிழ்மொழி! வாழ்க [/size][size=5]தமிழ…
-
- 10 replies
- 1.5k views
-
-
தம்பி ! நீயும் நானும் திரிந்தலைந்த எல்லப் பற்றைகளும்- முள்ளேறிய வீதிகளும் இப்போதும் வந்துபோகும் ! கருக்கம் மட்டை பிய்த்து-திராட்சை பறித்த கணங்களும் காரிருளில் மின்னி மறையும் ! பூவரசங்கிளையில் வாள் பிடித்து-மெய்யாவுமே அடித்தழுத நினைவுகளும் என்னைச் சுற்றி வரும்- ஆனால் நீ மட்டும் வராமலயே இருந்துவிட்டாய் ! நீ- புரவியேறிப் போன செய்தி கேட்டு விழித்திருந்தோம் இரவாகி நீ விண்ணேறிய சேதி வந்தது- கதறக் கூட முடியவில்லை- ஊர்சுற்றிக் காவலிருந்தது ! உன் இழப்பிலும் ஒரு உற்சாகம்-நான் கொடுத்து வைக்கவில்லை ! வைத்திருந்தால் உன் முன் நான் சென்றிருப்பேன் !
-
- 1 reply
- 1.1k views
-
-
தம்பி ராஜாவும்... அண்ணன் டவாலியும்..! எதை பற்றி பேச வேண்டும் அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் வியாபாரம் என்ன என்று சொல்லுங்கள் இடம் வாங்க வேண்டுமா அதற்கும் எங்களிடம் நபர்கள் இருக்கிறார்கள் அணைத்து வியாபாரமும் இணைய தளம் மூலம் வைத்துக் கொள்வோம் கவிதை எழுத்து பதிவுகள் பிண்ணூட்டங்கள் இவை அனைத்தையும் எரித்து விடுவோம் அல்லது எறிந்து விடுவோம் பத்தாயிரம் அல்ல சில பத்தும்... பத்தும் போதுமானவை..? கியாரண்டி கொடுக்கப்பட்டு விட்டன..! மரணம் நிகழ்கிறது கொண்டு போய் எறிப்பீர்களா மண்ணுக்குள் செம்முவீர்களா..? ஆனாலும் ஏதோ ஒன்று மீன் முள் குத்தியதைப் போல நல்ல விருந்து உண்டு வாந்தி எடுத்ததைப் போல …
-
- 2 replies
- 706 views
-
-
நாளை நாளை என்றொரு நாளை எண்ணி மனம் வெம்பிப் போகாதே தம்பி - அந்த நாலுந் தெரிந்தவன் நடத்தும் நாடகத்தில் குறை சொல்லி மாளாதே தம்பி விதை விதைப்பதும் அது முளைப்பதும் உந்தன் கையிலா தம்பி? எல்லாம் இயற்கையின் கையினை நம்பி! கவலைகள் கிடக்கட்டும் காரியம் நடத்திவிடு மலைகள் எதிர்க்கட்டும் துணிவாய் இருந்துவிடு பிறந்தது இன்று வாழ்வது இன்று சாவதும் இன்றே என்று எண்ணி விடு துன்பங்கள் ஓடும் இன்பங்கள் கூடும் உல்லாசம் உன் மார்பைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் கொண்டாட்டம் நாமெல்லாம் இன்று பூத்த மலர்க்கூட்டம் நமக்கு ஏது கவலை - ஊதடா உல்லாசப் பண்பாடும் குழலை நாமெல்லாம் இன்று பிறந்த மழலை நமக்…
-
- 7 replies
- 1.9k views
-
-
தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு, தழுவும் சேலை முகட்டில் விம்மி விழட்டும் அதுவரை தயங்கு. பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி உணர்வினைக் கிளறி இயங்கு. குறி நகம் பதித்து குவித்து அணைத்து கொஞ்சிக் கெஞ்சி முயங்கு. உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும் இணையின் அணைவில் மயங்கு.
-
- 72 replies
- 13.6k views
-
-
தயா இடைக்காடர் உண்ணாவிரத நிறைவுப் பாடல்
-
- 3 replies
- 1.6k views
-
-
உலகினினில் இழிய நாடு சிறீலங்கா - மனித உரிமையை மதியா நாடு சிறீலங்கா ஞாலத்தில் இழிய நாடு சிறீலங்கா - புத்த ஞானத்தை மறந்த நாடு சிறீலங்கா பாரினில் இழிய நாடு சிறீலங்கா -கொலைப் போரினை நாடும் நாடு சிறீலங்கா புவியினில் இழிய நாடு சிறீலங்கா - பல புதைகுழி கொண்ட நாடு சிறீலங்கா வையத்தில் இழிய நாடு சிறீலங்கா - இன வெறியர் வாழும் நாடு சிறீலங்கா அவனியில் இழிய நாடு சிறீலங்கா - சில அரக்கர்கள் ஆளும் நாடு சிறீலங்கா தரணியில் இழிய நாடு சிறீலங்கா -அப்பாவித் தமிழர் சாகும் நாடு சிறீலங்கா http://gkanthan.wordpress.com/index/izhiya-naadu/
-
- 0 replies
- 570 views
-
-
தரணியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - அறம் தருமத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு ஞாலத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெய் ஞானத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு அவனியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெத்த அறிவினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு உலகினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - விருந்து உபசாரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு வையத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உண்மை வீரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு புவியினிற் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - கவிப் புலமையில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு பாரினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உயர் பண்பிலே சிறந்த நாடு எம் தமிழீழ நாடு http://gkanthan.wordpress.com/i…
-
- 3 replies
- 978 views
-
-
தரணியில் தலை (குனிந்த) சிறந்த இராணுவம்....... வல்லரசு நாடுகள் அனைத்திலும் மானத்தை விற்று மண்டியிட்டு பொய்களை அவிட்டு விட்டு ஆயுதத்தையும் ஆள்பலத்தையும் அளவு கணக்கின்றிப் பெற்றுக் கொண்டு பயங்கர வாதத்தை ஒழிக்கிறோம் என வான் பிளக்க பரப்புரை செய்து கொண்டு ஒன்றும் அறியா அப்பாவி பொது மக்களை இரக்கம் இன்றி குலை குலையாக கொன்று குவித்துவிட்டு போர் விதி முறைகளை புதைகுழிக்குள் போட்டு புதைத்து விட்டு சில நாட்கில்; போர் முடியும் என சொல்லி பல மாதங்கள் தொடர்ந்து முட்டாள் தனமான ஆதாரங்கள் பல புனையப்பட்ட அப்பட்டமான பொய்யுடன் வெற்றி வாகை சுhடி நிற்கும் இராணுவமே தரணியில் தலை சிறந்த இராணுவம்
-
- 0 replies
- 1.5k views
-
-
உன் அமைதியான வேண்டுதலால் பொறுமையை இழந்திருப்பாள் பூமாதேவி * நீ சுற்றி வந்ததால் சனிஸ்வரனுக்கு பிடித்தது தேவதை தோசம் * நீ முருகனைச் சுற்றுகையில் முருகன் மீது சந்தேகப் படுகிறார்கள் வள்ளியும் தெய்வானையும் * அழகானவள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் உன்னைக் கண்டதும் தேவதை கிடைக்க வேண்டும் என்கிறார்கள் * கடைசியில் எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது பக்தர்கள் உன்னைச் சுற்றுகிறார்களா? கோயிலைச் சுற்றுகிறார்களா? -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 1k views
-
-
கண்ணீரை ஆவியாக்கியபடி ஒரு காலம் வறண்டுபோய் கிடக்கிறது.. ஊரெல்லாம் ஒருபாட்டம் மழைவராதா என்று மண்ணை இறுகப்பிடித்தபடி ஈரப்பதன் தேடி வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன திசைகளை மூடி வீசும் அணல்காற்றில் தீய்ந்து தீய்ந்து ஒவ்வொரு இலைகளாக கருகி உதிர்கின்றன அணலாய் கொதித்துருகும் எல்லாக்கடல்களில் இருந்தும் ஆவியாகின்றன கண்ணீர்த்துளிகள் இனி முட்டி முடியாமல் ஒரு திசையில் விரைவில் இருட்டும் அப்போ பெய்யும்.. பெய்யத்தானே வேண்டும் ஒரு பெரும் மழை பயிர் பச்சை தழைக்க உக்கிப்போய் கிடக்கும் உதிரம் காய்ந்த தேசத்தின் சருகுகளை உரசியபடி காற்று சடசடவென்று உறுமிக்கொண்டு வீசும் வெட்டி மின்னல் பாயும்போது வெறும் கோடை என்ன …
-
- 15 replies
- 1.4k views
-
-
இந்தப் படைப்பு, ஏறத்தாள இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு காலத்தில் மனிதகுணமும் அதனது இயல்புகளும் எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அசோகச்சக்கரவர்த்தி காலத்தில் இருந்து இன்றுவரை எதுவுமே பெரிதாக மாறி விடாதது மட்டுமல்ல, மனித குணம் மேலும் மேலும் வக்கிரமடைந்து செல்வதைக் காட்டுகின்றது. 'தர்மச்சக்கரம்' கலிங்கம் வீழ்ந்தது! குருதி கொப்பழித்த 'தாயா' நதிக்கரையின் ஓரங்களில், கரையொதுங்கிய பிணங்களின் இரத்த வாடை கலந்த காற்று வெற்றிச்செய்தியை, நெற்றியில் சுமந்து வீசியது, அன்னப் பறவைகள் நடை பயின்ற ஆற்றங்கரையில், ஆந்தைகளும் கழுகுகளும் குந்தியிருந்தன.. கலிங்கம் வீழ்ந்தது!. வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு. வீழ்ந்து கிடக…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
அரைக்கிலோ அரிசியில் கூட அரசியலாம் ஆணுறைகளின் விற்பனை அதிகரிப்பாம் உலகமயமாக்கல் பிராந்திய நலன் என்று புரியாத வார்த்தைகளாய் அடிபடுகின்றன பனையால் விழுந்த ஓலைகளைச் சப்பித்துப்பி விட்டுப் போகின்றன மாடுகள் வேலியடைக்கவும் வேலி தாண்டவும் முடியாமல் பாவம் ஓலைகள் இன்னும் எத்தனை மாடுகள் பசியாறப் போகிறதோ காட்சிகள் முடியும்முன்னர் சாட்சிகள் கலைக்கப்படுகின்றன நாளை கண்ணகி காவியமாம் காத்தவராயன் கோயிலில் அண்ணனின் துவசம் முடிவதற்குள் அய்யனாருக்காய் அறுக்கப்படும் ஆடுகள் அண்ணனும் ஆடுகளும் பலியெடுக்கப்படுகின்றன தர்மத்தின் பெயரில் கூடின்றி வாழும் குருவிகளுக்கு கோபுரத்தின் உச்சியில் கூட குந்தவிடாது ஆணி அடிக்கப் படுகிறது சாவுக்கும் வாழ்வுக்குமிடையே குருவிகள…
-
- 20 replies
- 2.2k views
-
-
உலகே உனக்கு கண் இல்லையா? என் இனமே நாம் போராடினால் தோற்றுபோகோம்.துரோகிகளின் துரோகத்தினால் அல்லவா எம் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. வீரபாண்டிய கட்டபோமனுகே ஒரு எட்டப்பன் இருக்கும் போது பதவிக்கும் பணத்துக்கும் விலை போகாத நம் தேசிய தலைவனுக்கு ஆயிரம் எட்டபர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. யேசுவிற்கு கூட ஒரு யூதாஸ் துரோகிகளே இல்லாத வரலாறே இருக்காதா? கூட இருப்பவர்கள் தானே குழி பறிகிறார்கள் இறைவா இன்னுமா இவர்களை நீ பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? அழித்துவிடு அழிந்துகொண்டிருக்கும் எம் இனத்தை இவர்கள் இன்னமும் அழித்துக்கொண்டு இருக்கும் எம் இனத்தை அழிபவர்களை அழித்துவிடு எங்கள் போராளிகளே உங்கள் மனத்துணிவும் ஆற்றலும் எமக்க எம் சந்ததிக்காக நீங்கள் சிந்திய ஒவொரு து…
-
- 0 replies
- 6.6k views
-
-
வந்தோரை வாழவைத்து வீட்டிலே தூங்கவைத்து வாசலில் படுத்தறங்கும் இனம் எம்மினம் சண்டை என்று வந்தாலும் சமாதானம் என்று சொன்னாலும் சமனாக மதிப்பளித்து இன்று போய் நாளை வா என இன மானம் காத்த இனம் உலக வரைபடத்தில் யேசு கேட்டதை காந்தி கனாக்கண்டதை வள்ளுவன் சொன்னதை அரங்கேற்றி அரசமைத்த இனம் நரிக்குண நாட்டவனின் நடிப்பில் மயங்கி சுற்றி வந்த வர்த்தகஅரக்கர்களின் பிடிக்குள் சிக்காது செய் அல்லது செத்துமடியென செய்து காட்டிய இனம் முள்ளிவாய்க்காலில் தன்னை தானே பெட்டியடித்து சர்வதேசத்துக்கு குறிவைத்த தலைவன் சொல்லிய செய்தி கொன்றால் விடுதலை விட்டாலும் அது தான்.. தீர்க்க தரிசனம் அவனது ஆயுதம் இனி போராட்டம் உங்கள் கையில் அவன் கை காட்டியது வெளியில் எல்லாம…
-
- 26 replies
- 2.6k views
-
-
பால்குடியாக ஒருதலை - குழந்தை பருவமடைய ரெண்டுதலைகள் - வாலிபன் கல்விகற்க மூண்டுதலைகள் - மாணவன் காதல்கொள்ள நாலுதலைகள் - காதலன் கலியாணம் செய்ய அஞ்சுதலைகள் - கணவன் பிள்ளைபெற ஆறுதலைகள் - அப்பா பிள்ளைவளர்க்க ஏழுதலைகள் - அப்பப்பா.. வேலை செய்ய எட்டுதலைகள் - உழைப்பாளி வியாதிக்காரனாக ஒன்பதுதலைகள் - வயோதிபன் விடைபெற்றுக்கொள்ள பத்துதலைகள் - அப்புச்சாமி அன்புடன், தறுதலை :wub:
-
- 11 replies
- 2k views
-
-
தற்கொடைகள் வீண் தற்கொலைகளாக வேண்டாமே...! முத்துக்குரமன் மூட்டிய தீ எங்கும் மூசியெரிகிறது. தமிழன் செத்துக் கிடப்பதை உலகோ சத்தமின்றிச் சகிக்கிறது. பலம் கொண்ட மட்டும் பகைவன் பலியெடுக்கும் கொலையிருந்து மீளுதற்காய் புலமெங்கும் தமிழன் போர் வீச்சாய் எழுகிறான். ஈழம் பெறும் நாளை கையிலெண்ணிக் கடுங்குளிரின் விறைப்பிலும் வீதிகளில் இறங்கி நீதி கேட்கும் நிலையிலுள்ளான். பலம் வெல்லும் என்ற நிசம் புரிந்தும் நம்பிக்கையுடன் தமிழன் நெடுந்தவம் புரிகின்றான் - இக் கடுந்தவத்தின் பரிசெமக்கு காலம் தருமென்ற நினைப்போடு. தினம் வரும் செய்திகளால் - உயிர் மனம்வாடித் துவளுகின்ற துயர் உயிரைத் தின்கிறது - எனினும் தொடரான ஈர்ப்புக்கள் குறயாமல்…
-
- 5 replies
- 1.8k views
-
-
தலை குனிதல் தமிழரின் இயல்பல்ல தலை குனியும் போதெல்லாம் கவி வரையும் பேனா இன்று எம் மண்ணின் நிலை கண்டு கண்ணீர் மட்டுமே வடிக்கின்றது அன்பெனும் கூட்டில் சங்கமித்து ஆசையாய் குழந்தையை பெற்றெடுத்து அடுக்கடுக்காய் கனவுகண்டு வளர்த்து வந்த வேளையிலே ... பூண்டோடு குடும்பத்தை அழித்துவிட்ட கயவனே. உண்மையில் நீயெல்லாம் மனிதன்தானா? இல்லையில்லை ரத்தத்தைப் பிழிந்து குடிக்கும் கொடூர விலங்குகள் நீங்கள். பால்குடித்த ஈரம் காயும் முன்பே மழலைகள் உயிரைப் பறிக்கிறீரே விதையைக் கிழித்து துளிரை அழிப்பது போல் தாயின் வயிற்றைக் கிழித்துக் கருவைக் கொல்லும் காட்டுமிராண்டிகள் நீங்கள். கயவரே உன் காலடிகள் எம் மண்ணில் …
-
- 5 replies
- 1.5k views
-
-
[size=5]தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்தென்ன தரணி முழுவதும் பரந்திருந்தென்ன தனக்கென நாடு தரணியில் தமிழனுக்கு இல்லையே பரணி பாடிப் பகை முடித்தென்ன போர்க்களம் கண்டு பகை முடித்தென்ன பொட்டல் வெளிகூட எமக்கென இல்லையே அடிமை விலங்கை அறுத்திட எண்ணி அத்தனை வீரரும் ஆகுதியாயினர் சுற்றம் துறந்து சுகங்கள் துறந்து சூளுரைதே சூழ்பகை வெல்ல தேசம் காக்க தம்மை ஈந்தனர் எத்தனை எத்தனை ஆயிரம் வேங்கைகள் நித்தமும் தம்மை நெக்குருக்கியே நேசத்துடன் தம் தேசம் காத்திட நெருப்பாற்றில் நீச்சல் போட்டனர் தற்க்கொடையாளராய் தம்மை ஈந்து தரணியில் தமக்கெனத் தடம் பதித்திட கடற் புலிகளாய் கரும்புலிகளாய் காரிருளிலும் காவியம் படைத்தனர்[/size] [size=5]எத்தனை ஆண்…
-
- 13 replies
- 1.3k views
-
-
[size=5]மரணம் கூடு கட்டிய மரங்கள்,,[/size] [size=5]முறிந்து விழுகின்றன![/size] [size=5]பூரண சந்திரனின் வெளிச்சம்,[/size] [size=5]புதைகுழிகளின் ஓரங்களில்,[/size] [size=5]பட்டுத் தெறிக்கின்றது![/size] [size=5]மழை வெள்ளம் தேங்கிய,[/size] [size=5]குழிகளின்,மத்தியில்,,[/size] [size=5]கார்த்திகைப் பூக்களின்,,[/size] [size=5]கைவிரல்கள் அசைகின்றன![/size] [size=5]அமைதியடையாத ஆத்மாக்கள்,,[/size] [size=5]உலகத்தை நோக்கிக்,[/size] [size=5]கரங்களை விரித்து,[/size] [size=5]நியாயம் கேட்கின்றன![/size] [size=5]உண்மைகள் நிதர்சனமாகி,[/size] [size=5]உலகை உலுக்குகின்றன![/size] [size=5]கண்கள் கட்டப்பட்ட,[/size] [size=5]நீதித் தேவதைக்கும் கூடக் ,[/size] [siz…
-
- 12 replies
- 1.1k views
-
-
ஒரு வசந்தம் தொலைந்து விட்டது எங்கள் தேசத்தின் வாசலில் ஏற்றி வைத்த தீபம் ஒன்று ஏகாதிபத்திய நெருப்பில் எரிந்து பொய் விட்டது. எங்கள் விளை நிலத்திக்கு வித்துக்களை ஊன்றி வந்த விருட்சமொன்று சரிந்து விட்டது எங்கள் புனித மூச்சை புயல் தின்று விட்டது இருள் சூழ்ந்து கிடந்த எங்கள் எல்லைக்கு ஒளி சுமந்து வந்த உயிர் ஒன்று அணைந்து விட்டது பாசத்தோடு பேணிக்காத்த சிறகொன்று பாரத வலையில் சிக்கி முறிந்து விட்டது அந்நிய தேசமெல்லாம் எங்களது அவலங்களை சொல்லி நின்ற இதயமொன்று அவிந்து விட்டது செரு முனையில் நின்று செந்தமிழின் பண்ணிசைத்த சிட்டொன்று சிதைந்து விட்டது எங்கள் இமயம் ஒன்றை இருள் விழுங்கி விட்டது எங்கள் விழி மடல்கள் வெல்ல முடியாதோரின் வஞ்சனையால் கிழிந்து விட்டன துணிச்சலையே த…
-
- 1 reply
- 835 views
-
-
தலைநிமிர்வோம்! --------------------------- மனிதம் தொலைந்த முதற்பொழுதொன்றிலே சிங்களக் காடைகள் காவலரானதால் தமிழர் உடல்கள் தெருவில் சாய்ந்தன ! பெண்ணோ குழந்தையோ தமிழராய் இருந்தால் புத்தரின் புத்திரர்க்குக் கொல்வதே வேதம்! நான்கு தசாப்தங்கள் நடந்து முடிந்து இன்றும் தொடரும் இனப்படுகொலை ஓயவில்லையே! ஓயவேண்டுமெனில் தமிழீழம் அமைவதே சாலச் சிறந்தது! தமிழாராச்சியே சிங்களத்துக்குச் சினமென்றால் நாடமைப்பதை சிரித்து ஏற்குமா! வீழ்ந்தவர் மீதிலே உறுதியெடுப்போம் தாயகம் மீட்டுத் தலை நிமிர்வோமென! தலைகள் நிமிரக் கரங்களை இணைப்போம்!
-
- 1 reply
- 631 views
-
-
இன்று face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது ... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்! பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! அம்மா வருவதாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
நான் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் உடைந்த நாற்காலி முதல் படுக்கை விரிப்பு வரை அதன் மொழி களையெடுப்பு.. நான் போர்வையை மாற்றியே ஆகவேண்டும் இந்தத்தரை முழுவதும் அது நீண்டிருக்கிறது காரணம் எல்லாம் உடைந்துவிட்டது இங்கிருப்போர் ஊனமுற்றோர் எனில் நான் முயற்சிப்பேன் ஏனென்றால் எனக்குக் காரணங்கள் உண்டு நீங்கள் காத்திருக்க முடியாது வீட்டை விட்டு வெளியே விட்டபடி எட்டிப்பார்க்க.. அந்த நாற்காலியில் பலபேர் வந்து போயிருக்கிறார்கள் தூசு ஊர்ந்து சலனம் தொற்றிக்கொள்ள இப்போது தெருக்கள் எல்லாம் வெறிச்சோடி விட்டது ஆனால் எனக்குத் தெரியாது அந்த நாற்காலி நாற்றத்தையும் சுடலைச் சாம்பலையும் தான் அணிவிக்கும் என்று.. பட்டுப்போர்வை அணிவிப்பதை எப்போதும் நிறுத்த வேண்டும் ஏனென்றால் எனக்கு அ…
-
- 14 replies
- 1.7k views
-