Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நீ வரும் வேளை வரை ! (போராளி அம்புலி எழுதிய கவிதை. மாவீரர் வாரத்தை முன்னிட்ட மீள்பதிவு இது.) 10வருடங்கள் முன்னர் ஒலிபரப்பான கவிதை. 10வருடம் கழித்து மீண்டும் இன்றைய காலத்திற்கு எற்ப இக்கவிதையானது வருகிறது. http://www.youtube.com/watch?v=kEyzd1Whmwk

    • 0 replies
    • 590 views
  2. தீபச் செல்வன் கவிதைகள் ஓவியம் : பொன்வண்ணன் போர் நிலம் வெறும் நிலத்திற்கு பொம்மைகள் திரும்புகின்றன பிரயாணிப்பவர்கள் எல்லோரது கைகளிலும் பெருத்த வண்டிகளிலும் அவர்களிடமுள்ள அகலமான குறுக்குப் பைகளிலும் நிலத்தை அள்ளிச் செல்லுவதாக வயது முதிர்ந்தவர்கள் பிதற்றுகிறார்கள். போர் நிலத்தில் குழந்தையின் பொம்மை இறந்து சிதைவுகளுடன் கிடக்கிறது கொல்லப்பட்டிருக்கிற தாயைக் குறித்தோ தன் தந்தையைக் குறித்தோ எதுவும் கேட்காமல் மறந்துபோன குழந்தை தன் பொம்மை தேடி பாதியாய் மீட்டிருக்கிறது. தரப்பால் துண்டுகளுடன் சில பூவரசம் தடிகளையும் எடுத்துக்கொண்டு பொம்மை வீடுகளைக் குழந்தைகள் மூட்டிக்கொண்டு அதனுள் இருக்கின்றனர் சுவர்களோ தடுப்புக்களோ இல்லாத பொம்ம…

  3. . எப்போது கிடைக்கும் சுதந்திரம்..! "அ"னாதை இல்லங்கள் அழிக்கப்படும்போது..! "ஆ"தரவற்றோர்கள் அரவணைக்கப் படும்போது..! "இ"ல்லாதவனுக்கு இருப்பிடம் கிடைக்கும்போது..! "ஈ"கைப்பண்பு பணம் படைத்தவன் நெஞ்சில் துளிர்விடும்போது..! "உ"ணவில்லா ஏழையின் பசி ஆரும்போது..! "ஊ"ருக்குப்பாடுபட உள்ளம் முன்வரும்போது..! "எ"ழில் பொங்கும் இயற்கை அழிக்கப்படாதபோது..! "ஏ"ழைகளுக்கும் படிப்பு ஏமாற்றமில்லாமல் கிடைக்கும்போது..! "ஐ"ந்தாண்டு ஆட்சியும் மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும்போது..! "ஒ"துக்கப்பட்ட மக்கள் ஒருபடியாவது முன்னேற்றப்படும்போது..! …

  4. நீ என் தேகத்தின் மேல் கொண்ட மோகத்தினால் என் மனதை காதல் வார்தையால் வசப்படுத்தி மானத்தைச் சிதைத்து தலை கோணச் செய்து விட்டாயே! பூவின் தேனைச் சுவைத்து மற்ரொரு பூவினைத் தேடும் கருவண்டினைப் போல் என் வாழ்வினை கேள்விக்குறியாக்கி என் குடும்பத்திற்கு இழுக்கினை உண்டாக்கி விட்டு.... உன் இச்சைக்கு மறு துணை தேடுகிறாயோ? இதோ வருகிறேன் விளையாட!! காதல் விளையாட்டா? மரண விளையாட்டு... புலியினை முறத்தினால் விரட்டிய வீரத்தமிழச்சியின் வம்சமடா நான்! தன் மானம் சிதைத்தவனை உயிரோடு சிதைக்காமல் சிதையில் விழமாட்டேன்! பெண் கொஞ்சி மகிழ்ந்தால் மலர்... கொதித்து எழுந்தால் புயல்... நீயும் உணர்வாய் என் காலடியில் உன் உயிரினை விடிகையில்... இதோ வருகிறேன் ! நான் http://panip…

  5. வான வில்லின் வர்ணங்கள் வளைத்து எண்ணம் என்னும் வண்ணம் எடுத்து கற்பனைத்தேன் கலந்து காரிகை உனைக் கிறுக்க‌ தூரிகை நான் எடுத்தேன் காவியம் பேசும்- அவள் கண்கள் வரைய‌ கரு முகிலை தூதுவிட்டு கருவிழியாக்கினேன் சிறகடிக்கும் சிட்டுக்குருவியின் இறகை- அவள் இமைக்கு மடலாக்கினேன் வளர்ந்து வரும் வளர் பிறையை வளைத்து-அவள் வதனத்தில் வைத்தேன் இள‌ம் த‌ளிர்-அவள் இத‌ழ் வைக்க‌ இத‌ழோடு-பூ இத‌ழ் வைத்தேன் கார் கால‌த்து க‌ரும் இருளை காத‌ல்-கள்ளியின் கூந்த‌லாக்கினேன் தேன் நிலவு தேவியை தேடி-பிடித்து திரும‌க‌ளின்-திரு தில‌க‌மாக்கினேன்.

  6. வாருங்கள் பக்த கோடிகளே உங்கள் வேண்டுதல்களை என் மேல் உடைத்து எனக்கும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள். என்றாவது நான் இதே கோயிலில் சிலையாக வேண்டும் என்று நீங்களே கூறுங்கள் எத்தனை நாள் மட்டும்தான் நான் வாசல் கல்லாய் இருப்பது. எதிலும் இறைவன் இருப்பான் என்பதை நம்பும் நீங்கள் ஏன்? என்னை மட்டும் கல்லாய் எண்ணி எண்ணுக்கணக்கின்றி உங்கள் நேத்திக்காய்.... என் மேல் தேங்காய்களால் எறிந்து என்னைக் காயப்படுதுகிறீர்கள். உண்மையைச் சொல்லப் போனால் இதே கோயிலுக்கு நானும் சிலையாக வேண்டும் என்றுதான் வந்தேன். நான் சிற்பியின் உளிக்கு பயந்ததால் என்னை வாசலிலே விட்டுவிட்டார்கள் தேங்காய்களால் சிலையானால் வ…

    • 7 replies
    • 1.6k views
  7. கவிஞர் பற்றி நீங்கள் அறிந்தவற்றை இன்றைய அவரின் பிறந்ததினத்திலே இணைத்து எங்கள் தேசியக் கவிஞரை மேன்மை செய்வோம்...

  8. " கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் "-------------------------------------------------------------------" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "-------------------------------------------------------------------" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "-------------------------------------------------------------------" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "-------------------------------------------------------------------"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "

  9. உறங்கிய காதல் பார்த்ததும் உன்மேல் பூத்தது காதல் என்னில் பழகாமலே ருசித்தேன் விலகியே நடந்தேன் விண்ணில் இருந்தே மண்ணில் இருக்குமுனை தொட நினைத்து நீட்டினேன் கைகளை முடியாமல் தவித்தேன் சிட்டாக மாறியுனை கட்டியணைக்க எண்ணி சட்டென வந்தேன் மண்மீது அருகிருந்தே உனை நான் அளந்தேன் பார்வைகளால் இதமாக இருந்த போதிலும் இமைகள் படபடத்தன பயத்தில் பூவான நான் காதலை இயம்ப புயலாக நீ மாறி எனை காயமாக்கி அனலான பார்வையால் எனை தகனம் செய்துவிடுவாய் என்று சொல்ல நினைத்த காதலை சொல்லாமலே புதைத்தேன் இன்றுதான் தெரிந்துகொண்டேன் அன்று நீயும் எனைபோலவே..... ம்ம்ம்ம்ம்...! உன்மீதான என் காதலும் என்மீதான உன் காதலும் உச்சரிக்கப்படாம…

    • 20 replies
    • 4k views
  10. என் தங்கை இசைப்பிரியா கண்ணுக்கு எதிரிலேயே கற்பழித்துக் கொல்லப்பட்ட அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு ஒரு கையாலாகாத அண்ணனின் கண்ணீர் அஞ்சலி. என்ன அழகடி உன் தமிழும் தைரியமும்! சின்னஞ்சிறு இதழ் விரித்து சிங்கார உச்சரிப்பில் செய்திகள் வாசிப்பாயே! இப்போது நீயுமொரு செய்தியாகிப் போவாய் என்று கனவிலேனும் யோசித்தாயா? இப்போதுதான் பூத்த பனித்துளிகூட விலகாத ஒரு காலைரோஜாவின் அழகைக் கொண்டவளே! எப்படியடி சிக்கிக் கொண்டாய் திமிர் பிடித்த சிங்களனின் திணவெடுத்த கரங்களுக்குள்? ஆடையின்றி பிணமாக ஒரு சிங்கள காட்டுக்குள் நீ படுத்திருந்த காட்சி...! நீ துடிதுடிக்க கொல்லப்பட்ட போதும், உன் துணிமணிகள் அவிழ்க்கப்…

    • 13 replies
    • 2.3k views
  11. தாய் நிலமும் தனையர்களும் இந்துக் கடலில், முஷ்டி உயர்த்திய கையினைப் போன்ற என் அழகிய தேசமே என்னுடன் பேசு. நாவில் நீர் ஊற குட்டிகள் பின்னே அலையும் நாய்களைக் காட்டுக்குதிரைகள் உதைத்து நொறுக்கும் 'நெடுந்தீவின்' புல்வெளிகளை நாங்கள் இழந்து படுவோமா ..... 'அறுகம் குடாவில்' தோணிகள் மீது அலைகள் எறியும் கடலை அதட்டி, வலைகளை விரித்து நூறு நூறாண்டாய் முஸ்லிம் மீனவர் பாடும் பாடலை நாங்கள் இழப்பமோ? வரலாறொன்றின் திருப்பு முனையில் மார்புற எம்மை அணைத்த படிக்கு போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே சொல்க எனக்கு! எலிகள் நிமிரவும் வளைகள் உண்டே. உண்டே உண்டே விலங்குகள் பறவைகள் மரங்கள் நிமிர்ந்திட சரணாலயங்களும் தேசிய வனங்களும். மனுகும…

    • 0 replies
    • 799 views
  12. நீலவானம் சொரியும் மலர்களாய் வெண்முகில் கூட்டம் கூடி வேலவன் கோவில் தேடியோடி...! கோபுரத்தை உரசும் தென்றல் பணிந்து வேம்பைத் தழுவி எழுந்து பனையைத் தொட்டுச் செல்லும்...! வீடுகளில் முற்றத்தில் தோட்டத்தில் வள்ளல்களாய் மலர் மரங்கள் செடிகள் கொடிகள் பயிர்கள் பந்தல்கள்....! நல்லூர் வீதிதோறும் கூந்தல்களில் மணக்கும் வண்ண வண்ண மலர்கள் நகரும் நந்தவனங்கள் ஒயிலாய் இடை அசைவில் சிதறும் மணிகள்...! ஆறுமுகம் அருகில் இரு தேவியரும் அலங்காரமாய் அமர்ந்திருக்க அழகு இரதம் புறப்பாடு ஆரம்பம்...! வீதிகளில் தேர் ஓடுவது ஊர்களிலே மாந்தர் வியர்வையில் திளைத்து தேர் மிதப்பது நல்லூரினிலே...!!

  13. இயந்திர வயல் வெண்நாரைகளின் இயந்திரவயல்களில் கறுப்புக்காகங்கள் உருக்குலைய கரிய மை உதிர்க்கும் எழுதுகோல் உறைத்துப்போனது. மூன்றாந்தர உலகநாடுகளில் போரை வளர்க்கும் முதல்தர வல்லாண்மைகளின் பிடியில் சிக்கி மீளமுடியா வலிக்குள் புதைகிறது மனிதம் கந்தகப் பரீட்சிப்பு வளங்களைத் தின்ன, உயிருக்காய் அஞ்சிப் புகலிடம் தேடும் மனித வளங்களைத் தின்று கொழுத்தன வலியவை. நூற்றாண்டுகளின் கடப்பில் தொடர்ந்தபடி.. மனுநீதி வல்லரசுகளின் காலடியில் நசியுண்டு கிடக்க, போலி வெண்புறாக்கள் பூரித்துப் பறப்பது மூன்றாந்தர நாடுகள்மேல் திணிக்கப்பட்ட சாபம் எண்ணச் சூடேற்றலில் மனிதம் கொதிக்க இயந்திர வயல்களின் அழைப்பு.. உறைய வைத்தது.

  14. கே. சச்சிதானந்தனின் கவிதை ஒன்று. இதை ஜெயமோகன் அவரது தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். எங்கும் போரால் நிறைந்திருக்கும், அப்பாவி மக்களை ஆதரவற்றவர்களை பலவீனமானவர்களை கொன்று குவிக்கும் இன்றைய உலகிற்கு ஏற்ற ஒரு கவிதை இது வென்றோம் என்றவர்களே தோற்றவர்கள் ஆகின்றனர். https://www.jeyamohan.in/208930/ ********************************************************** இறுதிவிருப்பம் ---------------------- நான் அசோகன் பிணக்குவியல்களின் துயரம் நிறைந்த காவல்காரன் சகோதரர்களின் தலைகளை மிதித்து ரத்தநதியை கடக்கும் துரியோதனன் குருதிகலசத்தை கிரீடமாக்கிக்கொண்ட வெறும் ஊன்தடி என் கழிவிரக்கம் …

  15. என்னவளுக்கு ! இன்று தொழிலாளர் /உழைப்பாளர் தினம் இன்றுதான் உன் பிறந்த தினமும் "எட்டு மணி நேர வேலை "என்று தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது என்னவளே ! எந்த புரட்சியும் இல்லாமல் இன்னும் இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய் ஒற்றையாய் ஒரு தசாப்தம் குடும்ப சுமை உன்மீது இரட்டையாய் ஒன்றானோம் புலம் பெயர்ந்து விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு எனக்கு எல்லாமே போனஸ் தான் நீயும் எனக்காய் மாறிப்போனாய் குழந்தைகளுக்காய் புதிய மண்ணில் மீண்டுமொரு போராடியவாழ்வு அத்திவாரத்திலிருந்து அலைகளில் அசைந்தவாழ்வு சுனாமியாய் அடித்து ஓய்ந்தது உயிரால் வரைந்த ஓவியம் உலகால் கலைந்த சீவியம் மனிதர்களுக்கு கடின வாழ்வு பச்சோ…

    • 2 replies
    • 775 views
  16. நாங்கள் நீங்கள் அவர்கள் இவர்கள் உறவினர்கள் மற்றவர்கள் போனவர்கள் வந்தவர்கள் அவர் இவர் நீ நான் ஏதாவது இருக்குமோ இந்த வார்த்தைகளில்..? சங்கிலிக்கருப்பு

  17. நாண் மற்றும் யாழ் ஒரு வயர் கம்பியா நம்மை பிரித்தெடுப்பது..! எப்படி பார்த்தாலும் யார் அவர்கள் நானும் யார்..? தந்தையை கேள்வி கேட்கும் மகனும் அம்மாவை கணைகளால் துளைத்தெடுக்கும் மகளும் ஆயிரம் பதிவுகள் போடுங்கள் நீங்களும் எங்கள் குடும்பம் என்று யார் சொல்ல முடியும்.? மெய் சிலிர்க்க வைக்கிறது எந்த பின்னூட்டங்களும் மூன்றாம் தரமாக இல்லை... நானும் ஒருவேளை உங்கள் குடும்பத்தில் இணைந்து விடுவேனோ.. என்ற அச்சத்தில் மீள்சிறகு

  18. http://www.imeem.com/vaseeharan/music/PnPS...tamizhan_tamiz/ - பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும் பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே ச…

  19. அறிவினுயிர் கற்பனையென்றான் ஐன்ஸ்டீன். என்னுயிர் கற்பனைகளும் அவளாலே. அறிவியல் விந்தைகளும் அவளைப்போலவே... இவள் நெற்றிப்பிறை பூமிப்பெண் சூடும் வளர்பிறை இவள் விழிவீச்சு ஒசோனை ஊடுருவும் புறஊதாக்கதிர்வீச்சு இவள் சிரிப்பலை உலகமியங்கும் மின்காந்த கதிரலை இவள் கண்ணங் கருவிழிகள் விண்மீன்களை விழுங்கும் கருந்துளைகள் இவள் கவுல்கள் வெண்ணிலவின் பால்வண்ணப் பரப்புகள் இவள் செவ்விதழ்கள் செவ்வாய் கிரகத்தின் மண்வளைவுகள் இவள் மறைமேடுகள் ஆழ்கடல் பனிமுகடுகள் இவள் உந்திச்சுழி பால்மவீதிகளில் சுழலும் சூரியசூறாவளி கருந்துளைகள் – black holes சூரியசூறாவளி – solar wind

  20. முட்டுவதற்கு வளர்க்கப்பட்ட ஆடு வெட்டுண்டு கிடக்கிறது மற்றைய ஆடுகள் கதறுகின்றன கத்திக்கு சொந்தக்காரன் யார் என்று பதறுகின்றன முன்பு ஒரு நாள்.. ஆடு கட்டுக்குள் அடங்க மறுத்தது யாருக்கும் சொல்லாமல் கயிறு அறுத்தது ஆயினும் பின்பு ஆடு திருந்தியது தானாகவே வீடு திரும்பியது காலங்கள் ஓடியது.. ஓநாய்களை முட்டப் பழகிய ஆடு புதிய களத்திற்கு ஒரு நாள் வந்தது அங்கே ஓநாய்கள் நிற்கவில்லை உடன்பிறந்த ஆடுகள்தான் நின்றிருந்தன முட்டுவதில் பழைய வேகம் இல்லை முட்டுகிறதா? ஒட்டுகிறதா? எசமானர்களுக்கு சந்தேகம் வந்தது உண்மைதான். இன்றைக்கு ஆடு வெட்டப்பட்டுக் கிடக்கிறது மற்றைய ஆடுகள் எசமானர்கள் பின்னே நடக்கின்றன ஓநாய்களின் பற்தடம் தேடித் திரிகின்றன ஓநாய்க…

    • 8 replies
    • 947 views
  21. உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய் நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!! மாறாத புன்னகையே மாசற்ற முத்துக்குமரா ஆறாத காயங்களை தாங்கிநிற்கும் தமிழ்மண்ணின் சோகத்தைத் தாங்காமல் சோதனை தந்தாயோ பாகத்தின் நிலையுறுத்தி பாரெங்கும் தெளியவைத்து வீறாகி உன்னுயிரை சுடரேற்றி உரமிட்டாய் என்னருமைத் தமிழுக்கு வித்தான வெண்ணிலவே கண்களிலே நீரழைக்க கனலேற்றித் துடித்தாயே பித்தரைப் போலநாம் புலம்பெயர்ந்த நாட்டினிலே புத்தரையடி பேணும் புனிதரல்லாச் சிங்களனின் முத்திரை பதிக்கின்ற போலி முகங்களுடன் கிண்டலுடன் கேலிபண்ணும் தாயைப்பழி துணைகளுடன் ஏதுவழி யறியாமல் சட்டதிட்ட வகையுணர்ந்து பேசவழியறியாது அடக்கமது தான்மருவி இனமழிக்கும் ராஜபக்ஷ மகிந்தனெனும் மகாவசுரன் …

    • 2 replies
    • 801 views
  22. POETRY OF THE ANGELS தேவதைகளின் கவிதை . இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்? . ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது. . என் வாழ்வில் என் போராட்டங்களில் என் கலைகளில் என் கவிதைகளில் எங்காவது சற்று முழுமையிருந்தால் அது என் தாயிடமிருந்தும் என் பெண்பால் உறவுகளிடமிருந்தும் பின்னர் இன்றுவரை என் வாழ்வின் பாதையில் கண்டு கேட்டுப் பழகிய தோழியரிடமிருந்தும் கற்று…

    • 1 reply
    • 1.2k views
  23. அப்படிப் பார்க்காதே மகளே! - கவிதை திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் - ஓவியங்கள்: ரமணன் நுரைத்தப் பழங்கஞ்சியாய்ப் புளிப்பேறிய வயோதிகத்தின் இரவு ஒரு பாராங்கல்லாய் மார்மீது படுத்துறங்குகிறது எப்படி இறங்கச் சொல்ல... எப்படி இறக்கிவிட? பாதரசம்போன கண்ணாடி எனது முகத்தைக் காட்டி இன்றோடு இருபது வருடங்கள் ஆகிவிட்டன மகளே. கறையான் அரித்த நமது குடும்பப் புகைப்படத்திலும் நீ பார்த்திருக்கக்கூடும் துருவேறிய எனது மிருகக் கண்களை மட்டும். `இடுப்புல ஆறு மாசம் வயித்துல மூணு மாசம் பப்பாளி, எள்ளு, அன்னாசிக்கு தப்பித் தளச்சவடி நீ' என்ற கதையைக் கேட்கும்போது என்னென்ன நினைத்திருப்பாய் மகளே? அப்படி என் வயிற்றைப் பார்க்காதே மயானத்துப் புழுக்க…

    • 1 reply
    • 942 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.